கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Learning Outcomes | Class 4 & 5 | Ennum Ezhuthum Term 1

 

 எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - குழந்தைகள் பெற வேண்டிய கற்றல் விளைவுகள் தொகுப்பு 


Term 1 - Ennum Ezhuthum - 4 & 5th Standard - Learning Outcomes that children should achieve



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


School Working Days and Holidays - 2025-2026 Academic Year



2025-2026ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில்


Details of school working days and leave days for the academic year 2025-2026 - on one page


பள்ளி நாட்காட்டி 2025 - 2026 - அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில்


Academic School Calendar 2025 - 2026 - Single Page ( All Details )



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் 2025-2026ஆம் கல்வியாண்டு நாட்காட்டி (87 பக்கங்கள்)


2025-2026 Academic Year Calendar - Tamilnadu School Education Department 


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2025-26 கல்வியாண்டில் 210 வேலை நாட்கள்.


அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Adi Dravidar and Tribal Welfare Department Hostel Admission - Press Release

 

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி / ஐடிஐ / டிப்ளமோ / கல்லூரி விடுதி சேர்க்கை  - செய்தி வெளியீடு


Adi Dravidar and Tribal Welfare Department School / ITI / Diploma / College Hostel Admission - Press Release




2025-2026 Academic Year Calendar - Tamilnadu School Education Department



தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் 2025-2026ஆம் கல்வியாண்டு நாட்காட்டி வெளியீடு


2025-2026 Academic Year Calendar - Tamilnadu School Education Department 


தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் மாதிரி கால அட்டவணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2025-2026ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில்


Details of school working days and leave days for the academic year 2025-2026 - on one page



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி - முக்கிய நாட்கள்


⭕ 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள் ;


 ⭕ அனைத்து சனி , ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை 


⭕ செப் -18 முதல் 26 ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. 


⭕ ஆயுத பூஜை , விஜயதசமி விடுமுறையைச் சேர்த்து செப் .27 முதல் அக் .5 ம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை


 ⭕ டிச .15 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது டிச .24 முதல் ஜன .4.2026 வரை ( 12 நாட்கள் ) அரையாண்டு விடுமுறை 


⭕ 2026 ஜன .14 முதல் ஜனவரி 18 வரை ( 5 நாட்கள் ) பொங்கல் விடுமுறை 


⭕ ஏப்ரல் 10 ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது.


⭕ கோடை விடுமுறை 2026 ஏப்ரல் 25 - ம் தேதி தொடங்குகிறது 


⭕ 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை...💐


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

விளக்கம் :
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.


பழமொழி :
Beat after beat will make even a stone move.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.


பொன்மொழி :

நோய் இல்லை என்று மனதில் உறுதி செய் ஏனென்றால் மனம் போல உடல் அமையும். - மகாகவி பாரதியார்


பொது அறிவு :

01.உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?

         ஆண்டிஸ் மலைத்தொடர் 

         Andes  mountain range

02.  தமிழ்நாட்டில் கும்பக்கரை நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது?

              தேனி மாவட்டம்

              Theni district


English words & Tips :

plan      -    திட்டமிடு

want      -    வேண்டும்


Grammar Tips :

Subject-Verb Agreement:
Ensure your verbs match your subject in number (singular or plural). For example, "The cat runs," not "The cat run".

* Avoid Double Negatives: Phrases like "I don't have no money" are incorrect. Use a single negative.



அறிவியல் களஞ்சியம் :

மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.


நீதிக்கதை

தவளை கற்று தரும் பாடம்

ஒரு ஊரில் நிறைய தவளைகள் இருந்தன. சிறிய  பெரிய தவளைகளெல்லாம்  உள்ளேயே ஒரு பந்தயம்  வைக்கலாம் என்று முடிவு செய்தது. அது என்ன போட்டியென்றால் ஓட்டப்பந்தய போட்டி ஆகும். ஓட்டப் பந்தயத்திற்கு எல்லா தவளைகளும் தயாராகி வந்தன. தவளைகளின் ரன்னிங் ரேஸ் போட்டியை பார்ப்பதற்காகவே ஆர்வமாக கூடி இருந்தார்கள்.  ஓட்டப்பந்தயத்தில் அருகிலுள்ள  டவரை தொட வேண்டும். இது தான் அந்த போட்டியோடு விதி ஆகும்.

அந்த தவளையை தான் வெற்றி பெற்ற தவளை என்று முடிவு சொல்லப்பட்டது. போட்டி தொடங்கியது, போட்டியை காண வந்த அனைவரும் சொன்னார்கள். இது ஒரு சுலபமான போட்டியே கிடையாது. இந்தப் போட்டி ஒரு கடுமையான போட்டி ஆகும். முதலில் இந்த தவளைகளில் எந்த ஒரு தவளையும் கோபுர உச்சியை அடையவே முடியாது. அந்த தவளைகளைப் பார்த்து கூறிக் கொண்டே இருந்தார்கள். மேலும் இந்த தவளைகளில் எந்த ஒரு   கோபுர உச்சியை டச் பண்ண கூட  இல்லை என்று பேசிக் கொண்டே இருந்தார்கள்.

இந்த போட்டியை நேரில் காண நிறைய மக்கள் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு வரும் பேசும்  கேட்ட அந்த  எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டது. நம்மால் இந்த போட்டியில் ஜெயிக்கவே முடியாது போன்று இருக்கிறதே என்று  பண்ணி ஒரு  அந்த போட்டியில் இருந்து பின் வாங்க முடிவு செய்தன.  இந்த போட்டியிலிருந்து  கொள்வதாக அறிவித்தன. அது மட்டுமில்லாமல் அந்த  கோபுர உச்சியை தொட போவதில்லை. அந்த டவரை தொடுவது என்பது  என்று ஒரு   பேசிக் கொண்டே இருந்தார்கள்.

பல தவளைகளும் ஆகி போட்டியிலிருந்து  ஐ நீக்கி கொண்டன. இப்படியே நிறைய  போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. ஒரே ஒரு  தவளை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொண்டிருந்தது. கோபுர உச்சியைத் தொடுவது  என்று நினைத்தது. அதனால் பல தவளைகளும் பெயர் நீக்கம் செய்தன. இருந்தாலும் கூட, அந்த ஒரு தவளை மட்டும்   கோபுர உச்சியை நோக்கி மெல்ல மெல்ல சென்றுக் கொண்டே இருந்தது. ஒரு சில வினாடிகளில் அந்த குட்டி ஆனது டவரை அடைந்து வெற்றியும் பெற்றது. அனைவரும் வியந்து போய் பாராட்டினார்கள்!. குட்டி ஆல் மட்டும் எப்படி டவரை அடைந்து வெற்றி  பெற முடிந்தது. போட்டியை -ஆக பார்த்து கொண்டிருந்த  கேட்டார்கள். உன்னால் மட்டும் எப்படி அந்த  டவரை தொட முடிந்தது. அந்த தவளையை அழைத்து கேட்டார்கள்.

வெற்றி அடைந்த அந்த தவளையானது  பெறுவதற்காக மேடையின் மீது ஏறியது. அப்போது தான் அங்கே இருந்த மக்களுக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. அந்த  டவரை தொட்டு வெற்றியடைந்த  தவளைக்கு காது கேட்காது. மற்றவர்கள் பேசுவதை கேட்க முடியாது என்று தெரிந்தது. அனைவரும் குட்டி தவளையின் திறமையை கண்டு புகழ்ந்தார்கள். பாராட்டி பரிசுயும் கொடுத்தார்கள். அந்த  தவளையும்  மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றது.


இன்றைய செய்திகள்

13.06.2025

⭐தட்கல் டிக்கெட்  முன்பதிவுக்கு ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம்: ரயில்வே அறிவிப்பு.

⭐போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார்.

⭐தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணியை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

⭐ அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவிப்பு. இதில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் பலி.


🏀 விளையாட்டுச் செய்திகள்.

🏀FIH புரோ லீக் ஹாக்கியில் ஐரோப்பிய லெக்கில் இந்தியா அர்ஜென்டினாவிடம் 3-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

🏀தேசிய முதுநிலை விளையாட்டுப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார் 70 வயதான அசாம் தடகள வீரர்.


Today's Headlines

✏️  From 1st July   onwards Aadhaar  is mandatory  for Tatkal ticket booking Indian Railways' announcement

✏️ Tamil Nadu Law and Order Additional Director Davidson Devasirvadham has said that strict action will be taken against police personnel who assist in illegal activities including drug trafficking and cannabis smuggling.

✏️ The Tamil Nadu government has started the process of enumerating  the workers from northern states who are living in Tamil Nadu.

✏️ Tata Group announces Rs 1 crore compensation to families of those died in Ahmedabad Air India plane crash.


*SPORTS NEWS*

🏀 India lost 3-4 to Argentina in the European leg of the FIH Pro League hockey.

🏀 70-year-old Assamese athlete won four gold medals at the National Senior Games


Covai women ICT_போதிமரம்


Smart Classroom Guidelines


 திறன் வகுப்பறை - பராமரிப்பு வழிகாட்டுதல்கள்


Smart Classroom Maintenance Guidelines 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-06-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

விளக்கம் :
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.


பழமொழி :
As clear as a bell.

உள்ளங்கை நெல்லிக்கனி போல.


இரண்டொழுக்க பண்புகள் :

1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.


பொன்மொழி :

பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே. உண்மையைச் சொல்லி மாட்டிக் கொள். ஏனென்றால் பொய் வாழ விடாது . உண்மை சாக விடாது. - விவேகானந்தர்


பொது அறிவு :

01. இந்தியாவின் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் யார்?

              திரு.ஞானேஷ்குமார்

             Thiru. Gyaneshkumar

02. முதன் முதலில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற  நகரம் எது? 

             கோலாலம்பூர் (சிங்கப்பூர்)

             Kualalumpur (Singapore)


English words & Tips :

challenge     -      சவால்

arrange      -      ஏற்பாடு


Grammar Tips :

Common rule to use 'K' or' ck' in the end of a word

'k'  is used after a consonant
Ex: pink ,think,blink,work and etc

'ck' is used after a short vowel sound

Frock ,click, brick ,duck neck ,back and etc



அறிவியல் களஞ்சியம் :

நாம் கண்களை அனிச்சையாக சிமிட்டுவது, கண்களை ஈரமாக வைத்துக் கொள்வதற்கும், தூசுகளை நீக்குவதற்கும் உதவுகிறது என்பதை அறிவோம். அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், விழித்திரையில் விழும் ஒளிகளைக் கண் சிமிட்டுதல் முறைப்படுத்துகிறது என்றும், இதன் வாயிலாக அதிகமான நேரம் ஒரு பொருளைக் கவனித்துப் பார்க்க முடிகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.


ஜூன் 12

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் ௧௪ வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.



நீதிக்கதை

பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.


இன்றைய செய்திகள்

12.06.2025

⭐RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

⭐2025 இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1.46 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

⭐மனிதர்களின் இதய ரத்தக்குழாய்களில் இருக்கும் அடைப்புகளை சரி செய்ய சிறிய அளவு ரோபோக்களை அமெரிக்காவை சேர்ந்த ட்ரெக்செல் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

⭐ஜூன் 13 முதல் 16 வரை தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு  கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


🏀விளையாட்டுச் செய்திகள்

🏀ஹாக்கி - FIH புரோ லீக்கில் இந்தியா Vs அர்ஜென்டினா.

🏀AFC ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் ஹாங்காங்கிடம் 0-1 என்ற அதிர்ச்சி தோல்வியை இந்தியா சந்தித்தது.


Today's Headlines

✏️ The Madras High Court has directed the Union Government to allocate the funds required for 25% reservation in private schools under the RTE Act to the Tamil Nadu.

✏️ India's population is estimated to reach 1.46 billion by the end of 2025

✏️ Medical scientists at Drexel University in the US have invented small robots to repair blockages in human heart blood vessels.

✏️ Meteorological Department announced  Heavy rain in many districts of Tamil Nadu from June 13 to 16


SPORTS NEWS

🏀 Hockey - India vs Argentina in FIH Pro League
.
🏀India suffered a shock 0-1 defeat to Hong Kong in the AFC Asian Cup qualifiers.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (19.06.2025) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்

  +2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (19.06.2025) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் +2 Supplementary Exam Hall Ticket Downlo...