இடுகைகள்

புதிய கல்விக் கொள்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்?

படம்
சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்? ‘தேசியக் கல்விக் கொள்கை தமிழ் சமுதாயத்தையும், தமிழ் கல்வியையும் குழிதோண்டிப் புதைத்துவிடும்’ என்கிறார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு. ‘சமக்ரா சிக்ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு தராதது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று சொல்லப்படும் காரணம்தான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கான காரணங்களை முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கி 2022-ம் ஆண்டு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விரிவான அறிக்கை ஒன

தமிழ்நாடு மாநில புதிய கல்விக் கொள்கை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 542, நாள்: 05-04-2022 (Tamil Nadu Chief Minister Mr. MK Stalin has ordered the formation of a 12 member panel headed by retired Justice Murugesan to formulate a New Education Policy for the State of Tamil Nadu - Government of Tamil Nadu Press Release No: 542, Date: 05-04-2022)...

படம்
>>> தமிழ்நாடு மாநில புதிய கல்விக் கொள்கை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 542, நாள்: 05-04-2022 (Tamil Nadu Chief Minister Mr. MK Stalin has ordered the formation of a 12 member panel headed by retired Justice Murugesan to formulate a New Education Policy for the State of Tamil Nadu - Government of Tamil Nadu Press Release No: 542, Date: 05-04-2022)...

தற்போதைய கல்வி முறையை மாற்றக்கூடாது. தேசிய கல்விக் கொள்கை நீட் தேர்வை விடக் கொடுமையானது - உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் அறிக்கை (The current Education system should not be changed. National Education Policy is worse than NEET - Higher Education Minister Mr. K. Ponmudi's statement)...

படம்
>>> தற்போதைய கல்வி முறையை மாற்றக்கூடாது. தேசிய கல்விக் கொள்கை நீட் தேர்வை விடக் கொடுமையானது -  உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் அறிக்கை (The current Education system should not be changed. National Education Policy is worse than NEET - Higher Education Minister Mr. K. Ponmudi's statement)...

புதிய கல்வி கொள்கையால் நாட்டின் தலைவிதி மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை...

படம்
  நமது நாட்டின் தலைவிதியை புதிய கல்விக் கொள்கை மாற்றி அமைக்கும்,’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு கடந்தாண்டு கொண்டு வந்தது. இதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலமாக கலந்துரையாடினார்.  பின்னர், உயர் கல்வியை சர்வதேச மயமாக்குவதற்கான, ‘கல்வி கடன் வங்கி’யை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:  புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு ஏராளமானோர்  கடுமையாக பணியாற்றி உள்ளனர். மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றப்படிதான், புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. இது மிகப்பெரிய தொலைநோக்கு திட்டம் மட்டுமின்றி, நாட்டையும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். நமது இளைஞர்கள் மாற்றத்திற்காக முழு அளவில் தயாராக உள்ளனர். கல்வியை பொறுத்தே நமது எதிர்காலம் அமையும். நமது நாட்டின் தலைவிதியை மாற்றும் கொள்கையாக இது அமையும். நமது நாட்டின் விடுதலைக்கு முன்பாக,  சிறந்த கல்வியை பெறுவதற்காக வெளிநாடுகள்  சென்றோம். தற்போது, வெளிநாட்டினர் நமது நாட்டிற்கு வந்து படிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ சேர்க்கை- மத்திய அரசின் கூட்டத்தில் தமிழக அரசு உறுதி...

படம்
 

புதிய கல்விக் கொள்கை ஏற்கமுடியாது - தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை...

படம்
 புதிய கல்விக் கொள்கை ஏற்கமுடியாது - தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை...

புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி...

படம்
 புதிய கல்வி கொள்கை என்பது மாநில உரிமைகளில் தலையிடுவது ஆகவே புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...

மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புகளில் பொதுத் தேர்வுகள் எனும் அழுத்தங்களைக் குழந்தைகளுக்கு அளிக்கக் கூடாது - பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...

படம்
 மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புகளில் பொதுத் தேர்வுகள் எனும் அழுத்தங்களைக் குழந்தைகளுக்கு அளிக்கக் கூடாது - பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்... >>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டம்: தமிழகம் புறக்கணிப்பு...

படம்
 மத்திய அரசு 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் உள்ள பல்வேறு அம்சங்களைத் தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. தமிழகத்தில் கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் கடுமையாக எதிர்த்து இயக்கங்களை நடத்தியது. 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் பள்ளியில் இடை நிற்றல் அதிகரிக்கும், மன்மோகன் சிங் கொண்டு வந்த 8ஆம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் என்பதிலிருந்து பின்வாங்குவதால் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாகிவிடும் என எதிர்த்தனர். அதேபோன்று இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதையும் எதிர்த்தனர். தொழில்கள் பயில்வது குறித்த கல்விக் கொள்கையின் திட்டத்தையும் எதிர்த்தனர். கல்வி என்பது சாதாரண மக்களை மேம்படுத்தும் வண்ணம் இல்லாததும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாகவும் கூறி எதிர்த்தனர். மத்திய அரசு கூட்டிய கூட்டங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் துறைச் செயலர்கள் கலந்துகொண்டனர். திமுக அரசு அமைந்ததும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றார். புதிய கல்விக் கொள்கை,

புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்...

படம்
 புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு. கல்வித்துறை அமைச்சரை விட்டுவிட்டு, செயலாளருடன் மட்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டதால், கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு. புறக்கணிப்பு ஏன்? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம் மாநில கல்வி அமைச்சர்கள் உடன் ஆலோசிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேற்று வலியுறுத்தி இருந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதால் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனையை புறக்கணிக்கிறது. கல்வி அமைச்சருடன் முதலில் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்பதால் புறக்கணிப்பு. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம். - தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி >>> புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி விளக்கம் (காணொளி)...

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

படம்
  கல்வி அமைச்சருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை எனவே இன்றைய ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துவிட்டது.  புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்

தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மாநில அரசின் கருத்துக்களை எடுத்துரைக்க தயாராக உள்ளோம். அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி...

படம்
 புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்த மத்தியக் கல்வி அமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறைச் செயலருக்குப் பதிலாக மாநிலக் கல்வி அமைச்சர் விவாதிப்பதே ஏற்புடையதாக இருக்கும் என்று தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த 'தேசிய கல்விக் கொள்கை- 2020'-க்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல்அளித்தது. கரோனா பரவல் சூழல் கருதி 2021-ம் ஆண்டுக்குள் கல்விக் கொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கல்விக்கொள்கையின் சாராம்சங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா தீவிரம் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இணையதள வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் புதிய கல்விக்கொள்கையை அமல் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் காணொலிக் காட்சி வழியாக நாளை (மே.17) நடைபெறவுள்ளது.  இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலக் கல்

புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது: அமைச்சர் பொன்முடி உறுதி...

படம்
 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஆன்லைன் பொறியியல் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்துள்ளதாகக் கூறியிருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதுதொடர்பாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். சென்னை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதையடுத்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட மதிப்பெண் குறைந்துள்ளதாகப் புகார் அளித்துள்ளனர். அவர்கள் உள்ளிட்ட 4 லட்சம் மாணவர்களும் விருப்பப்பட்டால் தேர்வை எழுதலாம். முன்பு ஆன்லைன் தேர்வு ஒரு மணி நேரமாக இருந்தது. தற்போது மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்பட உள்ளது. மற்ற பல்கலைக்கழகங்களில் தேர்வு நடத்தப்படுவது போல அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும். எனினும் இத்தேர்வை எழுதுவதற்கு தேர்வு கட்டணம் எதுவும் செலுத்த

தேசிய கல்விக் கொள்கை 2020 (National Education Policy 2020) தமிழில் வெளியிட்டது மத்திய அமைச்சகம்...

படம்
 >>> தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழில் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...  (National Education Policy 2020 in Tamil)...

🍁🍁🍁 கல்லூரி படிப்புக்கு நுழைவுத் தேர்வு என்பதை ஏற்க முடியாது -தமிழக அரசு திட்டவட்டம்...

படம்
 

🍁🍁🍁 புதிய கல்வி கொள்கை 2020 சார்ந்து கருத்து தெரிவிக்க 31-10-2020 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது...

படம்
 

🍁🍁🍁 புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது...

படம்
புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. உயர்கல்வித்துறை சார்பில் புதியக் கல்விக்கொள்கை தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்பு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தமிழக அரசு அறிவித்துள்ள இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென்று தெரிவித்தாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதே போன்று, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நுழைத்தேர்வு வேண்டாம் என்றும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டதாக உயர்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த கருத்துகளின் அடிப்படையில், தலைமைச் செயலாளர் சண்முகம், மத்திய கல்வித்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...