விதிமுறைகளை மீறியதற்காக 4 வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி(RBI fines 4 banks for violating norms)...
விதிமுறைகளை மீறியதற்காக 4 வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி (RBI fines 4 banks for violating norms) . .. இந்தியாவில் இருக்கும் வங்கிகளின் நடைமுறை மற்றும் பணப்பரிவர்த்தனைகளை மேற்பார்வையிடும் வேலையையும், வங்கிகளை கட்டுப்படுத்தும் பணிகளையும் இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது. பணப்பரிவர்த்தனை, கடன் மற்றும் வைப்புநிதிகளுக்கான கட்டணம், வட்டி உள்ளிட்ட விதிகளை ரிசர்வ் வங்கி தான் வகுக்கிறது. அதே போல் வங்கிகளுக்கான நடைமுறை வழிகாட்டுதல்களையும் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. ரிசர்வ் வங்கியால் விதிக்கப்படும் வழிகாட்டுதல்கள் முறையாக கடைப்பிடிக்காத வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அபராதமும் விதிக்கிறது. அந்த வகையில் தற்போது நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. லால்பாக் கூட்டுறவு வங்கி, மெஹ்சானா கூட்டுறவு வங்கி, ஹரிஜ் நாக்ரிக் சஹகாரி வங்கி மற்றும் தேசிய கூட்டுறவு வங்கி ஆகியவை அபராதம் விதிக்கப்பட்ட வங்கிகளாகும். தேசிய கூட்டுறவு வங்கிக்கு 1 லட்சம் ரூபாயும், ஹரிஜ் நாக்ரிக் சஹகாரி வங்கிக்கு ரூ.3 லட்சமும், மெஹ்சானா கூட்டுறவு வ