கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா பாதிப்பு குறித்த மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறையின் இன்றைய(11.06.21) அறிக்கை (Media Bulletin)...



>>> கொரோனா பாதிப்பு குறித்த மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறையின் இன்றைய(11.06.21) அறிக்கை (Media Bulletin)...

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ( ஜீன் 21 வரை ) ஊரடங்கு நீட்டித்து அரசு உத்தரவு...



  🍁 தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ( ஜீன் 21 வரை ) ஊரடங்கு நீட்டித்து அரசு உத்தரவு...


🍁 பள்ளி , கல்லூரி,  பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளுக்கு மட்டும் அனுமதி...


🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷


*தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் அனுமதி!*


_ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை 6 மணிவரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு_


_தொற்று பரவல் அதிகம் உள்ள 1️⃣1️⃣ மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்_


*கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர்,தஞ்சை, நாகை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகள் தொடரும்!*


1️⃣ *பள்ளி - கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி!*


2️⃣ *கட்டுமான பொருட்கள் கடைகளுக்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி!*


3️⃣ *செல்போன் கடைகள் செயல்பட அனுமதி!_விளையாட்டு திடல்கள் மற்றும் பூங்காக்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி!_*


4️⃣ *டாஸ்மாக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட (27 மாவட்டங்கள் மட்டும்) அனுமதி!*


5️⃣ *குளிர்சாதன வசதி இல்லாமல் சலூன்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50% சதவீத பணியாளர்கள் உடன்  செயல்பட அனுமதி!*


6️⃣ *மிக்ஸி, கிரைண்டர் மற்றும் தொலைக்காட்சி பழுது பார்க்கும் கடைகளுக்கு அனுமதி!*


7️⃣ *பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை!*


8️⃣ *காப்பீடு தொடர்பான அலுவலகங்கள் 33% பணியாளர்கள் உடன் இயங்க அனுமதி!*

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻


>>> செய்தி வெளியீடு எண்: 263, நாள்: 11-06-2021...



கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22 ஆம் கல்வியாண்டு விண்ணப்ப விநியோகம் குறித்த தகவல்கள்...



 அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி காணியாளம்பட்டியில் 2021-22 ஆம் கல்வியாண்டு சேர விருப்பம் உள்ள மாணவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.  Google formல் விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பும் மாணாக்கர்களுக்கு விண்ணப்ப விநியோகம் குறித்த தகவல்கள் பரிமாறப்படும்.


>>> விண்ணப்பங்கள் வழங்கப்படும் விவரங்கள் குறித்து அறிய...



தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்வு (10ஆண்டுகளுக்கு முன்பே இலக்கு எட்டப்பட்டது)....




தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்வு...


2010-11-ல் 32.9% ஆக இருந்த நிலையில், 2019-20-ல் 51.4% ஆக உயர்வு


NEP-ல் 2030-க்குள் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு 10 ஆண்டுகள் முன்னோக்கி பயணம்.



அடுத்த மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 15% DA உயர்வு வழங்க முடிவு...

 அகவிலைப்படி உயர்வால் அடுத்த மாதத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிகட்ட  மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் அகவிலைப்படி (DA) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. 2019ம் ஆண்டு இறுதியில் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 17 சதவீதமாக இருந்தது. இதில், 2020 ஜனவரியில் 4 சதவீதமும், ஜூனில் 3 சதவீதமும், 2021 ஜனவரியில் 4 சதவீதமும் என மொத்தம் 11 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், இப்போது 17 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 28 சதவீதமாக உயரும். மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், சுமார் 15 சதவீதம் உயர்ந்து 32 சதவீத கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர உள்ளது. உதாரணமாக, அடிப்படை பணியில் உள்ளவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் அடிப்படை ஊதியமாக 18,000 இருக்கும். 15 சதவீத அகவிலைப்படி உயர்வு என்றால் மாதத்திற்கு 2,700ம், ஆண்டிற்கு 32,400ம் சம்பளத்தில் உயரும். இதன் மூலம், 50 லட்சம் மத்திய பணியாளர்களும், 61 லட்சம் பென்சன்தாரர்களும் பலன் அடைவார்கள். இதுதவிர, இரவு நேர பணிப்படி முறையிலும் மத்திய அரசு மாற்றம் செய்ய உள்ளது.




புதுமை முயற்சிகளுடன் பாட வீடியோக்கள்; 'ஆன்லைன்' வகுப்பு, இனி 'போர்' அடிக்காது...



 புதுமை முயற்சிகளுடன் பாட வீடியோக்கள்; 'ஆன்லைன்' வகுப்பு, இனி 'போர்' அடிக்காது...


ஒரே புத்தகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை தனித்தனி ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதால் மாணவர்கள் சோர்வின்றி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 


பெருந்தொற்று காலத்திலும் கற்பித்தல் பணிக்கு பெரிதும் உதவுவது அரசின் கல்வி தொலைக்காட்சிதான். பள்ளிகள் திறக்கும் வரையில் இணைப்பு பாட பயிற்சிகளும், படித்ததை நினைவுகூறுவதை பரிசோதிக்கும் வகுப்புகளும் ஒளிபரப்பாகி வருகின்றன.


ஒவ்வொரு பாடத்திற்கும் அரைமணி நேரம். ஒரே புத்தகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை தனித்தனி ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதால் மாணவர்களும், வகுப்பறை இல்லாத குறையை போக்குவதால் ஆசிரியர்களும் அதிகளவு கல்வி சேனலில் பங்கெடுத்து வருகின்றனர். 


இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் விமலா கூறியதாவது: கல்வித் தொலைக்காட்சியையும் தனியார் தொலைக்காட்சிகளையும் மாணவர்கள் பார்க்க தவறிவிட்டால், யூடியூப்பில் (kalvitvofficial) அடுத்தநாள் காலையில் பார்த்து கொள்ளலாம். 


அதில் வகுப்பு வாரியாக வீடியோக்கள் இருக்கும். இதனால் எந்த இடத்தில் இருந்தாலும் மாணவர்களால் வகுப்புகளை கவனிக்க முடியும். தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியோடு, 32 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (DIET) பாடம் எடுக்கப்படுகிறது.


இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஒத்துழைப்புடன் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க பள்ளி ஆசிரியர்களை டயட்டுக்கு வர சொல்வோம். 


அங்கு வகுப்பெடுப்பது படம் பிடிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்றுடன், 70 எபிசோடுகள் எடிட்டிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு டயட்டிலும் கேமராமேன், எடிட்டிங் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இருப்பார்கள். விரைவில் புதுமையான முறையில் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


IFHRMS - ஜூன் 2021 ஊதியப் பட்டியல் - ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள் - தொடர்பான கருவூலக் கணக்குத் துறை அலுவலரின் கடிதம்...

 IFHRMS- PAY ROLL FOR JUNE 2021- REQUESTED TO GIVE INSTRUCTIONS TO THE PAY DRAWING AND DISBURSING OFFICER'S- INSTRUCTIONS-REGARDING...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...