கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அவசர உதவி எண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவசர உதவி எண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Father sells 2 children to duck farm for Rs. 80,000 - Authorities rescue boys




 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரூ.80,000 பணத்திற்காக 2 சிறுவர்களை வாத்து பண்ணையில் விற்ற தந்தை - சைல்டு ஹெல்ப் லைனுக்கு வந்த தகவலை அடுத்து சிறுவர்களை மீட்ட அதிகாரிகள்


Father sells 2 children to duck farm for Rs. 80,000 - Authorities rescue boys


மன்னார்குடி அருகே வாத்துப் பண்ணையில் சிறுவர்கள் வேலை செய்து வருவதாக, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணிற்கு வந்த புகாரை அடுத்து, மன்னார்க்குடி காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த இரண்டு சிறுவர்களை மீட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக வாத்துப் பண்ணை உரிமையாளரான ஆந்திராவைச் சேர்ந்த விஜயகுமார் மீது, கொத்தடிமை தடைச் சட்ட பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, 80 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக குழந்தைகளை விற்ற தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.போலீசார் விசாரணையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட ராமாபுரம் பகுதியில் இயங்கி வரும் வாத்துப் பண்ணையில் இரண்டு சிறுவர்கள் வேலை பார்த்து வருவதாக 1098 என்கிற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணிற்கு தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன் மேற்பார்வையாளர் சுரேஷ் மற்றும் மன்னார்குடி உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.


இந்த விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போடூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், மன்னார்குடி அருகே ராமாபுரம் பகுதியில் சொந்தமான வாத்துப் பண்ணை வைத்துள்ளார். இந்த நிலையில், இப்பண்ணையில் வேலை செய்வதற்காக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணி என்பவர், தனது 13 வயது மற்றும் 9 வயதுடைய இரண்டு மகன்களை ரூ.80 ஆயிரத்துற்கு விஜயகுமாரிடம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.இதனையடுத்து, இரண்டு சிறுவர்களையும் மன்னார்க்குடி காவல் நிலைய போலீசார் மீட்டனர். தொடர்ந்து, வாத்துப் பண்ணை உரிமையாளரான ஆந்திராவைச் சேர்ந்த விஜயகுமார் மீது, கொத்தடிமை தடைச் சட்ட பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், 80 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக குழந்தைகளை விற்ற தந்தை மணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சிறுவர்களை மீட்ட போலீசார் அவர்களுக்கு உடை மற்றும் உணவளித்து திருவாரூர் மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் தங்க தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து, பெற்றோர்களிடம் சிறுவர்களை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Wild animal rescue - Contact number Tamilnadu



 சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்கு மீட்பு தொடர்பான உதவிகளுக்கு தொடர்பு எண் அறிவிப்பு


Notification of contact number for assistance related to wild animal rescue in Chennai and surrounding areas


Press Release

Chennai Wildlife Division

In this monsoon season, for any wildlife rescue related assistance in and around Chennai, public may reach, Chennai Wildlife Division, Head Quarters Range, in the following helpline no 044-22200335.

The Wildlife Warden

Chennai Wildlife Division

30.11.2024

Chennai




Heavy rain - Emergency center numbers

 


கனமழை - அவசரகால மைய எண்கள் அறிவிப்பு


Heavy rain - Emergency center helpline numbers 


மாநில அவசரகால கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 


Whatsapp 94458 69848



மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள்:


நாகப்பட்டினம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800-233-4233 


Whatsapp 84386 69800


மயிலாடுதுறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04364-222588


திருவாரூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 


Whatsapp 94885 47941


கடலூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 


Whatsapp 94899 30520


பொது மக்கள் TN Alert செயலி மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.



நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், தேவையான உதவிகளை பெற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு...

 நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், தேவையான உதவிகளை பெற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு...


📱வாட்ஸ்அப் எண்: 81485 39914


✖️ட்விட்டர் (X): @tn_rescuerelief மற்றும் @tnsdma


💻பேஸ்புக்: @tnsdma








தேசிய அளவிலான உதவி எண்களை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் - மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்...

 தேசிய அளவிலான முக்கிய உதவி எண்களை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் என மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.



கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியீடு...

 சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்றால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஏற்கனவே இரவு ஊரடங்கு அறிவித்து அமலில் உள்ளது. இதனைத்தொடர்ந்து நாளுக்கு நாள் தொற்று வேகமாக பரவி வருவதால் இன்று முதல் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள அவசர கால உதவி எண்கள் வெளியிட்டுள்ளன.


மேலும், 9498181236, 9498181239 ஆகிய இரண்டு எண்களை தொடர்பு கொண்டு பெருநகர காவல்துறையின் உதவியை நாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உச்சநீதிமன்றத்தில் TET வழக்கு ஒத்திவைப்பு

 உச்சநீதிமன்றத்தில் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET தேவை  வழக்கு 03.04.2025க்கு ஒத்திவைப்பு  Teacher Eligibility Test required f...