6, 7 & 8ஆம் வகுப்பு - முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி
Website address to download Annual exam question paper for 6th, 7th & 8th Standard
https://exam.tnschools.gov.in/#/
6, 7 & 8ஆம் வகுப்பு - முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி
Website address to download Annual exam question paper for 6th, 7th & 8th Standard
https://exam.tnschools.gov.in/#/
முழு ஆண்டுத் தேர்வு 2025 - வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்
Annual Exam 2025 - QP & Answer Key Download Schedule
Annual Examination 2025 - Dates to download question papers and answer keys
6 - 8ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு - 2025 வினாத்தாள்கள் மற்றும் விடைக் குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
1 - 5ஆம் வகுப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு / முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Revised Term 3 Exam / Annual Examination Timetable for Classes 1 - 5 - DEE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
1 முதல் 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு - திருத்தப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியீடு
1 - 5th Std Revised Annual Exam Time Table - DEE Press Release
திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பத்திரிக்கை செய்தி
நாள் : 30-03-2025
தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09-04-2025 முதல் 21-04-2025 வரை மூன்றாம் பருவத்தேர்வு / ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படியும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 07-04-2025 முதல் 17-04-2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு? - பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்
1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
"வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை"
மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்
- பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்
1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
"வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை"
மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்
தொடக்கக்கல்வி - மூன்றாம் பருவம் - தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணை மற்றும் மூன்றாம் பருவத் தேர்வு வினாத்தாள்கள் வழங்குதல் - வழிகாட்டுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 12-03-2025
1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு - DSE, DPS & DEE இணைச் செயல்முறைகள்
2024-2025 Annual Exam Timetable Class 1 to Class 9
2024-2025 Academic Year - Annual Examination Timetable Released for Students of Classes 1 to 9 - DSE, DPS & DEE Joint Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Revised Annual Exam Time Table with Year Correction 👇🏻👇🏻👇🏻
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
6,7,8 வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் முறை - வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2023 - 2024ஆம் கல்வி ஆண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்விற்கான வினாத்தாட்கள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாகக் கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது...
1. இந்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.
2. தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் தேர்வு நாள் மதியம் 1.00 மணி வரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் வினாத் தாள்களைப் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
3. வினாத்தாட்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
4. தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாட்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.
5. அனைத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் இணைப்பில் உள்ள வழிமுறைகளை தெளிவாக அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
6. அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் வினாத்தாட்கள் பதிவிறக்கம் செய்து பள்ளியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பிரிண்டர்களின் மூலம் பிரதி எடுத்துக் கொள்வதற்குத் தேவையான Paper & Tonnerக்கு ஆகும் செலவினத் தொகை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதியில் இருந்து வழங்கும் வகையில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து தலைமையிட மாவட்டக் கல்வி அலுவலர்களும் கால தாமதமின்றி இத்தொகையினை நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் வங்கி கணக்கிற்கு மின்னணு பரிமாற்றம் (NEFT / RTGS) மூலம் விடுவித்திட வேண்டும். (SNA வங்கிக் கணக்குத் தவிர்த்து)
மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆண்டுத் தேர்வுகளை சிறப்பாக நடத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு: வழிகாட்டு நெறிமுறைகள்
பெறுநர்
மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), அனைத்து மாவட்டம்.
தொடக்கக்கல்வித்துறை
6-9ஆம் வகுப்புகள் - முழு ஆண்டுத்தேர்வு கால அட்டவணை -பள்ளிக் கல்வித்துறை, நாமக்கல் மாவட்டம் (6-9th Standard - Annual Exam Time Table - Department of School Education, Namakkal District)...
எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு; சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்
சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் எனக் கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவில்பட்டியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆன்மிகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக அரசு உள்ளது. மதநல்லினம் என்ற வகையில் அனைவரையும் அரவணைத்து செல்லும் முதல்வராக உள்ளார்.
சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் என கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.
நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் முதல்வரின் அனுமதி பெற்று அட்டவணை வெளியிடப்படும். கரோனா ஊரடங்கு காரணமாக 10, 12-ம் வகுப்புகளுக்கு 100 சதவீத பாடங்களை எடுத்துச் செல்ல முடியவில்லை.
குறிப்பிட்ட காலத்தில் பள்ளிகளை திறக்க முடியவில்லை. பள்ளிகள் திறக்கின்ற நாட்கள் குறைந்து வருவதால், அதற்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அதிலுள்ள சாரம்சங்களை கொண்டு கேள்விகள் கேட்க வேண்டிய நிலையில் முதல்வர் உத்தரவு வழங்கி உள்ளார்.
அதனடிப்படையில், கல்வியாளர்களின் கருத்துகளை அறிந்து பணிகள் நிறைவடைந்துள்ளது. முதல்வரின் ஒப்புதல் பெற்றவுடன் செய்முறை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்.
வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதனை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் தேதிகள் குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
நீட் தேர்வு பயிற்சியை பொறுத்தவரை இன்றுவரை 28,150 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், தற்போது 5,020 பேருக்கு ஆன் லைன் வழியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 11-ம் வகுப்பில் இருந்தே அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலமாக நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.
ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டது. பென் டிரைவ் மூலமாக ஸ்மார்ட் போர்டு வழியாக பயிற்சி வழங்கும் திட்டம். மேலும், ஐ.சி.டி. மூலம் மேல்நிலைப்பள்ளிக்கு 20 கணினிகளும், உயர்நிலைபள்ளிகளுக்கு 10 கணினிகளும் வழங்கப்பட்டு, அதில் அனைத்து பாடங்களையும் தரவிறக்கம் செய்து அதன் மூலம் பயிற்சி அளிக்க முடியுமா என அரசு பரிசீலித்து வருகிறது, என்றார் அவர்.
தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...