திறன் 360° - பணியாளர்களின் திறன் மேம்பாட்டு - மாவட்ட கருவூல அலுவலரின் கடிதம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கருவூலம் மற்றும் கணக்குத்துறை
அனுப்புநர்
திரு.சீ.ரெங்கநாதன், M.Com.,
மாவட்ட கருவூல அலுவலர்,
மாவட்ட கருவூலம்,
திருவண்ணாமலை.
பெறுநர்
அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள்,
திருவண்ணாமலை மாவட்டம்.
கா.மு.எண்.54/K1/2026 நாள்: .03.2026
அய்யா அம்மையீர்,
பொருள்: திறன் 360 - பணியாளர்களின் திறன் மேம்பாட்டு கற்றல் திட்டத்தை பயன்படுத்துதல் - தொடர்பாக.
அரசு பணியாளர்களின் திறன் மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சிக்காக 24 * 7 நேரமும் இலவசமாக செயல்படக்கூடிய "திறன் 360°" எனும் இணையவழி கற்றல் தளம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திறன் 360° தளத்தில் பணியாளர்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு பாடநெறிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தளத்தில் Advanced Excel, ஆங்கில தொடர்புதிறன், தலைமைப்பண்பு வளர்த்தல், பெண்கள் முன்னேற்றம், Generative Al போன்ற 70 வகையான திறன் மேம்பாட்டு பாடநெறிகள் இடம்பெற்றுள்ளன. இது பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கும் நிர்வாக திறன் உயர்விற்கும் உதவியாக இருக்கும். இத்தளத்தில் பதிவு செய்ய. பின்வரும் முறையினை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
களஞ்சியம் கைபேசி செயலி -> Login Other services - Thiran 360° - Login with Employee ID
IFHRMS வலைதளம் -> IFHRMS Home Page -Thiran 360° - Login with Employee ID
எனவே. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பணம் பெறும் அலுவலர்களும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பணியாளர்கள் திறன் 360 தளத்தில் பதிவு செய்து, கிடைக்கும் கற்றல் வாய்ப்புகளை பயனுள்ளதாக பயன்படுத்துமாறு ஊக்குவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், தங்களது அலுவலகங்களில் பணியாளர்கள் அதிகளவில் இதில் கலந்து கொண்டு பயனடைவதை உறுதி செய்து, கற்றல் முன்னேற்றத்தை அவ்வப்போது பரிசீலனை செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நகல்
கருவூல அலுவலர். திருவண்ணாமலை.
அனைத்து உதவி கருவூல அலுவலர்கள்
(ம) மாவட்ட கருவூல அலுவல கண்காணிப்பாளர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.