கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செவிலியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவிலியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Nurse Posts in Saudi Arabian Hospitals - Tamil Nadu Government Press Release, Date: 13-03-2025


சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பெண் செவிலியர் பணியிடங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு, நாள் : 13-03-2025


Job Notification - Female Nurse Posts in Saudi Arabian Hospitals - Tamil Nadu Government Press Release, Date: 13-03-2025


சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு - விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Monthly salary of ₹2 lakh - Nurse (Male / Female) job in Germany - Free German language training - TN Govt Press Release



மாதச் சம்பளமாக ₹2 இலட்சம் - ஜெர்மனி நாட்டில் செவிலியர் (ஆண் / பெண்) பணி - இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


Monthly salary of ₹2 lakh - Nurse (Male / Female) job in Germany - Free German language training will be provided - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஜெர்மனியில் செவிலியர் பணிக்கு 2 லட்சம் ஊதியம் : தமிழ்நாடு அரசு


ஜெர்மனி நாட்டில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது


இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:


ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குள்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.


இவர்களுக்கு B1 , B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும்.


எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2025க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044- 22505886/ 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recruitment of Nurses appointed on contract basis by MRB - Absorbing 1200 Nurses into Regular Time Scale – Director's Proceedings, Dated : 13-11-2024

 


மருத்துவ பணிகள் தேர்வாணையம் MRB மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 1200 செவிலியர்களை காலமுறை ஊதியத்தில் ஈர்த்தல் - இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 13-11-2024 & செவிலியர்கள் பட்டியல்


Recruitment of Nurses appointed on contract basis by MRB - Absorbing 1200 Nurses into Regular Time Scale – Director's Proceedings, Dated : 13-11-2024 & List of 1200 Nurses


Tamil Nadu Medical Subordinate Services - Nursing Establishment - W.P.No.31213/2017 filed before the Hon'ble High Court of Madras- Nurses appointed on Contract Basis through MRB - Absorbing them into regular time scale - orders Issued - Regarding.


தமிழ்நாடு மருத்துவ துணை சேவைகள் - நர்சிங் நிறுவனம் - W.P.No.31213/2017 மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது - MRB மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் - வழக்கமான கால முறை ஊதியத்தில் அவர்களை உள்வாங்குதல் - உத்தரவுகள் - வெளியிடப்பட்டது - குறித்து 


Annexure-I

 Ref.No.15885/N1/2/2018, Dated:13.11.2024

 1200 Contract Basis Nurses who are eligible and absorbed into regular time scale pay


Annexure-II - 182 Contract Basis Nurses who are not considered due to Service Particulars not received


Annexure-III - 142 Contract Basis Nurses who are not eligible and not absorbed into regular time scale pay



>>> செயல்முறைகள் & செவிலியர்கள் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...




  +2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...


 அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது.  +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.


இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்


https://aravind.org/mlop-recruitment/#1615894571217-5819322e-7a8e   


பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை அன்று நடைபெறும்.


நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:

• +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy)

• ஆதார் அட்டை ((Original + Xerox copy)

• Transfer Certificate – TC (Original + Xerox copy).        


நாடு முழுவதும் ரூ.1,570 கோடி செலவில் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ள இடங்கள் (Central Cabinet approves setting up of 157 nursing colleges across the country at a cost of Rs.1,570 crore - 11 nursing colleges are set up in Tamil Nadu)...

 நாடு முழுவதும் ரூ.1,570 கோடி செலவில் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ள இடங்கள் (Central Cabinet approves setting up of 157 nursing colleges across the country at a cost of Rs.1,570 crore - 11 nursing colleges are set up in Tamil Nadu)...


நாடு முழுவதும் ரூ.1,570 கோடி செலவில் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ளது.


திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அங்கீகரிக்கப்பட்ட & அங்கீகரிக்கப்படாத செவிலியப் படிப்புகள் (NURSING TRAINING ) எவை? தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியீடு...



 மாணவர்கள், பெற்றோர், செவிலியர் பயிற்சியில் சேர்பவர்கள்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்....


நர்சிங் பயிற்சி என்ற பெயரில் பல பெரிய மருத்துவமனைகள், நிறுவனங்கள் , பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகள், பள்ளிகள்


 கீழ்க்கண்ட பெயர்களில் போலி நர்சிங் பயிற்சிகளை நடத்தி நர்சிங் டிப்ளமோ மற்றும் சர்டிபிகேட்டுகளை வழங்குகிறார்கள் .


இந்த சர்டிபிகேட்டுகளை கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது . கல்வி நிறுவனங்களை பற்றிய தகவல்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது.


பதிவாளர்,

தமிழ்நாடு செவிலியர் குழுமம்


>>>> Click here to View Recognized Nursing Institutions List...





இன்று (மே 12) உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது...

சர்வதேச செவிலியர் தினம்...





இன்று (மே 12) உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.




நவீன நர்சிங்கின் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினம் ஏற்பாடு செய்யப்படுகிறது.




சர்வதேச செவிலியர் தினமான 2021 இன் தீம் "நர்சிங் தி வேர்ல்ட் டு ஹெல்த்".




WHO இன் கூற்றுப்படி, சர்வதேச செவிலியர் தினம் மற்றும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த 200 வது ஆண்டு விழாவையொட்டி, உலக சுகாதார அமைப்பு உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான கூட்டாளர்களுடன் இணைந்து சுகாதாரத் துறையில் செவிலியர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.




புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த 200 வது ஆண்டு நிறைவைக் கொண்டுவருவதற்காக WHO 2021 ஐ செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆண்டு என நியமித்துள்ளது.




WHO தனது இணையதளத்தில் கொரோனா வைரஸ் COVID-19 தொற்றுநோய் செவிலியர்கள் ஆற்றிய முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ளது. செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் இல்லாமல் கொரோனா வெடிப்பிற்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது.




குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க சுகாதாரம், கல்வி மற்றும் நலத்துறையின் அதிகாரியான டோரதி சதர்லேண்ட் 1953 ஆம் ஆண்டில் ஜனாதிபதி டுவைட் டி ஐசனோவருக்கு "செவிலியர் தினத்தை" அறிவிக்க முன்மொழிந்தார்; ஆனால் ஜனாதிபதி ஐசனோவர் அவரது கோரிக்கையை நிராகரித்தார். ஆனால் சர்வதேச செவிலியர் கவுன்சில் (ஐ.சி.என்) 1965 முதல் இந்த நாளைக் கொண்டாடுகிறது.




ஜனவரி 1974 இல், புளோரன்ஸ் நைட்டிங்கேலின் நினைவாக சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாட மே 12 தேர்வு செய்யப்பட்டது.




செவிலியர்கள் - அன்பின் இருப்பிடம், தியாகச் சுடர், பொறுமையின் சிகரம், சேவையின்மறு உருவம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் ஒரு தாய்க்கு இருக்கும் குணங்கள். செவிலியர்களை மறுபிறவி எடுத்த அன்னையராகக் கருதலாம். உறவாகவோ, நட்பாகவோ இல்லாத ஓர் மூன்றாம் நபர், நம் மீது பரிவு காட்டுவது பலருக்கு சாத்தியமில்லை. ஆனால், செவிலியர்கள் பரிவுடன் சேவை புரிகிறார்கள்.




செவிலியரின் பணி என்பது மனித வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இருந்தே உள்ளது. தாய் என்பவள், குழந்தைப் பராமரிப்பில் ஆரம்பித்து, அவர்களைக் காப்பாற்றி, நோய்களிலிருந்து குடும்பத்தினரைப் பாதுகாத்து, வீட்டில் உள்ள முதியோரைக் கவனிப்பது வரை தொடர்கிறது. எங்கெல்லாம் அன்பு நிறைந்த சேவை தேவையோ,அங்கெல்லாம் பெண்களே முதலிடம் பெறுகின்றனர். அதனால்தான் செவிலியர் பணியில் பெண்களே அதிகம் இருக்கிறார்கள்.




நோயின் வலியிலும், வேதனையிலும் நாம் துடித்த காலத்தில், மருத்துவமனைகளில் நம்மை அன்புடனும், பரிவுடனும் கவனித்துச் சேவை செய்யும் செவிலியர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லும் நாளாக ‘உலக செவிலியர்’ தினம் கொண்டாடப்படுகிறது.




‘விளக்கேந்திய மங்கை’ என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரே, செவிலியர் சேவையின் முன்னோடி. இவர் இத்தாலி நாட்டின் ஃபிளாரன்ஸ் நகரில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடும்பத்தில் பிறந்தவர். ‘இறைவனால் தனக்கு விதிக்கப்பட்ட பணியாகவே’ எண்ணி செவிலியர் பணியை சேவைமனப்பான்மையுடன் செய்தார்.




ஐரோப்பாவில் நடைபெற்ற க்ரீமியன் போரில் இரவு வேளைகளிலும் கையில் விளக்கை ஏந்திதேடிச் சென்று சேவை புரிந்தார். அவரின் நினைவாக, அவர் பிறந்தநாளான மே 12-ம் நாள் ‘சர்வதேசசெவிலியர் தினமாக’ கொண்டாடப்படுகிறது. இது அவருடைய பணிக்குக் கிடைத்த சிறப்பாகும். இன்றும்நர்ஸிங் பட்டம் பெறும் செவிலியர்கள், கைவிளக்கில் ஒளியேற்றி, மனிதகுலத்துக்கு தன்னலமற்ற சேவை செய்ய உறுதி எடுக்கிறார்கள்.




மோசமான நோய்களுடன் உள்ள நோயாளிகளுக்கு நெருங்கிச் சேவை செய்யும் செவிலியர்கள், பல்வேறு வகையான நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. இரவு பகல் பாராதுகடுமையாக உழைக்கும் அவர்கள்,மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகவும் நேரிடுகிறது. இதையெல்லாம் தாண்டி, பலரையும் நோயிலிருந்து மீட்கவும், தேவையில்லாமல் நிகழும் மரணங்களைத் தடுக்கவும், மருத்துவர்களுடன் இணைந்து மகத்தான சேவையில் செவிலியர்கள் ஈடுபடுகின்றனர்.




தற்போது உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது கரோனா என்னும் வைரஸ் நோய். உலக மக்களின் நன்மைக்காக செவிலியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிறப்பாக பணிசெய்து வருகிறார்கள். ஊண் உறக்கமின்றி இரவு பகல் பாராது பணியாற்றுகின்றனர். பாதுகாப்புக்கான கவச உடைகளை அணிந்தால், பலமணி நேரம் இயற்கை உபாதைக்காகக் கூட செல்ல முடியாது. தங்கள்குடும்பத்தினர், குழந்தைகளைப் பிரிந்து, ‘எந்த நேரத்திலும் கரோனா நோய் தங்களைத் தாக்கக் கூடும்’ என்ற ஒருவித பயத்திலேயே பணியைக் குறைவின்றி செய்து வருகிறார்கள்.




உலக மக்களின் நன்மைக்காக உழைக்கும் செவிலியர்களின் பணிக்கு நாம் ‘நன்றி’ என்று ஒற்றைவார்த்தையில் கூறி அவர்களின் பணியை குறைத்து எடைபோட்டு விடக்கூடாது. அவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் என்றும் நலமுடன் வாழ நாம் அனைவரும் ஒன்றுபட்டு மனதார வாழ்த்துவோம். சிரித்த முகத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் சேவை செய்யும் செவிலியர்களைப் போற்றுவோம்!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி பயில முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

   உயர்கல்வி பயில்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக...