இடுகைகள்

மருந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

MEFTAL மாத்திரை பயன்பாடு - எதிர்விளைவுகள் குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை (Medicines Authority of India warns about the use of MEFTAL tablets & side effects)...

படம்
 MEFTAL மாத்திரை பயன்பாடு - எதிர்விளைவுகள் குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை (Medicines Authority of India warns about the use of MEFTAL tablets & side effects)... மாதவிடாய் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் 'MEFTAL' வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மத்திய அரசு எச்சரிக்கை. ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் (Eosinophils) உருவாக வாய்ப்பு, தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மாத்திரை உட்கொண்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின் தோன்ற வாய்ப்புள்ளது.  மருத்துவர்கள் அறிவுறுத்தல் இன்றி வலி எழும்போதெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் துறை மருத்துவர்களுக்கான  அலர்ட் வழங்கியுள்ளது.  இது குறித்த Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா அவர்களின் பதிவு... அரசின் மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் துறை மருத்துவர்களுக்கான  அலர்ட் வழங்கியுள்ளது.  இது போன்ற அலர்ட்களை தொடர்ந்து வழங்குவது இத்துறையின் பணியாகும்.  சமீபத்தில் வந்

காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலி - இந்திய நிறுவனத்திடம் விசாரிக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவு (66 children died after drinking cough medicine in Gambia - WHO orders to investigate Indian agency)...

படம்
 காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலி - இந்திய நிறுவனத்திடம் விசாரிக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவு (66 children died after drinking cough medicine in Gambia - WHO orders to investigate Indian agency)... ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஹரியாணாவின் சோனிபட்டை சேர்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த அந்த மருந்துகள் நச்சு மற்றும் இறப்புக்கு காரணமான ரசாயனங்களைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கெட்டுபோன மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், காம்பியாவில் குழந்தைகள் இறப்புடன்

கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு மருந்து - மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை...

படம்
 கருப்பு பூஞ்சைத் தொற்று பாதிப்புக்கு Amphotericin - B என்னும் மருந்தைப் பயன்படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரை...

தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ கரோனா தடுப்பு மருந்து: டிஆர்டிஓ கண்டுபிடித்த 2DG மருந்து அடுத்த வாரம் அறிமுகம்...

படம்
 தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கரோனா தடுப்பு மருந்தை அடுத்த வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் 2டிஜி கரோனா தடுப்பு மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம். இதன் மூலம் ஆக்சிஜன் உதவியோடு இருக்கும் கரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும். கரோனாவிலிருந்து விடுபட முடியும். முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ் பவுடர் மருந்துகளை வெளியிடுவதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) ஆகியவற்றின் கலவையில், டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி (சிசிஎம்பி) உதவியுடன் டிஆர்டிஓ மற்றும் ஐஎன்எம்ஏஎஸ் அமைப்பினர் ஆய்வில் இறங்கினர். இந்த ஆய்வில் மருந்தின் மூலக்கூறுகள் கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டன. இந்த முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய

டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய மருந்து - கொரோனா பாதிப்பை குணப்படுத்தும்; அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி...

படம்
  இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) அமைப்பு உருவாக்கிய கொரோனா மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கென குறிப்பிட்ட எந்த மருந்தும் தற்போது நடைமுறையில் இல்லை. அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் குணமாக ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், டிஆர்டிஓவின் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) மற்றும் ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகத்துடன் இணைந்து 2 டியோக்ஸிடி குளுக்கோஸ் (2டிஜி) என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்து பவுடர் போன்றது. இதை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்.  2 கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில், இந்த மருந்தை பெற்ற நோயாளிகள் விரைவில் குணமடைவது நிரூபணமாகி உள்ளது. இதன் 3வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து 2DG மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரகம் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை தந்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சக அறிக்கையில், ‘‘மே 1ம் தேதி முதல் அதிக மற்றும் நடுத்தர பாதிப்புள்ள கொரோனா ந

WhatsApp- ல் தகவல் தந்தால் வீட்டிற்கே வரும் மருந்து...

படம்
 கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட எவ்வித மருத்துவமும் சார்ந்த தேவைக்கும் வாட்ஸ் அப்பில் 9342066388   என்ற எண்ணுக்கு தகவல்அனுப்பினால்  இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து  மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்கள் தங்களுக்கு தேவைப்படும் மருந்துகளை 9342066388   என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுக்க வேண்டும் , முகவரியை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே மருந்துகள் வீட்டிற்கு வந்துவிடும். புதிய முயற்சியில் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம்  ஈடுபட்டுள்ளது. >>> தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்க பொறுப்பாளரின் பேட்டி (காணொளி)...

தடுப்பூசி, ரெம்டிசிவிர் மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

படம்
 தடுப்பூசி, ரெம்டிசிவிர் மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக செய்தித்தாள்களில் வந்த செய்தி தொடர்பாகவும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை தொடர்பான செய்திகளையும் தாமாக முன்வந்து ஐகோர்ட் வழக்கு எடுத்துக்கொண்டது. முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, தடுப்பு மருந்து பற்றாக்குறை இல்லை என்று விளக்கம் அளித்தார். இருப்பினும், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. ரெம்டிசிவிர் மருந்து பற்றாக்குறை இல்லை என்று விளக்கம் அளித்தார். மேலும், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகியும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர்கள் பலர் ஆஜராகி, அடுக்கு அடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தனர். மத்திய அரசு தரப்பில், வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவது குறித்து தமிழக

தமிழகத்தில் வருகிற ஜனவரி 31ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்...

படம்
 தமிழகத்தில் வருகிற 31-ஆம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் கடந்த 17-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி காரணமாக, போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 31-ஆம் தேதி, 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக, பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையங்களிலும் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

🍁🍁🍁 மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து 94.5% பயனுள்ளதாக உள்ளது...

படம்
  தாங்கள் கண்டறிந்துள்ள கரோனா தடுப்பு மருந்து 94.5% பயனுள்ளதாக உள்ளது என்று அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மாடர்னா திங்கட்கிழமை தனது மருத்துவப் பரிசோதனையின் முடிவை வெளியிட்டுள்ளது. இந்தப் பரிசோதனையில் 30,000க்கும் அதிகமானவர்கள் பங்கெடுத்துள்ளனர் என்றும், இவர்களுக்கு நான்கு வார இடைவெளியில் இரண்டு முறை கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என்றும் மாடர்னா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாடர்னா நிறுவனத்தின் தலைவர் ஸ்டீபன் பன்சல் கூறும்போது, “எங்களது கரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவு 94.5% பயனுள்ளதாக வந்துள்ளது. இது சிறந்த நாள்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...