கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய / முன்னாள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் போட்டிகள்

 


இன்றைய / முன்னாள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் போட்டிகள்


என் பள்ளி! என் பெருமை!!


செய்தி வெளியீடு எண் : 1551, நாள்: 08-07-2025


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றி வரும் அரும் தொண்டுகளையும், செயல்படுத்தி வரும் சிறப்பான நலத்திட்டங்களையும் மாணவர் சமுதாயம் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் பல்வேறு கலைப் போட்டிகளை நடத்துகிறது. இப்போட்டிகளில் இன்றைய மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்கள் / மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



>>> செய்தி வெளியீடு எண் : 1551, நாள்: 08-07-2025 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குழந்தைகள், முதியோருக்கான நேரடி நுழைவு சலுகை



10-07-2025 பௌர்ணமி அன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குழந்தைகள், முதியோருக்கான நேரடி நுழைவு சலுகை


Om Arunachaleswara

Arulmigu Arunachaleswarar & ApithaKuchambika Temple

Tiruvannamalai District, Tamilnadu -606601[TM020343]

PRESS RELEASE

07-07-2025

Tiruvannamalai

SRI ARULMIGU ARUNACHALESWARAR TEMPLE, TIRUVANNAMALAI

On the auspicious occasion of Guru Pournami falling on Thursday, 10th July 2025, Sri Arulmigu Arunachaleswarar Temple, Tiruvannamalai, has made special arrangements for the convenience of devotees:


Special Entry Arrangements.

Senior Citizens (above 60 years) and parents with children below 6 years are allowed direct entry through the North Gate (Ammani Amman Gopuram) from:

• Morning-10:00 AM to 12:00 PM

 Evening- 3:00 PM to 5:00 PM

Entry during this period will be direct, without diversion or delay.

Entry for Physically Disabled Devotees (Wheelchair Assistance):

Devotees requiring wheelchair assistance must enter only through West Gate (Peyi Gopuram).

Allowed timings:

 Morning: 10:00 AM to 12:00 PM

Evening: 4:00 PM to 6:00 PM

Battery Car Facility is available for aged and specially-abled persons inside the temple premises.

. For assistance batter car please contact: +919487555441

Emergency Medical Support:

In case of health emergencies, First Aid and Ambulance services are availabfe

Contact: Medical team

+91-8072619454.,+91 9791556353


THIRAN - Baseline Assessment வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை



 💁‍♂️THIRAN - Baseline Assessment வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை


💁‍♂️THIRAN - BASELINE ASSESSMENT Question Paper DOWNLOAD Procedure 


THIRAN - Targeted Help for Improving Remediation & Academic Nurturing



💁‍♂️தேர்வு நடைபெறும் நாட்கள்


💁‍♂️08-07-2025 - தமிழ் 

09-07-2025  ஆங்கிலம்

10-07-2025 - கணிதம்


💁‍♂️தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


💁‍♂️வினாத்தாள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி


Website address to download question paper for 6th, 7th & 8th Standard



https://exam.tnschools.gov.in/#/


1. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.

2. பள்ளியின் தலைமையாசிரியர் / ஆசிரியரின் EMIS பதிவெண்ணையும் கடவுச்சொல்லையும் கொண்டு உள்நுழைய வேண்டும். பள்ளியின் UDISE எண்ணைப் பயன்படுத்தக் கூடாது.

3. உள்நுழைந்தவுடன் காணப்படும் Descriptive பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.

4. அங்குள்ள Download Question Paper பகுதியில்   6, 7 & 8ஆம் வகுப்புகளுக்கு  வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


"Ungaludan Stalin" முகாமில் துறைகள் வாரியாக வழங்கப்படும் சேவைகள், தேவையான ஆவணங்கள் / தகுதிகள்

 


"உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் துறைகள் வாரியாக வழங்கப்படும் சேவைகள், தேவையான ஆவணங்கள் / தகுதிகள்


Services provided by departments at the "Stalin with You" camp, required documents/qualifications



 "Ungaludan Stalin" முகாமில் என்னென்ன துறைகளுக்கான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன என்பது குறித்த விவரம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



4 சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 4 சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு



 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு


கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.


இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.


இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.



இந்த சம்பவத்தில், ஒரு மாணவர், ஒரு மாணவி என 2 பேர் பலியாகி உள்ளனர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த விபத்தின்போது, ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரெயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. அவர் பணியின்போது தூங்கியதில் ரெயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டு உள்ளது.



இது விபத்திற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ரெயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். தீவிர விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வரும்.


கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரெயில்கள் இந்த வழியே செல்கின்றன. இதனால், அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது.



🚨 கடலூர் அருகே மூடப்படாத ரயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரயில் மோதிய விபத்து எதிரொலி - முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

 
🚆 திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


🚆 மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியபோது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.



*கேட் கீப்பரின் அலட்சியத்தால் தனியார் பள்ளி வேன் கோர விபத்து


*கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கி விட்டதால் பள்ளி வேன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற போது விபத்து நேர்ந்துள்ளது
 

*கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது என நேரில் பார்த்த பொதுமக்கள் குற்றச்சாட்டு


* கேட் கீப்பரை தாக்கிய கிராம மக்கள்: கடலூரில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் ஏற்பட்ட மோதி விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்



ரயில்வே கேட் கீப்பர் சஸ்பெண்ட்

* கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து  குறித்து ரயில்வே துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கேட்கீப்பறை தற்போது பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு




தற்போதைய செய்தி


கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரயில்வே சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர், 1 மாணவி உள்பட மூவர் பரிதாபமாக பலியாகினர்.

ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், பள்ளிக் குழந்தைகள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.






ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் மூவர் பலியாகினர். அவர்களில் சின்ன காட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணியின் மகள் சாருமதி (16), அவரன் மகன் செழியன்(15), விஜயசந்திரகுமாரின் மகன் விமலேஷ்(10) ஆகியோர் பலியாகினர்.

இந்நிலையில், இவ்விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Daily Thanthi
முகப்பு >  செய்திகள் >  தமிழக செய்திகள் >  கடலூர்: பள்ளி வேன்...
கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..? 3 மாணவர்கள் பலியான சோகம் - கேட் கீப்பர் கைது
கடலூர் செம்மங்குப்பத்தில் வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
By - தினத்தந்திUpdate:2025-07-08 10:41 IST
கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..? 3 மாணவர்கள் பலியான சோகம் - கேட் கீப்பர் கைது

கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.

இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், ஒரு மாணவர், ஒரு மாணவி என 2 பேர் பலியாகி உள்ளனர்.

வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 


இந்த விபத்தின்போது, ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரெயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. அவர் பணியின்போது தூங்கியதில் ரெயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டு உள்ளது. இது விபத்திற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ரெயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் பற்றி ரெயில்வே தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ரெயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தினார். வேன் போகும் வரை கேட்டை மூட வேண்டாம் என அவர் கூறினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும், இன்று காலை சுமார் 7.45 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது வேன் ஓட்டுநர் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட். கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார். இதேபோன்று கேட்டை பாதி மூடி கொண்டிருக்கும்போது, வேன் ஓட்டுநர் உள்ளே சென்றார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் கூறி வரும் நிலையில், ரெயில்வே மாறுபட்ட விளக்கம் அளித்துள்ளது.


 

இந்நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் செம்மங்குப்பம் பகுதியில் பணியாற்றிய கேட் கீப்பர் மீது ரெயில்வே அதிகாரிகள் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.  

தீவிர விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான முழு காரணம் பற்றி தெரிய வரும் என்று கூறப்படுகிறது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரெயில்கள் இந்த வழியே சென்று வரும் நிலையில், அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

 


பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி?

'Non Interlocking' ரெயில்வே கேட் என்றால், அதனை மூடுவதற்கு தொலைபேசி மூலமே தகவல் தரப்படும்.

தொலைபேசி மூலம் தகவல் அளித்து கேட் மூடியதை உறுதிப்படுத்திய பின்னரே ரெயில் செல்வதற்கு சிக்னல் அளிக்கப்படும்.

செம்மங்குப்பத்தில் ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக உறுதி அளித்தபின், பள்ளி வேனை மட்டும் கேட் கீப்பர் அனுமதித்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 


மூன்று மாணவர்கள் உயிரிழப்பு

பள்ளி வேனில் டிரைவர் மற்றும் 4 மாணவர்கள் பயணித்துள்ளனர். அந்த கோர விபத்தில் சிக்கி மாணவி சாருமதி(15), மாணவர் நிமலேஷ் (10) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மாணவர்கள் செழியன், விஷ்வேஸ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவர், சிகிச்சை பலனில்லாமல் உயிரிந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

பள்ளி வேனை இயக்கிய ஓட்டுநர் சங்கரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதியபோது ரெயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பலியான சோகம்

செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சிக்கிய தொண்டமாநத்தத்தை சேர்ந்த சாருமதி (11-ம் வகுப்பு), அவரது தம்பி செழியன் (10-ம் வகுப்பு) ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 91:

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்         
விளக்கம் : அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.


பழமொழி :
Every cloud has a silver lining.

துன்பத்திற்குப் பிறகு நன்மை வரும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

ஆண்களும்,பெண்களும் ஒழுக்கத்தில் நம்பிக்கை கொள்வது, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படை - லாண்டார்.


பொது அறிவு :

1. இந்தியாவிலிருந்து முதன் முதலில் அண்டார்டிகாவிற்கு சென்ற  இரு பெண் விஞ்ஞானிகள் யாவர்?

அதிதி பந்த்(Aditi pant)       Dr.சுதிப்தாசென்குப்தா (Sudipta Sengupta)

02. உலகின் மிக நீளமான தொங்கு பாலம் எங்கு உள்ளது?

கானாக்கலே பாலம் -துருக்கி

Canakkale Bridge- Turkey


English words :

broadcast – to send out radio or television programmes. ஒலிபரப்பு அல்லது ஒளிபரப்பு.


Grammar Tips:

Very, so
Very a common intensifier means highlight the adjectives and adverbs

Ex. It is a very good book

'So' high degree of intensifier

Ex. The view is so beautiful

2. Very can be used before superlative adjectives


     Ex. The very best

So" is used with "much" and "many" to emphasize a large quantity.

There were so many people at the party."


அறிவியல் களஞ்சியம் :

ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது.


ஜூலை 08

செளரவ் கங்குலி அவர்களின் பிறந்தநாள்

சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly; ஒலிப்புⓘ; பிறப்பு: சூலை 8, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார்.[1] சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார்


நீதிக்கதை

ஒற்றுமையே பலமாம்

ஒரு காலத்துல ஒரு வியாபாரி வாழ்ந்துகிட்டு வந்தாரு.

அவருக்கு மூணு மகன்கள்.

அவுங்க மூணுபேரும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க.

அந்த வியாபாரி எவ்வளவு முயர்ச்சி செஞ்சும் அவுங்கள ஒன்னு சேக்க முடியல.

ஒருநாள் அந்த வியாபாரி மூணு மகன்களையும் கூப்பிட்டாரு.

உங்களுக்கு ஒரு போட்டி இந்த கரும்பு கட்ட பிரிச்சி எல்லா கரும்பையும் ரெண்டா உடைக்கணும்னு சொன்னாரு.

இதைக்கேட்ட மூணுபேரும் வேக வேகமா உடைக்க ஆரம்பிச்சாங்க.

மூணுபேரும் ரொம்ப சுலபமா அந்த கரும்புங்கள உடைச்சாங்க.

உடைச்சு முடிச்சு அவுங்களுக்குள்ள யார் பலசாலின்னு மீண்டும் சண்டை வந்துச்சு.

இத பாத்த அந்த வியாபாரி போட்டி இன்னும் முடியல.

இப்ப அந்த கரும்பு கட்ட பிரிக்காம யாரு முழுசா உடைக்க முடியும்னு கேட்டாரு.

மூணு மகன்களும் முயற்சி பண்ணி பாத்தாங்க.

கரும்பு பிரிச்சி உடைக்க வேகமா உடைக்க முடிஞ்சது.

ஆனா இப்போ முடியலன்னு ரொம்ப வறுத்த பட்டாங்க.

அப்பத்தான் அந்த வியாபாரி பேச ஆரம்பிச்சாரு.

பாத்திங்களா நீங்களும் இந்த கரும்பு மாதிரிதான்,

தனி தனியா இருந்தீங்கன்னா உடைஞ்சி போயிடுவீங்க.

ஆனா மொத்தமா கட்டா இருந்தீங்கன்னா உடையாம பலமா இருப்பீங்க.

ஒற்றுமையே பலம்னு சொல்லி மூணு மகன் களையும் ஒண்ணா நட்பா இருக்க சொன்னாரு.

இதைக்கேட்ட அந்த மூணு பேரும் இத்தனை நாளா தனி தனியா இருந்தத.

நினைச்சு வருத்தப்பட்டாங்க.

பழமொழி : ஒற்றுமையே பலமாம் .


இன்றைய செய்திகள்

08.07.2025

⭐அரசு கலை கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை - அமைச்சர் தகவல்.

⭐அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழை உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு.

⭐திருவாரூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்- கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர்.

⭐ தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 367-ல் ஆட்டமிழக்காமல் இருந்தும் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் அறிவித்த முல்டர்.

🏀சிமர்ஜித் சிங் இதுவரை இல்லாத அளவிற்கு 39 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.


Today's Headlines

Today's News

⭐ 20 % Additional Student Admissions in Government Arts Colleges - Minister Information.

⭐ Due to unprecedented  heavy rains in Texas of the United States the number of people who lost their lives rises to 81.

⭐ Chief Minister is having 2 Day Tour- Field Survey in Thiruvarur District.

⭐ 1,01,973 students have been provided with employment through campus conducted under the Department of Special Planning of the Government of Tamil Nadu.

🏀 Sports News

🏀 Mulder announced the Dicker without breaking the  Laura's record despite being  unbeaten in 367 runs.

🏀 Simarjit Singh has been auctioned for Rs 39 lakh.

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...