"நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி" திட்டத்தின் கீழ் தொண்டு நிறுவனம் சார்பில் பயிற்சிகள் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு
நம்முடைய பள்ளிக் கல்வித்துறையின் "நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி" திட்டத்தின் கீழ் "அக்னிச் சிறகுகள்" தொண்டு நிறுவனம் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள 14 ஆயிரம் பள்ளிகளில் மாணவச் செல்வங்களுக்கு நினைவாற்றல் அதிகரிப்பு மற்றும் வாழ்வியல் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
"சிறகை விரி உயர பற" என்ற அத்திட்டத்தை என்னுடைய திருவெறும்பூர் தொகுதியில் உள்ள திருச்சி மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் இன்று தொடங்கி வைத்து, "தகுதி வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் வழங்கப்படவுள்ள இப்பயிற்சிகளை மாணவச் செல்வங்கள் உள்வாங்கி, பயன்படுத்திக் கொள்ளவேண்டும்" என கேட்டுக் கொண்டோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.