கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

 


பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த பெண் காவலர் அபிநயா (29) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.


நேற்றிரவு பணிக்கு வந்த நிலையில், காலையில் தற்கொலை; மன உளைச்சலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறை விசாரணை.


தற்கொலை தீர்வல்ல... 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.


மயிலாடுதுறை மாவட்டம் மணகுடி பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (29). இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீஸாக பணியாற்றி வருகிறார்.


திருமணம் ஆன இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று விட்டதாக சொல்லப்படுகிறது. அபிநயா நாகை ஆயுதப்படை குடியிருப்பில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார்.


நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் அபிநயா, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.



சுழற்சி முறையில் இந்த பணியை செய்து வந்ததாக சொல்கிறார்கள். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் மாவட்ட கருவூலத்தில் அபிநயாவும், மற்றொரு பெண் காவலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று காலை சுமார் 6 மணியளவில் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.


 மற்றொரு பெண் காவலர் துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்துள்ளார். இதில் அபிநயா இடது கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார்.


பின்னர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே, ஆயுதப்படை டி.எஸ்.பி, நாகூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் அபிநயா உடலை நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் எஸ்.பி அருண் கபிலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டார். அபிநயா குறித்து பணியில் இருந்த மற்றொரு பெண் காவலரிடம் கேட்டுள்ளனர்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து கூறப்படுவது, "அபிநயா பணியை சிறப்பாக செய்யக்கூடியவர். இதற்காக உயர் அதிகாரிகளிடம் பாராட்டு சான்றிதழ் வாங்கியுள்ளார். ஆயுதப்படையில் பணியாற்றிய ஆண் காவலர் ஒருவரும், அபிநயாவும்  பழகியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே 1ஆம் தேதி அந்த ஆண் காவலர் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் அபிநயா.


இதையடுத்து 15 நாட்கள் விடுமுறை எடுத்துச் சென்றவர், கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் பணிக்கு வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து இரவுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் அவருக்கு அழுத்தத்தை தந்துள்ளது. இந்த நிலையில் தான் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதற்கான காரணம் விசாரணை முடிவில் தெரிய வரும்" என்றனர்.


நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் அபிநயா உடல், உடற்கூறாய்விற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்கொலை தீர்வல்ல... 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.


1-5th Std - Time Table

 


எண்ணும் எழுத்தும் - 1-5 ஆம் வகுப்புகள் - கால அட்டவணை 


1-3ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)


4-5ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)



 Ennum Ezhuthum - 1-5th Standard - Time Table 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - TANUVAS Press Release


கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - TANUVAS பத்திரிகை செய்திக் குறிப்பு Press Release 


 கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு நாளை 26-05-2025 முதல் விண்ணப்பிக்கலாம்



>>> பத்திரிகை செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY

PRESS MESSAGE

Tamil Nadu Veterinary and Animal Sciences University invites applications for undergraduate courses (BVSc & AH / B.Tech) from the candidates of Tamil Nadu State through online (https://adm.tanuvas.ac.in) from 26.05.2025,10.00 AM to 20.06.2025, 5.00 PM.

For online applications, guidelines, number of seats reserved for NRIs (Non-Resident Indians) / Wards of NRIs / NRI Sponsored and Foreign National Quota, please visit https://adm.tanuvas.ac.in.

Chairman, Admission Committee (UG),

TANUVAS, Chennai-600 051.



https://chat.whatsapp.com/DDqsauWKkln1IUdqOq9BnA


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை: கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்


கால்நடை மருத்துவ படிப்புகள், கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பது நாளை தொடங்குகிறது.


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி - ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி கடந்த 1903-ல் தொடங்கப்பட்டது. 122 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய கல்லூரியாக திகழ்கிறது.


பி.டெக். படிப்புகள்: திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக் படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்பம் பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில் இருந்து முறையே 6 இடங்களும், 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.


மேற்கண்ட பிவிஎஸ்சி - ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025-26-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிப்பது நாளை தொடங்குகிறது.


பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்பில் சேர, பிளஸ் 2 மதிப்பெண் போதும். உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். நீட் மதிப்பெண்கள் தேவையில்லை. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடத்தில் சேர்வதற்கு, நீட் மதிப்பெண் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.


எம்பிபிஎஸ் போன்றே, இந்த படிப்பும் ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. ஓராண்டு உள்ளிருப்பு பயிற்சியை உள்ளடக்கியது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள் இந்திய கால்நடை மருத்துவ குழுமம் மூலமாக நிரப்பப்படுகிறது. எஞ்சிய இடங்கள், தமிழ்நாடு மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 45 இடங்கள் கிடைக்கும்


பி.டெக் படிப்புகள் 4 ஆண்டுகள் கொண்டது. இதில் சேர, பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். இதில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உணவு தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வள தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என 8 இடங்கள் கிடைக்கும்.


பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கால்நடை மருத்துவம் அல்லது கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகள் படித்தால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பை பெற்று முன்னேற வாய்ப்புகள் உள்ளன என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை



கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை


கேரளா அருகே கடலில் மூழ்கிய கப்பல் - ரசாயனம் பரவும் அபாயம்


திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்குக் கப்பல் மூழ்கியது.


 கப்பலில்  25 பேர் இருந்த நிலையில் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து தப்பித்தனர். 


கப்பலில் சிக்கிய 16 பேரை மீட்கும் பணி தீவிரம்.


கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன்  கந்தக எரிபொருள் உள்ளதால், அதனால் ஏதும் ஆபத்து நிகழலாம் என எச்சரிக்கை.


 கண்டெய்னர்கள் எங்காவது கரை ஒதுங்கும் போது மக்கள் யாரும் அருகே செல்ல வேண்டாம் என கேரள பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை.


கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.


கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பலில் லைபீரியா நாட்டின் கொடி இருந்ததாகக் கூறுகின்றனர்.


இந்தக் கப்பல் இன்றிரவு 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சியை தொடர்ந்து, தூத்துக்குடிக்கும் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.


இந்த விபத்தின்போது, கப்பலில் 24 பேர் இருந்ததாகவும், அவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளின் மூலம் தப்பித்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழையின் காரணமாக, கடலில் ஏற்பட்ட பாதகமான நிலைமையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.


அதுமட்டுமின்றி, கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆகையால், அவை கரை ஒதுங்கும் சமயத்தில், அதனருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது.


மேலும், கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்தப் பொருளையும் அணுக வேண்டாம் என்றும், 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தலா 30 வீரர்களை கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு

 

அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி, கோவைக்கு தலா 30 வீரர்களை கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு



கல்லூரிக் கனவு கையேடு - மே 2025



கல்லூரிக் கனவு கையேடு - மே 2025



Kalloori Kanavu Guide - May 2025 - College Dream Guide



கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கான  வழிகாட்டி கையேடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர்கள் (Retirement HMs), பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டியவை & தேவையான படிவங்கள்

 


பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டியவை & தேவையான பொறுப்பு ஒப்படைப்பு & பொறுப்பு ஏற்கும் படிவங்கள்


Items to be handed over by retired Head Masters to Teachers taking charge & required forms 



>>> பொறுப்பு ஒப்படைப்பு & பொறுப்பு ஏற்கும் படிவங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> மடிக்கணினி ஒப்படைப்பு விவரம் படிவங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



நண்பர்களே வணக்கம் 🙏


31/5/2025 *பணி ஓய்வு* 

தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு *வாழ்த்துகள்* ...


 *பணிக்காலத்தின்* "கடைசி வாரத்தில்" உள்ளீர்கள் 😊


அடுத்த " *சனிக்கிழமை* " ஓய்வு 👍 

தங்களின் மாணவர் நலன் சார்ந்த தொடர் செயல்பாடுகளுக்கு தலை வணங்குகிறோம் 💐💐💐



பொறுப்பு ஒப்படைக்கும்

 தலைமை ஆசிரியர்களின் / பொறுப்பு ஏற்கும் முதுகலை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு...


Charge *handed over taken over form இணைத்துள்ளேன்* ...


சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டியது...

1) Special fees A/c

2) PTA A/c

3) HM /NSD / Misc / School A/c

4) scholarship A/c ( சில பள்ளிகளில் இன்னும் இருக்கலாம்) ...

5) SNA A/c / SS A/c / Rmsa/SSA A/c (Canara Bank) ( எல்லாம் ஒரே கணக்கு தான்) 

தற்போது SSA/RMSA கணக்குகள் இல்லை 


ஒவ்வொரு கணக்கிற்கும்


நான்கு விஷயங்கள்


1) Bank passbook ( SNA A/c க்கு இருக்காது)

2) cash book

3) Minutes Note ( தீர்மான நோட்)

4) voucher file/ ஒட்டு file


இவைகள் கட்டாயம் சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டும் 


+ 5) stock register தனியே இருக்கலாம்....


நீங்க பொறுப்பு *ஒப்படைக்கும்/ ஏற்கும்* நாளில் வங்கி கணக்கில் உள்ள தொகை..

Passbook, cashbook tally ஆகிறதா என‌ மட்டும் சரி பார்த்து கொள்ளுங்கள்...


 *Audit* பொறுத்தவரை உங்கள் *period* க்கு மட்டுமே நீங்கள் பொறுப்பு...


உங்கள் *period Audit* முடித்தால் மட்டுமே *NOC* வழங்க இயலும் 🙏 என்பது நீங்க அறிந்ததே...


பகிர்ந்து கொள்ள வேண்டியது....


1) email/ Gmail ID password

2) EMIS ID password

3) CEO DEO phone number

4) SMC/ PTA president Phone no


மற்றபடி...


1) Cycle account (balance male female community wise)

2) laptop ( student laptop இருக்காது) .. CRC laptop/ additional laptop/ PG laptop எண்ணிக்கை சரிபார்த்து கொள்ளுங்கள்

3) உங்கள் மாவட்டத்தில் CUG pH no இருப்பின் அந்த sim....

4) office bureau keys...


சரிபார்த்து வாங்கிக் கொள்ளலாம்...


ஜூன் மாதத்தில் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று புதிய தலைமை ஆசிரியர் வந்து விடுவார்கள்....

மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கட்டாயம் இருக்கும்...


எனவே முதுகலை ஆசிரியர்கள் நம்பி charge எடுக்கலாம் 😊


பணி ஓய்வு பெறுபவர் 

"சூழ்நிலைக்கு ஏற்ப" நல்லவராகவோ


அல்லது

 "விமர்சனத்திற்கு உரியவராகவோ" 

இருந்து இருக்கலாம்...


எப்படி இருப்பினும்...

அவர் நமக்காக/ மாணவ செல்வங்களுக்காக/ அரசிற்காக பணி புரிந்து உள்ளார் 💐💐💐...


அவரின் " *ஓய்வு கால கண்ணியம்" காக்க வேண்டியது* நமது கடமை ✋🏻...


உரிய பணப் பலன்களை அரசு விதிகளுக்கு உட்பட்டு கிடைக்கச் செய்வது நமது " *தார்மீக* *கடமை* "... 



தகவலுக்காக

 *க.செல்வக்குமார்* 

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம் 

மதுரை மாவட்டம் 👍



Whether the following the registers have been handed over ( Yes/ No)


1.Register of Assets  - 

2.Amenity and Special Fees Cash book with passbook – 

3.Minutes books for special fees – 

4.Daily Fee Collection Register – 

5.Term Fee Register – 

6.Demand,Collection and Balance Statement- 

7.Arrear Demand Register – 

8.Penal Fee Register – 

9.Money Value forms Stock Register with Stock – 

10.TNTC 70 Register ( Salary and Non Salary ) - 

11.Undisbursed Pay Register  - 

12. C F 51 Cash Book – 

13.Permanent Advance Register _ 

14.Subsidiary Cash Book _ No

15.PTA Cash Book,Pass Book and Minutes Book – 

16.Draft / Cheque Register  - 

17.Stamp Account with Balance – 

18.Challan Register - 

19.English Medium Fees Collection Register – 

20.Scale Register – 

21.Register of Service Books – 

22.Scholarship Pass Book and Acquittance Register – 

23.Sanchayika Cash Book and Pass Book _ 

24.Flag Day Collection Register – 

25.Other Falgs Collection Register –

26.Tools and Plants Register –No

27.Broken Article Register and Auction Register  - 

28.Register of Free Books –

29.Register of Free Note Books – 

30.Register of Free Uniforms – 

31.Register of Free Cycles – 

32.Register of Free Bus Passes – 

33.Building Development Committee Minutes Books,Pass Book and Cash Book – 

34.Inspection Reports of CEO and DEO – 

35.Admission Register – 

36.Consolidated Attendance Register – 

37.Consolidated  Mark  Register – 

38.TC Book – 

39.Register of Unclaimed  SSLC  Certificates  -

40. Register of Unclaimed  HSE  Certificates  -

41.Register of Trophies and Cups – 

42.Log Book – 

43.Supervision Register – 

44.Staff Council Minutes Book - 




Relieved   Officer                                                                                                               Relieving   Officer


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School Education Minister's Review Meeting - DEE Agenda

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வுக் கூட்டம் - தொடக்கக் கல்வித் துறைக்கான கூட்டப் பொருள் School Education Minister's Review Meeting - A...