கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Cricket லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Cricket லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி



மீண்டும் உலக சேம்பியன் இந்தியா அணி


* டி20 உலக கோப்பை மீண்டும் உலக சாம்பியன் ஆனது இந்தியா.


T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாதனைகளுடன் இந்தியா சாம்பியன்


* நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.



* 256 ரன்கள் இலக்காக கொண்டு ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.


 * இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மீண்டும் உலக சாம்பியன் ஆனது.


* பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது எப்படி?



 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது எப்படி?


 உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 


பெண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது இந்திய அணி.


இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டு அணிகளுமே அரையிறுதியில் களமிறக்கிய அதே பிளேயிங் லெவனையே இந்தப் போட்டிக்கும் தேர்வு செய்தன. மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.


தொடக்க வீராங்கனைகள் சிறப்பான ஆட்டம்

முதலில் ஆட்டத்தை மிகவும் நிதானமாகவே எதிர்கொண்டார் ஸ்மிரிதி மந்தனா. மரிசான் காப் வீசிய முதல் ஓவரை அவர் மெய்டன் ஆக்கினார். அதேசமயம் எதிர்த்திசையில் ஆடிய ஷஃபாலி வர்மா, 4 ரன்கள் அடித்துத்தான் ரன் கணக்கையே தொடங்கினார்.


முதல் 3 ஓவர்களில் இந்திய அணி 13 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவது ஓவரில் இருந்து இருவருமே அதிரடியைக் கையில் எடுத்தார்கள். அதனால் ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு பௌண்டரியாவது அடிக்கப்பட்டது. இதன்மூலம் 6.3 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்தது இந்தியா.


இருவரும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றாலும், அந்த ஆட்டத்தில் கவனமும் இருந்தது. அதனால் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை. அந்த அணியின் கேப்டன் வோல்ஃபார்ட் 18வது ஓவரிலேயே ஆறாவது பௌலரைப் பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.


அப்படி ஆறாவது பௌலராக பந்துவீசிய டிரையான் தான் அந்த அணிக்கு முதல் விக்கெட்டை பெற்றுக் கொடுத்தார். அவர் பந்துவீச்சில் 43 ரன்கள் எடுத்திருந்த ஸ்மிரிதி மந்தனா கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.


சதத்தைத் தவறவிட்ட ஷஃபாலி வர்மா

மறுபுறம் உறுதியோடு விளையாடிய ஷஃபாலி வர்மா அரைசதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் மூன்று ஆண்டுகள் கழித்து அவர் அடிக்கும் முதல் அரைதம் இது.


ஆரம்பம் முதலே நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், ஸ்பின், வேகப்பந்துவீச்சு இரண்டையுமே நன்றாக எதிர்கொண்டார். வழக்கமாக நிறைய பந்துகளை தூக்கி அடிக்கும் ஷஃபாலி, இந்தப் போட்டியில் அப்படி ஆடாமல் நிறைய பந்துகளைத் தரையோடு அடித்தார். அதனால் சரியான வேகத்தில் அவரால் ரன் எடுக்க முடிந்தது, நீண்ட இன்னிங்ஸும் விளையாட முடிந்தது.


49 பந்துகளில் அரைசதம் கடந்த ஷஃபாலி, தன் ஆட்டத்தை மாற்றாமல் அப்படியே தொடர்ந்தார். நன்கு ஆடிக்கொண்டிருந்த அவர், எப்படியும் சதம் அடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அயபோங்கா ககா பந்துவீச்சில் மிட் ஆஃப் திசையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.


அவர் ஆட்டமிழந்த சில நேரத்திலேயே ஜெமிமா ரோட்ரிக்ஸும் அவுட் ஆனார். அவர் 37 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள் இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.


தீப்தியின் அதிரடி

அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா இருவரும் நிதானமாக ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைக்கத் தொடங்கினார்கள்.


ஹர்மன்ப்ரீத் கௌர் மிகவும் பொறுமையாக ஆட்டத்தைக் கையாள, அரையிறுதியைப் போல் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார் தீப்தி ஷர்மா. லெக் சைடில் அவர் பெரிய ஷாட்கள் அடித்ததால் ரன்ரேட் 5.6க்கும் குறையாமல் இருந்தது.


இந்த பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்திருந்த நேரத்தில் மலாபா பந்துவீச்சில் போல்டானார் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர். அவர் 29 பந்துகளில் 20 ரன்கள் அடித்தார்.


ஹர்மன் அவுட் ஆகியிருந்தாலும், தீப்தி ஷர்மா முன்நின்று சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். தொடர்ச்சியாக சிங்கிள், டபுள் என்று எடுத்துக்கொண்டே இருந்தவர், 53 பந்துகளில் அரைசதம் கடந்தார்.


கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். அவர் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து 49வது ஓவரில் ககா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


இந்தியா 300 ரன்களை எட்ட கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டிருந்த நிலையில் தீப்தி மற்றும் ராதா யாதவ் இருவராலும் 6 ரன்களே எடுக்க முடிந்தது. அதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. தீப்தி ஷர்மா 58 ரன்கள் எடுத்தார்.


பந்துவீச்சிலும் கைகொடுத்த ஷஃபாலி

299 என்ற இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டன் வோல்ஃபார்ட், பிரிட்ஸ் இருவரும் நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். முதல் 5 ஓவர்களில் அவர்கள் 18 ரன்களே அடித்திருந்தனர். அதன்பிறகு அவர்களின் வேகம் சற்று கூடியது.


அடுத்த 4 ஓவர்களிலும் குறைந்தபட்சம் 1 பௌண்டரியாவது வர, 8.4 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது தென்னாப்பிரிக்கா.


முதல் விக்கெட்டைத் தேடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கு அமஞ்சோத் கவுர் செய்த ரன் அவுட் மூலம் அந்த தேடல் முடிவுக்கு வந்தது. மிட் ஆன் திசையில் இருந்து அவர் அடித்த டைரக்ட் ஹிட் மூலம் பிரிட்ஸ் (23 ரன்கள்) ஆட்டமிழந்தார்.


பிரிட்ஸ் அவுட்டான ஒருசில ஓவர்களிலேயே ஶ்ரீசரணியின் பந்துவீச்சில் பாஷ் டக் அவுட் ஆகி வெளியேறினார்.


மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வோல்ஃபார்ட், சுனே லீஸ் ஜோடி இந்திய பந்துவீச்சை சிறப்பாகக் கையாண்டது. இருவருமே அதிரடியாக ஆடி ரன் விகிதம் குறையாமலும் பார்த்துக்கொண்டனர்.


அந்த பார்ட்னர்ஷிப்பை உடைப்பதற்கான ஷஃபாலி வர்மாவை பந்துவீச அழைத்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். எதிர்பார்த்ததைப் போலவே இரண்டாவது பந்திலேயே சுனே லீஸின் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். ஆனால், ஷஃபாலியின் வேட்டை அதோடு நிற்கவில்லை. அடுத்த ஓவரின் முதல் பந்தில் அனுபவ வீராங்கனையான மரிசான் காப்பின் விக்கெட்டையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்.


வேகமாக ரன் எடுக்க தடுமாறிக்கொண்டிருந்த ஜாஃப்டாவை தீப்தி ஷர்மா வெளியேற்றினார்.


கேப்டன் வோல்ஃபார்ட் தனி ஆளாக போராடிக்கொண்டிருந்தார்.


போராடிய வோல்ஃபார்ட், ஆட்டத்தை மாற்றிய தீப்தி

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தாலும் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்ஃபார்ட் தனியாகப் போராடினார். ரன் விகிதம் குறையாத வகையில் சீரான இடைவெளிகளில் பௌண்டரிகளை அடித்துக்கொண்டே இருந்தார்.


அவருக்கு சுனே லீஸுக்குப் பிறகு ஆனரி டெர்க்சன் (35 ரன்கள்) மட்டும் கொஞ்சம் ஆதரவு கொடுத்தார்.


தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வோல்ஃபார்ட், 96 பந்துகளில் சதமடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அவர் சதமடித்திருந்தார். தீப்தி ஷர்மா பந்தை தூக்கி அடித்த அவர் அமஞ்சோத் கவுரிடம் கேட்சாகி ஆட்டமிழந்தார்.


மிகப் பெரிய விக்கெட்டை வீழ்த்திய தீப்தி அதே ஓவரில் இன்னொரு முக்கிய விக்கெட்டான டிரையானையும் வெளியேற்றினார்.


இந்தியா உலக சாம்பியன்

இந்திய அணியின் கை ஓரளவு ஓங்கியிருந்த நிலையில், 44வது ஓவரில் இந்திய அணி 2 கேட்களைத் தவறவிட்டது. குறிப்பாக நெடீன் டி கிளார்க் கேட்சை ஜெமிமா தவறவிட்டார்.


அடுத்த ஓவரிலேயே டி கிளார் பௌண்டரிகள் அடிக்க, 14 ரன்கள் எடுக்கப்பட்டது.


இருந்தாலும் 45வது ஓவரின் கடைசிப் பந்தில் ககா ரன் அவுட் ஆனார்.


ஏற்கெனவே லீக் சுற்றில் இந்திய அணியை கடைசி கட்டத்தில் வீழ்த்தியிருந்த டி கிளார்க் மறுபடியும் இந்திய அணிக்கு சவாலாகத் திகழ்ந்தார். இருந்தாலும் அவரையும் தீப்தி ஷர்மா வெளியேற்ற தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸ் 246 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


இதன்மூலம் 52 ரன்களில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.



இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கூறியது 

ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வென்ற இந்திய அணி புதிய உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளது.


இந்த வெற்றிக்கு ரசிகர்கள், பிசிசிஐ, தேர்வாளர்கள் மற்றும் அணியின் சக வீராங்கனைகளுக்கு இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நன்றி தெரிவித்தார்.


"ரசிகர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். எங்களை ஆதரித்ததற்கு நன்றி. இந்த வெற்றிக்கான பெருமை பிசிசிஐ, தேர்வாளர்கள் மற்றும் எங்களை ஆதரித்த அனைவருக்கும் சொந்தமானது" என்று அவர் கூறினார்.


இந்த போட்டியில், இந்திய அணி லீக் கட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. 'இது மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய மீள் வருகையாகும். ஏனென்றால் இந்தியா தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் அணிக்கு என்ன சொன்னீர்கள்?' என்று கேட்டபோது, ​​ஹர்மன்ப்ரீத், "எங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருந்தது. நாங்கள் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றோம், ஆனால் இந்த அணிக்கு ஏதாவது சிறப்பு செய்யக்கூடிய திறன் உள்ளது என்பதை நாங்கள் அறிந்தோம். அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இதற்குப் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்." என்றார்.



"அவர்கள் நேர்மறையாக இருந்தனர், அடுத்து வரவிருந்த போட்டிகளில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் இரவும் பகலும் உழைத்தனர். இந்த அணி இந்த வெற்றிக்கு தகுதியானது." என்று அவர் மேலும் கூறினார்.



boAt Aavante Bar Bluetooth Speaker 490 10W Signature Sound, Dual Full-Range Drivers,7 HRS Battery, Built-in Mic,2.0 CH, Free Music Streaming on JioSaavn, Bluetooth Sound Bar, Soundbar Speaker (Classic Black)




Actual Price: Rs. 3490

Offer Price : Rs. 949

Benefit : Rs. 2541


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4oRJfG5


RCB கிரிக்கெட் அணி வீரர்களை பார்ப்பதற்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு



 RCB கிரிக்கெட் அணி வீரர்களை பார்ப்பதற்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு


RCB வெற்றி விழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு


உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு


பெங்களூரு: IPL போட்டியில் கோப்பையை வென்ற Royal Challengers Bangaluru அணி வீரர்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு



 மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - டி.கே.சிவக்குமார்.


ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.


பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகன உலாவை ரத்து செய்தோம் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்.




ஆர்சிபி கொண்டாட்டத்தில் துயரம்: பெங்களூரு மைதான கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்


ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாட இன்று (ஜூன் 4) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே சிறுவர்கள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


ஆர்சிபி அணியை பாராட்ட கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) நடத்தும் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கூட்டம் கூடியதைத் தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், காயமடைந்தவர்கள் மற்றும் மயக்கமடைந்தவர்களை சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டது.


இந்தச் சம்பவம் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், “இன்று கூடிய கூட்டம் கட்டுப்படுத்த முடியாதது. அதிக கூட்டத்துக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இது ஓர் இளம் துடிப்பான கூட்டம், அவர்கள் மீது நாங்கள் லத்தியைப் பயன்படுத்த முடியாது” என்று கூறினார்.


நேற்று இரவு முதல் ஆர்சிபி வெற்றியை கொண்டாடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இரவு முழுவதும், காவல் துறையினர் கூட்டத்தை நிர்வகிப்பதிலும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வதிலும் முழுமையாக ஈடுபட்டுள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.


புதன்கிழமை பெங்களூருவில் தரையிறங்கிய ஆர்சிபி அணியினரை கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்றார். அவர் ஒவ்வொரு வீரருக்கும் பூங்கொத்துகளை வழங்கினார். குறிப்பாக விராட் கோலியை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவருக்கு ஆர்சிபி அணியின் கொடி மற்றும் கன்னட கொடி இரண்டையும் அவர் வழங்கினார். இதனையடுத்து, ஆர்சிபி அணியினரை கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் விதான் சவுதாவில் அவர்களைப் பாராட்டினர். தற்போது ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம் பெருந்துயரமாக மாறியுள்ளது.


T20 Cricket Match - Change in train service on 25-01-2025



டி20 கிரிக்கெட் போட்டி - 25-01-2025 அன்று ரயில் சேவையில் மாற்றம்


T20 Cricket Match - Change in train service on 25-01-2025


 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ம் தேதி இங்கிலாந்து - இந்தியா மோதும் டி20 போட்டி நடக்க உள்ள நிலையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்


கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 9.50க்கு புறப்படும் ரயில் 10 மணிக்கும், இரவு 10.20க்கு புறப்படும் ரயில் 10.30 மணிக்கும் மாற்றம்


வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடம் நிற்கும் (10.27 PM- 10.37 PM) என அறிவிப்பு



IPL Auction: Teams and Players Prices



"IPL ஏலம் : அணிகளும், வீரர்களின் விலைகளும் "


IPL Auction: Teams and Players Prices


1. சென்னை சூப்பர் கிங்ஸ் 

டெவோன் கான்வே (6.25 கோடி), ரவிச்சந்திரன் அஸ்வின் (9.75 கோடி), ரச்சின் ரவீந்திரா (4 கோடி), நூர் அஹமத் (10 கோடி), கலீல் அகமது (4.80 கோடி), ராகுல் திரிபாதி (3.40 கோடி), விஜய் சங்கர் (1.20 கோடி), சாம் கர்ரன் (2.40 கோடி), ஷேக் ரஷீத் (30 லட்சம்), அன்ஷுல் கம்போஜ் (3.40 கோடி), முகேஷ் சவுத்ரி (30 லட்சம்), தீபக் ஹூடா (1.70 கோடி), குர்ஜப்னீத் சிங் (2.20 கோடி), நாதன் எல்லிஸ் (2 கோடி), ஜேமி ஓவர்டன் (1.50 கோடி), கமலேஷ் நாகர்கோடி (30 லட்சம்), ராமகிருஷ்ணா கோஷ் (30 லட்சம்), ஸ்ரேயாஸ் கோபால் (30 லட்சம்), வன்ஷ் பேடி (55 லட்சம்), ஆண்ட்ரே சித்தார்த் (30 லட்சம்)



2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


வெங்கடேஷ் ஐயர் (23.75 கோடி), குயின்டன் டி காக் (3.60 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (6.50 கோடி), ரஹ்மானுல்லா குர்பாஸ் (2 கோடி), அங்கிரிஷ் ரகுவன்ஷி (3 கோடி), வைபவ் அரோரா (1.80 கோடி), மயங்க் மார்கண்டே (30 லட்சம்), ரோவ்மேன் பாவல் (1.50 கோடி), மணீஷ் பாண்டே (75 லட்சம்), ஸ்பென்சர் ஜான்சன் (2.80 கோடி), லுவ்னித் சிசோடியா (30 லட்சம்), அஜிங்க்யா ரஹானே (1.50 கோடி), அனுகுல் ராய் (40 லட்சம்) மொயின் அலி (2 கோடி), உம்ரான் மாலிக் (75 லட்சம்)



3. மும்பை இந்தியன்ஸ்


டிரென்ட் போல்ட் (12.50 கோடி), நமன் திர் (5.25 கோடி), ராபின் மின்ஸ் (65 லட்சம்), கரண் ஷர்மா (50 லட்சம்), ரியான் ரிக்கெல்டன் (1 கோடி), தீபக் சாஹர் (9.25 கோடி), அல்லா கஜான்ஃபர் (4.80 கோடி), வில் ஜாக்ஸ் (5.25 கோடி), அஷ்வனி குமார் (30 லட்சம்), மிட்செல் சான்ட்னர் (2 கோடி), ரீஸ் டாப்லி (75 லட்சம்), ஸ்ரீஜித் கிருஷ்ணன் (30 லட்சம்), ராஜ் அங்கத் பாவா (30 லட்சம்), சத்தியநாராயண ராஜு (30 லட்சம்), பெவோன் ஜேக்கப்ஸ் (30 லட்சம்), அர்ஜுன் டெண்டுல்கர் (30 லட்சம்), லிசாட் வில்லியம்ஸ் (75 லட்சம்), விக்னேஷ் புத்தூர் (30 லட்சம்)



4. பஞ்சாப் கிங்ஸ்


அர்ஷ்தீப் சிங் (18 கோடி), ஸ்ரேயாஸ் ஐயர் (26.75 கோடி), யுஸ்வேந்திர சாஹல் (18 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (11 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (4.20 கோடி), நெஹால் வதேரா (4.20 கோடி), ஹர்ப்ரீத் பிரார் (1.50 கோடி), விஷ்ணு வினோத் (95 லட்சம்), விஜய்குமார் வைஷாக் (1.80 கோடி), யாஷ் தாக்கூர் (1.60 கோடி), மார்கோ ஜான்சன் (7 கோடி), ஜோஷ் இங்கிலிஸ் (2.60 கோடி), லாக்கி பெர்குசன் (2 கோடி), அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் (2.40 கோடி), ஹர்னூர் பன்னு (30 லட்சம்), குல்தீப் சென் (80 லட்சம்), பிரியன்ஷ் ஆர்யா (3.80 கோடி), ஆரோன் ஹார்டி (1.25 கோடி), முஷீர் கான் (30 லட்சம்), சூர்யன்ஷ் ஷெட்கே (30 லட்சம்), சேவியர் பார்ட்லெட் (80 லட்சம்), பைலா அவினாஷ் (30 லட்சம்), பிரவீன் துபே (30 லட்சம்)


5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு


லியாம் லிவிங்ஸ்டன் (8.75 கோடி), ஃபில் சால்ட் (11.50 கோடி) ஜிதேஷ் சர்மா (11 கோடி), ஜோஷ் ஹேசில்வுட் (12.50 கோடி), ரஷிக் தார் (6 கோடி), சுயாஷ் சர்மா (2.60 கோடி), க்ருனால் பாண்டியா (5.75 கோடி), புவனேஷ்வர் குமார் (10.75 கோடி), டிம் டேவிட் (3 கோடி), ஸ்வப்னில் சிங் (50 லட்சம்), ரொமாரியோ ஷெப்பர்ட் (1.50 கோடி), நுவான் துஷாரா (1.60 கோடி), மனோஜ் பண்டாகே (30 லட்சம்), ஜேக்கப் பெத்தேல் (2.60 கோடி), தேவ்தத் படிக்கல் (2 கோடி), ஸ்வஸ்திக் சிகாரா (30 லட்சம்), லுங்கி என்கிடி (1 கோடி), அபிநந்தன் சிங் (30 லட்சம்), மோஹித் ரதீ (30 லட்சம்)


6. ராஜஸ்தான் ராயல்ஸ்


ஜோப்ரா ஆர்ச்சர் (12.50 கோடி), மகேஷ் தீக்ஷனா (4.40 கோடி), வனிந்து ஹசரங்கா (5.25 கோடி), ஆகாஷ் மத்வால் (1.20 கோடி), குமார் கார்த்திகேயா (30 லட்சம்), நிதிஷ் ராணா (4.20), துஷார் தேஷ்பாண்டே (6.50 கோடி), சுபம் துபே (80 லட்சம்), யுத்விர் சிங் (30 லட்சம்), ஃபாசல்ஹக் ஃபரூக்கி (2 கோடி), வைபவ் சூர்யவன்ஷி (1.10 கோடி), குவேனா மபாகா (1.50 கோடி), குணால் ரத்தோர் (30 லட்சம்), அசோக் சர்மா (30 லட்சம்)


7. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்


முகமது ஷமி (10 கோடி), இஷான் கிஷன் (11.25 கோடி), ஆடம் ஜம்பா (2.40 கோடி), ராகுல் சாஹர் (3.20 கோடி), ஹர்ஷல் படேல் (8 கோடி), அதர்வா டைடே (30 லட்சம்), அபினவ் மனோகர் (3.20 கோடி), சிமர்ஜீத் சிங் (1.50 கோடி), ஜீஷன் அன்சாரி (40 லட்சம்), ஜெய்தேவ் உனட்கட் (1 கோடி), பிரைடன் கார்ஸ் (1 கோடி), கமிந்து மெண்டிஸ் (75 லட்சம்), அனிகேத் வர்மா (30 லட்சம்), எஷான் மலிங்கா (1.20 கோடி), சச்சின் பேபி (30 லட்சம்)


8. குஜராத் டைட்டன்ஸ்


ககிசோ ரபாடா (10.75 கோடி), ஜோஸ் பட்லர் (15.75 கோடி), முகமது சிராஜ் (12.25 கோடி), பிரசித் கிருஷ்ணா (9.50 கோடி), நிஷாந்த் சிந்து (30 லட்சம்), மஹிபால் லோம்ரோர் (1.70 கோடி), குமார் குஷாக்ரா (65 லட்சம்), அனுஜ் ராவத் (30 லட்சம்), மானவ் சுதர் (30 லட்சம்), வாஷிங்டன் சுந்தர் (3.20 கோடி), ஜெரால்டு கோட்ஸி (2.40 கோடி), அர்ஷத் கான் (1.30 கோடி), குர்னூர் ப்ரார் (1.30 கோடி), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (2.60 கோடி), சாய் கிஷோர் (2 கோடி), இஷாந்த் சர்மா (75 லட்சம்), ஜெயந்த் யாதவ் ( 75 லட்சம்), கிளென் பிலிப்ஸ் (2 கோடி), கரீம் ஜனத் (75 லட்சம்), குல்வந்த் கெஜ்ரோலியா (30 லட்சம்)


9. டெல்லி கேப்பிடல்ஸ்


மிட்செல் ஸ்டார்க் (11.75 கோடி), கே எல் ராகுல் (14 கோடி), ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் (9 கோடி), டி.நடராஜன் (10.75 கோடி), ஹாரி புரூக் (6.25 கோடி), கருண் நாயர் (50 லட்சம்), சமீர் ரிஸ்வி (95) லட்சம்), அசுதோஷ் சர்மா (3.80 கோடி), மோஹித் ஷர்மா (2.20 கோடி), ஃபாஃப் டு பிளெசிஸ் (2 கோடி), முகேஷ் குமார் (8 கோடி), தர்ஷன் நல்கண்டே (30 லட்சம்), விப்ராஜ் நிகம் (50 லட்சம்), துஷ்மந்தா சமீரா (75 லட்சம்), டோனோவன் ஃபெரீரா (75 லட்சம்), அஜய் மண்டல் (30 லட்சம்), மன்வந்த் குமார் (30 லட்சம்), திரிபுரானா விஜய் (30 லட்சம்), மாதவ் திவாரி (40 லட்சம்)


10. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்


ரிஷப் பண்ட் (27 கோடி), டேவிட் மில்லர் (7.50 கோடி), ஐடன் மார்க்ரம் (2 கோடி), மிட்செல் மார்ஷ் (3.40 கோடி), அவேஷ் கான் (7.75 கோடி), அப்துல் சமத் (4.20 கோடி), ஆர்யன் ஜுயல் (30 லட்சம்), ஆகாஷ் தீப் (8 கோடி), ஹிம்மத் சிங் (30 லட்சம்), எம் சித்தார்த் (75 லட்சம்), திக்வேஷ் சிங் (30 லட்சம்), ஷாபாஸ் அகமது (2.40 கோடி), ஆகாஷ் சிங் (30 லட்சம்), ஷமர் ஜோசப் (75 லட்சம்), பிரின்ஸ் யாதவ் (30 லட்சம்), யுவராஜ் சவுத்ரி (30 லட்சம்), ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (30 லட்சம்), அர்ஷின் குல்கர்னி (30 லட்சம்), மேத்யூ பிரீட்ஸ்கே (75 லட்சம்


2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு...

2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு - 2024 ICC T20 World Cup Cricket Match Schedule Released...


ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 2024 டி20 (Twenty Twenty) உலக கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடவுள்ள அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று NEET தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு MBBS பயிலும் வாய்ப்பு

  துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் அரசு கல்லூரிகளில் கிடைக்க வாய்ப்ப...