கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தவறான சான்றிதழ் - பெற்றோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை



தவறான சான்றிதழ் - பெற்றோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை


எம்பிபிஎஸ் - பிடிஎஸ் படிப்பில் சேர போலி சான்றிதழ், தவறான மதிப்பெண் பட்டியல், தவறான சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், போலி தூதரகச் சான்றிதழ்களை வழங்கினால் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்


படிப்பில் எந்த வருடத்தில் இருந்தாலும் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் மேலும் 3 ஆண்டுகளுக்கு வேறு எந்தப் பாடத்தையும் தொடர தடை


TNPSC Group I Hall ticket வெளியீடு


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1ஏ பதவிகளுக்கான பொதுவான முதல்நிலை தேர்வு 15.06.2025 முற்பகல் நடைபெற உள்ளது.


தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 


தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


சீருடையுடன் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவு செய்ய வேண்டாம் - காவல்துறை அலுவலர்களுக்கு டி.ஜி.பி., அறிவுறுத்தல்



சீருடையுடன் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவு செய்ய வேண்டாம் - காவல்துறை அலுவலர்களுக்கு டி.ஜி.பி., அறிவுறுத்தல்


சீருடையுடன் புகைப்படம் வெளியிட்டால் நடவடிக்கை 


சீருடை அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் போலீஸ் அதிகாரிகள் பதிவு செய்ய கூடாது.


தனியார் நிகழ்ச்சிகளில் சீருடையுடன் பங்கேற்கும் உயர் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும்


உயர் அதிகாரிகள் அனுமதி பெறாமல் YOUTUBE சேனல்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது.


நன்னடத்தை விதிகளை மீறி சமூக வலைதளங்களில் செயல்படும் காவல் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


- டி.ஜி.பி., சங்கர் ஜிவால்


சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!


சமூக வலைத்தளங்களில் காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியிருக்கிறார்


காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.


சமூக வலைத்தளங்களில் காவல்துறையினர் பேசுவது, முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்வது போன்றவற்றில் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு டிஜிபி அறிவுறுத்தியிருக்கிறார்.


அதன்படி, அவர் வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், சமூக வலைதளங்களில் சீருடையுடன் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டாம் என காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், காவல்துறையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி, யூடியூப் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன் அனுமதி பெற வேண்டும்.


அவ்வாறு அனுமதி பெற்றாலும்கூட, வழக்குகள் பற்றிய ரகசியம் காக்க வேண்டிய தகவல்களை யூடியூப் நேர்காணலின்போது காவல்துறை அதிகாரிகள் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


தேவைப்பட்டால் நிகழ்ச்சிகளில் பேசக்கூடிய தகவல்களை உயர் அதிகாரிகளிடம் காட்டி அனுமதி பெற்ற பிறகே பேச வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கூட்ட நெரிசலில் நாம் சிக்கிக் கொண்டால் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?



கூட்ட நெரிசலில் நாம் சிக்கிக் கொண்டால் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?


What should we do for safety if we get stuck in a crowd?


பெங்களூரு ஆர்சிபி வெற்றி விழா துயரம்: இப்படி ஒரு கூட்ட நெரிசலில் நாம் சிக்கிக் கொண்டால் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?


முதலில் நாம் 

அங்கம் வகிக்கும் கூட்டம் நெரிசலுக்கு உள்ளாகிறது என்பதை அறிய வேண்டும். 


நீங்கள் நிற்கும் இடத்தைச் சுற்றி நிற்பவர்கள் உங்களைத் தொடாமல் நிற்கிறார்கள் என்றால் ஒரு சதுர மீட்டருக்கு மூன்று பேர் என்ற நிலையில் இருக்கிறீர்கள். அது ஆரோக்கியமான கூட்டம். 


அதுவே சுற்றி நிற்பவர்கள் அவ்வப்போது உங்களை மோதுகிறார்கள் என்றால் ஒரு சதுர மீட்டருக்கு ஐந்து நபர்கள் வரை நிற்கிறீர்கள் என்று அர்த்தம். இது ஆபத்தான கூட்டமாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே உடனே கூட்ட நெரிசல் குறைவாக இடம் நோக்கி நகர்ந்து விட வேண்டும். 


உங்களால் ஒரு கூட்டத்தில் குனிந்து கால்களைத் தொட முடியவில்லை என்றால் அந்தக் கூட்டம் - நெருக்கடி நிலையை எட்ட உள்ளது என்று பொருள். 


இப்படி ஒரு கூட்டத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டால் எப்படி வெளியேறுவது? 



உங்களுக்கு மிக அருகில் கூட்டம் செல்லும் திசை அன்றி பக்கவாட்டில் ஏதேனும் மேடான பகுதி / கார் / மரம் உள்ளிட்ட இடங்கள் இருப்பின் அதை நோக்கி மூலைவிட்டமாக (Diagonal direction) நகர்ந்து செல்லவேண்டும். 


இவ்வாறு செல்லும் போது 

கைகளை பாக்சிங் செய்வது போல நெஞ்சுக்கு முன்னாடி பாதுகாப்பு தருவது போல வைத்துக் கொண்டு நகர வேண்டும். 


கூட்ட நெரிசல் ஏற்படும் போது அதுவும் நீரின் ஓட்டம் போல அலை அலையாகச் செயல்படும். எனவே நீரின் ஓட்டத்தோடு செல்லக் கூடாது. நீரை எதிர்த்தும் செல்லக் கூடாது. அதே சமயம், இந்த மக்கள் கூட்டம் எனும் நீர் ஓட்டத்துக்கு மூலை விட்டமாகச் செல்ல வேண்டும். இதன் மூலம் எளிதில் கூட்டத்தை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைக்கும். 


ஒரு கூட்டத்தில் பங்கெடுக்கும் போதே

அங்குள்ள பல வெளியேறும் பாதைகள், கதவுகள் மற்றும் திடீரென நெருக்கடி ஏற்பட்டால் எதன் மீது ஏறி தப்பிக்க வேண்டும், முதலில் எந்தப் பாதை நோக்கி ஓட வேண்டும் என்றெல்லாம் மனக்கணக்கு முன்னாடியே போட்டுக் கொள்ள வேண்டும். 


பெரிய கூட்டமே மந்தை மனப்பான்மையில் ஒரு குறிப்பிட்ட பாதையில் முண்டியடித்துக் கொண்டிருக்கும். ஆனால் பல மாற்றுப் பாதைகள் ஆள் இல்லாமல் அல்லது குறைவாக இருக்கும். எனவே நமது முன்கூட்டிய மனக்கணக்குகள் நம்மைக் காக்கக் கூடும். 



எப்பவும் நாம் நகரும் திசையில் நம்மைத் தடுக்கும் சுவர், தூண்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை விட்டு விலகி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அசையாத, அசையமுடியாத இடத்தில் சிக்கிக் கொண்டால் நமது நெஞ்சுப் பகுதி சுற்றி இருக்கும் கூட்டத்தால் நெரிக்கப்பட்டு மூச்சு விட இயலாமல் இறக்கும் வாய்ப்பு அதிகம். 


எப்போதும் நமது கால்கள் தரையில் இருக்குமாறு ஊர்ந்து செல்ல வேண்டும். முடிந்த வரை கீழே விழாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். மீறி கீழே விழுந்தால் அடுக்கிவைத்த "டோமினோ"க்கள்  ஒன்று மேல் ஒன்று விழுவது போல மக்கள் நம் மேல் விழும் வாய்ப்பு உண்டு. 


அவ்வாறு கீழே விழுந்து விட்டால் கருவுக்குள் சிசு எப்படி சுருண்டு படுத்துக் கொள்ளுமோ அது போல தலையை உள்நோக்கி வைத்து மடங்கி சுருண்டு படுத்துக் கொள்ள வேண்டும். இது நமது தலை மற்றும் நெஞ்சுப் பகுதியைக் காக்கும். கூட்டம் சற்று விலகியவுடன் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பிக்க வேண்டும். 


இது போன்ற கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் பத்து நொடிகளுக்கு மேல் மூச்சு விடாமலோ நாடித் துடிப்பு இல்லாமல் இருந்தால் உடனே சிபிஆர் (இதயத்துடிப்பு மற்றும் மூச்சை மீட்டல்)  முதலுதவியை ஆரம்பிக்க வேண்டும். 


இத்தகைய கூட்ட நெரிசல் மரணங்களில் தலையாய காரணமாக இருப்பது "மூச்சுத் திணறல்". எனவே மூச்சு நாடி நின்றி நான்கு நிமிடங்களுக்குள் சிபிஆர் ஆரம்பிக்கப்பட வேண்டும். 


இயன்ற அளவு கூட்ட நெரிசல் ஏற்படும் என்று சந்தேகிக்கப்படும் கூட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது நல்லது.


EMIS - Transfer / Retirement ஆன ஆசிரியரின் பெயரை Common pool க்கு அனுப்பும் வழிமுறை

 

EMIS - Transfer / Retirement ஆன ஆசிரியரின் பெயரை Common pool க்கு அனுப்பும் வழிமுறை


 அனைவருக்கும் வணக்கம்,


 தங்கள் பள்ளியில் 31.5.2025 அன்று பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் & ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்கள் பெயர்களை அந்தந்தப் பள்ளி EMIS login லிருந்து Common pool க்கு retirement என தேர்வு செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


EMIS - பள்ளி login லிருந்து Transfer / Retirement ஆன ஆசிரியரின் பெயரை Common pool க்கு அனுப்பும் வழிமுறை


emis.tnschools.gov.in (school login)

⬇️

staff

⬇️

staff list

⬇️

Click the arrow mark 

⬇️

reason_ Retirement

⬇️

Save



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-06-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 399:

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

விளக்கம்:தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.


பழமொழி :
All things comes to those who wait.

பொறுத்தார் பூமி ஆள்வார்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.

2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.


பொன்மொழி :

நல்ல விதை விதைத்தால் செடி நன்கு வளர்ந்து நல்ல பலன் கொடுக்கும். அதுபோல நல்ல எண்ணங்கள் இருந்தால் வாழ்க்கை பிரகாசிக்கும். - சாகர்


பொது அறிவு :

01. சந்திராயன்-1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?

2008 அக்டோபர் 22


02. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையிடம் எங்குள்ளது?

லாசான்( ஸ்விட்சர்லாந்து)
Lausanne (Switzerland)


English words & Tips :

habit    -      பழக்கம்

dirty     -       அழுக்கு


TIPS

Changing a Singular Noun to a Plural Noun

* Adding ‘oes’ to nouns ending with an ‘o’ -      tomato - tomatoes.

* Adding ‘ies’ to words ending with a ‘y’ preceded by a consonant -      Baby - Babies

* Adding ‘s’ to words ending with a ‘y’ preceded by a vowel -      key - keys


அறிவியல் களஞ்சியம் :

மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.


நீதிக்கதை

சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்


ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.

நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.

ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது.

எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது.

சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப்புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரானபோது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது….

”இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா? என்று தேடிபார்க்க வேண்டும்” என்றது.

இதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது.

இந்த காட்டு நாய் சிறுத்தைப்புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல் தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஓசைப்படாமல் பின்னோக்கி சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.

அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப்புலியுடன் பகிர்ந்து கொண்டு சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது.

எனவே சிறுத்தைப்புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டது.

குரங்கு, சிறுத்தைப்புலியிடம் சென்று காட்டு நாய், சிறுத்தைப்புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப்புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்தது.

அந்த காட்டு நாய் என்னையே ஏமாற்றலாம் என்று நினைக்கிறதா? அதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன்.

”இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு, “”குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்கார். 2 பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்” என்றது. குரங்கு, சிறுத்தைப்புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.



இன்றைய செய்திகள்

06.06.2025

இன்றைய செய்திகள்

⭐ JEE தேர்வில்  மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற சேலம் மாணவி ராஜேஸ்வரிக்கு , முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து.

⭐ நெகிலி மாசு ஒழிப்பது தான் இந்த ஆண்டின் கருப்பொருள் - சுற்றுச் சூழல் தின  அறிக்கை - தமிழக முதல்வர்.

⭐ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தமிழக அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்.

⭐உலகின் மிக உயரமான ரயில் பாலமாக ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள செனாப் பாலத்தை  ஜூன் 6ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. கத்ரா-ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கவுள்ளார்.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀TNPL கிரிக்கெட் இன்று தொடக்கம் .

🏀கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்த சிறு குழந்தை ஒன்றும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 11 தாண்டியது.


Today's Headlines

✏ Salem student Rajeshwari, who topped the state in the JEE exam, Congratulations from the Chief Minister and political leaders.

✏ Eradicating Pladtic Pollution is this year's theme - Environment Day Report - Tamil Nadu Chief Minister

✏ The restrictions brought by the Tamil Nadu government to regulate online games will be lifted - Madras High Court.

✏ Prime Minister Modi will inaugurate  the world's highest railway bridge named Chenab Bridge in Jammu and Kashmir,  on June 6. He will also launch the Vande Bharat train service between Katra and Srinagar too.

SPORTS NEWS

🏀 TNPL  series cricket starts today.

🏀 RCB's victory celebration in Bengaluru, Karnataka, few people got stuck in the crowd by stampede. The death toll has crossed 11.


Covai women ICT_போதிமரம்


கிராம உதவியாளர் (Village Assistant) நியமனத்திற்கு திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு

 

கிராம உதவியாளர் (Village Assistant) நியமனத்திற்கு திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை (நிலை) எண் : 312, நாள் : 04-06-2025 வெளியீடு


G.O.Ms.No.312, TN Govt Village Assistant Appointment 


Government Order G.O. (Ms) No. 312, Dated: 04-06-2025, providing revised guidelines for the appointment of Village Assistant.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...