சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்?
சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்? ‘தேசியக் கல்விக் கொள்கை தமிழ் சமுதாயத்தையும், தமிழ் கல்வியையும் குழிதோண்டிப் புதைத்துவிடும்’ என்கிறார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு. ‘சமக்ரா சிக்ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு தராதது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று சொல்லப்படும் காரணம்தான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கான காரணங்களை முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கி 2022-ம் ஆண்டு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விரிவான அறிக்கை ஒன