அக்டோபர் 29 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு...
அக்டோபர் 29 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு... *சென்னை: நாடு முழுவதும், அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. *இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கால அட்டவணையை இந்தியதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கடிதத்தையும் அனுப்பியுள்ளது. *அதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்கும் நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். *வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளுக்கு முன்னதாக, ஆக.20 முதல் அக்.18-ம் தேதி வரை வாக்குச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று பட்டியலை சரிபார்க்க வேண்டும், வாக்குச்சாவடிகளை சீரமைக்க வேண்டும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய வேண்டும். *வாக்காளர்களின் தெளிவான மற்றும் சரியான புகைப்படங்களைப் பெற்று இணைத்தல்