தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - தனுசு

பிலவ வருடம் 2021-2022

பெருந்தன்மையான குணமும், விவேகத்துடனும் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!!

பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.




கிரக அமைப்புகள் :


ராசிக்கு இரண்டில் சனியும்


மூன்றில் குருவும்


நான்கில் புதனும்


ஐந்தில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்


ஆறில் ராகுவும், செவ்வாயும்


பனிரெண்டில் கேதுவும் அமர்ந்துள்ளனர்.


கிரகப் பார்வைகள்

குரு

5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்

சனி

3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்

செவ்வாய்

4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு

பலன்கள் :


மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கேளிக்கை தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களின் எதிர்பாராத ஆதரவுகள் மூலம் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தையின் சொத்துக்களை பராமரிப்பது மற்றும் சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தாழ்வு மனப்பான்மையினால் சில வாய்ப்புகள் தவறுவதற்கான சூழ்நிலைகள் இருப்பதால் எப்பொழுதும் மனதைரியத்துடன் செயல்பட வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனையும், அதன் நிமிர்த்தமமான மனக்கவலைகளும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடத்தில் சற்று அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும்.


ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் :


நண்பர்களின் ஆதரவு மூலம் தனவரவு மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சூழ்நிலைக்கேற்ப கருத்துக்களை மாற்றாமல் நேர்மையுடன் செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும். கால் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.


மாணவர்களுக்கு :


பிற மொழிகளில் திறமையும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படுவது புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆராய்ச்சி தொடர்பான கல்விகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். இயந்திரம் மற்றும் வாகனம் தொடர்பான துறைகளில் பயில்பவர்களுக்கு திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். உயர்நிலைக்கல்வியில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.


பெண்களுக்கு :


தெளிவான சிந்தனைகளின் மூலம் எதிர்காலத்தை அமைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனை மற்றும் புதிய வீடு வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். குழந்தைகள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பும், ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுயதொழில் புரிவோருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.


உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உயரதிகாரிகளுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாலின மக்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சிலருக்கு காலதாமதமாக கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


வியாபாரிகளுக்கு :


கால்நடை தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபங்கள் மேம்படும். பொன் மற்றும் ஆபரணம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் புதிய வியூகங்களை அமைத்து வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். வேலையாட்களிடம் பொறுமையை கையாளுவது நல்லது.


அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் மக்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் அறிந்து அதற்கேற்ப வியூகங்களை அமைத்து வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கருத்துக்களை பகிரும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது.


கலைஞர்களுக்கு :


கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். புதிய செயல்பாடுகள் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெற்று தரும். வசதி வாய்ப்புகள் மேம்படும். சாத்தியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள்.


வழிபாடு :


வெள்ளிக்கிழமைதோறும் வெள்ளைநிற தாமரை பூக்களினால் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்பும், லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.


 

  

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...