கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசுக்கு TETOJAC கோரிக்கைகள்



தமிழ்நாடு அரசுக்கு டிட்டோஜாக் பேரமைப்பு முன் வைக்கும் கோரிக்கைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



டிட்டோஜாக் சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுடன் சந்திப்பு



*1. அ) 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மற்ற சில மாநிலங்களைப் போல் தேர்வு எழுதிய அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்திட வேண்டும்.*


*ஆ) தேர்வு எழுதிய பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, அவர்களது பணி அனுபவத்திற்கேற்ப weightage மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும்.*


*இ) தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு அவர்களது உயர்கல்வித் தகுதிக்கேற்ப weightage மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும்.*


*ஈ) சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடத்திட்டத்தைத் தாண்டி கேட்கப்பட்ட சம்பந்தமில்லாத வினாக்களுக்குரிய மதிப்பெண்களை அனைவருக்கும் முழுமையாக வழங்கிட வேண்டும்.*


*2. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும்.*


*3. இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக் குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் 01.01.2006 முதல் மீண்டும் வழங்கிட வேண்டும்.*


*4. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக 01.09.2025 அன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள 1,76,000 ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009ன் பிரிவு 23ல் திருத்தம் செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.*


*5.தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், குறிப்பாகப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பறிக்கும் வகையிலும், ஊட்டுப்பதவிகளில் மாற்றம் செய்து ஒரு லட்சம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ முற்றிலும் ரத்து செய்திட வேண்டும்.*


*6. தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய அட்டவணையில் (Pay Matrix) Level -10க்கான Cell-45 உடன் முடிவடைந்து விட்ட நிலையில் வருடாந்திர ஊதிய உயர்வு பெற முடியாமல் இடைநிலை ஆசிரியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு ஊதியக் குழுக்களில் மிகக் கடுமையான ஊதிய இழப்பைச் சந்தித்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்குஇது மேலும் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. எனவே, ஊதிய அட்டவணையில் Level-10க்கு கூடுதல் கலங்களை உருவாக்கி Cell-45 லிருந்து Cell-50 வரை நீட்டித்து உரிய ஆணை வெளியிட வேண்டும்.*


*7. தமிழ்நாடு அரசு பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து வழங்கிய, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஆசிரியர்களுக்கு உடனடியாக மீண்டும் வழங்கிட வேண்டும்.*


*8. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும். தொகுப்பூதிய நியமனங்கள் கூடாது.*


*9. அரசாணை எண்: 23 நிதி (ஊதியப் பிரிவு) துறை, நாள்: 12.01.2011ன் படி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நிலைக்குப் பெற்ற தர ஊதியம் ரூ.5400- மற்றும் சிறப்பு நிலைக்குப் பெற்ற தர ஊதிய ரூ.5700- ஆகியவை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் தணிக்கைப் பிரிவு விதித்துள்ள தவறான தணிக்கைத் தடைகளின் மீது பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் உரிய உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பித்து 1500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பணப் பலன்கள் பெறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும்.*


*10.(அ) பி.லிட் தகுதி பெற்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பி.எட் உயர் கல்வித் தகுதிக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைத் தடையால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இலட்சக்கணக்கில் பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் பெருத்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, உடனடியாக தவறான இத்தணிக்கைத் தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்.*


*(ஆ) அரசாணைகளின்படி M.com; B.Ed மற்றும் M.A (பொருளாதாரம்) ஆகிய உயர் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து விதிகளுக்குப் புறம்பாக, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணையை ரத்து செய்திட வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.*


*11.அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்கப்படாமல் ஊதியமின்றிப் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்கிட வேண்டும்.*


*12.தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.*


*13.நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியிலிருந்து மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக அறுவைச் சிகிச்சை, இதய அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் விலக்கு அளித்திட தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் அவரவர் பணியாற்றும் பகுதிகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். மேலும் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கேரள மாநில அரசு வழங்கியுள்ளதுபோல் 10 நாட்கள் தற்செயல் விடுப்பு அல்லது 20 அரைநாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கிட வேண்டும்.*


*இப்படிக்கு*


*டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

   54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் முறைகேடாக நியமி...