கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணி ஓய்வு ஆசிரியருக்கு மறு நியமன பணி நீட்டிப்பு மறுத்து உத்தரவு - CEO Proceedings

 


பணி ஓய்வு ஆசிரியருக்கு மறு நியமன பணி நீட்டிப்பு மறுத்து உத்தரவு - CEO Proceedings


Order denying re-appointment / extension of service to a retired teacher - CEO Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்(பொறுப்பு) செயல்முறைகள் 

பிறப்பிப்பவர்: திருமதி.அ.சுகப்பிரியா எம்.எஸ்.ஸி.,பி.எட்.எம்ஃபில்.,


மூ.மு.எண்.4001 / ஆ4/ 2026, நாள். 30.06.2026


பொருள்:


பள்ளிக்கல்வி - தமிழ்நாடு சார்நிலைப்பணி - பணி ஓய்வு - பணி நீட்டிப்பு - தஞ்சாவூர் மாவட்டம். செண்டங்காடு, அரசு நீட்டிப்பு உயர்நிலைப்பள்ளி. ஓவிய ஆசிரியர் திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 இல் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு - 01.07.2026 முதல் 2026-2027 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதிவேலை நாள் வரை மறுநியமன அடிப்படையில் பணிநீட்டிப்பு கோரியது - தொடர்பாக.


பார்வை:


1. அரசாணை (நிலை) எண்.261. பள்ளிக்கல்வி (155(2)) துறைநாள்.20.12.2018.


2. அரசாணை (நிலை)எண்.115, பள்ளிக்கல்வித் (பக5(2)) துறைநாள்.28.06.2022.


3. அரசாணை (நிலை)எண்.151. பள்ளிக்கல்வித் (SE1 (1) துறைநாள்.09.09.2022.


4.அரசுக்கடிதஎண்: 3618/பக5(1)/2025 நாள்:30.05.2025.


5.செண்டங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரின் கடித ந.க.எண்:37/516/ 2026, நாள்: 05.06.2026.


தஞ்சாவூர் மாவட்டம், செண்டங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வரும் திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 அன்று வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறுவதால் 01.07.2026 முதல் 2026 27 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை பணி நீடிப்பில் பணிபுரிய அனுமதி கோரி பார்வை (5) இல் கண்டுள்ள கடிதத்தில் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் பரிந்துரையுடன் இவ்வலுவலகத்தில் கருத்துரு பெறப்பட்டுள்ளது.


பார்வை 1-ல் காணும் அரசாணையில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயது அடையும் ஆசிரியர்களை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படின், கல்வியாண்டு முடியும் வரை அப்பணியிடம் பூர்த்தி செய்யப்படாத நிலையில், பாடம் போதிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையினைத் தவிர்க்கவும், மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலையினைத் தவிர்க்கவும், கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதைக் கருதியும், ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதிவரை மறுநியமனம் வழங்கலாம் என்பது அரசின் பொதுவான ஆணையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு கலை ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செண்டங்காடு. அரசு உயர்நிலைப்பள்ளியில் 01.08.2025 ஆசிரியர் நிர்ணயத்தின் படி 6 ஆம் வகுப்பில் 15 மாணவர்களும், 7 ஆம் வகுப்பில் 21 மாணவர்களும், 8 ஆம் வகுப்பில் 16 மாணவர்களும் ஆக கூடுதல் 52 மாணவர்கள் எண்ணிக்கை உள்ளது. மேலும் இன்றைய தேதியிலும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு குறைவாகவே கல்வி பயின்று வருகின்றனர்.


எனவே திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 பிற்பகல் பணி ஓய்வு பெறும் நிலையில் தனியர் கலையாசிரியர் என்பதாலும், அப்பள்ளியில் மிகக் குறைவான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையிலும் மேற்காணும் அரசாணைகளின் மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படாது என்பதை கருத்தில் கொண்டும் தனியருக்கு பணி நீட்டிப்பு வழங்க வழிவகை இல்லை என்பதால் பெறப்பட்ட கருத்துரு அசலாக திருப்பப்படுகிறது.


முதன்மைக் கல்வி அலுவலர்(பொ). தஞ்சாவூர்.


பெறுநர் :

சம்மந்தப்பட்ட ஆசிரியர் (உரியவழியாக)


நகல் :

தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, செண்டங்காடு.


நகல் :

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), தஞ்சாவூர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணி ஓய்வு - மறு நியமனம் கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பதிவும், பணி நீட்டிப்பு பெற்ற ஆசிரியரின் பதிவும்

 பணி ஓய்வு - மறு நியமனம் கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பதிவும், பணி நீட்டிப்பு பெற்ற ஆசிரியரின் பதிவும்