கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Artificial Intelligence லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Artificial Intelligence லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Google Gemini AIல் HLB Map உருவாக்க Prompt



 Google Gemini AIல் HLB Map உருவாக்க Prompt 


In Google Gemini AI 


HLB Map upload செய்துவிட்டு கீழே உள்ள Promptஐ, Copy & Paste செய்யவும்.


Based on this photo, Create a clear visual HLB area map for building enumeration / census work.


 Rules: 


- Start from the north - west corner. Movement direction should continue towards South - East. Show every house clearly in separate boxes.  Number all houses sequentially. - Clearly mark streets, lanes, roads, and entry points. - The enumeration path must be continuous and easy to follow. No house should overlap with another.  - Add a North direction arrow. -Create the map in a professional census. -  Style HLB format  - Make all roads and lanes clearly visible. - The final map should be clean, organised and easy to read.



பதிவேற்றம் செய்யும் புகைப்படம் தெளிவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் 


AI அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும் – போப் 14ஆம் லியோ கருத்து



செயற்கை நுண்ணறிவு (AI) அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும் – போப் 14ஆம் லியோ கருத்து


மனித குலத்தை அடிமைப்படுத்தும் செய்யறிவின் ஆதிக்கத்தைத் தடுக்க அதனை நிராயுதபாணியாக்க வேண்டும்.


ஒரு சில நிறுவனங்கள், நாடுகள் தங்களின் ஆதிக்கத்துக்காகவும் லாபத்துக்காகவும் மிக சக்திவாய்ந்த கணக்கீட்டு விதிகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். 


லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் மனித உழைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றுவது எதிர்காலத்தில் மிகப்பெரிய சமுதாயப் பேரழிவை ஏற்படுத்தும்.


– போப் 14ஆம் லியோ கருத்து


Googlebook குறித்த தகவல்கள்

 


Googlebook குறித்த தகவல்கள் 


கூகுள்புக். இது ஒரு லேப்டாப். பெயரிலிருந்தே கூகுளின் தயாரிப்பு என்று அறிந்துகொண்டிருப்பீர்கள். 


அண்மையில் ஆண்ட்ராய்ட் விழா ஒன்றை கூகுள் நடத்தியது. ஆண்ட்ராய்டில் வரவிருக்கும் புதிய வசதிகளைப் பட்டியலிட்டது. 


ஐஃபோன்காரர்களின் கூடுதல் சாபத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்போது ஆண்ட்ராய்ட் ஈக்கோசிஸ்டத்தில் இருக்கும் வசதிகள் ஐஃபோனுக்கு வந்து சேரவே பல்லாண்டுகள் ஆகும். 


இவ்விழாவை ஒட்டி அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு தான் கூகுள்புக். 'கூகுள் புக்ஸ்' அல்ல. 


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிளவுட் தொழில்நுட்பம் உச்சத்தில் இருந்தது. அப்போது கூகுள் 'குரோம்புக்' என்று ஒரு கருவியை அறிமுகப்படுத்தியது. குரோம் பிரவுசர் தான் இதில் மூலவர். மற்றவை அனைத்துமே 'மேகமாய் வந்து போகிறாய்' என்று கிளவுட் மயம். 


இப்போதும் கிளவுட் உள்ளது. ஆனால் அதைவிடப் பரபரப்பாகப் பேசப்படுவது ஏஐ. செய்யறிவு. இந்த ஏஐயுகத்தில் அவதரிக்கும் கூகுளின் புதிய லேப்டாப் கூகுள்புக். 


இதில் அனைத்துமே ஜெமினி மயம். இப்போது 'ஜெமினி இன்டெலிஜென்ஸ்' என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் நினைவுக்கு வரலாம். அதிலேயே இப்போது ஜெமினி தான் உள்ளது என்றறிக. 


ஒரு காலத்தில் ஏஐ சாட் பாட்டாக இருந்தது. பின்னர் ஏஜென்ட் என்று உருமாறியது. இப்போது ஆபரேட்டிங் சிஸ்டமே ஏஐ. கூடாரம்-ஒட்டகம் என்றொரு கதை படித்திருப்பீர்கள். இங்கு கூடாரம் டிஜிட்டல் உலகம். ஒட்டகம் ஏஐ. 


இதுவரை நாம் பணியாற்றிவந்த விதமே மாறவிருக்கிறது என்கிறது கூகுள். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு சாஃப்ட்வேர் என்னும் நிலைகூட மாறலாம். என்ன வேண்டுமோ ஏஐயிடம் கேட்டுப்பாருங்கள். அது இல்லை என்று சொல்லுவதில்லை. 


ஆண்ட்ராய்ட், குரோம், ஜெமினி என அனைத்தையும் சரியான விகிதத்தில் மிக்ஸ் செய்துள்ளது கூகுள். 


மேஜிக் கர்சர் - கூகுள்புக்கில் அறிமுகமாகவிருக்கும் அதிமுக்கிய அம்சம். அதாவது கர்சர் இருக்குமிடமெல்லாம் ஏஐ. 


மவுஸ் பாயிண்ட்டர் என்பது யூஸர் இண்டர்ஃபேஸ் வரலாற்றில் மிக முக்கியக் கண்டுபிடிப்பு. அதில் நவீனம் என்று எதுவுமே வரவில்லை. 


கடைசியாக 'ரைட் கிளிக்' என்று ஒன்று வந்தது. அதை வைத்து நம் விண்டோஸ்காரர்கள் 'ரெஃப்ரெஷ்' செய்து செய்து புளகாங்கிதம் அடைந்தனர். இதைத் தவிர வேறு எதுவுமே நடக்கவில்லை பாருங்கள். 



கூகுள் இதை மாற்றவிருக்கிறது. மவுஸ் பாயிண்ட்டர் எங்குள்ளதோ அதுவே காண்டெக்ஸ்ட். ஓர் உதாரணம். ஒரு  அறையின் படம். இன்னொன்றில் ஒரு சோஃபா. இரண்டையும் இணைக்கவேண்டும் என்றால் மேஜிக் பாயிண்ட்டரே போதும். 


நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள் என்று புரிந்துகொள்ளும். மவுஸ் பாயிண்ட்டரை நகர்த்தியே நமக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம். 


அதாவது தனித்தனியாகப் ப்ராம்ப்ட்கள் எழுதத் தேவையில்லை. 


'குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினில் யாது கொடுத்தும் கொளல்'. 

இந்த வரி புரியலயே என்றால் திருவள்ளுவரைத் தான் கேட்க வேண்டும். 


நாம் விரும்புவதை வெளிப்படையாகச் சொல்லாமலேயே  புரிந்துகொள்பவரை எந்த விலை கொடுத்தும் உடன் வைத்துக்கொள் என்கிறார். 

மேஜிக் பாயிண்ட்டர் கூட வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்புணர்கிறது.


இந்த லேப்டாப் மிகச் சிறந்த ஹார்ட்வேர்களுடன் வரவிருக்கிறது. இன்டெல் நிறுவனமும் இதில் இணைகிறது. அவர்களுக்கும் இது மறுவாழ்வு தரும் என்று நம்புவோம். 


இக்கருவியைச் செய்வதற்காக அஸுஸ், டெல், ஹெச்பி, லெனோவா என்றொரு பெரிய கூட்டணியை அமைக்கிறது கூகுள். 


கூகுள்புக்கின் சில படங்களை  வெளியிட்டுள்ளனர். பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.



லேப்டாப்பைப் பார்த்தவுடனேயே இது கூகுள்புக் என்று தெரிந்துவிடும். இதற்கென glowbar என்னும் ஒன்றை அறிமுகப்படுத்துகின்றனர். இது வெறுமனே ஜிகுனா வேலைமட்டும் அல்ல. பயனாளர்களுக்குப் பலவகைகளிலும் உதவும். 


லுக் ஒகே. செயல்திறனும் நன்றாக இருந்தால் கூகுள்புக் மிகப் பெரிய வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். 


அண்மையில் 'நியோ' என்றொரு மாடலை ஆப்பிள் அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் பலராலும் ஏளனம் செய்யப்பட்டது. ஆனால் இன்று மார்க்கெட்டில் பரபரப்பாக விற்கும் லேப்டாப் மேக்புக் நியோ தான்.  


கூகுள்புக் நியோவை முந்திச்செல்லுமா? காத்திருப்போம்.


கீறல்கள், மடிப்புகள், கறைகள், நிறமாற்றம் அடைந்த பழைய புகைப்படத்தை, துல்லியமான மறுகட்டமைப்புடன் புதிதாய் மீட்டுக் கொடுக்கும் Gemini AI Prompt

 


கீறல்கள், மடிப்புகள், கறைகள், நிறமாற்றம் அடைந்த பழைய புகைப்படத்தை, துல்லியமான மறுகட்டமைப்புடன் புதிதாய் மீட்டுக் கொடுக்கும் Gemini AI Prompt 


Old Image Restoration Vivid Colourful ✨


Use Google Gemini AI 📸 


Prompt ⤵️ 


Restore and enhance this photograph to professional portrait quality comparable to a Canon EOS R5 capture. Repair all scratches, folds, stains, discoloration, and missing details with high-precision reconstruction while preserving the subject's natural Filipino facial features, skin texture, and lighting. Vivid Colourful.




>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 


AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்கள் உருவாக்கிய மாணவன் சஸ்பெண்ட்

 

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்கள் உருவாக்கிய  மாணவன் சஸ்பெண்ட்


ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 36 மாணவிகளின் ஆபாச படத்தை உருவாக்கிய சத்தீஸ்கர் ஐஐடி கல்வி நிறுவன மாணவன் சஸ்பெண்ட்.


சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவனிடம் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோ மற்றும் வீடியோக்கள் பறிமுதல்.


சத்தீஸ்கர்:  AI மூலம் பெண் வகுப்புத் தோழர்களின் ஆபாசப் படங்களை உருவாக்கியதற்காக IIIT நயா ராய்ப்பூர் மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். சத்தீஸ்கரின் நயா ராய்ப்பூரில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர்,  செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி 30க்கும் மேற்பட்ட மாணவிகளின் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட மற்றும் ஆபாசமான படங்களை உருவாக்கியதாக குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். 


AI ஐப் பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்ததற்காக மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டார் 


 ஐஐஐடி நயா ராய்ப்பூரில் மூன்றாம் ஆண்டு மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் மாணவர் ஒருவர், AI ஐப் பயன்படுத்தி தங்கள் புகைப்படங்களின் ஆபாசமான, மார்பிங் செய்யப்பட்ட பதிப்புகளை உருவாக்கியதாக 36 பெண் மாணவர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். 


அக்டோபர் 6 ஆம் தேதி அவரது அறையில் சோதனை நடத்தியதில் அவரது மடிக்கணினி, தொலைபேசி மற்றும் பென் டிரைவில் சேமிக்கப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட மனைவிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கல்லூரி நடவடிக்கை எடுத்தது. கல்லூரி சைபர் நிபுணர்களுடன் இணைந்து படங்களைச் சரிபார்க்க செயல்படுகிறது.


IIIT பெண்கள் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து, படங்கள் AI-யால் உருவாக்கப்பட்டதா எனவும், அவை வளாகத்திற்கு வெளியே பகிரப்பட்டதா என்பதையும் சரிபார்க்க சைபர் நிபுணர்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்தக் குழு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் அணுகி அவர்களின் தரவைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளது. 


குற்றவியல் விசாரணையைத் தொடங்க முறையான புகாருக்காக காவல்துறை காத்திருக்கிறது. மாணவிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர், மேலும் கல்லூரியும் அதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.


ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் இலவச AI படிப்பு ; சென்னை IIT வழங்கும் வாய்ப்பு



ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் இலவச AI படிப்பு ; சென்னை ஐஐடி வழங்கும் வாய்ப்பு


தற்கால நவீன தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு என்பதை தவிர்க்க முடியாது. கல்வி, மருத்துவம், தொழில் என பல துறைகளில் ஏஐ பயன்பாடு வந்துவிட்டது. எதிர்கால தேவைக்கு ஏற்ப, மாணவர்களுக்கான கற்பித்தல் முறையில் ஏஐ பயன்பாடு பயனுள்ளதாக இருக்கிறது. அந்த வகையில், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஏஐ பயன்பாட்டு பயிற்சியை சென்னை ஐஐடி இலவசமாக வழங்குகிறது. 


மத்திய கல்வித்துறையின் கீழ் ஸ்வயம் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியான கல்வி வழங்கப்படுகிறது. இதில் சென்னை ஐஐடி பல்வேறு விதமான படிப்புகள் வழங்கி வருகிறது. இதில் சென்னை ஐஐடி-யின் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை மூலம் ஏற்கனவே 5 விதமான ஏஐ படிப்புகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியர்களுக்கான புதிய “AI for Educators” என்ற படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.


செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சி என்பது வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக கல்வியில் இதன் பயன்பாடு முக்கியமானதாக உள்ளது. விரைவாக தேடுதல், பதில்களை முறையாக வகுத்தல், வீட்டு பாடம் செய்ய உதவுதல் உள்ளிட்ட சிறிய பணி முதல் பெரியளவிலான பணி வரை ஏஐ மூலம் செய்ய முடிகிறது. 


இதனைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் ஏஐ என்ற திட்டத்தை சென்னை ஐஐடி செயல்படுத்தி வருகிறது. கல்வித்துறையின் ஸ்வயம் 2.0 கீழ், பைத்தானில் ஏஐ, கிரிக்கெட் அனலிட்டிக்ஸ் ஏஐ, இயற்பியலில் ஏஐ, வேதியியலில் ஏஐ, கணக்கியலில் ஏஐ ஆகிய 5 ஏஐ படிப்புகளை சென்னை ஐஐடி இலவசமாக வழங்குகிறது. தற்போது இதற்கான இரண்டாம் சுற்று விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.


பல்வேறு துறைகளில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட தொடங்கிய நிலையில், கற்பிக்கும் முறையிலும் இதன் தேவை அவசியமாக உள்ளது. ஆனால், செயற்கை நுண்ணறிவை கற்பித்தலில் முறையாக எப்படி பயன்படுத்துவது என்பதை ஆசிரியர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு சென்னை ஐஐடி ”AI for Educators” என புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் குறுகியக் கால படிப்புகள் ஆகும். ஆன்லைன் வழியாக இலவசமாக படிக்கலாம்.


ஆசிரியர் பணியை செய்பவர்கள், ஆசிரியராக விரும்புகிறவர்கள் இந்த படிப்பின் மூலம் பயன்பெறலாம். செயற்கை நுண்ணறிவு பற்றிய புரிதல், கருவிகள் மற்றும் செயல்முறை திறன் ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்பித்தல், மதிப்பீடு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஏஐ பயன்பாடு குறித்து கற்பிக்கப்படும். மாணவர்கள் சார்ந்த கற்கும் முறையின் அடிப்படையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் குறித்த தெளிவை இந்த படிப்பு ஏற்படுத்தி தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நர்சரி வகுப்பு ஆசிரியர்கள் முதல் 12-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் வரை இதில் கலந்துகொள்ளலாம்.


ஆங்கில மொழியில் அதிகபடியாக 40 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. இதற்கான பாடத்திட்டம் சென்னை ஐஐடி நிபுணர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கிரெட்டி வழங்கப்படும். முழுமையாக முடித்து தேர்வை எழுதி தேர்ச்சி பெறும் நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


நன்மைகள் என்னென்ன?


விரும்பிய நேரத்தில் வீட்டில் இருந்தப்படியே ஆன்லைன் வழியாக படிக்கலாம்.

நடைமுறை பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

வார மதிப்பீடு தேர்வுகள், நோட்ஸ் வழங்கப்படும்.

வீடியோ வடிவில் வகுப்புகளை பார்க்கலாம்.

குறைந்த கட்டணத்தில் தேர்வு நடத்தப்படும்.

தேர்வை நேரடியாக ஒதுக்கப்பட்ட மையத்தில் சென்று எழுத வேண்டும்.

தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 


விண்ணப்பிப்பது எப்படி?


ஆசிரியர்களுக்கான ஏஐ மட்டுமின்றி, சென்னை ஐஐடி மூலம் வழங்கப்படும் இதர ஏஐ படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதளத்தில் அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு, வகுப்பு ஆகியவை இலவசமாகும். சான்றிதழ் பெற தேர்விற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் இந்த படிப்பு மூலம் பயன்பெறலாம்.


ஆசிரியர்களுக்கு IIT யில் இலவச AI Courses பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30



 ஆசிரியர்களுக்கு IIT யில் இலவச AI Courses பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30


1. ஐஐடி மெட்ராஸ், அதன் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை மூலம், ஸ்வயம் பிளஸ் தளம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச ஆன்லைன் AI படிப்புகளை வழங்குகிறது.  

2. 25 முதல் 45 மணிநேரம் வரையிலான இந்தப் படிப்புகள், கற்பித்தல், மதிப்பீடு மற்றும் மாணவர் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு அத்தியாவசிய AI அறிவு மற்றும் நடைமுறைக் கருவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.  

3. இந்தப் படிப்புகள் இலவசம் என்றாலும், சான்றிதழ் பெற விரும்பும் ஆசிரியர்கள் தேர்வெழுதி, ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அதைப் பெறலாம்.  

4. ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அக்டோபர் 10 ஆம் தேதி வரை https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses இல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் .


ரூ.55.60 இலட்சம் மதிப்பீட்டில் 170 மாணவர்களுக்கு AI கண்ணாடிகள்



ரூ.55.60 இலட்சம் மதிப்பீட்டில் 170 மாணவர்களுக்கு AI கண்ணாடிகள் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு 


 பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பாக(அரிமா மாவட்டம்: 3242E) பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு கண் கண்ணாடிகளை வழங்கும் விழா சேலம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


மாண்புமிகு அமைச்சர் @SalemRRajendran அவர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு AI கண்ணாடிகளை வழங்கினோம். ரூ.55.60 இலட்சம் மதிப்பீட்டில் 170 மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.


அறிவியல் என்பதும், புதிய கண்டுபிடிப்புகள் என்பதும் நிலாவிற்கு செல்வது மட்டுமல்ல. புதிய கோள்களை கண்டுபிடிப்பது மட்டுமல்ல. எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய சாதனங்களை கண்டுபிடிப்பதுதான் அறிவியலின் நோக்கமாக இருக்க வேண்டும். இதை இந்த AI கண் கண்ணாடி நிறைவேற்றியுள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.


TN SPARK : தமிழ்நாடு பாடநூல்களில் AI பாடங்கள்

 TN SPARK : தமிழ்நாடு பாடநூல்களில் AI பாடங்கள் 


TN SPARK: AI lessons in Tamil Nadu textbooks


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை செயற்கை நுண்ணறிவு AI பாடங்களை தன் பாட நூல்களில் அப்டேட் செய்திருக்கிறது. அதை செயல்படுத்த ஆசிரியர்களுக்கான துறைசார் பயிற்சியை தொடங்கியிருக்கிறது.



உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App



 உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App


உயர்கல்வி தொடர்பாக


எந்த கல்லூரியில் எந்த படிப்பு உள்ளது?


நீங்கள் ஆசைப்படும் படிப்பு எந்த கல்லூரியில் உள்ளது?


எந்த Website-ல் Apply செய்ய வேண்டும்?


எப்போது Last Date?


எப்போது Result வரும்?


Last year Cut off என்ன?


Cut off எப்படி கணக்கிட வேண்டும்?


உங்கள் Cut off க்கு உங்கள் மாவட்டத்தில் எந்த கல்லூரி கிடைக்கும்?


சென்னையில் எந்த கல்லூரி கிடைக்கும்?


கோவையில் எந்த கல்லூரி கிடைக்கும்?


எந்த Branch கிடைக்கும்?


Agri - Seats - Govt College-ல் எந்தனை ?


தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி எத்தனை?


அதில் BSC Nursing Seats எத்தனை உள்ளது?


அதில் Boys க்கு எத்தனை Seats ? Girls க்கு எத்தனை?


BSC Nursing படிப்பிற்கு Govt. College fees எவ்வளவு?


என எந்த சந்தேகம் இருந்தாலும்...


Bombay செல்ல train fare எவ்வளவு?


Train time என்ன?


என எந்த சந்தேகம் இருந்தாலும்


உடனே Perplexity Al App-ல் தயங்காமல் கேளுங்கள்.


உடனே "டக்" "டக்" என அழகாக பதில் வரும்.👌👌👌👌


உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.


நிறைய குழப்பங்கள் தீரும். தெளிவு பிறக்கும்.


இந்த Perplexity AI App . உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும்


சலிக்காமல் பதில் சொல்லும்


அழகான அறிவான அற்புதமாக தோழன்.... Class mate.... போல ....


உடனே முயற்சி செய்து பாருங்கள்..... Start your test ....


👇👇👇


https://play.google.com/store/apps/details?id=ai.perplexity.app.android


Facial Recognition Attendance Registration in Schools through Artificial Intelligence (AI) Technology - Information from Additional Chief Secretary, IT Department



செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) தொழில்நுட்பம் மூலம் பள்ளிகளில் முக அங்கீகார வருகை பதிவேடு - தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்


Facial Recognition Attendance Registration in Schools through Artificial Intelligence (AI) Technology - Information from Additional Chief Secretary, IT Department



ஏ.ஐ., வாயிலாக விடைத்தாள் மதிப்பீடு - பல்கலைகளில் அமல்படுத்த திட்டம்...



செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence)  வாயிலாக விடைத்தாள் மதிப்பீடு - பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த திட்டம்...



வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த புதிய நீல வட்டம் என்ன?

 


வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த புதிய நீல வட்டம் என்ன?


``கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்,  ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீல நிற வளையம் ஒன்று உலா வருகிறது. ஆனால் என்ன நடக்கிறது என்பது பலருக்குப் புரியவில்லை.


உண்மையில், இந்த நீல வளையம் மெட்டாவின் AI சாட் போட்டைக் குறிக்கிறது. மெட்டாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நீல வளையத்தின் உள்ளே பயனர்கள் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய புத்திசாலித்தனமான AI உதவியாளர்.


இந்தியாவில், WhatsApp, Facebook, Messenger மற்றும் Instagram அனைத்தும் இப்போது Meta AIஐ ஆதரிக்கின்றன. Meta AI Chatbot இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த மேம்பட்ட அம்சம் நேற்று முதல் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு கிடைக்கிறது. Meta AI Chatbot ஆனது Meta Llama 3 ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது, இது மெட்டாவின் மிகவும் மேம்பட்ட LLM ஆகும்.


Meta AI சாட்போட் தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, உகாண்டா மற்றும் ஜிம்பாப்வே உட்பட 12 நாடுகளில் இலவசமாகக் கிடைக்கிறது. புதிய உள்ளடக்கத்தை உருவாக்குதல், ஒவ்வொரு தலைப்பிலும் ஆழமான அறிவைக் கண்டறிதல், உங்களுக்காக மின்னஞ்சல்களை அனுப்புதல் மற்றும் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தல் போன்ற அனைத்திலும் Meta AI உங்களுக்கு உதவும்.


ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஊட்டங்களை ஸ்க்ரோலிங் செய்யும் போது Meta AI சாட்போட்டைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் Facebook இல் பார்த்த ஒரு இடுகையைப் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால், இடுகையில் இருந்தே Meta AI ஐக் கேட்கலாம். நாம் தட்டச்சு செய்யும் சோதனைகளின் அடிப்படையில் படங்களை உருவாக்கும் இமேஜின் கருவியும் மெட்டா ஏஐ கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் வழியில் படங்களை உருவாக்க மற்றும் அனிமேஷன் செய்ய இது உங்களை அனுமதிக்கிறது. எனவே அந்த நீல மோதிரம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை வேறு நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு பெரிய அதிசயம்...


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI) ஆதிக்கம் - பணி நீக்கம் செய்யும் நிறுவனங்கள் - பறிபோகும் வேலைவாய்ப்புகள்...



செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence) ஆதிக்கம் - பணி நீக்கம் செய்யும் நிறுவனங்கள் - பறிபோகும் வேலைவாய்ப்புகள்...


Artifial Intelligence இதனை சுருக்கமாக AI என்றும் அழைக்கின்றனர். இந்த அசாதாரண தொழில்நுட்பம் புதிய உலகை படைத்துக்கொண்டிருக்கிறது.


நம் வாழ்க்கையின் பாதிக்கும் மேல் மொபைலிலேயே கழித்து விடுகிறோம். ஆர்டிஃபீசியல் இண்டெலிஜன்ஸ் ஆதிக்கம் இன்னும் அதிகமாகும் போது நம் வேலைகள் பலமடங்கு எளிமையாகும்.


இது பெரிய நிறுவனங்களில் வேலை நீக்கத்துக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பங்கள் புதிய சாஃப்ட்வேரையே உருவாக்க முடியும் அளவு வளர்ந்துவிட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


செயற்கை நுண்ணறிவு பல ஊழியர்களின் வேலையைப் பறிக்கும் என்று பல தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊழியர்கள் நீக்கப்பட்டு வந்தனர்.


ஆனால், கடந்த ஜூலை 2023ல் பெங்களூருவை தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இ-காமர்ஸ் நிறுவனமான டுகான் (Dukaan), வாடிக்கையாளர் சேவையில் பணிபுரிந்து வந்த ஊழியர்களில் 90 சதவிகிதத்தினரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பலரும் அந்த நிறுவனத்தை விமர்சித்தனர். இந்த அதிரடி செயல் மாதச் சம்பளம் வாங்கும் பல ஊழியர்களின் நிலையைக் கேள்விக் குறியாக்கி உள்ளது.




செயற்கை நுண்ணறிவின் (AI) அதிகரித்து வரும் பங்கை ஏற்றுக்கொள்ளும் முயற்சியில், கூகுள் தனது 30,000 நபர்களை கொண்ட விளம்பர விற்பனை பிரிவுக்குள் கணிசமான மறுசீரமைப்பைப் பற்றி சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையானது, குறிப்பாக 2023 இல் 12,000 பணியாளர்களை பாதித்த கூகுளின் சமீபத்திய பணிநீக்கங்களைத் தொடர்ந்து, சாத்தியமான வேலை வெட்டுக்கள் பற்றிய கவலையைத் தூண்டியுள்ளது.


இந்த மறுசீரமைப்பு, அதன் பல்வேறு தளங்களில் விளம்பர கொள்முதலை நெறிப்படுத்த இயந்திர கற்றல் நுட்பங்களை Google இன் வளர்ந்து வரும் நம்பிக்கையுடன் ஒத்துப்போகிறது. பல ஆண்டுகளாக, தொழில்நுட்ப நிறுவனமானது புதிய விளம்பரங்களை உருவாக்குவதை தானியக்கமாக்க வடிவமைக்கப்பட்ட AI-இயங்கும் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் வருடாந்திர வருவாயில் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருவிகளின் செயல்திறன், குறைந்தபட்ச பணியாளர் ஈடுபாட்டுடன் இணைந்து, அதிக லாபம் ஈட்டுகிறது. 


PMmax போன்ற AI கருவிகள் விளம்பரதாரர்களிடையே பிரபலமடைந்து வருவதால், விளம்பர வடிவமைப்பு மற்றும் விற்பனையில் மனித தலையீட்டின் தேவை குறைவது குறிப்பிடத்தக்கது. AI கருவிகளின் செலவு-செயல்திறன், குறைந்தபட்ச பணியாளர்  தேவை, விளம்பர வருவாயின் லாபத்தை அதிகரிக்கிறது.


எதிர்பார்க்கப்படும் மறுசீரமைப்பு விளம்பரப் பிரிவின் பணியாளர்களின் குறிப்பிடத்தக்க பகுதியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை சுமார் 13,500 நபர்கள் விற்பனைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அறிக்கை கூறியது.


Paytm ஊழியர்கள் 1000 பேர் பணி நீக்கம்...


டிஜிட்டல் பேமென்ட் சேவை நிறுவனமான பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திடீரென ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. . இதை பேடிஎம் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். குறிப்பாக இந்த ஆட்குறைப்பு ஆபரேஷன் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவில் நடந்துள்ளது. டிஜிட்டல் பேமென்ட் நிறுவனங்கள் அவர்களின் செலவுகளைக் குறைப்பதற்காக பல செயல்பாடுகளுக்கு ஏஐ மாடலை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. மீண்டும் மீண்டும் ஒரே வேலையை செய்யும் நபர்களை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக AI tool பயன்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


இதனால் செலவுகளை குறைத்து அதிக செயல் திறனை ஏற்படுத்தி ஊழியர்களின் செலவை 15 சதவீதம் வரை குறைக்க முடியும் எனக் கூறியுள்ளார்.


அதே சமயம் தற்போதைய சூழலில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேலை நீக்கத்துக்கான இழப்பீடு தொகை வழங்கப்படுமா அல்லது மேலும் பல ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுமா என உறுதியான தகவல் வெளியாகவில்லை.



``இறுதியில் உழைக்கும் ஊழியர்கள் ஒருபோதும் உயரப்போவதில்லை, ஊழியர்களின் உழைப்பை வாங்கிய நிறுவனம் எந்தக் காலத்திலும் ஊழியர்களை நினைக்கப் போவதுமில்லை'' என ஊழியர்கள் தரப்பில் இருந்து ஆதங்க குரல்கள் ஒலித்து வருகின்றன.


AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் காரணமாக 2024ஆம் ஆண்டில் ஜனவரி 14 வரை மட்டும் கூகுள், அமேசான் உள்ளிட்ட 46 நிறுவனங்களில் இருந்து 7,528 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்...


கடந்த ஆண்டில் உலகம் முழுவதிலும் 4,25,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 36,000 பேர் இந்தியர்கள்...


இத்தகைய பணியாளர்கள் வேலையிழப்பு சூழல் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும் மனைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

Tamil Nadu Housing Board – Houses and Plots for Sale – Government of Tamil Nadu Press Release தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும...