கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NHIS குறைபாடுகளை களைய வேண்டும் | அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

 


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குறைபாடுகளை களைய வேண்டும்


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்


"புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய அரசு முன்வர வேண்டும்" என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முபாரக்அலி தெரிவித்தார்.


ஜூன் 24ல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


இதில் அனைவருக்குமான கட்டணமில்லா உத்தரவாத சிகிச்சையை உறுதிப்படுத்த  வேண்டும். உயர் சிகிச்சைக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதிகபட்ச உச்சவரம்பு இருக்கக்கூடாது. வெளி நோயாளிகள் சிகிச்சை நடைமுறைகளை திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமி யோபதி ஆகிய மருத்துவ சிகிச்சை முறைகளை இணைக்க வேண்டும்.


பயனாளியின் சிகிச்சைக்கான முழுத் தொகையையும் எளிய முறையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை ஏற்று திருத்தப்பட்ட அரசாணையை தமிழக அரசு வெளியிட வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஜூலை 8ல் பெரும் திரள் முறையீடு செய்ய உள்ளனர்.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முபாரக் அலி கூறியதாவது: கட்டணமில்லா சிகிச்சை என்பதற்காக   அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் கடந்த ஆண்டுகளில் 5  கோடிகளை தங்களது சந்தா தொகையாக செலுத்தியுள்ளோம். இருப்பினும் அரசால் அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அறிவிக்கப்பட்ட முழுத் தொகையில் பாதி அளவு தொகை கூட காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பயனாளிகள் பெற முடி யாமல் தவிக்கிறோம். அதனால் 18 அம்ச கோரிக்கைகளை ஏற்று திருத்திய அரசாணை வெளியிட முதல்வரின் கவனத்தை ஈர்க்க இந்த கவன ஈர்ப்பு முறையீட்டை நடத்த உள்ளோம் என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SHVR 2026-2027 குறித்த தகவல்கள்

  SHVR 2026-2027 குறித்த தகவல்கள் SHVR என்பது ஸ்வச் ஏவம் ஹரித் வித்யாலயா மதிப்பீடு (Swachh Evam Harit Vidyalaya Rating) என்பதன் சுருக்கமாகும...