இடுகைகள்

Senthilbalaji லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்வாரியம் தொடர்பான கருத்துக்கள் & புகார்களை 94987-94987 எண் மூலம்‌ மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு தெரிவிக்கலாம் - அமைச்சர் செந்தில்பாலாஜி...

படம்
  மின் கட்டணம் தொடர்பாக ஜூனியர் விகடன் இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. கட்டணம் செலுத்துவதில் மூன்று வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு மின்வாரியம் வழங்கியிருக்கிறது.  1) 2019ம் ஆண்டு மே மாதக் கட்டணம் (அல்லது)  2) முந்தைய மாதக் கட்டணம் (அல்லது) 3) மின் அளவீட்டை அலைபேசியில் படம் எடுத்து அனுப்பி - அதற்குரிய கட்டணம்.  இதனடிப்படையில் இதுவரையில் 14 லட்சத்து 62 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் விமர்சனங்களை அல்லது குறைகளை முன்வைக்கும் போது மின் இணைப்பு எண்ணுடன் குறிப்பிட்டால் மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். சமூக ஊடகங்களில் சொல்லப்படும் இத்தகைய ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகளைத் தேடி அதிகாரிகள் செல்லும்போது எந்தக் குறையும் அங்கு இருப்பதில்லை. மக்களுக்காக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களும் பிறகு எதுவும் எழுப்புவதில்லை. அமைதியாகி விடுகிறார்கள். அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நபர்களின் விவரங்களையும் சேகரித்து, குறைகள் மீது மின்வாரியம் நடவடிக்கை எ

மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை (Monthly Electricity Bill Calculation Method) வாக்குறுதி - முதல்வர் விரைவில் நிறைவேற்றுவார் - அமைச்சர் தகவல்...

படம்
 மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை வாக்குறுதி - முதல்வர் விரைவில் நிறைவேற்றுவார் - அமைச்சர் தகவல்... மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தேர்தலுக்கு முன் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறையையும் நிச்சயம் நிறைவேற்றுவார்கள். >>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

கொரோனா காரணமாக தமிழ்நாடு மின்சார வாரிய பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு - மின்துறை அமைச்சர்...

படம்
 மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி அவர்கள் தகவல் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் 07.06.2021 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது, பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருப்பதாலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள்/தேர்வுகள் நடப்பதாலும், தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்பு பணிகளுக்காக கொடுக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கடந்த டிசம்பர் 2020 முதல் ஆறுமாத காலமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. தற்பொழுது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், பராமரிப்பு பணிகள் எவ்வித தொய்வின்றி விரைந்து எடுத்துக் கொள்ளப்படும் என மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மின்தடை தொடர்பாக புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் (Whatsapp) எண்...

படம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு மற்றும் கோடை காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று (23.05.2021) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் எஸ்.வினீத், மின்தொடரமைப்பு கழகத்தின் மேலாண்ணைம இயக்குநர் எஸ். சண்முகம், நிதி இயக்குநர்கள், தொழில்நுட்ப இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு மற்றும் கோடைகாலம் தொடங்கிய நிலையில், மின் கட்டமைப்பு மேலாண்மை, தடையில்லா மின் வழங்குதல், கூடுதல் மின்தேவை மற்றும் மின் உபகரணங்கள் பராமரிப்பு போன்றவை குறித்து விரிவாக மாண்புமிகு அமைச்சர் ஆய்வு ம

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...