கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01-01-2025 முதல் அகவிலைப்படி 55% ஆக உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 

01-01-2025 முதல் அகவிலைப்படி 55% ஆக உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண் : 95, நாள் : 28-04-2025 வெளியீடு


D.A. Hike G.O. Ms No : 95, Dated 28.04.2025


53%லிருந்து 2% உயர்த்தப்பட்டு 55% ஆக நிர்ணயிக்கப்பட்ட DA க்கான அரசாணை


Dearness Allowance increased to 55% from 01-01-2025 - Tamil Nadu Government Order G.O. (Ms) No.: 95, Dated: 28-04-2025 Issued



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





Kalanjiyam / IFHRMS post change தொடர்பாக மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம்

 


நண்பர்களே...


களஞ்சியம் / IFHRMS post change தொடர்பாக மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம்


1) AZ BC KH KI Post Jan 25 இல் நிரந்தரமாக மாற்றம்


2) AZ BC KH KI Post APR 25 இல் AA கணக்கு தலைப்பு ஆக மாற்றம்.


3) அனைத்து AA permanent post களை ஒரே Bill ஆக இணைக்கலாம்...


இவை தாங்கள் அறிந்தவை 


சில கூடுதல் தகவல்கள் தங்களின் கனிவான புரிதலுக்கு...


1) அனைத்து AA பணியிடங்களும் நிரந்தரமாக மாற்றம் செய்யப்பட வில்லை .


2) பல பணியிடங்கள் இன்னும் AA temporary ஆக உள்ளது...


3) Temporary post ஐ permanent post உடன் இணைக்க இயலாது.


4) Temporary bills தனியாக தான் சமர்பிக்க வேண்டும்...


5) AA temporary post எனில் Bill உடன் pay continue order copy attach செய்ய வேண்டும்... இது கட்டாயம்


6) Permanent Bill க்கு எந்த ஒரு pay order attachments செய்ய தேவையில்லை...


7) அரசாணை படி தங்களின் பள்ளி temporary post நிரந்தரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஆனால் IFHRMS / களஞ்சியத்தில் மாற வில்லை எனில்...


உரிய ஆவணங்கள் /அரசாணை இணைப்புகள் உடன் 


DDO(HM) / CEO/ DSE வழியாக Chennai இல் தான் சரி செய்ய இயலும் . 

நமது நிலையில் மாற்றம் செய்ய முடியாது...


8) முதுகலை ஆசிரிய பணியிடங்கள்..

அரசாணை 157 நாள் 5/9/19 படி 2019 இல் நிரந்தரமாக மாற்றப்பட்டது.

அரசாணை 19 நாள் 22/1/25 இன் படி 2025 இல் 5741 PG temp நிரந்தரமாக மாற்றப்பட்டது

 (பார்க்க இணைப்பு)


9) முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் இன்று வரை தற்காலிகமாக தொடரும் பணியிடங்கள் பட்டியல் மீண்டும் இணைத்துள்ளேன்

(பார்க்க இணைப்பு)...


10) அளவைப் பதிவேட்டில் மாற்றங்கள் பதிவு செய்து கொள்ளலாம்💐


பணி நிரவல் அடிப்படையில் ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர்களை மாற்றுப்பணியில் இருந்து பணி விடுவிக்க கூடாது - மாவட்டக்கல்வி அலுவலர்


பணி நிரவல் அடிப்படையில் ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர்களை மாற்றுப்பணியில் இருந்து பணி விடுவிக்க கூடாது - மாவட்டக்கல்வி அலுவலர்


Teachers who have been given deputation orders on the basis of surplus should not be relieved from deputation work - District Education Officer


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 01-08-2023 ன் படி உபரி ஆசிரியர்கள் என கண்டறியப்பட்டு பணி நிரவல் என்ற அடிப்படையில் மாற்றுப்பணி ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மாற்றுப்பணியில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதால் அவர்களை மாற்றுப்பணியில் இருந்து பணி விடுவிக்க கூடாது - திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி ) செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாற்றுப் பணி ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிப்பது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 29-04-2025


மாற்றுப் பணி ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிப்பது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 29-04-2025


Proceedings of the Director of Elementary Education regarding the relieving of deputation teachers from duty, Dated: 29-04-2025


மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் மீண்டும் தாங்கள் முன்பு பணியாற்றிய பள்ளிகளிலேயே போய் நாளை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவு


தொடக்கக்கல்வி இயக்குநர் அளவிலும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அளவிலும் வழங்கப்பட்ட மாற்றுப் பணி ஆணையின் கீழ் அரசு தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் மாற்றுப் பணி ஆசிரியர்களை பள்ளி கடைசி வேலை நாளுக்கு முதல் நாள் விடுவித்து தாய் பள்ளியில் மீளவும் பணியில் சேர  தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்கீழ் வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை...




Speech by Hon'ble Chief Minister of Tamil Nadu, Shri. M.K. Stalin in the Tamil Nadu Legislative Assembly, issuing various notifications under Rule 110 for the welfare of Government Employees, Teachers and Pensioners - Press Release


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்கீழ் வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை - செய்தி வெளியீடு


 அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவை அடிப்படையில் திருமண முன் பணம் தொகை 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்


பொங்கல் போனஸ் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியம் ஆயிரமாக உயர்வு


மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்


பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும்


அரசு ஊழியர்கள் குழந்தைகள் உயர்கல்விக்கு தொழில்நுட்பக் கல்லூரிக்கு ரூ. 1 லட்சம்


 - முதல்வர் ஸ்டாலின்


DIPR - TNLA No - 38 - Hon'ble CM Speech - 110 Statement - Govt Servants welfare - Date 28.04.2025


செய்தி வெளியீடு


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்கீழ் வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை


*முதல் அறிவிப்பு; கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இருந்தாலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை, இந்த ஆண்டே செயல்படுத்திட கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை 1.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த அறிவிப்பின்படி, சுமார் 8 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 3 ஆயிரத்து 561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.


இரண்டாவது அறிவிப்பு: 01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை


ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்.


மூன்றாவது அறிவிப்பு: அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய


குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கெனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.


நான்காவது அறிவிப்பு; அரசுப் பணியாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி


பயில்வதில் இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இந்த அடிப்படையில், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்தக் கல்வி முன்பணம் உயர்வால் தங்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில விரும்பும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.



ஐந்தாவது அறிவிப்பு: அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது


பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


ஆறாவது அறிவிப்பு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம


பணியமைப்பு உட்பட C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த உயர்வால் சுமார் நான்கு இலட்சத்து எழுபத்து ஓராயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும்.


ஏழாவது அறிவிப்பு: ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச்


சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரமாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த உயர்வால், சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் பத்து கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.


எட்டாவது அறிவிப்பு: அண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு


ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


ஒன்பதாவது அறிவிப்பு; திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பை 01.07.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால். தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. மகளிர் முன்னேற்றத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் மகளிரின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது.



>>> முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்



தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்


செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு, செந்தில்பாலாஜியின் துறைகளில் மின்சாரத் துறை கூடுதலாக ஒதுக்கீடு


வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு, செந்தில்பாலாஜி கவனித்து வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கீடு


பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்


அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு. பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு


இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.




2025-2026 பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்



2025-2026 பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் இன்று (25.04.2025) வெளியிடப்பட்ட பல்வேறு  அறிவிப்புகள்


Various announcements released today (25.04.2025) in the 2025-2026 School Education Department Grant Request



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 20 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.



>>> அறிவிப்புகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகள்:


அரசுப் பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்' ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.


பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும்.


கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ  மாணவியர்களுக்குக் ”கலைச்சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.


தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.


10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


புதிய தொடக்கப் பள்ளிகள் 13 தொடங்கப்படும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். 


மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.


 ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் வெளியிடப்படும்.


 ரூ.30 கோடி மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும்.


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும்.


இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் வகையில் 10,12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Application for Paramedical courses starts from 17.06.2025

TamilNadu Paramedical துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பம் 17.06.2025 முதல் துவங்குகிறது Counseling application for Paramed...