கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29-02-2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.


குறள் 75:


அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.


விளக்கம்:


உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.


பழமொழி : 


Tit for tat.


பழிக்குப் பழி 



பொன்மொழி:


Minds are like parachutes - they only function when open.


 மனம் என்பது வான்குடையைப் போன்றது. அதில் பறந்துசெல்பவர் மட்டுமே திறந்து கொள்ளமுடியும்.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்

1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று

கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்

மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை

ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Fate - விதி

Fault - குற்றம் 

Fear - பயம்

Favour - சாதகம்

Fenugreek - வெந்தயம்


ஆரோக்கியம்


மூட்டு வலி


வாயு உண்டாக்கும் உணவுப் பொருட்களை (உருளைக்கிழங்கு, வாழைக்காய், கொண்டக்கடலை போன்றவை) தவிர்க்க வேண்டும்.

உடல் எடையை குறைக்க வேண்டும்.

யோகப் பயிற்சிகள் செய்யலாம்.

பிண்ட தைலம் நல்ல மருந்து.

உளுந்து மாவை, வலியும் வீக்கமும் உள்ள மூட்டுக்களின் மீது போடலாம்.

முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை நல்லது.


இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 29


1992 - போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா சுதந்திர வாக்கெடுப்பின் முதல் நாள் 



பிறந்த நாள் 

1896 – மொரார்ஜி தேசாய், இந்தியாவின் 4-வது பிரதமர் (இ. 1995)


நினைவு நாள் 

உலகின் குறிப்பிடத்தக்க நபர்களில் தாஸ்மானியா முதலமைச்சர் ஜேம்ஸ் வில்சன் (1812-1880) என்பவரே பெப்ரவரி 29 இல் பிறந்து அதே நாளில் இறந்தார்.


சிறப்பு நாட்கள்


அரிய நோய் நாள் (நெட்டாண்டுகளில்; சாதாரண ஆண்டுகளில் பெப்ரவரி 28 இல்)



நீதிக்கதை


சிங்கத்தை ஏமாற்றிய தந்திர நரி 


முன்னொரு காலத்தில் காட்டில் ஒரு வயதான சிங்கம் இருந்தது. வயதானதால் தனக்கு உதவியாக ஒரு மிருகத்தை வைத்துக்கொள்ள எண்ணியது. வயதான சிங்க ராஜா தன்னுடைய மந்திரி பதவியை ஒரு நரிக்கு கொடுத்தது.


 நரிக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் காட்டின் ராஜா கொடுத்த பதவியை மறுக்க முடியவில்லை. மந்திரியின் பொறுப்பு என்னவென்று சிங்கம் நரிக்கு சொல்லிக்கொடுத்தது. “வயதானதால் என்னால் இரையைத் தேடி அலைய முடியாது எனவே நீ தினமும் எனக்கு இறையை கொண்டு வரவேண்டும்” என்று கூறியது.



வேறு வழி இல்லாமல் நரி காட்டுக்குள் சென்று இறையைத் தேடி அலைந்தது. அப்போது அங்கு ஒரு கழுதையை கண்டவுடன் நரிக்கு ஒரு யோசனை தோன்றியது. “காட்டின் ராஜாவாகிய சிங்கத்திடம் ஒரு மந்திரி பதவி இருக்கிறது அது உனக்கு வாங்கித் தருகிறேன்” என்று கூறி அந்த கழுதையை சிங்கத்திடம் அழைத்துச் சென்றது அந்த நரி.


மிகவும் பசியுடன் இருந்த அந்த சிங்கம் கழுதையை கண்டவுடன் கர்ஜித்துக்கொண்டு அந்த கழுதையின் மேல் பாய்ந்து அதைக் கொன்றது. “என்னுடைய புத்திசாலித்தனத்தினால்  இந்தக் கழுதையை ஏமாற்றி சிங்கத்திற்கு உணவாக கொண்டு வந்தேன், எனவே இதில் நல்ல ஒரு பங்கு  எனக்கு சாப்பிட கிடைக்க வேண்டும்” என்று நரி எண்ணியது.




 சிங்கம் சாப்பிட உட்கார்ந்ததும் நரி ஒரு யோசனை சொன்னது, “ராஜா நீங்க மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள் எனவே உணவு அருந்துவதற்கு முன்பு குளிப்பது நல்லது அல்லவா” என்று யோசனை சொன்னது. சிங்கமும் அதற்கு சரி என்று சொல்லி குளிக்க சென்றது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய நரி கழுதையின் மூளையை தின்றது.


குளித்து முடித்த சிங்கம் வந்து கழுதையை சாப்பிட உட்கார்ந்தது. அப்போது கழுதையின் மூளையை காணாததால் அதைப்பற்றி நரியிடம் கேட்டது.  புத்திசாலியான நரி “ஹா ஹா ஹா, கழுதைக்கு மூளை இருந்திருந்தால், அது சிங்கத்திடம் மந்திரி பதவி இருக்கிறது, என்று நான் சொன்னதை நம்பி இங்கு வந்து இருக்குமா” என்று கேட்டது.





இன்றைய முக்கிய செய்திகள் 


29-02-2024 


மக்களின் சேவகனான நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: தூத்துக்குடியில் பிரதமர் மோடி உரை...


தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் “பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாட்டினை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி...


2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...


பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை அஞ்சல் மூலம் அனுப்பும் புதிய சேவை தொடக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு...


அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக காவல்துறையினர் செயல்பட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்...


தூத்துக்குடியில் ஆழ்கடல் பகுதியில் சங்கு எடுக்க அனுமதி வழங்க உரிமம் வழங்கக் கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை...


இனி பணமே தேவையில்லை.. யுபிஐ, கார்டு மூலம் டிக்கெட் வாங்கலாம்.. சென்னை மாநகர பேருந்துகளில் புதிய வசதி அறிமுகம்...


 குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது...




Today's Headlines:

29-02-2024


As a servant of the people, I will fulfill your wishes and demands: PM Modi's speech in Thoothukudi... 


Minister Udayanidhi inaugurated the "Let's celebrate parents" conference organized by the Tamil Nadu State Parent Teacher Association... 


Veteran Journalist VN Samy will be awarded the Kalaignar Pen Award for 2022: Chief Minister M K Stalin's order...


New service to send registration certificate, driving license by post: Transport department announces... 


Police should act as a bridge between the government and the people: Chief Minister M.K.Stal's instruction...


 License should not be issued to allow conch shelling in deep sea area in Tuticorin: High Court Madurai Branch... 


No need for cash anymore.. Tickets can be bought through UPI, card.. New facility introduced in Chennai city buses...


Foundation stone laid for rocket launch pad at Kulasekaranpatnam...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கட்டாய வருமான வரி பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. தவறுதலாக Regime தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அலுவலர் கடிதம்...

  கட்டாய வருமான வரி பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. தவறுதலாக Regime தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது - கருவூலம் மற்றும் கணக்...