திறன் வகுப்பறை - பராமரிப்பு வழிகாட்டுதல்கள்
Smart Classroom Maintenance Guidelines
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
திறன் வகுப்பறை - பராமரிப்பு வழிகாட்டுதல்கள்
Smart Classroom Maintenance Guidelines
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஜல்லிக்கட்டு போட்டி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Jallikattu Competition - Guidelines Released
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் பொங்கலன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றவை.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,
1). மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கூடாது.
2). ஜல்லிக்கட்டின்போது காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
3). ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
4). ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதிக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும்.
5). ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
6). அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு, இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க கூடாது.
7). ஜல்லிக்கட்டு போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என பல நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட www.jallikattu.tn.gov.in தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும்.
-
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசின் முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு கடிதம்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 2025ம் ஆண்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இந்த சூழலில், 2025ம் ஆண்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன் விபரம் பின்வறுமாறு:
* காளைகளுக்கு தேவையற்ற வலி மற்றும் கொடுமையைத் தவிர்த்து பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும்.
* மாவட்ட கலெக்டர் இடம், முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது.
* போட்டிகளில் பங்கேற்கும் விலங்குகளுக்கு தேவையற்ற துன்பம் தரக்கூடாது.
* ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதிக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளும் போட்டி நடக்கும் இடத்தில் ஏற்பாடு செய்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
* அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு, இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST Exam) 2024-25 - விண்ணப்பப் படிவம்
TRUST Exam 2024-25 - Application Format
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்!
ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்கள் தேர்வுத்துறையின் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
நவம்பர் 12 முதல் 20ம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
-அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST exam) 2024-25 - விண்ணப்பிக்க அறிவுரைகள்
TRUST Exam 2024-25 - Guidelines to Apply
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்!
ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்கள் தேர்வுத்துறையின் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
நவம்பர் 12 முதல் 20ம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
-அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு - GUIDELINES FOR REGULATION OF COACHING CENTER...
வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்
"16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை"
மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக் கூடாது
குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்ய தடை
விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும்- மத்திய கல்வி அமைச்சகம்
விதிமீறும் பயிற்சி நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்...
>>> GUIDELINES FOR REGULATION OF COACHING CENTER - Click Here to Download...
6-12ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான அரையாண்டு பொதுத் தேர்வு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம் - இணைப்பு: 6-12ஆம் வகுப்புகள் தேர்வு கால அட்டவணை & வினாத்தாள் பதிவிறக்கம் - வழிகாட்டு நெறிமுறைகள் (State Project Director Letter for Conducting State Level Half Yearly Public Examination for Classes 6-12 - Attachment: Class 6-12 Exam Time Table & Question Paper Download - Guidelines)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள அரையாண்டு தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது.
இது குறித்து பள்ளிகல்வி துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் (2023-24) டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளன.
மாணவர்கள் நலன் கருதி, அதற்கான உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகின்றன.
அதேபோல் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.
சிறப்பு குழு சார்பில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் இரண்டு விதமான கேள்வித் தாள்களை இந்த குழுவானது தயாரிக்கும்.
மேலும் இம்முறை மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித் தாள்காளக இருக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வசதிகளும் செய்யபட்டுள்ளன.
6 முதல் 10 ஆம் வகுப்பு:
நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது.
இதற்கான கால அட்டவணை:
11-ஆம் தேதி அன்று தமிழ்,(மொழிப்பாடம்)
12-ஆம் தேதி அன்று விருப்பட்ட மொழி பாடம்
13-ஆம் தேதி அன்று ஆங்கிலம்
15-ஆம் தேதி அன்று அறிவியல்
18-ஆம் தேதி அன்று கணிதம்
20-ஆம் தேதி அன்று சமூக அறிவியல்
21-ஆம் தேதி அன்று உடற்கல்வி
என 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை நடைபெறுகிறது.
இதில் 6ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், 9, 10 வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4.30 வரையிலும் தேர்வானது நடைபெறவுள்ளது.
/இதேப்போல் 11, 12-ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கிறது.
7ஆம் தேதி அன்று மொழி பாடம்
8 ஆம் தேதி அன்று ஆங்கிலம்,
11ஆம் தேதி அன்று கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் (பொது).
13ஆம் தேதி அன்று ஆங்கில தொடர்புடையல், இந்திய கலச்சாரம் மற்றும் கொள்கைகள், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்படுத்தபட்ட மொழிப்பாடம் (தமிழ்), மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை மிண்ணணு பொறியியல்.
16ஆம் தேதி அன்று இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள்
19ஆம் அன்று வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்
22ஆம் தேதி அன்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னனு பொறியியல் , அடிப்படை கட்டுமான பொறியியல், அடிப்படை வாகன பொறியியல், அடிப்படை இயந்திர பொறியியல், துணிநூல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகதண்மை ஆகியவை ஆகும்.
மேலும் 12-வகுப்புக்கு காலை 09.30 மணியில் இருந்து மதியம் 12.45 வரையிலும், இதில் காலை 9.30 மணி முதல் 09.40 வரையிலான 10 நிமிடங்கள் வினாத் தாள்களை படிக்கவும், 09.40 முதல் 09.45 வரையிலான 5 நிமிடங்கள், விடைத்தாளை பூர்த்தி செய்யவும், அதன் பிறகு 09.45 மணியில் இருந்து மதியம் 12.45 வரை தேர்வானது நடைபெறும்.
இதேப்போல் 11ஆம் வகுப்புகளுக்கு மதியம் 01.15 முதல் மாலை 4.30 வரை தேர்வு நடைபெறும். இதில் 1.15 முதல் 1.30 வரை வினாத் தாள்களை படிக்கவும், விடைத்தாளை பூர்த்தி செய்யவும் நேரம் தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் ( 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வரை ) காலை உணவு திட்டம் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு....
பள்ளித் தலைமையாசிரியர் குழுவின் தலைவராக செயல்படுவார்...
9 வகையான பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.
இத்திட்டத்திற்கு என்று தனியாக Mobile App...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
● கனவு ஆசிரியர் தேர்வின் முதல் நிலைத்தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்!
திரையில் தோன்றுவதைப் படிப்பதற்கு எளிதாக மடிக்கணினி/மேசைக் கணினியில் தேர்வை எழுத நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்களிடம் இவை இல்லையென்றால், திறன்பேசியின் கூகுள் குரோம் உலாவியின் வாயிலாக மட்டும் தேர்வை எழுதலாம். ஐபோனைப் (iphone) பயன்படுத்தக்கூடாது.
குறிப்பு:
1. கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும். தேர்வின்போது விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால் தேர்வர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். இதில் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (SCERT) முடிவே இறுதியானது. இம்முடிவானது, கணினியில் பதிவான மற்றும் தேர்வர்களுக்கென்று வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும்.
2. தேர்வர்களுக்கு மறுதேர்வு, நேர நீட்டிப்பு மற்றும் பிற சலுகைகள் போன்றவை எந்நிலையிலும் அளிக்கப்படமாட்டாது; மின்வெட்டு, கணினியில் ஏற்படும் கோளாறுகள், மெதுவான இணைய வேகம் உள்ளிட்ட பிற காரணங்கள் இருப்பினும் சலுகைகள் அளிக்கப்படாது.
இதில் 3 பிரிவுகள் உள்ளன:
1. கணினி மற்றும் கணினி சார்ந்த தேவைகள்
● கணினி: மேசைக்கணினி / மடிக்கணினியே முதன்மையாகப் பரிந்துரைக்கப்படுகிறது; அவை இல்லாதநிலையில் திறன்பேசி/கைபேசியைப் (Android phone) பயன்படுத்தலாம்.
● இணைய வேகம்: குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 2 Mbps இருக்க வேண்டும். (இணைய வேகம் மெதுவாக இருந்தால், தேர்வு பதிவேற்றம் ஆக அதிக நேரம் எடுக்கும்.)
● உலாவிகள்: கூகுள் குரோம்/ மைக்ரோ சாப்ட் எட்ஜ்/ மொஸில்லா பயர்பாக்ஸ் உலாவி (கூடுதல் விவரங்களுக்குப் பிற்சேர்க்கையைப் பார்க்கவும்.)
● தேர்வு நேரம் முழுவதும் இணைய ஒளிப்படக்கருவி மற்றும் ஒலிவாங்கிகள் இயக்கத்திலேயே இருக்க வேண்டும் (கணினி சாதனங்களைச் சரியாக அமைத்தல் தொடர்பான விவரங்களுக்குப் பிற்சேர்க்கையைப் பார்க்கவும்.)
● தேர்வுக்கு 48 மணிநேரம் முன்னதாகத் தேர்வர்கள், தாங்கள் தேர்வை மேற்கொள்ளவிருக்கும் கணினியிலிருந்து பின்வரும் இணைப்பைச் சொடுக்கித் தொடர்புகொள்ள முடிகிறதா என்பதைச் சரிபார்க்கப் அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைய இணைப்புக்கான உரலி - https://assess.cocubes.com/check-system
2. தேர்வு அறையைத் தயார்செய்தல் (தேர்வுக்கு முன்)
● தேர்வு நடைபெறும் அறை வெளிச்சமாக இருக்க வேண்டும்.
● உங்களுக்கு முன்னால் வெளிச்சம் இருக்கும்வகையில் உங்கள் மடிக்கணினி /மேசைக் கணினி /தொலைப்பேசியை வைக்கவும்.
● இடையூறுகளைத் தவிர்க்க ஒரு தனி அறையைப் பயன்படுத்தவும் . தேர்வின்போது யாரும் உங்களுடன் தேர்வுஅறையில் இருக்கக்கூடாது.
3. தேர்வுக்கான அறிவுரைகள்
● சரியாகக் காலை 11:30 மணிக்குத் தேர்வு மேற்கொள்ளுவதற்கான (இந்திய நேரப்படி (IST) ) பொத்தானை(button) அழுத்த வேண்டும். ஆனால், நீங்கள் ஒரு நிமிடத்திற்கு முன்பாக கூடத் தேர்வைத் தொடங்க முயற்சி செய்தால் தேர்வு, நேரலையில் இருக்காது. தொழில்நுட்ப அல்லது இணையச் சிக்கல்கள் காரணமாக நீங்கள் ஏதேனும் தாமதத்தை எதிர்கொண்டால், தேர்வு தொடங்கிய 15 நிமிடங்கள் வரை தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும், மேலும் தேர்வுக்காக வழங்கப்படும் முழு நேரத்தையும் பெறுவீர்கள். 15 நிமிடங்கள் கடந்த பிறகு, எந்தக் காரணத்திற்காகவும் தேர்வை எழுத அனுமதிக்கப்படமாட்டீர்கள்.
● தேர்வைத் தொடங்கும்போது முதல் பக்கத்தில், ஒப்புதல் பெறும் பட்டி ஒன்று தோன்றுவதைக் (pop-up) காண்பீர்கள். உங்கள் ஒலி மற்றும் ஒளி காட்சியைப் பதிவு செய்வதற்கான ஒப்புதலை வழங்க, பட்டியில் உள்ள சரி பொத்தானை (Agree button) அழுத்தவும். நீங்கள் தேர்வைத் தொடங்குவதற்கு முன்பு இதை அவசியம் பின்பற்ற வேண்டும்.
● தேர்வின் போது நீங்கள் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது பிற சிக்கல்களை எதிர்கொண்டால், தயவுசெய்து உங்கள் பதிவு அடையாள எண்ணைக் (registration ID) குறிப்பிட்டு, நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலையும் முடிந்தால் கணினித்திரையின் ஒளிப்படத்தையும் (screenshot ) இணைத்து aasindiatechsupport-centa@aon.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். அனுப்பிவிட்டு தயவுசெய்து காத்திருக்கவும் ஏனெனில், தொழில்நுட்ப உதவிக் குழுவானது மற்ற தேர்வர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கலாம்.
● தேர்வுத்தாளின் முதல் பக்கத்தில் வலதுபுற மேல் பக்கத்தில் தேர்வர் எண்ணிற்கு மேலே காட்டப்படும் உங்கள் 10 இலக்கப் பதிவு எண்ணைச் (registration ID) சரிபார்க்கவும். நீங்கள் இணையத்தின் உள்நுழைகையில் (portal) குறிப்பிடப்பட்டுள்ள எண், நீங்கள் பதிவு செய்தபோது பெறப்பட்ட அடையாள எண்ணிலிருந்து வேறுபட்டு இருந்தால், நீங்கள் aasindiatechsupport-centa@aon.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தேர்வர் அடையாள எண்ணை (இது பதிவு எண்ணிற்குக்கீழே காட்டப்படும்) நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டாம். ஏனெனில், இது தோராயமாக உருவாக்கப்பட்ட எண்ணாகும்.
● தேர்வைத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் ஒளிப்படம் எடுக்கப்படுவீர்கள். நீங்கள் மூக்குக்கண்ணாடியை உபயோகிப்பவராக இருந்தால் உங்கள் கண்ணாடியை அகற்றுவதை உறுதிசெய்து கொள்ளவும். இது கண்ணாடியிலிருந்து வரும் வெளிச்சத்தைத் தவிர்க்க உதவும் .
● தேர்வின்போது பயன்படுத்துவதற்கு 2-3 வெற்றுத்தாள்களை வைத்துக் கொள்ளவும்.
● ஒவ்வொரு தாளின் மேல்புற வலதுமூலையிலும் உங்கள் பதிவு எண்ணை (registration ID) (உங்கள் EMIS இணையத்தில் குறிப்பிடப்பட்டது/ உங்கள் பதிவு உறுதி செய்யப்பட்டபோது நீங்கள் பெற்றது) எழுதவும். நீங்கள் தேர்வைத் தொடங்கும்போதும் அல்லது உங்கள் இணையக் கண்காணிப்பாளரால் கேட்கப்படும்போதும் வெற்றுத்தாள்களை ஒளிப்படக்கருவி முன்னால் காட்டவும்.
● தேர்வு எழுதும் இடத்தைச் சுற்றி ஏதேனும் இரைச்சல் இருந்தாலும் இணைய கேமரா(Web Camera), கணினியின் ஒலிவாங்கி மற்றும் ஒலி அமைப்புகளை இயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும். தேர்வின்போது எந்த நேரத்திலாவது உங்கள் கேமரா அல்லது ஒலிவாங்கிகள் இயக்கத்தில் இல்லாமல் இருந்தால், நீங்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
● உங்கள் முழு முகமும் தேர்வு முடியும்வரை ஒளிப்படக்கருவியில் தெரியும்படி இருக்க வேண்டும்.
● தேர்வு நேரத்தின்போது தேர்வர்கள், காது மற்றும் தலையில் அணியக்கூடிய ஒலிவாங்கிகள் (Headphones/Earphones) போன்ற சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது.
● தேர்வில் 22கேள்விகள் (மொத்தம் 35 மதிப்பெண்கள்) கொடுக்கப்பட்டிருக்கும் மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிக்க உங்களுக்கு 45 நிமிடங்கள் வழங்கப்படும்.
● நீங்கள் தேர்வை முடித்து 45 நிமிடங்களில் சமர்ப்பிக்கவில்லை என்றால், உங்கள் விடைகள் தானாகவே சேமிக்கப்படும் மற்றும் உங்கள் தேர்வு தானாகவே சமர்ப்பிக்கப்படும். பிற அனைத்து சூழ்நிலைகளிலும், தேர்வை உங்களால் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்; கணினியால் தானாகச் சமர்ப்பிக்க முடியாது .
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்- மத்திய அரசு.
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஸ் பூஷன் அறிவுறுத்தல்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சுவாசப் பிரச்சனை அதிகம் உள்ளது.
கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
💥 1-3 வகுப்புகள் - கால அட்டவணை (Time Table)...
💥 பாடக்குறிப்பு படிவம் - மாதிரி (Lesson Plan - Model)...
💥 கற்பிக்கப்பட வேண்டிய அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தலைப்புகள் (Topics to be taught in Science / Social Science)...
💥 வளரறி மதிப்பீடு (அ) செயல்பாடுகள் (பாட வாரியாக) - FA(b) Activities(Subject wise)...
💥 குறுவள மைய செயல்பாடுகள் (CRC Activities)...
💥 குறுவள மைய நாட்கள் (CRC Days)...
💥 எண்ணும் எழுத்தும் சின்னம் (Ennum Ezhuthum Logo)...
💥 எண்ணும் எழுத்தும் திட்ட இலக்கு / குறிக்கோள் (Ennum Ezhuthum Scheme Goal / Objective)...
>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...
தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASELINE ASSESSMENT 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் தனியார் ப...