கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை எழுதத் தொடங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 


திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை எழுதத் தொடங்கினார் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்




ஏப்ரல் 24ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து எழுதத் தொடங்கினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்



NMMS தேர்வில் நல்ல தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கான கூட்டம் மகாபலிபுரம் கடற்கரை சுற்றுலா வளாகத்தில் நடைபெறுதல், கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம் - DSE செயல்முறைகள்

 

பள்ளிக்கல்வி - NMMS தேர்வில் நல்ல தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கான கூட்டம் மகாபலிபுரம் கடற்கரை சுற்றுலா வளாகத்தில் நடைபெறுதல், கலந்து கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர்கள் விவரம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Meeting for teachers who have performed well in NMMS examination to be held at Mahabalipuram Beach Resort Tourist Complex, details of HeadMasters to attend - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தங்க நகைகள் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விசயங்கள்



 தங்கம் வாங்கும் பொழுது இதையெல்லாம் சரிபார்த்து வாங்கினால் பின்னாளில் விற்கும் போதும், நகை அடமானம் வைக்கும் போதும் அது நமக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக இந்த பதிவு 


தங்க நகைகள் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயங்கள்


Important things to consider when buying gold jewelry


நீங்கள் வாங்கும் தங்க நகைகளில்


1. BIS (Bureau of Indian Standards) இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் முத்திரை உள்ளதா என பார்க்க வேண்டும்.



2. நகைகளில் ஆறு இலக்க HUID (Hallmark Unique Identification) Number உள்ளதா என பார்க்க வேண்டும்.. நகைகள் ஹால்மார்க் செய்யும் போது ஒவ்வொரு நகைகளுக்கும் 6 இலக்க HUID number குறிப்பிடப்படுகிறது



3. 22K அல்லது 24K நகைகளில் 916 ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்பதை கவனிக்கவும்..


இதையெல்லாம் சரிபார்த்து வாங்கினால் அதன் தரம், தூய்மை இவைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.


இதுநாள் வரை நகை வாங்கும்போது இதையெல்லாம் கவனிக்காமல் வாங்கி இருந்தால் பரவாயில்லை இனிமேல் வாங்க சென்றால் இதையெல்லாம் கவனித்து வாங்கவும்.


இந்த பதிவின் நோக்கம் உங்களைத் தங்க நகை வாங்க சொல்வதற்காக அல்ல.. ஒருவேளை நீங்கள் நகை வாங்க சென்றால் இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள் என்பதற்காக விழிப்புணர்வு கொடுப்பதற்காக  மட்டுமே.



JEE - 2ஆம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு


JEE - 2ஆம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது


↔️ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில்  சேர்வதற்கான JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது


↔️ 24 மாணவர்கள் 100% மதிப்பெண்,  தமிழக அளவில் பிரதீஷ் காந்தி என்ற மாணவர் முதலிடம்


IFHRMS ஏப்ரல் 2025 புதுப்பிப்புகள் - தானியங்கி நிலுவைத் தொகை கணக்கீடு, பணியாளர்களின் வங்கிக் கணக்கு புதுப்பிப்பு - கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை கடிதம்


IFHRMS April 2025 Updates - Automatic Arrear Calculation, Employees Bank Account Update - Treasuries & Accounts Department Letter


IFHRMS ஏப்ரல் 2025 புதுப்பிப்புகள் - தானியங்கி நிலுவைத் தொகை கணக்கீடு, பணியாளர்களின் வங்கிக் கணக்கு புதுப்பிப்பு - கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்



உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்


உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண  கவாயை நியமிக்க ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை வழங்கியுள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து மே 14-ம் தேதி 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பார்.


உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தற்போதைய தலைமை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் பதவியேற்றார். இவரது பதவிக் காலம் வரும் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.


முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு சஞ்சீவ் கண்ணாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடந்த வாரம் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து, தனக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு நீதிபதி பி.ஆர்.கவாயின் பெயரை சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. நீதிபதி பி.ஆர்.கவாய் நவம்பர் 2025-ல் ஓய்வு பெற உள்ளதால், சுமார் 6 மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார்.


முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதி பதவியை ஏற்கும் இரண்டாவது தலித் நீதிபதி கவாய் ஆவார். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாக, கவாய் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவற்றில் மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதி செய்த தீர்ப்பு மற்றும் தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவித்த தீர்ப்பு உள்ளிட்டவை அடங்கும்.



மகாராஷ்டிராவின் அமராவதியில் நவம்பர் 24, 1960-ல் பிறந்த நீதிபதி கவாய், 1985-இல் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். ஆகஸ்ட் 1992-இல், அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்கறிஞராகவும், கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 2000-ஆம் ஆண்டில் அதே அமர்வில் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றார்.


நீதிபதி கவாய் நவம்பர் 14, 2007 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், மும்பையில் உள்ள உயர் நீதிமன்றத்தின் முதன்மை இருக்கையிலும், நாக்பூர் அவுரங்காபாத் மற்றும் பனாஜியில் உள்ள அமர்வுகளிலும் பணியாற்றினார். மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு அவர் பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-04-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-04-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல் :குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் எண்: 1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து,

பொருள்:
உழவுத் தொழிலை தவிர்த்து பிற தொழில் புரிகின்றவர்களையும் உழவு தாங்குதலால் அது உலகத்தவர்க்கு அச்சாணியாகும்.


பழமொழி :
சுறுசுறுப்பு வெற்றி தரும்.

Briskness will bring success.


இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :

நீ  சுமக்கின்ற நம்பிக்கை  நீ  விழும்  போது  உன்னை  சுமக்கும்.


பொது அறிவு :

1. காமராஜரை கல்விக்கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் யார்?

விடை: தந்தை பெரியார்.       

2. மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து எது?

விடை: கீழாநெல்லி


English words & meanings :

Bride.    -     மணமகள்

Candle.    -     மெழுகுவர்த்தி


வேளாண்மையும் வாழ்வும் :

நீர் பாதுகாப்பில் மற்றொரு உத்தி நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பதாகும்.


ஏப்ரல் 17

உலக ஈமோஃபீலியா நாள்

ஈமோஃபீலியா (Haemophilia அல்லது Hemophilia) என்பது, மனித உடலில் குருதி உறையாமல் போகும் பரம்பரை நோயின் பெயராகும். மரபணு குறைபாடுகளின் காரணமாக (அல்லது, மிக அரிதான சமயங்களில், தன்னுடல் தாக்குநோய் (autoimmune disorder) காரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் குருதி நீர்மக் (Plasma) காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந் நோய் உண்டாகிறது. உடலில், உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து குருதிப்பெருக்கு ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று.



நீதிக்கதை

நரித் தந்திரம்!

ஒரு காடு. அங்கே ஒரு சிங்கம். அந்தச் சிங்கம் ஒரு கூட்டம் போட்டது. எல்லா மிருகங்களும் வந்தன.

முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டது.

‘’இப்படிக் கிட்டே வா…என் உடம்பை முகர்ந்து பார்…எப்படி இருக்கு?’’என்று கேட்டது.

குரங்கு வந்து முகர்ந்து பார்த்து விட்டு …’’வாசனை நல்லா இல்லீங்க… கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு!’’என்றது.

சிங்கத்துக்கு கோபம் வந்து விட்டது. ‘’என் உடம்பைப் பத்தியா அப்படிச் சொல்றே’’ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. குரங்கு சுருண்டு விழுந்துவிட்டது.

அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டது…. ‘’நீ வா…வந்து பார்த்துட்டு சொல்லு’’ என்றது. கரடி….அந்தக் குரங்கைப் பார்த்துக் கொண்டே வந்தது.

சிங்கத்தை முகர்ந்து பார்த்து…’’ஆகா …ரோஜாப்பூ வாசனை!’’ என்றது. "பொய்யா சொல்றே?ன்னு சிங்கம் ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் சுருண்டு விழுந்தது.

அடுத்த படியாக ஒரு நரியைக் கூப்பிட்டது. ‘’நீ வந்து சொல்லு…நீதான் சரியாச் சொல்லுவே!’’ என்றது சிங்கம்.

நரி…குரங்கையும் கரடியையும் பார்த்துக் கொண்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்தது. அப்புறம் கூறியது, ‘’மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்!’’

நரி தன் தந்திரமான குணத்தாலும், சமயோசித புத்தியாலும் தப்பித்தது.


இன்றைய செய்திகள்

17.04.2025

* அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத் துறை செயலாளர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

* தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்.

* 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா.

* இந்திய ஓபன் தடகளம் 2025: ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் யஷ் வீர் சிங்.

* பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* The Secretary of the Tamil Development and News Department has ordered all government department secretaries to issue government orders only in Tamil from now on.

* The Meteorological Department has reported that the temperature will increase in Tamil Nadu for the next three days starting tomorrow. The public is advised to be cautious regarding the heatwave.

* The Supreme Court has issued a strict order stating that the license of the concerned hospital must be canceled if a newborn child goes missing.

* China has issued 85,000 visas to Indians in the four months from January to April 2025. This is seen as a significant move in the relationship between the two countries.
.
* Indian Open Athletics: Yash Veer Singh has won the gold medal in the javelin throw event at the Indian Open Athletics Championships.

* Barcelona Open Tennis: Danish player Holger Rune has advanced to the quarterfinals of the Barcelona Open Tennis tournament. He is displaying excellent performance.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

  உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு நாளை 07.07.2025 தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் BSC Nurs...