குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு...

 


குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை தனுசு ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

பாக்கிய ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

லாப ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

ஜென்ம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

இறை நம்பிக்கையும், கம்பீரமான தோற்றமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!!

குரு புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதுமையான சில சிந்தனைகளின் மூலம் சம்பாதிக்கும் வழிகளை அறிவீர்கள். பந்தயம் சார்ந்த செயல்களை தவிர்ப்பது நல்லது. உடன் இருப்பவர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் கலை நுட்பமான விஷயங்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மடம் சார்ந்த பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.


குரு ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவதற்கான தருணங்கள் உண்டாகும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் ஆசைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும். வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான எண்ணங்கள் ஈடேறும். மூத்த சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


குரு ஒன்பதாம் பார்வையாக ஜென்ம ஸ்தானத்தை பார்ப்பதால் எந்தவொரு செயலையும் முன் நின்று செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கௌரவ பதவிகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும்.

பொருளாதாரம்:


பொருளாதாரத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்களுக்கு முடிவுகள் கிடைக்கும். சொந்த பூமியில் மனை வாங்கக்கூடிய வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சற்று சிந்தித்து முடிவு எடுக்கவும். தனவருவாய் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். 

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதளவில் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள். சிந்தனையில் தெளிவும், புத்துணர்ச்சியும் வெளிப்படும். பசியின்மை சார்ந்த இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் ஞாபகமறதி ஏற்பட்டு நீங்கும்.

பெண்களுக்கு:


கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகைகள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தை வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இறை சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சுபகாரியத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். பொன், பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.

மாணவர்களுக்கு:


ஆசிரியர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். உயர்கல்வி தொடர்பான தேடல்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் ஏற்படும். தொழில்நுட்ப கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். போட்டித் தேர்வுகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பங்கு வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிக்கு ஏற்ற லாபங்களை அடைவீர்கள். ஆசிரியர் பணியில் சாதகமற்ற சூழல் ஏற்பட்டு நீங்கும். மருத்துவ பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சட்டம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு:


ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டாளிகளின் அறிமுகம் மற்றும் ஒத்துழைப்புகள் மேம்படும். தொழில் ரீதியான அரசு உதவிகள் சாதகமாகும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். 

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு சென்று நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான சூழல் அமையும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்தி வாய்ப்புகளை பெறுவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீது ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். 

அரசியல்வாதிகளுக்கு:


கட்சி பணிகளில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். வெளி நபர்களின் மறைமுக ஆதரவின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணங்களின் மூலம் செல்வாக்குகள் அதிகரிக்கும். 

நன்மைகள்:


புத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் வெளிவட்டாரங்களில் செல்வாக்குகள் மேம்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட சில ஆசைகள் நிறைவேறும். உடல் தோற்றத்தில் புதிய மாற்றம் ஏற்படும்.

கவனம்:


புத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் ஆடம்பரமான சிந்தனைகள் மேம்படும். இனம்புரியாத கற்பனையால் அவ்வப்போது ஒருவிதமான சோர்வு ஏற்படும். எங்கும் தற்பெருமை இன்றி செயல்படவும்.

வழிபாடு:


அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர செய்யும் செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.


வயதான ஆன்மிக பெரியோர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...