கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஏப்ரல் 4 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


ஏப்ரல் 4 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


Local holiday declared for Ramanathapuram district on April 4


 ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கை ஒட்டி, ஏப்ரல் 04 அன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



Hi Tech Lab, Smart Classrooms பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்

 

Hi Tech Lab, Smart Classrooms பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்


 உயர் தொழில்நுட்ப ஆய்வகம், திறன் வகுப்பறை பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவிப்பு


 Respected DEOs,


Kindly disseminate the following instructions to schools immediately.


தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, 


 Hi-Tech labs & Smart Classrooms 100% பணிகள் நிறைவடைந்த பள்ளிகளில் ,


தினந்தோறும் காலை 10 am மணி முதல் மாலை 4 pm வரை 


Hi-Tech Lab & Smart Classroom ஆகியவற்றை on செய்து வைத்திருக்க வேண்டும்.


 கற்றல் கற்பித்தலுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும். 


வாரம் ஒரு முறை தூய்மைப்படுத்தி பராமரித்தல் வேண்டும். 


 தொழில்நுட்ப குறைபாடுகள் ( server computer not working, smart board not working, UPS Problem, meraki problem) இருப்பின் 044 - 40116100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு complaints - Raise கொடுக்க வேண்டும். 


Network problem இருப்பின் தங்கள் பள்ளிக்கு இணைய இணைப்பு கொடுத்த bsnl vendor ஐ தொடர்புகொண்டு உடனுக்குடன் சரி செய்யவும். 


Electrical problem- low/ high voltage, circuit problem, wiring problem இருப்பின் தங்கள் பகுதிக்கு உட்பட்ட  EB ( மின்சாரத்துறை) 


அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும்.


 விடுமுறை நாட்களில் பாதுகாப்பாக அறையினை பூட்டி, தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும் வலியுறுத்தப்படுகிறது.


Hi-Tech Lab and Smart Classroom இன் முக்கியத்துவம் உணர்ந்து அதனை முறையாக பயன்படுத்தவும், அனைத்து ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தலை வலுப்படுத்தவும், மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்தவும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் விவரம்


 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் விவரம், தற்போதைய நிலை - மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடிதம், நாள் : 03-04-2025


Details of differently abled persons working on consolidated pay, current status - Letter from the Director of Welfare of the Differently-abled, Date: 03-04-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு அரசு சார்ந்த அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எவரேனும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியம் அல்லது தற்காலிக பணியில் இணைந்திருப்பின் அதன் விவரத்தை தங்கள் அலுவலகம் மூலமாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 



லஞ்சம் வாங்கிய சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கைது



 லஞ்சம் வாங்கிய சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கைது


திருவாரூர்: திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஜோதி கைது.


எழுத்தர் சசிகுமாரின் பழைய சம்பள பாக்கியை தர ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றபோது டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் ஜோதியை கையும் களவுமாக கைது செய்தனர்.


தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3250 வரை குறையும் - பங்கு சந்தை நிபுணர் கணிப்பு

 


தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3250 வரை குறையும் - பங்கு சந்தை நிபுணர் கணிப்பு


தங்கத்தின் விலை 38% குறையும் என கணிக்கிறார் மில்ஸ்.


டிரம்ப் உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை அறிவித்திருக்கிறார். அதன் எதிரொலியாக தங்கம் மீண்டும் உச்சம் தொட்டிருக்கிறது.


தங்கம் விலை சுமார் 38 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடையும் என நிபுணர் ஜான் மில்ஸ் கணிப்பு


நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.


இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,560 ஆகும். இதில் 38% என்பது ரூ.3250 ஆகும்.


இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.68,480 ஆகும்.


இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.112 ஆகும்.


என்ன சொல்கிறார் நிபுணர்?

தங்கம் விலை குறையும்! - எவ்வளவு?



உலகமே தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருகிறது, இன்னமும் உயரும் என்ற பயத்தில் இருக்கிறது. பெரும்பாலான நிபுணர்களின் கருத்து இந்தியாவில் தங்கம் விலை 2027-ம் ஆண்டிற்குள் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என்பது ஆகும்.


ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்காவை சேர்ந்த மூத்த பங்குச்சந்தை நிபுணரான ஜான் மில்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை 38% குறையும் என்று கூறியுள்ளார்.


அவர் தற்போதுள்ள தங்கத்தின் விலையில் 38 சதவீதம் வரை குறையலாம் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பார்க்கும்போது கிராம் ஒன்றுக்கு ரூ. 3,250 வரையில் தங்கத்தின் விலை குறையக்கூடும்


அவர், "அடுத்த ஐந்து ஆண்டுகளில், தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 1,820 டாலர்களாக குறையும். இது கிட்டதட்ட 38 சதவிகித வீழ்ச்சி ஆகும்" என்று கணித்துள்ளார்.


இப்போதைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,153.64 டாலர்கள் ஆகும்.


சமீப நாள்களாகவே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களிலேயே சவரன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உயர்ந்திருந்தது. அதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே வரி விதித்து அதனை அறிவித்துள்ளார். இதுவும் உலக சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.


உச்சத்தில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் இந்திய ரூபாயில் 2 லட்சத்து 59 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. ஒரு அவுன்ஸ் என்பது 28.3 கிராம் ஆகும். அந்த வகையில், சர்வதேச சந்தையில் கிராம் ஒன்று சுமார் ரூ.8,330 ஆக உள்ளது என கூறலாம். சென்னையை பொறுத்தவரை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.68,480 ஆகவும், ஒரு கிராம் ரூ.8,560 ஆகவும் உயர்ந்துள்ளது. விரைவில் கிராம் ரூ.10 ஆயிரத்தை எட்டும் என பலர் கூறி வருகின்றனர்.



தங்கம் விலை 38% குறையும் - கணிப்பு

உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக 38% வரை குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புதான் பலரையும் வியக்க வைத்துள்ளது. 


அதாவது, யாரும் எதிர்பார்க்காத உச்சத்தை தொட்டிருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என அமெரிக்காவை சேர்ந்த பங்குச் சந்தை நிபுணரான ஜான் மில்ஸ் கணித்துள்ளாராம். அதாவது, கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.89,510 என்று இருந்த நிலையில், இதுவே அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.55,496 ஆகக் குறையலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.




Gold Price: ஜான் வில்ஸ் கூறும் 3 காரணங்கள்

ஜான் மில்ஸ் இதற்கு 3 காரணங்களை சொல்கிறார். தங்கம் விலை அதிகரிப்பால், தங்கச் சுரங்கங்களில் தங்கம் தோண்டுவது அதிகரிக்கும்; தங்கத்தின் மீதிருக்கும் தற்போதைய டிமாண்ட் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறையாது; உலகில் உச்சம் தொடும் ஒன்று நிச்சயம் ஒருநாள் வீழ்ச்சி அடையும் என்பதை வரலாறு நெடுக பார்த்திருக்கிறோம் - என இந்த மூன்று காரணங்களால் தங்கம் விலை 38% குறையும் என்கிறார்.



Gold Price: கணிப்பு மெய்யாகுமா...?

ஆனால், இன்னும் சில பொருளாதார நிபுணர்களோ இவர் கூறும் காரணங்களை ஏற்க மறுக்கின்றனர். தங்கத்தின் டிமாண்ட் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றாலும் அது இந்தளவிற்கு வீழ்ச்சியை காணாது என்றும் சிலர் கூறுகிறார்கள். சர்வதேச அரசியல் நிலவரத்தை  ஜான் வில்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். நிச்சயம் தங்கம் விலை 38% வீழ்ச்சி அடையாது என பலரும் கருதுவது குறிப்பிடத்தக்கது.


ஜான் மில்ஸ் என்கிற அமெரிக்க அனலிஸ்ட் தங்கத்தின் விலை தற்போதைக்கு அதிகரித்தாலும், நீண்ட கால நோக்கில் கணக்கிட்டால் 38% வரை குறையும் என கணித்திருக்கிறார். அதே சமயம், தற்போதைய தங்கத்தின் விலைக்கும், இந்த கணிப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.


இந்த மூன்று நிகழ்வுகள் நடந்தால், தங்கத்தின் விலை குறையும் என கணிக்கிறார் மில்ஸ்.



1. தங்கத்தின் விலை அதிகரிப்பதால், தங்கச் சுரங்கங்களில் தங்கம் தோண்டுவது அதிகரிக்கும் என கணிக்கிறார் மில்ஸ்.


2. தங்கத்தின் மீதிருக்கும் இந்த டிமாண்ட் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பிருக்கிறது. மத்திய வங்கிகளும், முதலீட்டாளர்களும் தங்கத்தில் இப்போது அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். அதே சமயம், இந்த முதலீடு மேலும் அதிகரிக்காது என சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு இது குறையலாம் அல்லது இதே அளவில் இருக்கலாமே ஒழிய, முதலீடு அதிகரிக்காது .


3. பொதுவாகவே உச்சம் தொடும் எந்தவொரு விஷயமும் , கீழ் இறங்கும் என்பதே இத்தனை ஆண்டுகால வரலாறு நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.


ஜான் மில்ஸ் இப்படி கணித்திருந்தாலும், அமெரிக்க வங்கி, கோல்ட்மேன் சேக்ஸ் உள்ளிட்ட பிரபல கணிப்பாளர்கள் தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் உயரவே வாய்ப்பதிகம் என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


100 Days Challenge - 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


 100 Days Challenge - 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 03-04-2025


100 Days Challenge - Proceedings of the Director of Elementary Education to conduct assessment test for students on 04.04.2025 and 16.04.2025, Dated: 03-04-2025








பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - கற்றல் திறன் சோதனை நடைபெறும் 4552 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் - மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2024-2025ஆம் கல்வி ஆண்டு - மாணவர்கள் Result ஒப்புதல் - BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் படிவங்கள்

 

 


2024-2025ஆம் கல்வி ஆண்டு - மாணவர்கள் தேர்ச்சி ஒப்புதல் - வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் படிவங்கள் 



2024-2025 Academic Year - Students Annual Result Approval - Formats & Documents to be submitted to the Block Educational Office



>>> 2024-2025ஆம் கல்வி ஆண்டு - மாணவர்கள் தேர்ச்சி ஒப்புதல் - வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் படிவங்கள் (2024-2025 Academic Year - Students Annual Result Approval - Formats & Documents to be submitted to the Block Educational Office)...



>>> கல்வி ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் - மாதிரி 2 (Annual Result Formats)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Application for Paramedical courses starts from 17.06.2025

TamilNadu Paramedical துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பம் 17.06.2025 முதல் துவங்குகிறது Counseling application for Paramed...