>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் - காலதாமதமாக மறுசீராய்வு மனு - பள்ளிக்கல்வி செயலாளருக்கு அபராதம் - உயர்நீதிமன்றம் உத்தரவு (Appointment of Secondary Grade Teacher - Belated revision petition - Penalty to Secretary of School Education - High Court orders)...
இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென்ற உத்தரவை, மறு ஆய்வு செய்யக் கோரி 6 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்தொடர்ந்த பள்ளிக் கல்வி துறைக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம், ஆயக்காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட வெண்ணிலாவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக 8 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்பின்னரும் ஓப்புதல் அளிக்காததால், மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக மூன்று முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், 2016-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி கல்வித்துறை செயலாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், 2016ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று 2 ஆயிரத்து 148 நாட்கள் காலதாமதத்துடன் கல்வித்துறை மனுத் தாக்கல் செய்திருப்பதை ஏற்க முடியாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, இத்தொகையை ஒரு வாரத்தில் சட்டப்பணி ஆணைக்குழுவிடம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உயர்வு (Increase in education scholarship for differently abled students)...
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை.
1 முதல் 5ஆம் வகுப்பு பயில்வோருக்கான கல்வி உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2,000ஆக உயர்வு.
6-8ஆம் வகுப்பு வரை ரூ.3000ல் இருந்து ரூ.6,000, 9-12ஆம் வகுப்பு வரை ரூ.4000ல் இருந்து ரூ.8000ஆக உயர்வு.
இளநிலை பட்டப்படிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.6000ல் இருந்து ரூ.12,000ஆக உயர்வு.
முதுநிலை பட்டம், தொழிற்கல்வி பயில்வோருக்கு ரூ.7000ல் இருந்து ரூ.14,000ஆகவும் கல்வி உதவித்தொகை உயர்வு.
பன்னிரண்டாம் வகுப்பு, பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் 3500 பணியிடங்கள்...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.07.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஈகை
குறள் :221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
விளக்கம்:
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
பழமொழி :
After a dinner sleep a while
உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.
2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்
பொன்மொழி :
ஒரு புத்திசாலி பிரச்சினையைத் தீர்க்கிறான். ஞானமுள்ளவன் அதைத் தவிர்க்கிறான். --ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
பொது அறிவு :
1. எகிப்தின் தலைநகர் எது?
விடை: கெய்ரோ
2. பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?
விடை: ராஜஸ்தான்
English words & meanings :
overseas - going to a foreign country especially across the sea, கடல் கடந்த வெளி நாட்டு பயணம் செய்வது.
pamper – give more attention and comfort to a person, செல்லம் கொடுப்பது
ஆரோக்ய வாழ்வு :
கருணை கிழங்கு,அதீத உடல் எடை கூடுவது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கருணை கிழங்கு உடல் எடை குறைக்க சிறப்பாக உதவுகிறது.
நீதிக்கதை
ஒற்றுமையே வலிமை
வயது முதிர்ந்த விவசாயி ஒருவருக்கு நான்கு மக்கள் இருந்தனர். அந்த நால்வரும் ஒற்றுமை இல்லாமல், எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாக இருந்தனர்.
இவர்கள் இப்படியே இருந்தால், குடும்பம் சிதறிப் போகுமே என்று வருந்தினார் வயதான தந்தை.
அவர் கூறிய புத்திமதிகளை மதிக்காமல் திரிந்தனர்.
ஒருநாள் மக்கள் நால்வரையும் அழைத்தார் தந்தை அவர்கள் வந்து கட்டிலைச் சுற்றி நின்றனர்.
தன் காலடியில் கிடந்த மூங்கில் கட்டு ஒன்றை மூத்த மகனிடம் கொடுத்து, “இதை முறி” என்றார்.
தன் பலம் முழுவதையும் பயன்படுத்தினான். ஆனால், முறிக்க முடியவில்லை.
அடுத்து இரண்டாவது மகன், மூன்றாவது மகன், நான்காவது மகன், மூவரும் முயன்று பார்த்தனர், ஒருவராலும் முறிக்க இயலவில்லை.
பிறகு, கட்டைப் பிரித்து ஆளுக்கு ஒரு குச்சியைக் கொடுத்தார்.
நால்வரும் சுலபமாக முறித்து விட்டு நின்றனர்.
“இப்படித்தான் உங்கள் வாழ்க்கையும் அமையும், நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருப்பீர்களானால், உங்கள் வாழ்க்கை உறுதியாக விளங்கும். எவரும் உங்களை ஏமாற்ற முடியாது. சண்டைசச்சரவு செய்து, தனித்தனியாக ஆளுக்கு ஒரு பக்கமாக இருப்பீர்களானால், சிதறிப் போவீர்கள். ஒற்றுமையே வலிமை அளிக்கும்” என்றார் தந்தை.
இன்றைய செய்திகள்
21.07. 2023
*இரயிலில் பொதுப்பெட்டி பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு குடிநீர் வழங்க ஏற்பாடு - இரயில்வே துறை.
*குறைந்த வருமானம் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏசி அல்லாத சிறப்பு ரயில்கள் - இரயில்வே துறை திட்டம்.
*கேரளா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா உயர் நீதிமன்றங்களுக்கு நான்கு தலைமை நீதிபதிகள் நியமனம்.
*ஆஷஸ் நான்காவது டெஸ்ட் - ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்.
*தேசிய டைவிங் - வாட்டர் போலோ : சென்னை வீராங்கனைக்கு வெள்ளி பதக்கம்.
Today's Headlines
*Arrangement to provide food and drinking water at low cost to general coach passengers in trains - Railway Department.
*Non-AC Special Trains for Low Income Migrant Workers - Railway Department Scheme.
* Appointment of four Chief Justices to High Courts of Kerala, Telangana, Gujarat and Odisha.
*Ashes Fourth Test - Australia all out for 317 in first innings.
*National Diving - Water Polo: Silver medal for Chennai player.
மாண்புமிகு உச்ச நீதிமன்றம் 'பஞ்சாப் மாநிலம் Vs. ரஃபிக் மாசிஹ்''(2015) 4 SCC 334' இல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக துறையின் தவறு காரணமாக, வழங்கப்பட்ட அதிகப்படியான ஊதியத்தை திரும்பப் பெற முடியாது என்று கூறியுள்ளது. பிரதிவாதிகள் ஆகஸ்ட் 2010 முதல் மீட்டெடுக்க முற்பட்டதால், அது சட்டத்தில் அனுமதிக்கப்படாது (Hon'ble Supreme Court in the case of 'State of Punjab Vs. Rafiq Masih (White Washer)' reported in '(2015) 4 SCC 334', has held that recovery of any excess payment made, owing to the mistake of the Department for over a period of 5 years, cannot be made. Since the respondents have sought to make recovery from August 2010 onwards, the same is impermissible in law)...
வருமான வரி பிடித்தம் - தொடக்கக் கல்வி இயக்கக தகவல் Income Tax Deduction - DEE Information தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ...