கரூர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம் 06-10-2025 முதல் செயல்படும் - கரூர் மாநகராட்சி ஆணையரின் கடிதம்
Karur Muthamizh Arignar Kalaignar M.Karunanidhi New Bus Stand will be operational from 06-10-2025 - Letter from Karur City Corporation Commissioner
06.10.2025 திங்கள் கிழமை முதல் தரூர் திருமாநிலையூர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருகிறது.
பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய மார்க்கம்
1) கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடையவும் மேலும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும்போது சுக்காலியூர் ரவுண்டானா மற்றும் சேலம் ரவுண்டானா வழியாக பேருந்துகள் இயக்கவும் தெரிவிக்கப்படுகிறது.
2) மதுரை மார்க்கமாக வரும் பேருந்துகள் சுக்காவியூர் ரவுண்டானா வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடையவும் மீண்டும் அதே வழியாக சேலம் ரவுண்டானா வழியாக சேலம் மற்றும் ஈரோடு செல்ல பேருந்துகள் இயக்கவும் தெரிவிக்கப்படுகிறது.
3) திருச்சி மற்றும் திண்டுக்கல் (வழி குஜிலியம்பாறை ) மார்க்கமாக வரும் பேருந்துகள் திருமாநிலையூர் ரவுண்டானா வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடையவும் மேலும் அதே வழியாக பேருந்துகள் இயக்கவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.