கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Artificial Intelligence லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Artificial Intelligence லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App



 உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App


உயர்கல்வி தொடர்பாக


எந்த கல்லூரியில் எந்த படிப்பு உள்ளது?


நீங்கள் ஆசைப்படும் படிப்பு எந்த கல்லூரியில் உள்ளது?


எந்த Website-ல் Apply செய்ய வேண்டும்?


எப்போது Last Date?


எப்போது Result வரும்?


Last year Cut off என்ன?


Cut off எப்படி கணக்கிட வேண்டும்?


உங்கள் Cut off க்கு உங்கள் மாவட்டத்தில் எந்த கல்லூரி கிடைக்கும்?


சென்னையில் எந்த கல்லூரி கிடைக்கும்?


கோவையில் எந்த கல்லூரி கிடைக்கும்?


எந்த Branch கிடைக்கும்?


Agri - Seats - Govt College-ல் எந்தனை ?


தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி எத்தனை?


அதில் BSC Nursing Seats எத்தனை உள்ளது?


அதில் Boys க்கு எத்தனை Seats ? Girls க்கு எத்தனை?


BSC Nursing படிப்பிற்கு Govt. College fees எவ்வளவு?


என எந்த சந்தேகம் இருந்தாலும்...


Bombay செல்ல train fare எவ்வளவு?


Train time என்ன?


என எந்த சந்தேகம் இருந்தாலும்


உடனே Perplexity Al App-ல் தயங்காமல் கேளுங்கள்.


உடனே "டக்" "டக்" என அழகாக பதில் வரும்.👌👌👌👌


உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.


நிறைய குழப்பங்கள் தீரும். தெளிவு பிறக்கும்.


இந்த Perplexity AI App . உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும்


சலிக்காமல் பதில் சொல்லும்


அழகான அறிவான அற்புதமாக தோழன்.... Class mate.... போல ....


உடனே முயற்சி செய்து பாருங்கள்..... Start your test ....


👇👇👇


https://play.google.com/store/apps/details?id=ai.perplexity.app.android


Facial Recognition Attendance Registration in Schools through Artificial Intelligence (AI) Technology - Information from Additional Chief Secretary, IT Department



செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) தொழில்நுட்பம் மூலம் பள்ளிகளில் முக அங்கீகார வருகை பதிவேடு - தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்


Facial Recognition Attendance Registration in Schools through Artificial Intelligence (AI) Technology - Information from Additional Chief Secretary, IT Department



ஏ.ஐ., வாயிலாக விடைத்தாள் மதிப்பீடு - பல்கலைகளில் அமல்படுத்த திட்டம்...



செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence)  வாயிலாக விடைத்தாள் மதிப்பீடு - பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த திட்டம்...



வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த புதிய நீல வட்டம் என்ன?

 


வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த புதிய நீல வட்டம் என்ன?


``கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்,  ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீல நிற வளையம் ஒன்று உலா வருகிறது. ஆனால் என்ன நடக்கிறது என்பது பலருக்குப் புரியவில்லை.


உண்மையில், இந்த நீல வளையம் மெட்டாவின் AI சாட் போட்டைக் குறிக்கிறது. மெட்டாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நீல வளையத்தின் உள்ளே பயனர்கள் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய புத்திசாலித்தனமான AI உதவியாளர்.


இந்தியாவில், WhatsApp, Facebook, Messenger மற்றும் Instagram அனைத்தும் இப்போது Meta AIஐ ஆதரிக்கின்றன. Meta AI Chatbot இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த மேம்பட்ட அம்சம் நேற்று முதல் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு கிடைக்கிறது. Meta AI Chatbot ஆனது Meta Llama 3 ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது, இது மெட்டாவின் மிகவும் மேம்பட்ட LLM ஆகும்.


Meta AI சாட்போட் தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, உகாண்டா மற்றும் ஜிம்பாப்வே உட்பட 12 நாடுகளில் இலவசமாகக் கிடைக்கிறது. புதிய உள்ளடக்கத்தை உருவாக்குதல், ஒவ்வொரு தலைப்பிலும் ஆழமான அறிவைக் கண்டறிதல், உங்களுக்காக மின்னஞ்சல்களை அனுப்புதல் மற்றும் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தல் போன்ற அனைத்திலும் Meta AI உங்களுக்கு உதவும்.


ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஊட்டங்களை ஸ்க்ரோலிங் செய்யும் போது Meta AI சாட்போட்டைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் Facebook இல் பார்த்த ஒரு இடுகையைப் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால், இடுகையில் இருந்தே Meta AI ஐக் கேட்கலாம். நாம் தட்டச்சு செய்யும் சோதனைகளின் அடிப்படையில் படங்களை உருவாக்கும் இமேஜின் கருவியும் மெட்டா ஏஐ கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் வழியில் படங்களை உருவாக்க மற்றும் அனிமேஷன் செய்ய இது உங்களை அனுமதிக்கிறது. எனவே அந்த நீல மோதிரம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை வேறு நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு பெரிய அதிசயம்...


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI) ஆதிக்கம் - பணி நீக்கம் செய்யும் நிறுவனங்கள் - பறிபோகும் வேலைவாய்ப்புகள்...



செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence) ஆதிக்கம் - பணி நீக்கம் செய்யும் நிறுவனங்கள் - பறிபோகும் வேலைவாய்ப்புகள்...


Artifial Intelligence இதனை சுருக்கமாக AI என்றும் அழைக்கின்றனர். இந்த அசாதாரண தொழில்நுட்பம் புதிய உலகை படைத்துக்கொண்டிருக்கிறது.


நம் வாழ்க்கையின் பாதிக்கும் மேல் மொபைலிலேயே கழித்து விடுகிறோம். ஆர்டிஃபீசியல் இண்டெலிஜன்ஸ் ஆதிக்கம் இன்னும் அதிகமாகும் போது நம் வேலைகள் பலமடங்கு எளிமையாகும்.


இது பெரிய நிறுவனங்களில் வேலை நீக்கத்துக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பங்கள் புதிய சாஃப்ட்வேரையே உருவாக்க முடியும் அளவு வளர்ந்துவிட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


செயற்கை நுண்ணறிவு பல ஊழியர்களின் வேலையைப் பறிக்கும் என்று பல தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊழியர்கள் நீக்கப்பட்டு வந்தனர்.


ஆனால், கடந்த ஜூலை 2023ல் பெங்களூருவை தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இ-காமர்ஸ் நிறுவனமான டுகான் (Dukaan), வாடிக்கையாளர் சேவையில் பணிபுரிந்து வந்த ஊழியர்களில் 90 சதவிகிதத்தினரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பலரும் அந்த நிறுவனத்தை விமர்சித்தனர். இந்த அதிரடி செயல் மாதச் சம்பளம் வாங்கும் பல ஊழியர்களின் நிலையைக் கேள்விக் குறியாக்கி உள்ளது.




செயற்கை நுண்ணறிவின் (AI) அதிகரித்து வரும் பங்கை ஏற்றுக்கொள்ளும் முயற்சியில், கூகுள் தனது 30,000 நபர்களை கொண்ட விளம்பர விற்பனை பிரிவுக்குள் கணிசமான மறுசீரமைப்பைப் பற்றி சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையானது, குறிப்பாக 2023 இல் 12,000 பணியாளர்களை பாதித்த கூகுளின் சமீபத்திய பணிநீக்கங்களைத் தொடர்ந்து, சாத்தியமான வேலை வெட்டுக்கள் பற்றிய கவலையைத் தூண்டியுள்ளது.


இந்த மறுசீரமைப்பு, அதன் பல்வேறு தளங்களில் விளம்பர கொள்முதலை நெறிப்படுத்த இயந்திர கற்றல் நுட்பங்களை Google இன் வளர்ந்து வரும் நம்பிக்கையுடன் ஒத்துப்போகிறது. பல ஆண்டுகளாக, தொழில்நுட்ப நிறுவனமானது புதிய விளம்பரங்களை உருவாக்குவதை தானியக்கமாக்க வடிவமைக்கப்பட்ட AI-இயங்கும் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் வருடாந்திர வருவாயில் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருவிகளின் செயல்திறன், குறைந்தபட்ச பணியாளர் ஈடுபாட்டுடன் இணைந்து, அதிக லாபம் ஈட்டுகிறது. 


PMmax போன்ற AI கருவிகள் விளம்பரதாரர்களிடையே பிரபலமடைந்து வருவதால், விளம்பர வடிவமைப்பு மற்றும் விற்பனையில் மனித தலையீட்டின் தேவை குறைவது குறிப்பிடத்தக்கது. AI கருவிகளின் செலவு-செயல்திறன், குறைந்தபட்ச பணியாளர்  தேவை, விளம்பர வருவாயின் லாபத்தை அதிகரிக்கிறது.


எதிர்பார்க்கப்படும் மறுசீரமைப்பு விளம்பரப் பிரிவின் பணியாளர்களின் குறிப்பிடத்தக்க பகுதியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை சுமார் 13,500 நபர்கள் விற்பனைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அறிக்கை கூறியது.


Paytm ஊழியர்கள் 1000 பேர் பணி நீக்கம்...


டிஜிட்டல் பேமென்ட் சேவை நிறுவனமான பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திடீரென ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. . இதை பேடிஎம் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். குறிப்பாக இந்த ஆட்குறைப்பு ஆபரேஷன் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவில் நடந்துள்ளது. டிஜிட்டல் பேமென்ட் நிறுவனங்கள் அவர்களின் செலவுகளைக் குறைப்பதற்காக பல செயல்பாடுகளுக்கு ஏஐ மாடலை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. மீண்டும் மீண்டும் ஒரே வேலையை செய்யும் நபர்களை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக AI tool பயன்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


இதனால் செலவுகளை குறைத்து அதிக செயல் திறனை ஏற்படுத்தி ஊழியர்களின் செலவை 15 சதவீதம் வரை குறைக்க முடியும் எனக் கூறியுள்ளார்.


அதே சமயம் தற்போதைய சூழலில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேலை நீக்கத்துக்கான இழப்பீடு தொகை வழங்கப்படுமா அல்லது மேலும் பல ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுமா என உறுதியான தகவல் வெளியாகவில்லை.



``இறுதியில் உழைக்கும் ஊழியர்கள் ஒருபோதும் உயரப்போவதில்லை, ஊழியர்களின் உழைப்பை வாங்கிய நிறுவனம் எந்தக் காலத்திலும் ஊழியர்களை நினைக்கப் போவதுமில்லை'' என ஊழியர்கள் தரப்பில் இருந்து ஆதங்க குரல்கள் ஒலித்து வருகின்றன.


AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் காரணமாக 2024ஆம் ஆண்டில் ஜனவரி 14 வரை மட்டும் கூகுள், அமேசான் உள்ளிட்ட 46 நிறுவனங்களில் இருந்து 7,528 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்...


கடந்த ஆண்டில் உலகம் முழுவதிலும் 4,25,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 36,000 பேர் இந்தியர்கள்...


இத்தகைய பணியாளர்கள் வேலையிழப்பு சூழல் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குழந்தைகள், முதியோருக்கான நேரடி நுழைவு சலுகை

10-07-2025 பௌர்ணமி அன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குழந்தைகள், முதியோருக்கான நேரடி நுழைவு சலுகை Om Arunachaleswara Arulmigu Aru...