இடுகைகள்

TRAIN லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

படுக்கை வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் ரயில் - உள்ள வசதிகள் குறித்த தகவல்கள் - காணொளி...

படம்
படுக்கை வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகள் குறித்த தகவல்கள் - காணொளி... >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்... வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் புகைப்படம் மற்றும் வீடியோவை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். இந்த ரயிலில் இடம்பெற்றுள்ள வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. *வசதிகள் என்னென்ன?* *800 முதல் 1,200 கி.மீ., தூரம் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. *16 பெட்டிகள் இருக்கும். அதில் ஏசி மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட 11 பெட்டிகள், *இரண்டு அடுக்கு படுக்கை வசதிகொண்ட நான்கு பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டி 1 உடன் 823 பேர் பயணிக்க முடியும். *மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பயணிக்கும். *மொபைல் போன் சார்ஜிங் வசதி, பாதுகாப்புக்காக கேமரா, பொது அறிவிப்பை வெளியிட ஸ்பீக்கர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி ஆகியவை இடம்பெறும். *முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிகள் சுடு தண்ணீரில் குளிக்கும் வசதி உள்ளது.

ரயில் தடம் புரண்டு விபத்து - 4 பேர் உயிரிழப்பு - தலா 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு...

படம்
 உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து - 4 பேர் உயிரிழப்பு - தலா 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு... உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார். கோண்டா மாவட்ட ஆட்சியர் நேஹா ஷர்மாவும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த கோண்டா மாவட்ட ஆட்சியர் நேஹா ஷர்மா, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 8 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. 4 பேர் உயிரிழந்ததாக பதிவாகி இருக்கிறது. மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தயாராக இருந்த அனைத்து ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்தை அடைந்துள்ளன. மீட்புப் பணியில் உள்ளூர் மக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார். விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோண்டா மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து மி

ராமேஸ்வரம் - திருச்சி ரயிலில் இனி திருவாரூர் வரை தொடர்ந்து செல்லலாம்...

படம்
ராமேஸ்வரம் - திருச்சி ரயிலில் இனி திருவாரூர் வரை தொடர்ந்து செல்லலாம்... 16850 / ராமேஸ்வரம் - திருச்சி விரைவு ரயில் திருச்சி சென்று, அங்கிருந்து 15 நிமிடங்களில் 06876/ திருச்சி - திருவாரூர் வண்டியாக புறப்படும்...  அதே போல 06871/ திருச்சி - திருவாரூர் ரயில் திருச்சி வந்து, 5 நிமிடங்களில் திருச்சி - ராமேஸ்வரம் வண்டியாக புறப்படும்... திருவாரூரில் இருந்து புதுக்கோட்டை பயணிக்க 🚂06871 / திருவாரூர் - திருச்சி ரயில் (தினசரி) 🚇திருவாரூர் - 04:45 am 🚇கொரடச்சேரி - 05:00 am 🚇நீடாமங்கலம் - 05:11 am 🚇தஞ்சாவூர் - 05:45 am 🚇பூதலூர் - 06:04 am 🚇அய்யனாபுரம் - 06:10 am  🚇திருவெறும்பூர் - 06:29 am 🚇பொன்மலை - 06:42 am 🚇திருச்சி - 07:00 am 🚂16849 / திருச்சி - ராமேஸ்வரம் வண்டி (தினசரி) 🚇திருச்சி - 07:05 am 🚇புதுக்கோட்டை - 07:53 am ✅திருவாரூர் - புதுக்கோட்டை -₹70/-. ✅நீடாமங்கலம் - புதுக்கோட்டை - ₹60/- ✅பூதலூர் - புதுக்கோட்டை -₹50/- ✅திருவெறும்பூர் - புதுக்கோட்டை - ₹40/- ✅பொன்மலை - புதுக்கோட்டை ₹35/- புதுக்கோட்டையில் இருந்து திருவாரூர் செல்வதற்கு 🚂16850/ராமேஸ்வரம் - திருச்சி விரைவு ரயில் (தினசரி)

மைசூர் மயிலாடுதுறை விரைவு வண்டி கடலூர் வரை நீட்டிப்பு...

படம்
மைசூர் மயிலாடுதுறை விரைவு வண்டி கடலூர் வரை நீட்டிப்பு... ஓசூர் வழியாக மைசூரில் இருந்து மயிலாடுதுறை வரை இயங்கிய ரயில், இனிமேல் சீர்காழி, சிதம்பரம் வழியாக கடலூர் துறைமுகம் வரை இயக்க முடிவு... Extension of Mysore Mayiladuthurai Express to Cuddalore port...  The train which was running from Mysore to Mayiladuthurai via Hosur, will now run to Cuddalore port via Sirkazhi, Chidambaram...

ஒடிசா பாலசோர் பகனாகா பஜார் ரயில் விபத்து - தொடர்புகொள்ள முடியாத தமிழர்களின் விவரம் - தமிழ்நாடு அரசு வெளியீடு (Odisha Balasore Bahanaga Bazar Train Accident - Details of uncontactable Tamils ​​- Tamilnadu Govt Press Release)...

படம்
ஒடிசா பாலசோர் பகனாகா பஜார் ரயில் விபத்து - தொடர்புகொள்ள முடியாத தமிழர்களின் விவரம் - தமிழ்நாடு அரசு வெளியீடு (Odisha Balasore Bahanaga Bazar Train Accident - Details of uncontactable Tamils ​​- Tamilnadu Govt Press Release)... ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேரில், 7 பேரின் நிலை குறித்து இதுவரை அறியப்படவில்லை! அவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்! தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 04428593990 9445869843 >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

உலகின் உயரமான செனாப் ரயில் பாலம் - பிரமிப்பூட்டும் படங்களை பகிர்ந்த இந்திய ரயில்வே(World's Highest Chenab Rail Bridge - Indian Railways Shares Stunning Pictures)...

படம்
 உலகின் உயரமான செனாப் ரயில் பாலம் - பிரமிப்பூட்டும் படங்களை பகிர்ந்த இந்திய ரயில்வே(World's Highest Chenab Rail Bridge - Indian Railways Shares Stunning Pictures)... ரியாசி: உலகின் மிக உயரமான ரயில் பாலம் என அறியப்படும் செனாப் பாலத்தின் பிரமிப்பூட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது இந்திய ரயில்வே. மேகங்கள் புடை சூழ வேற்றுலகில் பயணிக்கும் அனுபவத்தை இந்த பாலத்தில் பயணிக்கும் ரயில் பயணிகள் அனுபவிப்பார்கள் எனத் தெரிகிறது. பொறியியலின் அற்புதம் என சமூக வலைதளப் பயனர் ஒருவர் இந்தப் பாலத்தின் கட்டுமான பணியை பார்த்து கமென்ட் செய்துள்ளார். உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பின் முக்கிய மைல்கல்லாக இந்த பாலம் அமைந்துள்ளது. செனாப் நதியின் மீது இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. 1315 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தின் கட்டுமான பணியை மேற்கொண்ட ஊழியர்கள் மழை, குளிர் என சவாலான வானிலை சூழலை எதிர்கொண்டுள்ளனர். செனாப் பாலம் ஆற்றுப் படுகையின் மட்டத்திலிருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவரை காட்டிலும் சுமார் 35 மீட்டர் உயரம் என தெரிகிறது. ஸ்டீல் மற்ற

நவம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் முன்பதிவில்லாத 2ஆம் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்படும் 23 தொடர்வண்டிகள் பட்டியல் - தெற்கு ரயில்வே (List of 23 trains with unreserved 2nd class compartments from November 1 - Southern Railway)...

படம்
>>> நவம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும்  முன்பதிவில்லாத 2ஆம் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்படும் 23 தொடர்வண்டிகள் பட்டியல் - தெற்கு ரயில்வே (List of 23 trains with unreserved 2nd class compartments from November 1 - Southern Railway)...

ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள Whatsapp எண்...

படம்
  ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும்! ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. . இதுவரை 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால்,  சர்வர் பிரச்சனை ஏற்பட்டு 139ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. . இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது. . எப்படி இந்த சேவையைப் பெறுவது? . * முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். . * வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். . * வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்புங்கள். . * அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் ரயில் எண், அதன் பெயர், எந்தத் தேதியில் ரயில் கிளம்பியது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டியுள்ளது, அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்க

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...