கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Railway லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Railway லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இரயில்வேயில் Assistant Loco Pilot (ALP) 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்



இரயில்வேயில் Assistant Loco Pilot (ALP) 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


 இரயில்வே வேலை கனவை நனவாக்குங்கள்!

 Assistant Loco Pilot (ALP) 2026 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பெருகமணி ரயில்வே கேட் (LC No.65) தற்காலிக மூடல்

 பெருகமணி ரயில்வே கேட் (LC No.65) தற்காலிக மூடல் அறிவிப்பு


​ரயில் பாதை மற்றும் சிலிப்பர் புதுப்பித்தல் பணிகள் காரணமாக, பெருகமணியில் உள்ள ரயில்வே கேட் (LC No.65) தற்காலிகமாக மூடப்படுகிறது.


​நேரம் : 19.04.2026 காலை 8:00 மணி


 முதல் 23.04.2026 மாலை 6:00 மணி வரை.


​மாற்று வழி:


பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிறுகமணி (LUS No.64) மற்றும் காமநாயக்கன்பாளையம் (LC No.63) வழியாகச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.



கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ; 20 மாணவர்கள் படுகாயம்



கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ; 20 மாணவர்கள் படுகாயம்


கரூர் மாவட்டம் வெள்ளியணைக்கு அருகில், நேற்று மாலை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த கல்லூரி பேருந்து ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக பேருந்து தண்டவாளத்தில் பழுதாகி நின்றபோது, சரக்கு ரயில் பேருந்தின் மீது மோதியதில் 18 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த விவரம் பின்வருமாறு;



கரூர் மாவட்டம் க‌.பரமத்தியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், நேற்று கல்லூரி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஓட்டுனர் பெரியசாமி கல்லூரிப் பேருந்தை ஓட்டி வந்தார். ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது வந்த சரக்கு ரயில் , பேருந்தின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. பலருக்கு கை, கால் மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




விபத்து நடந்ததும், அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காயமடைந்த மாணவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்டதா அல்லது எதிர்பாராத விதமாக நடந்ததா என்பது குறித்து போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




18 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


முதல் கட்ட விசாரணையில், சரக்கு ரயில் திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து சிமெண்ட் தயாரிக்கும் பவுடர் ஏற்றிக் கொண்டு, புலியூர் சிமெண்ட் ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.



குளத்தூர் பகுதி லெவல் கிராசிங் பகுதியில் ஆட்கள் இல்லாததால், பேருந்து அந்த லெவல் கிராசிங்கை கடந்துள்ளது. அப்போது ரயில் வருவதைக் கண்டு பீதியடைந்த மாணவர்கள், பஸ்ஸில் இருந்து அவசர அவசரமாக இறங்க முயன்றனர். அதற்குள் ரயில், பஸ் மீது மோதிவிட்டது. இதில், கல்லூரி பஸ் பலத்த சேதமடைந்தது. மேலும், அதில் இருந்த மாணவர்கள் 18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மாணவர்களை நேரில் சந்தித்து ஜோதிமணி எம்.பி. நலம் விசாரித்தார்.




Begunkodor Railway Station - பேய் பயத்தால் 42 ஆண்டுகள் இந்திய ரயில்வேயால் மூடப்பட்ட ரயில் நிலையம்

 


Begunkodor Railway Station - பேய் பயத்தால் 42 ஆண்டுகள் இந்திய ரயில்வேயால் மூடப்பட்ட ரயில் நிலையம் 


இந்திய ரயில்வே வரலாற்றில் மிகவும் பயமுறுத்தும் அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள Begunkodor Railway Station ஆகும். இது வெறும் கதையல்ல; 42 ஆண்டுகள் இந்திய ரயில்வே வரைபடத்திலிருந்தே இந்த ரயில் நிலையம் மறைந்து போக காரணமான சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் உள்ளன.


1960-களில் மிகவும் சாதாரணமாகவும் மகிழ்ச்சியாகவும் இயங்கி வந்த ஒரு ரயில் நிலையமாக இருந்தது இது. ஆனால் 1967-ஆம் ஆண்டு எல்லாம் மாறியது. ஒரு நாள் ஸ்டேஷன் மாஸ்டர், ரயில் பாதையில் ஒரு பெண் உருவம் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்ததாக கூறினார். சில நாட்களுக்குப் பிறகு அந்த ஸ்டேஷன் மாஸ்டரும் அவரது குடும்பத்தினரும் ரயில்வே குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பயம் பரவியது.



வெள்ளை சேலை அணிந்த ஒரு பெண் ரயிலுடன் சேர்ந்து பாதையில் ஓடிக்கொண்டிருப்பாள் என்ற கதை காட்டுத்தீ போல பரவியது. இதனால் ரயில்வே ஊழியர்கள் அங்கு வேலை செய்ய பயந்தனர். வேலைக்கு வந்தவர்கள்கூட அங்குள்ள விசித்திரமான அனுபவங்களால் சில நாளில் வேலை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.


இந்த பயம் காரணமாக 1967-ஆம் ஆண்டு அந்த ரயில் நிலையம் முழுவதுமாக மூடப்பட்டது. அந்த வழியாக செல்லும் ரயில்களின் டிரைவர்கள்கூட அந்த நிலையத்தை கடக்கும் போது வேகத்தை குறைக்க கூட பயந்ததாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் மிகவும் அசாதாரணமான மற்றும் பேய் இருப்பதாக கூறப்படும் இடங்களின் பட்டியலிலும் இந்த நிலையம் இடம் பெற்றது.


பல தசாப்தங்களாக பேய்கதைகளின் நடுவில் கைவிடப்பட்டிருந்த இந்த நிலையம் மீண்டும் உயிர் பெற்றது 2009-ஆம் ஆண்டு. அப்போது இந்தியாவின் ரயில்வே அமைச்சராக இருந்த Mamata Banerjee தலையிட்டு இந்த நிலையத்தை மீண்டும் திறக்க உத்தரவிட்டார். மக்கள் சந்தித்த பயண சிரமத்தை கருத்தில் கொண்டு எடுத்த துணிச்சலான முடிவாக அது கருதப்பட்டது.


இப்போது இந்த நிலையம் மீண்டும் இயங்கி வந்தாலும், மாலை 5 மணிக்குப் பிறகு இங்கு நிற்க மக்கள் இன்னும் பயப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. மாலை கடைசி ரயில் சென்றுவிட்டால் நிலையம் வெறிச்சோடிவிடும். அங்கு பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள்கூட இரவில் நிலையத்தில் தங்குவதில்லை என்பதும் சொல்லப்படுகிறது.


இப்படி அமாநுஷ்ய சக்திகள் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? அல்லது இது எல்லாம் மனிதர்களின் கற்பனை மட்டும்தானா? 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்