கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-07-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-07-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 86:

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
   
விளக்கம் : வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.


பழமொழி :
The more you read,the wider you see.

அதிகமாகப் படிக்கிற போது, உலகம் பெரியதாகத் தெரிகிறது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

ஒரு துளி பேனா மை பல லட்சம் பேரை சிந்திக்க வைக்கும - பைரன்


பொது அறிவு :

01.இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது?

            கட்ச் மாவட்டம்-குஜராத்

Kutch District - Gujarat

02. இந்தியாவில் மிக உயரமான அணை எது?

                 தெஹ்ரி அணை

உத்தரகண்ட்

Tehri Dam, Uttarakhand


English words :

awefully good – very good or extremely good. மிகவும் நன்று. aweful என்பது எதிர்மறை வார்த்தை ஆனால் good என்பதோடு சேரும் போது மிகவும் நன்று ஆகிறது.


It is an oxymoron word. Two different meaning words combined together to form a  word of 'greatness'


Grammar Tips:

They are Twin brethren

In this sentence we should use
They are twin brothers

Hint
Brother meant real life brothers from the same parent

Brethren meant people from the same group religion and so

Similarly

Cloth meant pieces or types of fabric/ materials
Clothes meant things we wear

Find out the meaning of
Dies and Dice
Indexes and Indices


அறிவியல் களஞ்சியம் :

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப்பகுதியில் நடந்துச் சென்றபோது தனது கால்சட்டையில் ஒரு வித செடியின் முள்ளும் விதையும் ஒட்டியதன் அடிப்படையில் தற்செயலாக வெல்க்குரோ ஜிப்பினை கண்டுபிடித்து 1957ல் காப்புரிமை பெற்றார்.


ஜூலை 07

மகேந்திர சிங் தோனி அவர்களின் பிறந்தநாள்
  
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளரான இவர் ODI போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.மேலும் அவர் காலத்திலான ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தின் சிறந்த இலக்குக் கவனிப்பாளர்களில் ஒருவராகவும் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்


நீதிக்கதை

நாவடக்கம் இல்லாத அரசன்


சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு.

இந்த அரசன் திறமையானவன், நற்குணங்கள் பல உடையவன். ஆனால், நாவடக்கம் இல்லாதவன். யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவான். தான் பேசிய பேச்சிற்கு வருத்தமும் தெரிவிக்கமாட்டான். அமைச்சர்களும் கூட இவனிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அஞ்சினர்.

ஒரு சமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் மூவனைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்ல வந்தார். இப்புலவர் குமணவள்ளலைப் பாடிப் பரிசுகள் பல பெற்றவர். அப்பரிசுகளை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்ததால் மறுபடியும் ஏழ்மை நிலையை அடைந்தார்.

புலவர் பல நாட்கள் காத்துக்கிடந்த பின் ஒரு நாள் மூவனை அரசவையில் சந்தித்து பாடல் ஒன்றைப் பாடினார்.

“அரசே, நான் ஒரு புலவன். என் பெயர் பெருந்தலைச் சாத்தனார்.”

“உமது பெயருக்கும் உருவத்திற்கும் சிறிதும் பொருத்தம் இல்லையே!”

“ஏன் மன்னா அப்படிக் கூறுகிறீர்கள்?”

“பெருந்தலைச் சாத்தனார் என்கிறீர்கள். உமது தலை பெரியதாக இல்லையே… சிறியதாகத்தானே இருக்கிறது.”

“மன்னிக்க வேண்டும் மன்னா. பெருந்தலை என்பது எனது ஊரின் பெயர்!”

“ஓ, அப்படியா செய்தி!”

“நான் குமணவள்ளலைப் பாடிப் பல பரிசுகள் பெற்றவன்!”

“இப்போதும் அவனிடமே செல்ல வேண்டியதுதானே. உன் போன்ற புலவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து அவன் போண்டியாகி இருப்பான்!”

“அரசே, பழம் பழுத்த மரங்களை நாடித்தானே பறவைகள் செல்லும். அதைப் போல மன்னர்களையும், வள்ளல்களையும் நாடி பாவலர்களாகிய நாங்கள் வருகிறோம்.”

“நீங்கள் பொய்யாக எதையும் புனைந்து பாடுவீர்கள். இல்லாததை இருப்பதாகக் கூறுவீர்கள். அதைக் கேட்டு சிலர் மகிழ்ந்துபோய் உங்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள். அவர்கள் தற்புகழ்ச்சியை விரும்புபவர்கள். நீங்கள் பொய் சொல்லியே பிழைக்கும் ஒரு வஞ்சகக் கூட்டம்… யாரங்கே, இந்தப் புலவரை வெளியே அனுப்பு.”

“இல்லை, நானே சென்றுவிடுகிறேன்.”

புலவர் அவமானத்தால் முகம் சோர்ந்து சென்றதைக் கண்ட மூவன் சிரிசிரி என்று சிரித்தான்.

மூவன், சேரன் கணைக்கால் இரும்பொறைக்குக் கட்டுப்பட்ட ஒரு குறுநில மன்னன். மூன்று ஆண்டுகளாகவே மூவன் கப்பம் கட்டாததை அறிந்தான் இரும்பொறை.

“என்ன சொல்கிறான் மூவன் என்று அறிந்துவா!” எனத் துõதுவனை

அனுப்பினான்.

மூவன் அவைக்கு வந்த தூதுவன், மூவனை மரபுப்படி வணங்கி, “”மன்னன் கணைக்கால் இரும்பொறையின் துõதுவன் நான்,” என்றான்.

“கணைக்காலனுக்குக் கருவூலத்தில் பணத்தட்டுப்பாடு வந்ததும் என் நினைவு வந்துவிட்டதாக்கும்… இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?”

“மன்னா, நான் உங்களிடம் யாசகம் ஒன்றும் கேட்க வரவில்லை. எங்கள் மன்னருக்கு மூன்று ஆண்டுகளாக நீங்கள் கட்ட வேண்டிய திறையைச் செலுத்தவில்லை.”

“தூதுவனே! நன்றாகக் கேட்டுக் கொள். எனது நெய்தல் நாடு இன்றிலிருந்து சுதந்திர பூமி. நாங்கள் இனி யாருக்கும் கப்பம் கட்டமாட்டோம்.”

“எமது அரசரின் பெருமையையும், வலிமையையும் தெரிந்தே நீங்கள் இப்படிப் பேசுவது மிகவும் வருந்தத்தக்கது.”

“உனது கணைக்காலனுக்கு நான்தான் காலன். என்னைப் போர்க்களத்தில் வந்து சந்திக்கும்படி கூறு.”

“உங்களால் எம் மன்னனை வெல்ல முடியும் என்று நீவிர் நினைப்பது உங்கள் இறுமாப்பு. எமது மன்னனின் வலிமை தெரியாமல் பேசுவது மிகவும் இரங்கத்தக்கது.”

“அடே தூதுவனே… இங்கே நிற்காதே, ஓடிவிடு. இல்லையெனில் உன் முன்பற்களைத் தட்டிவிடுவேன். எச்சரிக்கை!”

தூதுவன் கணைக்கால் இரும்பொறையிடம் வந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான்.

“தூதுவன் ஒருவனின் பற்களைத் தட்டுவேன் என்று நாவடக்கம் இல்லாமல் சொன்ன அந்த மூவனைப் போர்க்களத்தில் சந்தித்தே தீருவேன்,” என்று முடிவு கட்டினான் இரும்பொறை.

“மன்னா, சிறு நரியை எதிர்க்கச் சிங்கம் செல்வதா? வேண்டாம். இது உங்கள் வீரத்திற்கு இழுக்கு. நாவடக்கமின்றிப் பேசிய அந்த மூவனை வென்று அவன் முன்பற்களை உங்களிடம் கொண்டு வந்து காணிக்கையாக்குகிறேன்.” தளபதி வீரமுழுக்கமிட்டான்.

“அதுவும் சரிதான். மூவன் இனி வாயைத் திறக்கும் போதெல்லாம் நாவடக்கம் வேண்டும் என்பதை உணர வேண்டும். அவன் முன்பற்களைக் கொண்டு வருவது தான் நன்று!”

“சரி மன்னா, அப்படியே செய்கிறேன்.”

“தளபதியாரே, மூவனின் முன்பற்களைப் பிடுங்கி நம் தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவுகளில் பொருத்தி, “யாகாவாராயினும் நாகாக்க. நாவைக் காக்காத மூவனின் பற்களைப் பாரீர்!’ என்று அதன் கீழ் எழுதி வையுங்கள்.”

“உத்தரவு மன்னா!”

கணைக்கால் இரும்பொறையின் படைவீரர்கள் அவனை விரட்டிப் பிடித்து தளபதியிடம் கொண்டு வந்தனர்.

நாவடக்கமின்றிப் பேசிய மூவனின் முன் பற்கள் தட்டப்பட்டன. மன்னன் கூறியவாறே அவை தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவில் பதிக்கப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மூவன் தன் செயலுக்காக வருந்தினான், தன் நாவடக்கமற்ற செயலால் தனக்கும் தன் நாட்டுக்கும் தீராத அவமானம் தேடியதை நினைத்து நினைத்து சேரநாட்டுச் சிறையிலிருந்தே உயிர்விட்டான்.

குழந்தைகளே! வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பிறருடைய மனதைப் புண்படுத்தாமல் இருக்க மூவனுக்கு ஏற்பட்ட நிலை ஒரு நல்ல பாடம்.


இன்றைய செய்திகள்

07.07.2025

⭐பொறியியல் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு தொடக்கம்.

⭐ அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் ஆண்டுக்கு 2.895 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதி பாதிக்கும் என்று உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

⭐உலகில் உள்ள பலவீனமான மக்களுக்கு சுகாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அமெரிக்கா வழங்கி வந்த USAID எனப்படும் சர்வதேச மேம்பாட்டு நிதியுதவி நிறுத்தப்பட்டதின் காரணமாக, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 1.4 கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சர்வதேச ரேபிட் செஸ்: இந்திய வீரர் குகேஷ் 'சாம்பியன்' பட்டம் வென்றார்.

🏀வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில் - விராட் கோலி வாழ்த்து.


Today's Headlines

⭐ Engineering Counselling Begins
Counselling for state engineering admissions has officially started today.

⭐ Impact of U.S. Tax Policy
Due to new U.S. tax regulations, Indian exports worth $2.895 billion per year may be affected, says the World Trade Organization.

⭐ USAID Funding stopped – Global Health Risk
The halting of USAID (U.S. Agency for International Development) funding may lead to over 140 million deaths globally by 2030, due to the impact on health and social development for vulnerable people.

🏀 Sports News

🏆 International Rapid Chess:
India’s Gukesh won the Champion title, bringing glory to the nation.

🏏 Shubman Gill Creates History
Following his record-breaking achievement, Virat Kohli congratulates Shubman Gill.


Covai women ICT_போதிமரம்


All District PG Vacancies

 

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுக்காக அனைத்து மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு


All District PG Vacancies



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



30.06.2025 அன்று வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் விவரம்



 Govt of TamilNadu Employment Statistics: Employment Offices live register for the period ended 30th June.2025


தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள்: ஜூன் 30.2025 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலத்திற்கான வேலைவாய்ப்பு அலுவலகங்களின் நேரடிப் பதிவேடு.


Details of graduates registered at employment offices as on 30.06.2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




கல்வித்துறை சார்பில் இன்று (06-07-2025) முப்பெரும் விழா நடைபெறும் இடம்



கல்வித்துறை சார்பில் இன்று (06-07-2025)  முப்பெரும் விழா நடைபெறும் இடம்


கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா


தமிழ்நாடு முழுவதும் 100% அடிப்படை திறனில் சாதனை புரிந்த பள்ளிகளுக்கு விழாவானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இ ஆர் மேல்நிலைப்பள்ளி அருகே தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக அந்த இடத்திற்கான லொகேஷன் அனுப்பப்பட்டுள்ளது.

🙏🏻


https://maps.app.goo.gl/exH64PfGTMzqgCW99?g_st=ac


SCAN THIS QR CODE TO
PARKING
06.07.2025 – TRICHY DISTRICT
Map Address :


Trichy - Vehicle parking Location https://maps.app.goo.gl/mNSsDf4NGAQd8bJ29


இன்று (06.07.2025) திருச்சியில் நடைபெறும் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் முப்பெரும் விழாவிற்கான வழித்தட பகிர்வு தகவல்:


💚 தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் திருச்சி மாநகருக்குள் வராமல் மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சர்வீஸ் ரோடு வழியாக காவிரி பாலத்திற்கு முன்பு இடதுபுறம் திரும்பினால் சிக்னலை தாண்டி இடதுபுறம் மாநாடு நடைபெறும் இடத்தினை வந்தடையலாம்.


💚வட மாவட்டங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் நம்பர்.1.டோல்கேட் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வருவதற்கு முன்பு காவிரி பாலம் முடியும் இடத்தில் உள்ள சிக்னலுக்கு அடுத்த வளைவில் இடதுபுறம் மாநாடு இடத்தை அடையலாம்.


💚மேற்கு மண்டல பகுதிகளிலிருந்து வரும் ஆசிரியர்கள் சத்திரம் பேருந்து நிலையம் தாண்டி (ஸ்ரீரங்கம் செல்லும் சாலையில்) ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாநாடு இடத்தை அடையலாம். 🙏

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

 

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு


நாளை 07.07.2025

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில்


BSC Nursing

B.Pharm

BPT

BOT

BASLP

உள்ளிட்ட 19 வகையான 4 வருட BSC பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும்


 3 வருட Diploma Nursing படிப்பிற்கும் (only Girls - 2000 seats - Arts Group Girls - க்கு 200 இடங்கள் இருக்கிறது. Don't Miss🔴🔴🔴 )


விண்ணப்பிக்க நாளை 07.07.2025 கடைசி நாள்.

BC MBC விண்ணப்ப கட்டணம் ரூ.500 & ரூ.300


SC ST குழந்தைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. Application Free.🔴🔴🔴


https://reg25.tnmedicalonline.co.in/pmc25/


நாளை 07.07.2025 

தமிழ்நாடு BE Counselling online மூலம் தொடங்குகிறது.


7.5 கோட்டா உள்ள அரசுப்பள்ளி குழந்தைகளில் 3 சிறப்பு பிரிவு குழந்தைகளுக்கு மட்டும் நாளை 07.07.2025 ஒரு நாள் மட்டும் online Choice Filling செய்ய முடியும். ஒரே ஒரு நாள் மட்டுமே. (7.5 கோட்டா உள்ள மாற்றுத்திறன் & Sports Quota & முன்னாள் ராணுவ வீரரின் மகள் or மகன் மட்டும் நாளை Counselling -ல் கலந்து கொள்ளலாம்)👍👍👍


https://www.tneaonline.org/



உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App



 உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App


உயர்கல்வி தொடர்பாக


எந்த கல்லூரியில் எந்த படிப்பு உள்ளது?


நீங்கள் ஆசைப்படும் படிப்பு எந்த கல்லூரியில் உள்ளது?


எந்த Website-ல் Apply செய்ய வேண்டும்?


எப்போது Last Date?


எப்போது Result வரும்?


Last year Cut off என்ன?


Cut off எப்படி கணக்கிட வேண்டும்?


உங்கள் Cut off க்கு உங்கள் மாவட்டத்தில் எந்த கல்லூரி கிடைக்கும்?


சென்னையில் எந்த கல்லூரி கிடைக்கும்?


கோவையில் எந்த கல்லூரி கிடைக்கும்?


எந்த Branch கிடைக்கும்?


Agri - Seats - Govt College-ல் எந்தனை ?


தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி எத்தனை?


அதில் BSC Nursing Seats எத்தனை உள்ளது?


அதில் Boys க்கு எத்தனை Seats ? Girls க்கு எத்தனை?


BSC Nursing படிப்பிற்கு Govt. College fees எவ்வளவு?


என எந்த சந்தேகம் இருந்தாலும்...


Bombay செல்ல train fare எவ்வளவு?


Train time என்ன?


என எந்த சந்தேகம் இருந்தாலும்


உடனே Perplexity Al App-ல் தயங்காமல் கேளுங்கள்.


உடனே "டக்" "டக்" என அழகாக பதில் வரும்.👌👌👌👌


உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.


நிறைய குழப்பங்கள் தீரும். தெளிவு பிறக்கும்.


இந்த Perplexity AI App . உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும்


சலிக்காமல் பதில் சொல்லும்


அழகான அறிவான அற்புதமாக தோழன்.... Class mate.... போல ....


உடனே முயற்சி செய்து பாருங்கள்..... Start your test ....


👇👇👇


https://play.google.com/store/apps/details?id=ai.perplexity.app.android


Type 2 diabetes நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்



 டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்


ஆம், சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க ஒரு புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். ஷாங்காய் சாங்செங் மருத்துவமனையின் விஞ்ஞானிகள், ஒரு நோயாளியின் உடலில் ஸ்டெம் செல்களை மாற்றி அமைப்பதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோயை மாற்றியமைக்க முடிந்தது என்று கூறியுள்ளனர். 


இந்த ஆராய்ச்சியில், 59 வயதுடைய ஒருவருக்கு ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி Type 2 diabetes நோயை மாற்றியமைத்த முதல் முறையாகும், அந்த நபர் இன்சுலின் இல்லாமல் இருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த சாதனை, நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 


இந்த சிகிச்சை ஒரு புதுமையான உயிரணு மாற்று அறுவை சிகிச்சையாகும், மேலும் இந்த நோயாளி 33 மாதங்களாக இன்சுலின் மற்றும் மருந்துகளின்றி இருப்பதாக கூறப்படுகிறது. இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஒரு சாத்தியமான சிகிச்சையை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். 


சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு... சீன விஞ்ஞானிகள் அசத்தல்! 


உலக மக்களை ஆட்டிப்படைத்து வரும் கொடிய நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். மரபணு, வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணங்களால் ஏற்படும் இந்த நோய், இன்று லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில், சீன மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய சிகிச்சைமுறை சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு புதிய விடியலைத் தந்துள்ளது.‌ 


அரை மணி நேர அறுவை சிகிச்சை: சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியின் படி, 25 வயது பெண் சர்க்கரை நோயாளிக்கு அளிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறையானது, சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வாய்ப்பைத் திறந்துள்ளது. இந்த சிகிச்சையில் நோயாளியின் உடலில் இருந்து சிறிதளவு தசை எடுக்கப்பட்டு, சில ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த அரை மணி நேரம் அறுவை சிகிச்சையின் மூலம் நோயாளி இனி இன்சுலின் ஊசி போடாமல் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 



இந்த புதிய சிகிச்சைமுறை குறிப்பாக டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைப் 1 நீரிழிவு நோயில், உடல் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது. இதனால், இன்சுலின் ஊசி போடுவது அவசியமாகிறது. ஆனால், இந்த புதிய சிகிச்சையின் மூலம் இன்சுலின் தேவை குறைந்து வாழ்க்கைத் தரம் மேம்படும். 


சீன மருத்துவர்களின் இந்த கண்டுபிடிப்பு, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு இந்த சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. 


சீன மருத்துவ ஆராய்ச்சியில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, இந்த சர்க்கரை நோய் சிகிச்சை முறையானது சீனாவின் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதனால், சீன மருத்துவர்கள் சர்க்கரை நோய்க்கான எதிர்கால சிகிச்சைகளை மேலும் மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என நம்பப்படுகிறது.‌ 


சீன மருத்துவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு சர்க்கரை நோய் சிகிச்சைக்கான ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருந்தாலும், இந்த சிகிச்சை முறையில் நீண்ட கால விளைவுகள் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இந்த சிகிச்சை முறையை உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் எளிதாக அணுகும் வகையில் செய்ய வேண்டியது அவசியமாகும். 



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...