கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2020-21ஆம் ஆண்டில் 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகள் அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது... அரசாணை (நிலை) எண்: 10, நாள்: 18-01-2021...


 2020-21ஆம் ஆண்டில் 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகள் அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது...

35 Middle Schools to High School Upgradation - Schools List Published...

ஆணை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் .110 - ன் கீழ் 13.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது . " வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 26 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுப்பதுடன் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். ” மேலும் , இவ்விதியின் கீழ் 20.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . " தற்போது ஏற்கெனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும்.

2020-21 ஆம் ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் , தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 1-5 வகுப்புகளை தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யவும் மற்றும் இப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிலை உயர்த்தவும் / தோற்றுவிக்கவும் ஆணை வழங்குமாறு மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை நன்கு ஆய்வு செய்து , மாணவ / மாணவியர் நலன் கருதி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் அனுமதித்தல் குறித்து கீழ்க்காணுமாறு அரசு ஆணையிடுகிறது .

2020-21ஆம் ஆண்டில் முதற்கண் இணைப்பில் உள்ள 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.

தரம் உயர்த்தப்படும் 35 நடுநிலைப் பள்ளிகளில் , 1-5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுகிறது.

>>> அரசாணை (நிலை) எண்: 10, நாள்: 18-01-2021 மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - புத்தகங்கள் தயாரிக்க கதைகள் வரவேற்றல் - ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்பும் வழிமுறை - SPD Letter

  வாசிப்பு இயக்கம் - பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் கத...