கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப்பணத்திற்கு அலுவலக பதிவு முக்கியம் - மாவட்ட ஆட்சியர்



Official records are essential for the cash held by government employees – District Collector


 அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப்பணத்திற்கு அலுவலக பதிவு முக்கியம் -  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தினமும் தங்களது கைவசம் கொண்டு வரும் சொந்த ரொக்கப் பணம் குறித்த தகவல்கள் "Personal Cash Register" என்ற பிரத்யேகப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


இந்த ரொக்கப் பதிவேடானது, தினமும் வருகைப் பதிவேட்டுடன் (Attendance Register) சேர்த்து அலுவலகத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரால் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும்.


அலுவலகத் தலைவரின் மேலதிகாரிகள் மாதம் இருமுறை (Bi-monthly) இந்த ரொக்கப் பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.


இந்தப் பதிவேட்டைச் சரியாகப் பராமரிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவர், கண்காணிப்பாளர் மற்றும் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்கும் பணியாளர் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் சுற்றறிக்கை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - 3rd Maternity Leave

 மூன்றாவது மகப்பேறு விடுப்பு அரசாணை (நிலை) எண். 53 , நாள் 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு  அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது க...