கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-24ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return - eFiling) செய்யும் வசதி 01.04.2024 முதல் தொடக்கம் - வருமானவரித்துறை ஆணையர் செய்தி வெளியீடு...


2023-24ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return - eFiling) செய்யும் வசதி 01.04.2024 முதல் தொடக்கம் - வருமானவரித்துறை ஆணையர் செய்தி வெளியீடு...



>>> வருமானவரித்துறை ஆணையர் செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2023-24ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return - eFiling) செய்யும் வசதி 01.04.2024 முதல் ஆரம்பம். ஆசிரியர்கள் / பணியாளர்கள் தங்கள் DDO விடம் இருந்து Form-16 பெற்று அதனடிப்படையில் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது நன்று...



இந்திய அரசின் நிதி அமைச்சகம் 

வருவாய் துறை 

மத்திய நேரடி வரிகள் வாரியம் 

புது தில்லி, ஏப்ரல் 4, 2024 

பத்திரிக்கை செய்தி 

ஏப்ரல் 1, 2024 அன்று CBDT ஆல் இயக்கப்பட்ட பொதுவாகப் பயன்படுத்தப்படும் ITRகளை தாக்கல் செய்வதற்கான செயல்பாடுகள் 

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வரி செலுத்துவோர் 2024-25 ஆம் ஆண்டிற்கான (நிதியாண்டு 2023-24 க்கு தொடர்புடையது) 1 ஏப்ரல், 2024 முதல் வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்ய வசதி செய்துள்ளது. பொதுவாக வரி செலுத்துவோர் பயன்படுத்தும் ஐடிஆர்கள் அதாவது ஐடிஆர்-1, ஐடிஆர்-2 மற்றும் ஐடிஆர்-4 ஆகியவை வரி செலுத்துவோர் தங்கள் ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்ய ஏப்ரல் 1, 2024 முதல் இ-ஃபைலிங் போர்ட்டலில் கிடைக்கும். நிறுவனங்கள் தங்கள் ஐடிஆர்களை ஐடிஆர்-6 மூலம் ஏப்ரல் 1 முதல் தாக்கல் செய்ய முடியும். 

இதற்கு முன்னோடியாக, CBDT ITR படிவங்களை முன்கூட்டியே அறிவித்தது, ITR கள் 1 மற்றும் 4 இல் தொடங்கி டிசம்பர் 22, 2023 அன்று அறிவிக்கப்பட்டது, ITR-6 ஜனவரி 24, 2024 அன்று அறிவிக்கப்பட்டது மற்றும் ITR-2 ஜனவரி 31, 2024 அன்று அறிவிக்கப்பட்டது. 

e-Return Intermediaries (ERI) வசதிக்காக, ITR-1,ITR-2, ITR-4 மற்றும் ITR-6க்கான JSON ஸ்கீமா மற்றும் வரித் தணிக்கை அறிக்கைகளின் திட்டமும் A.Y.க்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. 2024-25. இ-ஃபைலிங் போர்ட்டலின் பதிவிறக்கங்கள் பிரிவின் கீழ் இதை அணுகலாம். 

இதனால், வரி செலுத்துவோர் ஐடிஆர்-1, ஐடிஆர்-2, ஐடிஆர்-4 மற்றும் ஐடிஆர்-6 ஐ ஏ.ஒய். 2024-2025 இ-ஃபைலிங் போர்ட்டலில் 01.04.2024 முதல். உண்மையில், ஏ.ஒய்க்கு சுமார் 23,000 ஐ.டி.ஆர். 2024-25 ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐடிஆர் 3, 5 மற்றும் 7ஐ தாக்கல் செய்வதற்கான வசதி விரைவில் கிடைக்கும். 

புதிய நிதியாண்டின் முதல் நாளில் வருமான வரி செலுத்துவோர் தங்கள் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை அனுமதிப்பது இதுவே முதல் முறையாகும். இது இணக்கம் மற்றும் தடையற்ற வரி செலுத்துவோர் சேவைகளை எளிதாக்குவதற்கான மற்றொரு மாபெரும் படியாகும். 

(சுரபி அலுவாலியா)

Pr. வருமான வரி ஆணையர் 

(ஊடகம் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை) & 

அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், CBDT



Government of India Ministry of Finance Department of Revenue

Central Board of Direct Taxes

New Delhi, 4th April, 2024

Press Release

Functionalities to file commonly used ITRs enabled by CBDT on 1t April, 2024


Central Board of Direct Taxes (CBDT) has facilitated taxpayers to file their Income Tax Returns (ITRs) for the Assessment Year 2024-25 (relevant to Financial Year 2023-24) from 1st April, 2024 onwards. The ITRs i.e. ITR-1, ITR-2 and ITR-4,commonly used by taxpayers are available on the e-filing portal from 1st April, 2024 onwards for taxpayers to file their Returns. Companies will also be able to file their ITRs through ITR-6 from April 1 onwards.


As a precursor to this, CBDT had notified the ITR forms early, beginning with ITRs 1 and 4 which were notified on December 22nd, 2023, ITR-6 was notified on 24th January, 2024 and ITR-2 was notified on January 31st, 2024.


To facilitate the e-Return Intermediaries (ERI), the JSON Schema for ITR-1,ITR-2, ITR-4 and ITR-6 and Schema of Tax Audit Reports have also been made available for A.Y. 2024-25. The same can be accessed under downloads section of the e-filing portal.


Thus, taxpayers have been enabled to file ITR-1, ITR-2, ITR-4 and ITR-6 for A.Y. 2024-2025 on the e-filing portal from 01.04.2024. In fact, about 23,000 ITRs for A.Y. 2024-25 have already been filed till date. Facility to file ITRs 3, 5 and 7 will be made available shortly.


This is for the first time in recent times, that the Income Tax department has enabled taxpayers to file their Returns on the first day of the new financial year. This is another giant step towards ease of compliance and seamless taxpayer services.


(Surabhi Ahluwalia)

Pr. Commissioner of Income Tax

(Media & Technical Policy) &

Official Spokesperson, CBDT



பள்ளி வேலை நேரத்தில்‌ மது போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுவிப்பு...



 பள்ளி வேலை நேரத்தில்‌ மது போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுவிப்பு (Removed from Service)...



>>> செ.வெ.எண்‌.15/ ஏப்ரல்‌, நாள்‌: 05.04.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Dismissal of Headmaster for being under the influence of alcohol during school hours...


செய்தி வெளியீடு எண்‌.15/ ஏப்ரல்‌,            நாள்‌: 05.04.2024


தருமபுரி மாவட்டம்‌, தருமபுரி ஒன்றியம்‌, மாரவாடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்‌ பள்ளி வேலை நேரத்தில்‌ மதுபோதையில்‌ இருந்தது, விசாரணையில்‌ உண்மை என தெரிய வர தலைமையாசிரியர்‌ தருமபுரி மாவட்ட கல்வி அலுவலரால்‌ (தொடக்கக்‌ கல்வி) பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்‌.


தருமபுரி மாவட்டம்‌, தருமபுரி ஒன்றியம்‌, மாரவாடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளியில்‌ தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும்‌ திரு.எம்‌.குணசேகரன்‌ என்பவர்‌ பள்ளி வேலை நேரத்தில்‌ மதுபோதையில்‌ இருந்தது மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌(தொடக்க கல்வி) அவர்களின்‌ பள்ளிபார்வையின்‌ போது கண்டறியப்பட்டது. இவரை மருத்துவ பரிசோதனை உட்படுத்தி மருத்துவ சான்று பெறப்பட்டது. இவர்‌ மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விசாரணை அலுவலரின்‌ விசாரணை அறிக்கை மற்றும்‌ மருத்துவரின்‌ சான்றுப்படியும்‌ இவர்‌ மது அருந்தி இருந்தது நிரூபணமானது. தொடர்ந்து இது போன்ற செயல்களில்‌ ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. இதனால்‌ மேற்கண்ட தலைமையாசிரியரை தருமபுரி மாவட்ட கல்வி அலுவலரால்‌ (தொடக்கக்‌ கல்வி) இன்று (05.04.2024) பணியிலிருந்து விடுவித்து ஆணை வழங்கப்பட்டது.


வெளியீடு: செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌, தருமபுரி மாவட்டம்‌.



Press Release No.15/ April,          Date: 05.04.2024 


Dharmapuri District, Dharmapuri Union, Marawadi, Panchayat Union Middle School Headmaster was under the influence of alcohol during school work hours, the headmaster was dismissed by the Dharmapuri District Education Officer (Elementary Education) after investigation.


Mr. M. Gunasekaran, who is working as a Head Master in Panchayat Union Middle School, Dharmapuri District, Dharmapuri Union, Maravadi, was found to be under the influence of alcohol during the school working hours by the District Education Officer (Primary Education). He underwent a medical examination and a medical certificate was obtained. Departmental disciplinary action was taken against him and according to the investigation report of the investigating officer and the testimony of the doctor, it was proved that he had consumed alcohol. It was found that he was engaged in such activities continuously. As a result, the said principal was dismissed from the job today (05.04.2024) by the District Education Officer (Elementary Education), Dharmapuri. 


Publication: News Public Relations Office, Dharmapuri District.


பள்ளி வேலைநாள் தொடர்பாக கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் திருத்திய சுற்றறிக்கை...

 

பள்ளி வேலைநாள் தொடர்பாக கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் திருத்திய சுற்றறிக்கை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்தல் - வாக்குச்சாவடியில் பயன்படும் படிவங்கள்...


 தேர்தல் - வாக்குச்சாவடியில் பயன்படும் படிவங்கள் - Election Booth Formats...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், இணையதள இணைப்பு, திறன் வகுப்பறைகள் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைத்தலில் தலைமை ஆசிரியர்களின் பணிகள் - இயக்குநர் அவர்களின் செய்தி...

 


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், இணையதள இணைப்பு, திறன் வகுப்பறைகள் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைத்தலில் தலைமை ஆசிரியர்களின் பணிகள் - இயக்குநர் அவர்களின் செய்தி... 


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,


    ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஐந்தாம் தேதி அன்றோடு ஆண்டு தேர்வுகள் முடிவடைகிறது ஆறாம் தேதி முதல் அந்தக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையாக கருதலாம்.


       நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு ,ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு பத்தாம் தேதி மற்றும் 12ஆம் தேதி இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்கு தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக 12-ம் தேதி வரை நான்கு மற்றும் ஐந்து வகுப்பு, ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு  மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகின்ற பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம்.


      அதன் பிறகு தேர்தல் பணிகள் ஆசிரியர்களுக்கு 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை உள்ள காரணத்தினால் நான்கு மற்றும் ஐந்து வகுப்பு ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.


     மீண்டும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பங்கேற்கக் கூடிய வகையில் தெளிவாக எடுத்துச் சொல்லுதல் வேண்டும், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


              ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை அவர்களுக்கு வேலை நாட்களாக கருதப்படுகிறது அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காக செல்கின்ற போது அது on duty ஆக கருதலாம்.


    தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகை புரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி, மாணவர்களுக்கான promotion கொடுக்கின்ற பணி ,  promotion registration- ல் பதிவு செய்கின்ற பணி, வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்புகின்ற பணி ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம்.


         மேலும் தற்போது இணையதள இணைப்பு பெறுகின்ற பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவே அதனை பெறுகின்ற முயற்சியில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


         இணையதள இணைப்பு வசதிக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் நிதியின் மூலம் இரண்டாவது கட்ட பள்ளி மானியம் (school grant) தற்போது பள்ளி கல்வி இயக்குனர் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..


        one time connectivity charge இந்த நிதியில் இருந்து  மேற்கொள்ளலாம். அதோடு  ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் மாதந்திர கட்டணத் தொகை மூன்று மாதங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது அதனை பள்ளிகளுக்கு விடுவிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


      பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுத்தவரை ஏப்ரல் மே மாதங்களில் இணையதள இணைப்பு வசதியும் மற்றும் keltron  நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகின்ற திறன் வகுப்பறைகள் மற்றும் , கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கு பொருட்கள் வருகின்ற போது பள்ளிக்கு வருகை புரிந்து பொருட்களை பெற்று அதனை நிர்மாணம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



19-04-2024 அன்று பொது விடுமுறை அறிவிப்பு - அரசாணை G.O.Ms.No.254, Dated,: 04-04-2024 வெளியீடு...


  19-04-2024 அன்று நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில் பொது விடுமுறை அறிவித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு...



 19-04-2024 அன்று பொது விடுமுறை அறிவிப்பு - அரசாணை G.O.Ms.No.254, Dated,: 04-04-2024 வெளியீடு...





தனியார் பள்ளிகளில் வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்.8787/ஆ3/2023, நாள் .04.2024...



 தனியார் பள்ளிகளில் வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்.8787/ஆ3/2023, நாள் .04.2024...


Guidelines regarding safety of students traveling in vehicles in private schools - Tamil Nadu Director of Private Schools Proceedings Rc.No.8787/A3/2023, Dated .04.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தனியார் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

தனியார் பள்ளிகளில் மாணவ மாணவியருக்காக இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டாயமாக பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்க வேண்டும். பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை இயக்கும் ஓட்டுநரின் உரிமத்தை பள்ளி நிர்வாகம் அவ்வப்போது சரிபார்த்து அவை காலாவதியாவதற்கு முன்பே அவற்றை புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி வாகனங்களில் உதவியாளர்களை நியமிக்கும் போது அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான போலீசார் சான்று சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவரிடம் மருத்துவ சான்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த உதவியாளருக்கு போக்குவரத்து துறையால் அளிக்கப்படும் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். தினமும் சுவாச சோதனை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும். சிசிடிவி தரவுகள் அனைத்தும் குறைந்த படசம் 6 மாதம் பராமரிக்கப்பட வேண்டும். பின்னர் காவல் துறையில் ஒப்படைக்க வேண்டும். போக்கு வரத்து துறையிட மிருந்து பள்ளி வாகனம் என்பதற்கான அனுமதி பெறப்பட்டு இயக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாகனத்துக்கும் தரச்சான்று புதுப்பிக்கப்பட வேண்டும். பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி கண்டிப்பாக வைக்க வேண்டும்.


தீயணைப்பு கருவி பொருத்தப்படுவதுடன், அதை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். பள்ளிகளின் தொலைபேசி எண்கள் வாகனங்களில் எழுதப்பட வேண்டும். பள்ளி வாகனங்களில் முன், பின் சக்கரங்களின் இடையே பாதுகாப்பு தடுப்பு கண்டிப்பாக பொருத்த வேண்டும். காலாவதியான வாகனங்களை கண்டிப்பாக இயக்க கூடாது. அவசரகாலங்களில் பயன்படுத்தும் வகையில் அவசரகால பொத்தான் பொருத்த வேண்டும். வாகனங்களின் உட்புறத்தில் மாணவ மாணவியர் அறியும் வகையில் அவசர கால உதவி எண்களான 14417, 1098 ஆகியவை எழுதப்பட வேண்டும்.


எந்த ஒரு பள்ளி வாகனத்திலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவ மாணவியரை அழைத்துச் செல்லக் கூடாது. குழந்தைகள் ஏறும்போதும், இறங்கிச் செல்லும் போதும் வாகனத்துக்கு அருகிலோ, பின்புறத்திலோ குழந்தைகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே வாகனங்களை இயக்க வேண்டும். குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் குழந்தைகளை ஒப்படைத்தபிறகே வாகனத்தை அங்கிருந்து நகர்த்த வேண்டும்.


அதேபோல, வாகனங்களில் பயணம் செய்யும் மாணவ மாணவியர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி வெளிப்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் மனசுப் பெட்டியை வாகனத்தில் பொருத்த வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வர் மற்றும் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 2 நபர்கள் உடனடியாக இந்த புகார் பெட்டியில் பெறப்படும் புகார்களின் மீது 24 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரம் ஒரு முறை மாணவ மாணவியருக்கு சாரண சாரணியர் அமைப்புகளில் உள்ள பெண் ஆசிரியர்களை கொண்டு கூட்டம் நடத்தி மாணவர்களிடம் இ ருந்து கருத்துகளை பெற வேண்டும். அந்த கூட்டத்தல் பாலியல் குற்றங்கள் மட்டும் அல்லாமல் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறதா, வாகனம் ஓட்டும் போது செல்பேசியை ஓட்டுநர் பயன்படுத்துகிறாரா, தவறான வழியில் வாகனம் இயக்குவது, வாகனத்தில் புகைபிடிப்பது, போன்ற நிகழ்வுகள் குறித்தும் கேட்கப்பட்டு பள்ளி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Application for Paramedical courses starts from 17.06.2025

TamilNadu Paramedical துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பம் 17.06.2025 முதல் துவங்குகிறது Counseling application for Paramed...