கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Case seeking cancellation of New Pension Scheme - High Court Madurai branch orders Tamil Nadu government


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


Case seeking cancellation of New Pension Scheme - High Court Madurai branch orders Tamil Nadu government


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி திண்டுக்கலைச் சேர்ந்த பி. பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.


தமிழ்நாடு அரசுக்கு எதிர்வாத உரை அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.



Comparison of UPS , NPS & OPS



ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் - ஒப்பீடு


Unified Pension Scheme, New Pension Scheme and Old Pension Scheme - Comparison


Comparison of UPS , NPS & OPS



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Classical Day Festival - Essay and speech competition for students



செம்மொழி நாள் விழா - மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி


Classical Day Festival - Essay and speech competition for students


செம்மொழி நாள் விழாவையொட்டி, தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் மே 9-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் மே 10-ஆம் தேதியும் நடைபெறும். இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் விண்ணப்பப் படிவங்களை தமிழ் வளா்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அவா்கள் பயிலும் பள்ளியின் மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா்கள், உதவி இயக்குநா்கள் அலுவலகங்களில் நேரடியாக பெற்று தலைமையாசிரியா், துறைத் தலைவா் பரிந்துரையுடன் மாா்ச் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத் தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகங்களில் நேரில் அளிக்க வேண்டும்.


போட்டி நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் மாவட்ட துணை இயக்குநா்கள், உதவி இயக்குநா்கள் வழியாக முதன்மைக் கல்வி அலுவலகம், பள்ளித் தலைமையாசியா் வழியாகவும் நாளிதழ் வாயிலாகவும் மாணவா்களுக்கு தெரிவிக்கப்படும்.


போட்டிக்கான தலைப்புகள் போட்டியின் போது அறிவிக்கப்படும். செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞா் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை சாா்ந்த தலைப்பு அளிக்கப்படும். இப்பொருண்மை சாா்ந்த தலைப்புகளுக்கு மாணவா்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ளலாம்.


மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மாநில அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.7 ஆயிரம் வழங்கப்படும்.


மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மே 17-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவா். மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று பரிசுகளைப் பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள செம்மொழிநாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Temporary removal of admission form from EMIS website

 

 EMIS Website ல் மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கம்


இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி (ந.க.எண் : 002596/ஜெ2/2025; நாள் : 18.02.2025) 2025-2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1, 2025 முதல் தொடங்க இருப்பதால் பழைய மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பப் படிவம் விரைவில் இங்கு கொடுக்கப்படும்.




Writing of Confidential Reports to High School HMs / Higher Officials - G.O.Ms.No. 32, Dated: 10-02-2025

 

 பள்ளிக் கல்வித் துறை - உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / உயர் அலுவலர்களுக்கு மந்தன அறிக்கைகள் (Confidential Reports) எழுதுதல் - அரசாணை (நிலை) எண் : 32, நாள் : 10-02-2025 வெளியீடு 


Department of School Education - Writing of Confidential Reports to High School Headmasters / Higher Officers - G.O.Ms.No. 32, Dated: 10-02-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TRUST Exam Question Paper 2025

 

 தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு, பிப்ரவரி 2025 - வினாத்தாள் - Tamilnadu Rural Students Talent Search Exam



TRUST Exam - February 2025 - Question Paper



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




TRUST Exam - February 2025 - Tentative Official Answer Key & Question Paper

 

 தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு, பிப்ரவரி 2025 - தற்காலிக விடைக் குறிப்புகள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு - Tamilnadu Rural Students Talent Search Exam



TRUST Exam - February 2025 - Tentative Official Answer Key & Question Paper - DGE Released



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு, பிப்ரவரி 2025 - வினாத்தாள் - 


TRUST Exam - February 2025 - Question Paper



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹. 2000/- Cash Reward to teachers and government employees who have served the government without any defect for 25 years - CEO Proceedings & Format

25 ஆண்டுகள் மாசற்ற அரசுப் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ₹. 2000/- வழங்குதல் சார்ந்து - விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அ...