விரைவில் புழக்கத்திற்கு வரும் புதிய 20 ரூபாய் நோட்டு
இந்திய ரிசர்வ் வங்கி விரைவில், புதிய 20 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை வெளியிட உள்ளது
இந்த 20 ரூபாய் நோட்டின் வடிவமைப்பு, தற்போதுள்ள மகாத்மா காந்தி படத்துடன் கூடிய நோட்டுடன் ஒத்ததாகவே இருக்கும்
ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுக்களும், செல்லத்தக்கவையாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
புதிய 20 ரூபாய் நோட்டில், மகாத்மா காந்தி புகைப்படமும், மற்ற விவரங்களும் அப்படியே இருக்கும். ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டுமே மாறியிருக்கும். புதிய ரூபாய் நோட்டில் முன்னாள் ஆளுநர் சக்தி காந்த தாஸ் அவர்களின் கையொப்பம் இருந்த இடத்தில், இனி புதிய ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இடப்பட்டிருக்கும்.
ரிசர்வ் வங்கியில் ஆளுநர்கள் மாறும்பொழுது, மத்திய வங்கி செய்யும் வழக்கமான நடவடிக்கை என்பதால், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளது. இந்நிலையில் பழைய அதாவது இதற்குமுன் இருந்த கவர்னரின் கையொப்பம் உள்ள நோட்டுகள் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, முன்னாள் கவர்னர் கையொப்பமிட்ட ரூபாய் நோட்டுகளும் செல்லும், இது வங்கியின் வழக்கமான நடவடிக்கை என்பதால் மக்கள் குழப்பமடைய வேண்டாம்.