2024-2025ஆம் கல்வியாண்டு திருத்தியமைக்கப்பட்ட பள்ளி நாட்காட்டியின்படி வரும் (22-03-2025) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள்
As per the revised school calendar for the academic year 2024-2025, All Schools will be full working day on Saturday (22-03-2025)
2024-2025ஆம் கல்வியாண்டு திருத்தியமைக்கப்பட்ட பள்ளி நாட்காட்டியின்படி வரும் (22-03-2025) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள்
As per the revised school calendar for the academic year 2024-2025, All Schools will be full working day on Saturday (22-03-2025)
நாளை (08.03.2025) பள்ளி முழு வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
Districts where school has been declared a full working day tomorrow (08.03.2025)
தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை - சனிக்கிழமை (08.03.2025) முழு வேலை நாள்
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளை - சனிக்கிழமை (08.03.2025) முழு வேலை நாள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (08.03.2025) பள்ளி முழு வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலர்
தஞ்சாவூர் நாளை பள்ளி வேலை நாள்
கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் பொருட்டு நாளை (08.03.2025 சனி) வேலைநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு - 12 நாட்கள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு
Schools open today after Pongal festival holiday - 12 days of continuous operation possible
ஆறு நாட்கள் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து இன்று (20-01-2025) பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் தொடர்ந்து, 12 நாட்கள் செயல்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த, 10ஆம் தேதி முதல் நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டது. சிறப்பு பஸ்கள் இயக்கமும் துவங்கியது. 11 மற்றும், 12ம் தேதி பள்ளிகள் விடுமுறையாக இருந்த போதும், 13ஆம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் செயல்பட்டன.
இந்நிலையில், 14ஆம் தேதி முதல், 19ஆம் தேதி வரை ஆறு நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது.
விடுமுறை முடிந்து இன்று (20ம் தேதி) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. கடந்த, 17 ஆம் தேதி பொது விடுமுறையாக அரசு அறிவித்ததால், இதற்கு மாற்றாக வரும், 25ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 26ஆம் தேதி குடியரசு தினம்.
பெரும்பாலான பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்படும். இதனால், 20ஆம் தேதி முதல், வரும் 31ஆம் தேதி வரை தொடர்ந்து, 12 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் பள்ளிகள் செயல்பட உள்ளன.
மாணவர்களுக்கான பள்ளி வேலை நாள் 210 ஆகவும், ஆசிரியர்களுக்கு வேலை நாள் 220 ஆகவும் புதிய நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 15.04.2025 உடன் முழு ஆண்டுத் தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் 16.04.2025 முதல் 30.04.2025 (10 வேலை நாட்கள்) வரை பள்ளிக்கு வந்து தேர்வு முடிவுகளை இறுதி செய்யவும், 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான முன் திட்டமிடல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு...
*பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியீடு...
பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது.
வேலைநாட்களை குறைக்க வேண்டும் என பல தரப்பில் வந்த கோரிக்கையை ஏற்று, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் புதிய நாட்காட்டி வெளியீடு.
இந்த 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என தெரிவிப்பு.
>>> ஏப்ரல் மாத பள்ளி நாட்காட்டி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
திருத்திய கால அட்டவணை - சனிக்கிழமை பள்ளி வேலை நாட்கள் விவரம் - Saturday Working Days 2024-2025...
செப்டம்பர் 14, 21
அக்டோபர் 5
நவம்பர்
டிசம்பர் 14, 21
ஜனவரி 4
பிப்ரவரி 15
மார்ச் 1, 22
ஏப்ரல் 5, 12
ஆகஸ்ட் மாதத்தில் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வேலை நாள் என்பதை ரத்து செய்து சென்னை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...
சென்னை மாவட்டம்: சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமை..
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை...
*நாளை சனிக்கிழமை விடுமுறை*
இணைப்பில் உள்ள ஆகஸ்டு மாத திருத்தப்பட்ட நாட்காட்டியின் படி நாளை 10.08.2024 மற்றும் 24.08.2024 ஆகிய சனிக்கிழமைகள் விடுமுறை - திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலக செய்தி.
>>> திருத்திய ஆகஸ்ட் மாத பள்ளி வேலை நாள் நாட்காட்டி அட்டவணை...
ஐ.ஐ.டி., IIT மாணவர்களுக்கு வகுப்பறை நேரம் குறைப்பு...
சமீபத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள் 195 / 210 நாட்களிலிருந்து 220 நாட்கள் என அதிகரித்து அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது...
2024-25ஆம் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 21 சனிக்கிழமைகளின் விவரங்கள்...
Details of Saturdays declared as working days in the academic year 2024-25...
- June - 29
- July - 13
- August - 10,24
- September - 14,21,28
- October - 05,19
- November - 09,23
- December - 14,21
- January - 11
- February - 01,15,22
- March - 01,22
- April - 05, 12
Total - 21 days
>>> 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி & பயிற்சி நாட்காட்டி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கேரளாவில் உள்ள பள்ளிகளின் வேலைநாட்களை அதிகரித்து மாநில அரசு உத்தரவு....
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த கல்வியாண்டில் 204 ஆக இருந்த பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை நடப்பு கல்வியாண்டில் 220 வேலைநாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 25 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன.
கேரள பள்ளிகளில் வேலை நாட்கள் 220 ஆக உயர்வு, 25 சனிக்கிழமைகளில் வகுப்புகள்...
2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்விக் காலண்டரைப் பள்ளிகளுக்கு 220 வேலை நாட்களைக் குறிப்பிட்டு பொதுக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது என்று கேரள உயர் நீதிமன்றத்தில் அரசு வியாழக்கிழமை தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க மூவாட்டுபுழாவில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் மேலாளர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பொதுக் கல்வி இயக்குனருக்கு எதிராக தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கல்வி உரிமைச் சட்டம் மற்றும் கேரளக் கல்விச் சட்டம் மற்றும் விதிகளின்படி 220 வேலை நாட்கள் கட்டாயம் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். வேலை நாட்களில் எந்தக் குறைப்பும் அனுமதிக்கப்படவில்லை. அரசு தரப்பு மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை முடித்து வைத்தது.
ஆசிரியர் சங்கங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, மாநிலத்தில் 10ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள், இந்த கல்வியாண்டில் வேலை நாட்களை 220 ஆக உயர்த்தியுள்ளன. உயர் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கல்வி காலண்டரை பொதுக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 204 வேலை நாட்கள் இருந்தன. அதிக வேலை நேரம் கொண்ட மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளிகளில் வேலை நாட்கள் 195 ஆக இருக்கும். புதிய நாட்காட்டியின்படி, 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு 25 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்கும், இதில் 16 வார சனிக்கிழமைகள் ஆறு நாட்கள் வரும் தொடர்ச்சியான வேலை நாட்கள். கேரள கல்வி விதிகளின்படி, ஒரு கல்வியாண்டிற்கு 220 வேலை நாட்கள் தேவை. பொதுக் கல்வி இயக்குனர் சிறப்பு சூழ்நிலைகளில் 20 நாட்கள் வரை தளர்வு அளிக்கலாம். ஆனால், கடந்த ஆண்டு வரை ஒவ்வொரு வகுப்பிலும் 195 வேலை நாட்கள் மட்டுமே இருந்தன. கடந்த ஆண்டு கல்வி அமைச்சர் சிவன்குட்டியின் உத்தரவின் பேரில் வேலை நாட்கள் 204 ஆக உயர்த்தப்பட்டது. இம்முறை, அமைச்சர் 210 நாட்களை பரிந்துரைத்தார், ஆனால் தர மேம்பாட்டுத் திட்டம் (கியூஐபி) கண்காணிப்புக் குழு 204 நாட்கள் போதுமானது என்று பரிந்துரைத்தது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட கல்வி நாட்களைக் குறைத்ததால், கல்வித் தரம் பாதிக்கப்படும் என்று கூறி, மூவாட்டுப்புழா எபினேசர் பள்ளியின் மேலாளர் சி.கே.ஷாஜி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் (பிடிஏ) உயர் நீதிமன்றத்தை அணுகினர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மனுதாரர்களுடன் அரசு ஆலோசனை நடத்தியும், சாதகமான முடிவு எட்டப்படவில்லை. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை உயர்நீதிமன்றம் பரிசீலிக்க உள்ள நிலையில் அரசின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்...
Academic Year 2023-2024 - Details of School Working Days...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
June 12
July 22
August 22
September 17
October 15
November 22
December 16
January 17
February 21
March 20
April
I- III 5 Days
IV - V 10 Days
G. Total
I to III - 189 Days
IV&V 194 Days
2023 - 2024ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலை நாட்கள் விவரம் (ஆசிரியர்கள்)...
June 12
July 22
August 22
September 17
October 19
November 22
December 16
January 17
February 21
March 20
April 16
-------------------------
Total - 204 Days
-------------------------
CRC - 3 Days
-------------------------
பள்ளி வேலைநாள் தொடர்பாக கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் திருத்திய சுற்றறிக்கை...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், இணையதள இணைப்பு, திறன் வகுப்பறைகள் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைத்தலில் தலைமை ஆசிரியர்களின் பணிகள் - இயக்குநர் அவர்களின் செய்தி...
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஐந்தாம் தேதி அன்றோடு ஆண்டு தேர்வுகள் முடிவடைகிறது ஆறாம் தேதி முதல் அந்தக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையாக கருதலாம்.
நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு ,ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு பத்தாம் தேதி மற்றும் 12ஆம் தேதி இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்கு தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக 12-ம் தேதி வரை நான்கு மற்றும் ஐந்து வகுப்பு, ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகின்ற பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம்.
அதன் பிறகு தேர்தல் பணிகள் ஆசிரியர்களுக்கு 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை உள்ள காரணத்தினால் நான்கு மற்றும் ஐந்து வகுப்பு ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.
மீண்டும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பங்கேற்கக் கூடிய வகையில் தெளிவாக எடுத்துச் சொல்லுதல் வேண்டும், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை அவர்களுக்கு வேலை நாட்களாக கருதப்படுகிறது அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காக செல்கின்ற போது அது on duty ஆக கருதலாம்.
தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகை புரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி, மாணவர்களுக்கான promotion கொடுக்கின்ற பணி , promotion registration- ல் பதிவு செய்கின்ற பணி, வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்புகின்ற பணி ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம்.
மேலும் தற்போது இணையதள இணைப்பு பெறுகின்ற பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவே அதனை பெறுகின்ற முயற்சியில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணையதள இணைப்பு வசதிக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் நிதியின் மூலம் இரண்டாவது கட்ட பள்ளி மானியம் (school grant) தற்போது பள்ளி கல்வி இயக்குனர் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
one time connectivity charge இந்த நிதியில் இருந்து மேற்கொள்ளலாம். அதோடு ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் மாதந்திர கட்டணத் தொகை மூன்று மாதங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது அதனை பள்ளிகளுக்கு விடுவிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுத்தவரை ஏப்ரல் மே மாதங்களில் இணையதள இணைப்பு வசதியும் மற்றும் keltron நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகின்ற திறன் வகுப்பறைகள் மற்றும் , கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கு பொருட்கள் வருகின்ற போது பள்ளிக்கு வருகை புரிந்து பொருட்களை பெற்று அதனை நிர்மாணம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளி வேலைநாள் தொடர்பாக அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் சுற்றறிக்கை...
Circular of Aranthangi District Education Officer (Elementary Education) regarding school working day...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஐந்தாம் தேதி அன்றோடு ஆண்டு தேர்வுகள் முடிவடைகிறது ஆறாம் தேதி முதல் அந்தக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையாக கருதலாம்.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு பத்தாம் தேதி மற்றும் 12ஆம் தேதி இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது அதனால் மாணவர்களுக்கு தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக 12-ம் தேதி வரை நான்கு மற்றும் ஐந்து வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகின்ற பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம்.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு , ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு பத்தாம் தேதி மற்றும் 12ஆம் தேதி இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளது. அதனால் அதன் பின்னர் அம் மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.
மீண்டும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பங்கேற்கக் கூடிய வகையில் தெளிவாக எடுத்துச் சொல்லுதல் வேண்டும்,
ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை அவர்களுக்கு தேர்தல் பணிக்காக செல்கின்ற போது அது on duty ஆக கருதலாம்.
தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகை புரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி, மாணவர்களுக்கான promotion கொடுக்கின்ற பணி , promotion registration- ல் பதிவு செய்கின்ற பணி, வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்புகின்ற பணி ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம்
மேலும் தற்போது இணையதள இணைப்பு பெறுகின்ற பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவே அதனை பெறுகின்ற முயற்சியில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இணையதள இணைப்பு வசதிக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் நிதியின் மூலம் இரண்டாவது கட்ட பள்ளி மானியம் (school grant) தற்போது பள்ளி கல்வி இயக்குனர் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. one time connectivity charge இந்த நிதியில் இருந்து மேற்கொள்ளலாம் அதோடு நாம் ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் மாதந்திர கட்டணத் தொகை மூன்று மாதங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது அதனை பள்ளிகளுக்கு விடுவிக்கப்படும்
பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுத்தவரை ஏப்ரல் மே மாதங்களில் இணையதள இணைப்பு வசதியும் மற்றும் keltron நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகின்ற திறன் வகுப்பறைகள் மற்றும் ,கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கு பொருட்கள் வருகின்ற போது பள்ளிக்கு வருகை புரிந்து பொருட்களை பெற்று அதனை நிர்மாணம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வரும் சனிக்கிழமை (28.10.2023) அனைத்து பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) சுற்றறிக்கை (Full working day for all schools on coming Saturday (28.10.2023) - Chief Education Officers Circular)...
வரும் சனிக்கிழமை (28.10.2023) அனைத்து பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் (புதன்கிழமை பாடவேளை) - முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) சுற்றறிக்கை...
MPs monthly salary, pension, daily allowance, additional pension increased from 01-04-2023 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதிய...