ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாகிறது மகாராஷ்டிரா...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சனிக்கிழமை ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அறிமுகப்படுத்திய 24 மணிநேரத்தில் முதல் மாநிலமாக இத்திட்டத்தைத் தனது மாநில அரசு ஊழியர்களுக்கு ஏற்றுக்கொள்ள உள்ளதாக மகாராஷ்டிர மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்த பின்னர், புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்த சில மணி நேரத்தில் மகாராஷ்டிரா அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது... ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாகிறது மகாராஷ்டிரா... மத்திய அரசின் அறிவிப்பு வெளியான ஒரு நாள் கழித்து, மாநில ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மாறுவதாக மகாராஷ்டிர அரசு அறிவித்தது. மாநில அரசுகள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களின் அமைப்புகள் கோரிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, தேர்தலைச் சந்திக்கும் மகாராஷ்டிரா ஞாயிற