கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01-04-2025ல் இருந்து IFHRMSல் புதிய Update


01.04.2025ல் இருந்து IFHRMSல் புதிய Update


1. இனி வரும் நாட்களில் மின்சார கட்டணம் நேரடியாக EB account வில் செலுத்துவது போன்று இருக்கும்.


2. Selection grade arrear, increment arrear போன்றவற்றை தயார் செய்யும் பொழுது auto arrear calculation பயன்படுத்த வேண்டும். ( March 2024 முதல் எனேபிள் செய்யப்பட்டுள்ளது).


3. வங்கி கணக்கு எண் மாற்றம் செய்வதற்கு இனிமேல் கருவூலத்திற்கு செல்ல தேவையில்லை எப்பொழுதும் போன்ற DDO approval செய்தாலே போதுமானது.


4. புதிதாக பணியேற்றுள்ள பணியாளர்களுக்கு CPS நம்பர் புதிய IFHRMS number create செய்யும்பொழுது ஆட்டோமேட்டிக்காக generate ஆகும் இதில் basic pay zero என்றும் nominee details empty ஆகவும் இருக்கும் இதனை பின்னர் அப்டேட் செய்து கொள்ளலாம்.


5. Plus minus report சென்ற மாதம் வரை html file ஆக டவுன்லோட் ஆகியது இதில் *show all இன்று கொடுத்தோம் என்றால் மட்டுமே பில் குரூப்பில் உள்ள அனைத்து பணியாளர்களின் பெயரும் enable ஆகும்* இம்மாதத்தில் bill group வாரியாக plus minus report மற்றும் html பதிலாக pdf ஆக டவுன்லோட் ஆகும் என்று நம்புகிறோம்



நம்பிக்கைதான் வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை



நம்பிக்கைதான் வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை Today's Thought 


Hope is life - a short story today


💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠


💠அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ். ஆனால், இவர் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டு பிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.


💠அட்லாண்டிக் பெருங்கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. 


💠ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார்.


💠பயணம் பல மாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். 


💠அவர்களுக்கு தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டது.


💠அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தினார்கள். 


💠ஆனால் கொலம்பஸ் அவர்களின் சொற்களைக் காதில் வாங்கவே மறுத்து விட்டார். 


💠திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள்.


💠அதன்படி கொலம்பஸை கடலில் தள்ளிக் கொன்று விட்டு தாங்கள் அனைவரும் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள்.


💠ஒருநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப்பில் நம்பிக்கையுடன் ஏதாவது நிலப்பகுதி தெரிகிறதா என்று பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார்.


💠உடன் வந்தவர்களில் சிலர் அவருக்குப் பின்புறமாக மெல்ல வந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரைப் பிடித்துத் தள்ளப் போகிறார்கள்.


💠அச்சமயத்தில் கொலம்பஸ் ஆனந்தத்தில் கத்த ஆரம்பித்தார். காரணம் கடலின் மேற்பரப்பில் இலைகளும் சிறுசிறு கிளைகளும் மிதந்து கொண்டிருந்தன. 


💠அருகில் நிலப்பகுதி இருக்கிறது என்பது இதன் மூலம் புரிந்தது. தொடர்ந்து பயணித்து சில தினங்களில் ஒரு நிலப்பரப்பினை அடைந்தார்கள். கொலம்பஸ் எதிர்பார்த்தது போல அது இந்தியா அல்ல. அமெரிக்கா.


💠கொலம்பஸின் மனதில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கையே அவரின் பெயரை சரித்திரத்தில் பதிவாகக் காரணமானது.


*💠ஆம்,💠*


*💠மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாய் தூங்கச் செல்லுகிறோம்.*


*💠வீட்டிற்கு நிச்சயமாய் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டை விட்டுப் புறப்படுகிறோம்.*


*💠ஆக நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது..*


*💠நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.*


*💠எந்த ஒரு செயலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.*

*உறுதியாய் நம்புங்கள்..உங்கள் கனவெல்லாம்* *பலிக்கும்., வாழ்க்கையும் தேனாய் இனிக்கும்.....*


*💠 நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்*



EMIS வலைதளத்தில் கல்வி உதவித் தொகை : மாணவர் விவரங்களை சரிபார்க்க கல்வித் துறை உத்தரவு

 

 

EMIS வலைதளத்தில் கல்வி உதவித் தொகை : மாணவர் விவரங்களை சரிபார்க்க கல்வித் துறை உத்தரவு


கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை `எமிஸ்' இணையதளத்தில் சரிபார்க்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் முடிவடைகின்றன. அதன் பிறகு ஒருவார காலத்துக்குள் மாணவர்களின் தகவல்களை எமிஸ் இணையதளத்தில் அவசியம் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். அப்போது தேவையெனில் அதிலுள்ள விவரங்களை திருத்தம் செய்ய அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


குறிப்பாக 8, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்கள் (Student Profile) சரியாக உள்ளதா என்பதை அந்தந்த வகுப்பாசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.


மாணவர்கள் பெறும் கல்வி உதவித் தொகை சார்ந்த தகவல்களையும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். இது சார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Pre Matric & Post Matric உதவித்தொகை - மாணவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் Scholarship & Student Profile தகவல்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்க முடிவெடுத்த தமிழ்நாடு அரசு



மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்க முடிவெடுத்த தமிழ்நாடு அரசு 


1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடப் புத்தகத்தின் பாடத்திட்டங்கள் குறைகின்றன.


40 விழுக்காடு அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என தகவல்.


10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறையே 238, 236, 228 பக்கங்களைக் கொண்ட தமிழ் பாடப் புத்தகம்.


மாணவர்கள் முழு பாடத் திட்டங்களையும் படிப்பதற்கு சிரமப்படுவதால் பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது.


வரும் ஜூன் மாதம் குறைக்கப்பட்ட புதிய தமிழ் பாடப் புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என பாடநூல் கழக வட்டாரங்கள் தகவல்.


10ஆம் வகுப்பு தேர்வில் பார்த்து எழுதிய மாணவர்கள் - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

 


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பார்த்து எழுதிய மாணவர்கள்? - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை


கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வு மையத்தில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதியதாக சர்ச்சை


முதன்மை கண்காணிப்பாளர் அரசு பொதுத்தேர்வு பணியில் இருந்து விடுவிப்பு - அறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்


வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்

 

வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல் BEOs Transfer Counseling 


Information regarding the Block Education Officer transfer counselling 



 தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கம்

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ 


      05-04-2025 காலை திருச்சி மாவட்டம் முசிறியில் திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் நடத்தினார்.


  இக்கூட்டம் தொடங்கும் முன் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களுடன் மதிப்பிற்குரிய தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து பணி ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணிக்கொடை பெற இயலாமல் இருப்பது, தணிக்கைத் தடை மற்றும் கலந்தாய்வு குறித்து வலியுறுத்தப்பட்டது.


 07-02-2019 முதல் ஒரு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி ஊதியம் நிர்ணயம்  செய்துள்ளது சரியானது என்பதை கூறியதோடு, கூட்டம் நடைபெறும் போது கூட்ட மேடையிலும் மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.


 தணிக்கை நீக்கம் குறித்து நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரிடம்  விவரம் தெரிவிப்பதாகவும் கூறினார்.


100 days Challenge மற்றும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால் முடிவுற்றவுடன் கலந்தாய்வு  நடத்திடுவதாகவும் கூறினார்.


- இரா. தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளர் தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கம்


முழு ஆண்டுத் தேர்வு 2025 - வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்

 

முழு ஆண்டுத் தேர்வு 2025 - வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்


Annual Exam 2025 - QP & Answer Key Download Schedule


Annual Examination 2025 - Dates to download question papers and answer keys


6 - 8ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு - 2025 வினாத்தாள்கள் மற்றும் விடைக் குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

  உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு நாளை 07.07.2025 தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் BSC Nurs...