கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

FIFA World Cup Football Final: Spain wins the championship title

 



உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : அர்ஜெண்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி


FIFA World Cup Football Final: Spain wins the championship title


23வது பிபா உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது.


போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.


இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90 3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது. கூடுதல் நேரத்தின் போது ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில், மாற்று வீரர் நிக்கோ வில்லியம்ஸ் தலையால் முட்டிய பந்தைப் பெற்ற பெர்ரான் டோரஸ் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெசுக்கு மிக நெருக்கத்தில் இருந்து சக்தி வாய்ந்த ஷாட் மூலம் கோலடித்து ஸ்பெயினின் நாயகனாக உருவெடுத்தார்.


அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர். இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2010-ம் ஆண்டு முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு வரும் 22.07.2026 அன்று விசாரணைக்கு வருகிறது

 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு வரும் 22.07.2026 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  ஏற்கனவே  ஒரு தரப்பு வாத...