கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தெற்கு ரயில்வே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெற்கு ரயில்வே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெருகமணி ரயில்வே கேட் (LC No.65) தற்காலிக மூடல்

 பெருகமணி ரயில்வே கேட் (LC No.65) தற்காலிக மூடல் அறிவிப்பு


​ரயில் பாதை மற்றும் சிலிப்பர் புதுப்பித்தல் பணிகள் காரணமாக, பெருகமணியில் உள்ள ரயில்வே கேட் (LC No.65) தற்காலிகமாக மூடப்படுகிறது.


​நேரம் : 19.04.2026 காலை 8:00 மணி


 முதல் 23.04.2026 மாலை 6:00 மணி வரை.


​மாற்று வழி:


பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிறுகமணி (LUS No.64) மற்றும் காமநாயக்கன்பாளையம் (LC No.63) வழியாகச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.



17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய ரயில் சேவை



17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய ரயில் சேவை


17 ஆண்டுகளுக்குப் பிறகு அறந்தாங்கி ரயில் வழித்தடத்தில் பாரத பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மயிலாடுதுறை -   காரைக்குடி பயணிகள் ரயில் அறந்தாங்கி வந்தடைந்தது


காரைக்குடியிலிருந்து நேற்று 12/3/2026 முதல் தினசரி காலை 6:15 மணிக்கு அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பூந்தோட்டம், பேரளம் வழியாக மயிலாடுதுறை - காரைக்குடி பயணிகள் ரயில் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 17 வருடங்களுக்கு பிறகு இயக்கப்படுகிறது.



Karur & Erode to Goa : செல்லும் பயணிகளுக்கான முழு விவரம்



Karur & Erode to Goa : செல்லும் பயணிகளுக்கான முழு விவரம்


 கரூர் & ஈரோடு டு கோவா: எந்த ரயிலில் செல்வது புத்திசாலித்தனம்?


கரூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களுக்குப் புதன்கிழமைகளில் கோவா செல்ல இரண்டு ரயில்கள் உள்ளன.


கரூர்/ஈரோடு: விடுமுறைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான கோவாவிற்குச் செல்லத் திட்டமிடுகிறீர்களா? கரூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களுக்குப் புதன்கிழமைகளில் கோவா செல்ல இரண்டு ரயில்கள் உள்ளன. ஆனால், சரியான ரயிலைத் தேர்ந்தெடுக்காவிட்டால், உங்கள் பயண நேரம் தேவையில்லாமல் பல மணி நேரம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


இந்த இரண்டு ரயில்களின் வழித்தடங்கள் மற்றும் பயண நேரத்தை அல

சி, உங்களுக்கான சிறந்த தேர்வு எது என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.


1. மின்னல் வேகப் பயணம்: நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22630)

நீங்கள் கோவாவிற்கு விரைவாகவும், அலுப்பு தட்டாமலும் செல்ல விரும்பினால், உங்கள் முதல் மற்றும் சிறந்த தேர்வு 'நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ்' ஆகத்தான் இருக்க வேண்டும்.


புறப்படும் நேரம்: இந்த ரயில் புதன்கிழமை மதியம் 12:20 மணிக்குக் கரூரிலும், தொடர்ந்து மதியம் 01:30 மணிக்கு ஈரோட்டிலும் வந்தடைகிறது.


வழித்தடம்: இங்கிருந்து புறப்படும் ரயில் திருப்பூர், கோவை மற்றும் பாலக்காடு வழியாகச் சென்று, கேரளாவின் பசுமையான கொங்கன் கடற்கரை மார்க்கத்தில் பயணிக்கிறது. இந்த வழித்தடம் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைக் கொண்டது.


சேரும் நேரம்: வியாழக்கிழமை அதிகாலை 03:50 மணிக்கே உங்களை கோவாவின் மட்காவ் (Madgaon) நிலையத்தில் சேர்த்துவிடும்.


பயண நேரம்: ஈரோடு பயணிகளுக்குச் சுமார் 14 மணி 40 நிமிடங்களும், கரூர் பயணிகளுக்குச் சுமார் 15 மணி 55 நிமிடங்களும் மட்டுமே ஆகிறது.


2. நீண்ட தூரச் சுற்றல்: வாஸ்கோ எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 17316)

பெங்களூரு அல்லது ஹூப்ளி வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் மட்டுமே இந்த ரயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றபடி, கோவா செல்வதற்கு இது ஒரு நீண்ட நேரத்தைச் செலவழிக்கும் பயணமாகும்.


புறப்படும் நேரம்: இந்த ரயில் புதன்கிழமை அதிகாலை 04:25 மணிக்குக் கரூரிலும், காலை 05:40 மணிக்கு ஈரோட்டிலும் கிளம்புகிறது.


வழித்தடம்: இது நேராகச் செல்லாமல், சேலம் சென்று அங்கிருந்து தர்மபுரி, ஓசூர், பெங்களூரு (Banaswadi), துமகூரு மற்றும் ஹூப்ளி வழியாகக் கர்நாடக மாநிலத்தைச் சுற்றிக்கொண்டு கோவா செல்கிறது.


சேரும் நேரம்: வியாழக்கிழமை அதிகாலை 01:30 மணிக்குத்தான் கோவா சென்றடையும்.


பயண நேரம்: ஈரோடு பயணிகளுக்குச் சுமார் 19 மணி நேரமும், கரூர் பயணிகளுக்குச் சுமார் 21 மணி நேரமும் ஆகிறது. அதாவது, நெல்லை எக்ஸ்பிரஸை விட இதில் சென்றால் சுமார் 5 மணி நேரம் கூடுதல் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.


முடிவு: எதைத் தேர்வு செய்வது?

சுருக்கமாகச் சொன்னால், கோவாவிற்குச் சுற்றுலா செல்வதுதான் உங்கள் முக்கிய நோக்கம் என்றால், நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் (22630) ரயிலில் முன்பதிவு செய்வதே சிறந்தது. இது உங்கள் நேரத்தையும், சக்தியையும் மிச்சப்படுத்தும். பெங்களூரு மார்க்கத்தில் வேலை இருப்பவர்கள் மட்டும் வாஸ்கோ எக்ஸ்பிரஸை (17316) பரிசீலிக்கலாம்.


இனிமையான பயணத்திற்கு வாழ்த்துகள்!



ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி உயிரிழப்பு

 


ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி உயிரிழப்பு


ஆந்திரா: அனகப்பள்ளி பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி ஒருவர் உயிரிழப்பு.


அனகப்பள்ளி - எலமஞ்சிலி அருகே டாடா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.


டாடா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழப்பு.



>>> தீ விபத்து - காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




ஆந்திராவின் டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஏ.சி. பெட்டிகளில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆந்திர மாநிலம் டாடா நகரில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (18189), நேற்று மாலை புறப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 12.45 மணியளவில் ரயில் எலமஞ்சிலி ரயில் நிலையம் அருகே வந்த போது, ஏசி பெட்டி ஒன்றில் கரும்புகை பரவியுள்ளது.


அப்போது பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் இதை யாரும் கவனிக்கவில்லை. சில பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, கண் விழித்த பயணிகள் பெட்டி முழுவதும் புகை மண்டலமாக மாறியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.


அவர்கள் சுதாரிப்பதற்குள்ளாக ரயில்பெட்டி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. தீயை பார்த்த பயணிகள் பயத்தில் அலறினர். பின்னர் இதுகுறித்து தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


ஆனால், அதற்குள்ளாக ரயிலின் B2 மற்றும் M 1 பெட்டிகள் தீயில் முழுவதுமாக கருகி உருக்குலைந்தன. பின்னர் உள்ளே சென்ற தீயணைப்பு படை வீரர்கள், அங்கிருந்த பயணிகளை மீட்டனர். எனினும், சந்திரசேகரன் சுந்தரம் என்ற ஒரு பயணி மட்டும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மற்றபடி, யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த இரண்டு பெட்டிகளும் ரயிலில் இருந்து விடுவிக்கப்பட்டு, ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.


தீ விபத்துக்குள்ளான பெட்டிகளில் இருந்த பயணிகள் அவர்கள் செல்லும் இடங்களுக்கு மாற்று ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவர் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்நிலையில், இந்த தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை கண்டறிய இரண்டு தடயவியல் குழுக்களை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது.


உறவினர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்:


எலமஞ்சிலி - 7815909386


அனகபள்ளி - 7569305669


டூனி - 7815909479


சாமல்கோட் - 7382629990


ராஜமுந்திரி - 088 - 32420541; 088 - 32420543


எளூரு - 7569305268


விஜயவாடா - 0866 - 2575167




Tata Simply Better Pure and Unrefined Cold Pressed Groundnut (Peanut) Oil, Kolhu/Kacchi Ghani/Mara Chekku/Ganuga, Naturally Cholesterol Free, 5L, With Rich Aroma & Flavour of Real A1 Grade Groundnuts


https://amzn.to/4qs8X4D




பயணிகள் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்


பயணிகள் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்


Passenger Trains Numbers Change


 ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு...


தமிழ்நாட்டில் இயங்கும் பாசஞ்சர் ரயில்களுக்கான எண்களை மாற்றி, தெற்கு ரயில்வே அறிவிப்பு.


வரும் 2026ஆம் ஆண்டு முதல் புதிய எண்கள் அறிமுகமாகின்றன. குறித்து வைத்து கொள்ளுங்கள்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



SOUTHERN RAILWAY

No.651/2025-26

PRESS RELEASE

18.12.2025

Renumbering of Passenger Trains over Southern Railway Southern Railway has revised the numbering of the following passenger train services. The revised train numbers will come into effect from 01.01.2026.

 Passengers are requested to note the revised train numbers while planning their journey and to verify the schedules through official railway enquiry channels like NTES/UTS Mobile App


Tirunelveli - Tiruchendur

Tiruchendur - Tirunelveli

Vanchi Maniyachchi - Tiruchendur

Tiruchendur - Vanchi Maniyachchi

Vanchi Maniyachchi -Tuticorin 

Tuticorin - Vanchi Maniyachchi 

Madurai - Sengottai 

Sengottai - Madurai

Sengottai - Tirunelveli 

Tirunelveli - Sengottai 

Madurai - Dindigul 

Dindigul - Madurai

Kannur - Mangaluru Central 

Mangaluru Central - Kannur 

Thiruvarur - Karaikkudi 

Karaikkudi - Thiruvarur

 Thiruvarur - Pattukottai 

Pattukottai - Thiruvarur



Portronics Clamp M3 Adjustable Car Mobile Phone Holder Stand for Dashboard & Windshield, 360° Rotational, Strong Suction Cup, Compatible with 4 to 6 inch Devices (Black)


https://amzn.to/4s5vR3B





மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு ரயில்களில் சலுகைகள்: மத்திய அமைச்சர்


 மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு ரயில்களில் சலுகைகள்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்


ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் இலவசமாக சக்கர நாற்காலிகளை பயன்படுத்த ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. எனினும், பயணிகளுக்கு துணையாக எவரும் இல்லையெனில் உரிமம் பெற்ற தொழிலாளர்களை நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து தகவல்கள் ரயில் நிலையங்களின் வளாகங்களில் இடம் பெற்றுள்ளன. தற்போது 5,868 ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகள் உள்ளன.


மேலும் வயதான, மாற்றுத்திறனுடைய மற்றும் நோயாளிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு மற்ற முன்முயற்சிகளையும் ரயில்வே மேற்கொண்டுள்ளது. 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு கீழ் படுக்கையை ஒதுக்க கணினி மூலம் பயணிகள் முன்பதிவு முறையில் வகை செய்யப்பட்டுள்ளது. அதற்கான விருப்பத்தேர்வு இல்லாத நிலையிலும் முன்பதிவு செய்யும்போது உள்ள இடங்களைப் பொருத்து ஒதுக்கப்படும்.  தூங்கும் வசதியைக் கொண்ட ஒரு பெட்டியில் 6 முதல் 7 கீழ் படுக்கைகளும், மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் 4 முதல் 5 கீழ் படுக்கைகளும், இரண்டடுக்கு குளிரசாதனப் பெட்டியில் 3 முதல் 4 கீழ் படுக்கைகளும் மூத்த குடிமக்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு ஒதுக்கப்படுகிறது.


இத்தகவலை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று (10 டிசம்பர் 2025) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.


LuvLap Moisturising Wipes with Aloe Vera Lid (72 Wipes/Pack, Pack of 3)


https://amzn.to/48Hb39G




கூடுதல் கட்டணத்தில் ஸ்லீப்பர் கோச்சிலும் இனி பெட்ஷீட், தலையணை

 


கூடுதல் கட்டணத்தில் ஸ்லீப்பர் கோச்சிலும் இனி பெட்ஷீட், தலையணை


ரயில்களில் வழக்கமாக குளிர்சாதன வசதி கொண்ட A.C. வகுப்புகளில் மட்டுமே பயணிகளுக்கு பெட்ஷீட்டும், தலையணையும் வழங்கப்படும்.


வரும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ஸ்லீப்பர் கோச்சிலும், ₹50 செலுத்தி பெட்ஷீட், தலையணையை பெற்றுக்கொள்ளலாம்.


தலையணை மட்டும் ₹30-க்கும், பெட்ஷீட்டை ₹20-க்கும்  பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


முதல் கட்டமாக பத்து ரயில்களில் இது திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Bajaj Pygmy Go 178MM Mini Fan with LED Lighting | Rechargeable | USB Charging | 4-hours Battery Backup | 3 Speed | 2-Light Brightness Setting | High Speed | Portable【Blue】


https://amzn.to/4oRIpth





ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி



ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி


Room facilities for passengers to stay and rest at railway stations


 ரயில் நிலையத்தில் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சில மணி நேரம் தங்கி விட்டு குளித்துவிட்டு தங்கள் பயணத்தை தொடர்வதற்கு தங்கும் வசதி ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது 


சாதாரண அறை 

ஒரு அறைக்கு 

5 கட்டில்கள் 

ஒரு நபருக்கு கட்டணம்..

6 மணி நேரம்

ரூபாய்.300 


12 மணி நேரம் 

 450 ரூபாய் 


24 மணி நேரம்

 750 ரூபாய் 


AC அறைகள்

ஒரு அறைக்கு  

5 கட்டில்கள் 


ஒரு நபருக்கு கட்டணம்.....

6 மணி நேரம் 

600 ரூபாய் 

12 மணி நேரம் 1000 ரூபாய் 

24 மணி நேரம்

1700 ரூபாய் 


அறையில் தங்குவதற்கு அவசியம் ஆதார் அட்டை தேவை 


அன்றைய தினம் தாங்கள் ரயிலில் பயணித்த டிக்கெட் கையில் வைத்திருக்க வேண்டும்


மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம் 

73053 05956

86081 88147

97512 22288


மேலும் தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் Retiring Room வசதி உள்ள ரயில் நிலையங்கள்! பட்டியல் 


பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தின் கீழ் உள்ள சில முக்கிய நிலையங்களில் Retiring Room வசதி வழங்கப்பட்டுள்ளது. 


📍 Retiring Room வசதி உள்ள நிலையங்கள் பட்டியல்:


➡️ மயிலாடுதுறை (Mayiladuthurai)

➡️ விழுப்புரம் (Villupuram)

➡️ திருவண்ணாமலை (Tiruvannamalai)

➡️ சிதம்பரம் (Chidambaram)

➡️ வேளாங்கண்ணி (Velankanni)

➡️ கும்பகோணம் (Kumbakonam)

➡️ நாகப்பட்டினம் (Nagapattinam)

➡️ திருவாரூர் (Thiruvarur)

➡️ விருத்தாசலம் (Virudhachalam)

➡️ புதுச்சேரி (Puducherry)

➡️ வேலூர் (Vellore)

➡️ தஞ்சாவூர் (Thanjavur)

➡️ திருச்சி (Tiruchchirappalli)


📲 முன்பதிவு முறை:

🔹 IRCTC / RailOne இணையதளம் அல்லது ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்.

🔹 உங்கள் PNR எண் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

🔹 செக்-இன் செய்யும் போது அடையாள ஆவணம் அவசியம்.


📌 குறிப்பு:

சில நிலையங்களில் இவ்வசதி தற்போது பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சில நிலையங்களில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 🔧


தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்...


Smart Multipurpose Foldable Laptop Table with Cup Holder, Study Table, Bed Table, Breakfast Table, Foldable and Portable/Ergonomic & Rounded Edges/Non-Slip Legs (Wood), 59 cm, 8 cm




https://amzn.to/47OyfT3



தெற்கு ரயில்வேக்கு கேரள முதலமைச்சர் கண்டனம்

 


தெற்கு ரயில்வேக்கு கேரள முதலமைச்சர் கண்டனம்


* “எர்ணாகுளம் வந்தே பாரத் தொடக்க விழாவில் பள்ளி மாணவர்களை RSS பாடல் பாட வைத்தது கடும் கண்டனத்திற்குரியது.


* வகுப்புவாத சித்தாந்தத்திற்கும், வெறுப்புணர்ச்சிக்கும் பெயர் பெற்ற RSS அமைப்பின் பாடலை அரசு நிகழ்வில் பயன்படுத்துவது அரசியலமைப்பின் கோட்பாடுகளை மீறும் செயலாகும்” 


- பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்


Microtek Pulse Oximeter with Oxygen Saturation Monitor, Heart Rate and SpO2 Levels Oxygen Meter with OLED Display

இதயத் துடிப்பின் அளவையும், இரத்தத்தில் ஆக்சிஜன் அளவையும் அறிந்து கொள்ள உதவும் கருவி

Limited Time Offer





Actual Price: 1129

Offer Price : 669

Benefit : Rs. 460



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3LvU02v


தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக Metro Rail சேவையில் மாற்றம்



தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக Metro Rail சேவையில் மாற்றம்


தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 20.10.2025 முதல் 24.10.2025 வரை மாற்றம்


சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான இரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.


பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ இரயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு:

- பராமரிப்பு பணி காலம்: 20.10.2025 முதல் 24.10.2025 வரை.

- நேரம்: காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை.

- இந்தக் காலகட்டத்தில் மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் நேரங்கள்:

மெட்ரோ இரயில்கள் காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

காலை 06:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும்மின்றி இயங்கும்.

- இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.


பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. இரயில் பாதை பராமரிப்புப் பணிகள், இரயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம். பயணிகள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருந்துகிறது.


பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது http://chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.


பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ இரயில் சேவையை உறுதிப்படுத்த, அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


ரயில்களில் AC Coach பயணிகளுக்கு புதிய போர்வை



AC Coach பயணிகளுக்கு புதிய போர்வை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்


ரயில்களில் AC Coach பயணிகளுக்கு புதிய போர்வை


* AC Coach பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, தற்போது வழங்கப்படும் வெள்ளை நிற போர்வைக்குப் பதிலாக ராஜஸ்தானின் பாரம்பரிய 'சங்கனேரி' போர்வைகளை வழங்க ரயில்வே அமைச்சகம் திட்டம்.


* பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற புகார்களுக்கு மத்தியில், இத்திட்டம் சோதனை முறையாக ஜெய்ப்பூர்-அசர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் தொடங்கி வைப்பு.


ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை எந்த கட்டணமும் இல்லாமல் ஆன்லைனில் மாற்றலாம்: மத்திய அமைச்சர்



ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை எந்த கட்டணமும் இல்லாமல் ஆன்லைனில் மாற்றலாம்: மத்திய அமைச்சர்


ரயில் பயணிகள் தங்களின் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயண தேதியை ஜனவரி முதல் எந்த கட்டணமும் இல்லாமல் ஆன்லைனில் மாற்றலாம்-மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்


ரயில் டிக்கெட் முன்பதிவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய மாற்றம்

 


ரயில்களில் பொது டிக்கெட் முன்பதிவு - ஆதார் கட்டாயம் 


ரயில் டிக்கெட் முன்பதிவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளது  


பொது டிக்கெட் முன்பதிவில் முதல் 15 நிமிடங்களில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் - ரயில்வே


விரைவு ரயில்கள் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே

 

சென்னை – மதுரை பாண்டியன் உட்பட 3 விரைவு ரயில்கள் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே



நாட்டிலேயே முதல் முறையாக சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட, Hydrogen Train



Indian Railways : நாட்டிலேயே முதல் முறையாக சென்னை ICF ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட, ஹைட்ரஜன் ரயில்

https://kalvianjal.blogspot.com/2025/08/hydrogen-train.html

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் டெல்லி புறப்பட்டது. விரைவில் ஹைட்ரஜன் ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிவிட்டுள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட, ஹைட்ரஜன் ரயில் இன்று புறப்பட்டு சென்றது. அரியானா மாநிலம் சோனி பட்டில் இருந்து- ஜிந்த் வரை விரைவில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட உள்ளது.


ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயிலை, அடுத்த சில மாதங்களுக்கு பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபடுத்த உள்ளனர்.

https://kalvianjal.blogspot.com/2025/08/hydrogen-train.html

உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னை ஐ.சி.எஃப் ஆலையில், வந்தே பாரத் ரயில், எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயில், மெட்ரோ ரயில், அம்ரித் பாரத் ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.


இதற்கிடையில், இங்கு நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் ரூ.118 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், நீராவியை மட்டுமே வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. மின்சாரத்தில் இயங்கும் ரயிலை விட, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்புக்கு உகந்தது. முக்கிய நகரங்களில் இருந்து, குறுகிய துாரத்துக்கு மட்டுமே, தற்போது இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

https://kalvianjal.blogspot.com/2025/08/hydrogen-train.html

அதிகபட்சமாக 50 முதல் 80 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயிலில் 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 84 பேர் பயணம் செய்யலாம். ரயில் இன்ஜின் 1,200 குதிரை திறன் கொண்டது, அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும். இந்நிலையில், இந்த ரயில் வேறொரு இன்ஜினில் இணைக்கப்பட்டு, சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது.


இது குறித்து, ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, பல்வேறு கட்ட சோதனை நடத்தப்படும். சோதனை இறுதி செய்த பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் பெறப்படும். பிறகு, ஹரியானா மாநிலம் சோனிபேட் – ஜிந்த் இடையே சில வாரங்களுக்கு வெறும் ரயில் மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் இயக்கம், பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்த பிறகு, பயணிகளின் சேவைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

https://kalvianjal.blogspot.com/2025/08/hydrogen-train.html

ஹைட்ரஜன் ரயில் என்பது, இயற்கையை மாசுப்படுத்தாமல் இயங்கும் ஒரு சுத்தமான, பசுமையான போக்குவரத்து வகையாக உலக நாடுகளில் பரந்து வளர்ந்து வருகிறது. இது மிதமான காற்று வெளியீடு, குறைந்த சத்தம் மற்றும் நீடித்த சக்தியை வழங்குவதால், எதிர்காலத்தின் சுத்தமான போக்குவரத் தீர்வாகக் கருதப்படுகிறது.ஹைட்ரஜன் ரயில்களில் ஃப்யூஎல் செல் (Fuel Cell) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

https://kalvianjal.blogspot.com/2025/08/hydrogen-train.html.

இது ஹைட்ரஜன் வாயுவையும் ஆக்ஸிஜனை இணைத்து, மின் சக்தியாக மாற்றுகிறது.அந்த மின்சக்தி ரயிலின் மோட்டாரை இயக்கி பயணத்தை நடத்துகிறது.இதனால் மாற்றுப் பயன்களாக நீர் (H₂O) மற்றும் வெப்பம் மட்டும் வெளியேறும்.ஜெர்மனி தான் முதலில் ஹைட்ரஜன் ரயில்களை வழிநடத்தத் தொடங்கிய நாடாகும்.2018ல் Coradia iLint என்ற ரயிலை அறிமுகப்படுத்தியது.இந்திய ரயில்வே, 2030க்கு முன் net-zero carbon emission இலக்கை நோக்கி முன்னேறுகிறது.வாரணாசியில் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை முறையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. Hydrogen for Heritage" எனும் திட்டத்தின் கீழ், பாரம்பரிய இடங்களில் சுற்றுச்சூழலுக்கு இனிய ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மறு சீரமைப்புப் பணிகள் - ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றம்

 

Renovation works - change of train departure points


மறு சீரமைப்புப் பணிகள் - ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றம்


தேஜஸ், மன்னை, செந்தூர், குருவாயூர் விரைவு ரயில்கள் உள்பட 5 ரயில்கள் இன்று முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கம்





Special trains for the convenience of those returning to Chennai from their hometowns after the Pongal festival


 பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக திங்களன்று (ஜனவரி 20) காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.


கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்திறங்கும் பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்தலாம்


SOUTHERN RAILWAY

CHENNAI DIVISION

Date: 18.01.2025

PRESS RELEASE

SOUTHERN RAILWAY. CHENNAI DIVISION ARRANGES SPECIAL EMU SERVICES TO CLEAR PONGAL RUSH

To facilitate convenient travel for passengers returning from Southern Tamil Nadu after Pongal celebrations, Chennai Division of Southern Railway will operate special EMU services with 12-car rakes on Monday, 20th January 2025, between Tambaram- Kattangulattur - Tambaram.

The detailed timings for the passenger special trains are as follows:

A. Passenger special timings between KATTANGULATTUR - TAMBARAM:


B. Passenger special timings between TAMBARAM - KATTANGULATTUR




Railway management should give up its dual approach of "betraying Tamil Nadu's plans and blaming Tamil Nadu's journalists" - Madurai MP



"தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” இரட்டை அணுகுமுறையை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் - மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் 


Railway management should give up its dual approach of "betraying Tamil Nadu's plans and blaming Tamil Nadu's journalists" - Madurai MP


மதுரை எம் பி திரு.சு.வெங்கடேசன் அவர்களின் பதிவு


 மதுரை - தூத்துக்குடி திட்டம் பற்றிய செய்தியாளர் கேள்வி, அமைச்சரின் காதில் சரியாக விழவில்லை என இரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


அமைச்சரின் அபத்தமான பதிலை கண்டித்து எல்லோரும் சொன்ன கருத்துகள் இரயில்வே நிர்வாகத்தின் காதில் விழ ஏன் ஐந்து நாட்கள் ஆனது?


"தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” சுமத்தும் இரட்டை வழி அணுகுமுறையை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும்.


"தமிழ்நாட்டின் திட்டத்திற்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்"


இரயில்வே அமைச்சர், மற்றும் இரயில்வே நிர்வாகத்தின் கண்டனத்திற்குரிய செயல்.


சு. வெங்கடேசன் எம் பி


ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி புதிய பாதை திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், அதை கைவிடக் கூறியதால் அது கைவிடப்பட்டது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். கடந்த இடைக்கால பட்ஜெட்டில் 100 கோடியும் வழக்கமான பட்ஜெட்டில் 18 கோடியும் ஒதுக்கி இருப்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளேன். அதற்கு முழு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரி யுள்ளேன். இப்போது அந்தத் திட்டமே கைவிடப்பட்டது என்று அவர் அறிவித்தது அதிர்ச்சியை அளித்தது. அதுவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அது கைவிடப்பட்டதாக அவர் அறிவித்தார். இதற்கு தமிழக அரசு பதிலளிக்கட்டும் என்று காத்திருந்தேன். தமிழக அமைச்சரும் இந்த திட்டத்தை கைவிடச் சொல்லி தாங்கள் கூறவில்லை என்றும் ரயில்வே அமைச்சர் கூறுவது பொய் என்றும்  விளக்கியுள்ளார். தாங்கள் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று தான் கோரியிருந்தோம் என்று விளக்கி இருந்தார். 


இப்போது ரயில்வே அமைச்சர்,   “தமிழக அரசு கைவிட கோரியது தனுஷ்கோடி திட்டத்தை தான் என்றும் செய்தியாளர்களுடைய சத்தங்களால் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தனுஷ்கோடி திட்டம் தான் கேட்கிறார்கள் என்று நினைத்து தமிழக அரசு கைவிடக் கூறியதாக கூறிவிட்டதாகவும் உண்மையில் தூத்துக்குடி திட்டம் கைவிடப்படவில்லை என்றும் அதற்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை இல்லை என்றும் இப்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது அனைத்து ஊடகங்களிலும் ஒரே மாதிரியாக வந்துள்ள போது, சத்தத்தால் குழப்பம் ஏற்பட்டதாக அமைச்சர் சொல்வது ஏற்கக் கூடியதாக இல்லை. செய்தியாளர் சந்திப்பின் காணொலியும் மிகத்தெளிவாகவே உள்ளது.


அமைச்சர் வேண்டுமென்றே தமிழக அரசின் மீது பழிபோடவே அவ்வாறு கூறினார் என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மை அப்படி இருக்கும் பட்சத்தில் ஊடகங்களில் வந்த செய்தியை உடனடியாக ஏன் மறுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. எல்லா விமர்சனங்களுக்குப் பிறகு ஐந்து நாட்களுக்குப் பின் இப்போது தான் ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. 


இப்படித்தான் அவர்கள் நாடாளுமன்றத்தில் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு  திசை திருப்பும் பதில் அளிக்கிறார்கள்.  மழைக்கால கூட்டத்தொடரில் இரயில்வே அமைச்சர் அவையில் பேசிய ஆவேச பேச்சு மோசமான பதிலுக்கு நல்லதொரு உதாரணம். அதே போன்ற தொனியில் தான் தமிழ்நாடு அரசின் மீது பழி கூறிய அமைச்சரின் பேச்சும்.


புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானம் 30 சதம் பலமற்று இருக்கிறது என இரயில்வே பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டிய போது வாய்திறக்காத பாஜக தலைவர் திரு. அண்ணாமலை, அமைச்சரின் பொய்யான தகவலை நம்பி வேகவேகமாக போராட்டத்தை அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து அதிமுகவும் போராட்டத்தை அறிவித்தது. உண்மையில் ஒன்றிய அரசு இரயில்வே துறையில் தமிழ்நாட்டை  தொடர்ந்து எப்படி புறக்கணித்து வருகிறது என்பதை பற்றி அடிப்படை புரிதல் இருக்கும் யாரும் அமைச்சரின் பேச்சு எவ்வளவு அபத்தம் என்பதை ஆராயாமலே புரிந்து கொள்ள முடியும். 


ரயில்வே அமைச்சகமும் ரயில்வே அமைச்சரும் மக்கள் மத்தியில் உண்மையைப் பேச இனியாவது முன் வர வேண்டும். அந்த அளவு முயற்சிப்பது கடினம் என்றால் குறைந்த பட்சமாக மதுரை - தூத்துக்குடி திட்டத்திற்கான நிதியையாவது வரும் பட்ஜெட்டில் போதுமான அளவு ஒதுக்கி நியாயம் வழங்க முயற்சிக்க வேண்டும்.






#மதுரை_தூத்துக்குடி_ரயில்சேவை

#MaduraiTuticorin_RailService

#MinistryOfRailways_AshwiniVaishnavi 

#RailwayAdministration

#இரயில்வேநிர்வாகம்

#இரயில்வேஅமைச்சகம்_

#PambamBridge_Construction

#பாம்பன்பாலம்_கட்டுமானம்

#AccusationOnTamilMedia

#தமிழ்செய்தியாளர்கள்_மீதுபழி


Major Trains in Southern Railway's New Schedule


தென்னக இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்


Major Trains in Southern Railway's New Schedule


சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் - 01.01.2025 முதல்...


20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி.


22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி.


16127 குருவாயூர் காலை 10.20 மணி.


12635 மதுரை வைகை மதியம் 1.45 மணி.


20665 நெல்லை வந்தே பாரத் (செவ்வாய் தவிர) மதியம் 2.45 மணி.


12605 பல்லவன் மதியம் 3.40 மணி.


20605 செந்தூர் மாலை 4.00 மணி.


12642 திருக்குறள் - கன்னியாகுமரி (வாராந்திர Sun & Tue) மாலை 4.10 மணி. 


12652 மதுரை - சம்பர்க் கிராந்தி (வாராந்திர Wed & Fri) மாலை 4.10 மணி.


16101 கொல்லம் மாலை 5.00 மணி.


12633 கன்னியாகுமரி மாலை 5.20 மணி.


22661 இராமேஸ்வரம் மாலை 5.45 மணி.


16751 இராமேஸ்வரம் மாலை 7.15 மணி.


12693 முத்து நகர் இரவு 7.30 மணி.


20635 அனந்தபுரி இரவு 7.50 மணி.


12661 பொதிகை இரவு 8.10 மணி.


12631 நெல்லை இரவு 8.40 மணி


12665 கன்னியாகுமரி (வாராந்திர Tue) இரவு 9.05 மணி.


12637 பாண்டியன் இரவு 9.40 மணி.


12653 மலைக் கோட்டை இரவு 11.30 மணி.


Vande Bharat Express doors not open, passengers shocked

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கதவுகள் திறக்கப்படாததால் பயணிகள் அதிர்ச்சி


Vande Bharat Express doors not open, passengers shocked



நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கதவு திறக்கப்படாததால், திண்டுக்கல்லில் இறங்க முடியாமல் பயணிகள் பெரிதும் தவித்தனர். 


கொடைரோடு ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, வேறொரு ரயில் மூலம் திண்டுக்கல் அனுப்ப ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 08-12-2024 அன்று ரெயில் திண்டுக்கல் வந்தபோது சி4, சி5 பெட்டிகளின் கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால் அந்தப் பெட்டியில் வந்த திண்டுக்கல் சேர்ந்தவர்கள் 15-க்கும் மேற்பட்டோர் இறங்க முடியாமல் தவித்தனர். அதற்குள் ரயிலும் புறப்பட்டு சென்றது.


இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபாயசங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். அதற்குள் ரெயில் நீண்ட தூரம் சென்று விட்டது. இதையடுத்து பெட்டிக்கு வந்த ரெயில்வே அதிகாரி அடுத்த ரெயில் நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறினார்.



வேறு வழியின்றி பயணிகளும் சம்மதித்தனர். இதையடுத்து கொடைரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு ரயில் கிளம்பி சென்றது. கொடைரோடு ரெயில் நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பயணிகளை துாத்துக்குடியில் இருந்து மைசூர் சென்ற ரெயிலில் ஏற்றி திண்டுக்கல் அனுப்பி வைத்தனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்