கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kasima, who won the title of world champion in the carrom tournament, received a prize of ₹1 crore



கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ₹1 கோடி பரிசு அறிவித்தது தமிழக அரசு.


Kasima, who won the title of world champion in the carrom tournament, received a prize of ₹1 crore


இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கம் வென்ற மித்ராவுக்கு ₹50 லட்சம் பரிசு.


கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 1 கோடி பரிசு வழங்கி கௌரவித்தது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ம் தேதி வரை நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த காசிமா 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.


மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு மற்றும் குழு பிரிவு என மூன்று பிரிவிலும் இவர் தங்கம் வென்றார்.


அண்மையில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 5 கோடி பரிசுத் தொகை வழங்கி கௌரவித்தது.


இதையடுத்து கேரம் விளையாட்டில் வெற்றிபெற்ற வீரர்களை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.


இந்த நிலையில் கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு ஒரு கோடி ரூபாய்; குழுபோட்டியில் தங்கம் வென்ற மித்ராவுக்கு ₹50 லட்சம்; குழு போட்டியில் ஒரு தங்கம் & இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளி வென்ற கே.நாகஜோதிக்கு ₹50 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

New procedure for NOC to obtain Passport

   தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடவுச் சீட்டு பெற தடையின்மை சான்றுக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை New procedure for Tamil Nadu government employ...