கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 முடித்த குழந்தைகளுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும் Last Date விவரங்களும்



+2 முடித்த குழந்தைகளுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும் விண்ணப்பிக்க கடைசி நாள் விவரங்களும்


+2 முடித்த குழந்தைகள் சிறந்த கல்லூரிகளில் சென்று படிக்க மீதமுள்ள பொன்னான வாய்ப்புகளும் Last Date விவரங்களும்


*ஜூன் 4  வரை  விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ள நுழைவுத்  தேர்வுகள்  உங்களுக்காக 👇👇👇*


1. டிசம்பர் 2024 -ல் CLAT தேர்வு எழுதி கையில் CLAT Score Card வைத்திருக்கும் குழந்தைகள் மட்டும் IIM Rohtak Haryana வில் 5 ஆண்டு சட்டப்படிப்பு IPL படிக்க விண்ணப்பிக்க இன்று 18.04.25 கடைசி தேதி.🔴🔴🔴🔴 Fees Rs. 4937.


2. April 20 FDDI - Apply Both B.Des & BBA  Last Date. Super Chance, Don't Miss.🔴🔴🔴🔴🔴 All Group Students.


3. May 2 IMU CET Apply B.Tech BSC DNS and BBA Last Date🔴 All Group Students.


4. May 5 NFSU - M.Tech. MSC. MBA Cyber Security Artificial Intelligence Forensic Science  Last Date All Group Students.


5. May 5 Last Date for ICI Tirupati - BBA Culinary Arts - All Group Students


6. May 9 NISER Last Date only for Phy Che Maths Biology Students. 250 seats only. No Hoste Fees. No College Fees. Ful Free.


7. May 31 ISI - BSDS Last Date. (Admission Based on JEE Mains Scores or CUET Scores - இன்று 18.04.25 JEE Mains Result வெளியாகலாம்.)


8. June 4 IITTM BBA (Tourism)


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் +2 முடித்த குழந்தைகள் 


தமிழ்நாடு அரசு முழு  உதவியுடன் பட்டப்படிப்பு படிக்க விருப்பமா?


வருகிற 21.04.2025 முதல் 30.04.2025 வரை உங்கள் பள்ளிக்கு செல்லுங்கள்.


உங்கள் அப்பா அம்மாவையும் அழைத்து செல்லுங்கள்.


தமிழ்நாட்டில் படிக்க 7.5 கோட்டா (No College Fees & No Hostel Fees)


தமிழ்நாட்டிற்கு வெளியில் பிற மாநிலங்களில் சென்று படிக்க


உங்களுக்கு உதவிட

இதோ


" நான் முதல்வன் திட்டம்"


👇👇👇 உடனே பார்வையிடுக.


https://naanmudhalvan.tnschools.gov.in/


மேலும் உங்களுக்கு உதவிட உங்கள் உயர்கல்வி வழிகாட்டு ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் பள்ளியில் தினம் தினம் காத்திருக்கிறார்கள்.


அடுத்து என்ன படிக்கலாம் என அறிய


உயர்கல்வி குறித்து அறிந்து கொள்ள


சுழற்றுக 14417


தமிழ்நாடு அரசின்

பள்ளிக் கல்வித்துறை உயர்கல்வி வழிகாட்டு உதவி எண் : 14417


மேலும் அதிக விபரங்களுக்கு மணற்கேணியில் சொடுக்கவும் 👇


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis


ஏப்ரல் மாதத்தில் IFHRMS தொடர்பான முக்கிய தகவல்கள்


ஏப்ரல் மாதத்தில் IFHRMS தொடர்பான முக்கிய தகவல்கள்


1. இந்த வாரம் ஏப்ரல் மாதத்திற்கான Payroll ரன் செய்யப்படும்.


2. வருமான வரி பிடித்த மேற்கொள்வதற்கு old regime என்று தேர்வு செய்தால் மீண்டும் மாற்ற இயலாது. ஏனென்றால் Regime தேர்வு செய்வது ஒரு முறை மட்டும் தான் செய்ய இயலும்.


3. Regime ஏதும் தேர்வு செய்ய வில்லை எனில் default ஆக new Regime தேர்வாகிவிடும்.


4. PAN  சரியாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும் ஏனென்றால் PAN  தவறாக இருந்தால் tax rule படி ஊதியத்தில் பிடித்த மேற்கொள்ளப்படும்.


5. Increment உள்ளவர்களுக்கு சரியாக increment update ஆகியுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.



TNSED Attendance Appல் 21-04-2025 திங்கள் முதல் தொடக்க & நடுநிலைப் பள்ளிகள் வருகைப் பதிவு செய்யும் வழிமுறை


TNSED Attendance  Appல் 21.04.2025 திங்கள் முதல் தொடக்க & நடுநிலைப் பள்ளிகள் வருகைப் பதிவு செய்யும் வழிமுறை 


Primary schools:


* Today's Status - Fully not working


Select - Reason Others


Mark-Staff attendance Only

 


Middle  schools:


Today's Status - Partially working &  


Select Class 6,7,8


Select - Reason Others


Mark- Staff attendance & 6,7,8th Class Students Attendance


மாணவியின் பொய்யான பாலியல் புகாரால் சிதைந்து திசைமாறிய ஆசிரியரின் வாழ்க்கை - 7 ஆண்டுகளுக்கு பிறகு கணவருடன் வந்து மன்னிப்பு கேட்ட மாணவி



மாணவியின் பொய்யான பாலியல் துன்புறுத்தல் புகாரால் சிதைந்து திசைமாறிய ஆசிரியரின் வாழ்க்கை - 7 ஆண்டுகளுக்கு பிறகு கணவருடன் வந்து மன்னிப்பு கேட்ட மாணவி


Teacher's life was shattered and turned upside down by student's false sexual abuse complaint - Student came back with her husband and apologized after 7 years


கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் என்பவர் ஆசிரியர் ஆவார். இவர் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் மீது மாணவி ஒருவர் பொய்யான பாலியல் புகார் அளித்தார்.இந்த புகாரினால் அவரது நிறுவனம் மூடப்பட்டது. சிறைக்கு போனார். குடும்பமும் அவரை விரட்டிவிட்டது. இதனால் ஆசிரியர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் கணவருடன் வந்து அந்த மாணவி மன்னிப்பு கேட்டார்


கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 45 வயதாகும் ஜோமோன் ஆசிரியர் ஆவார். இவரது வாழ்க்கை 2017ஆம் ஆண்டு சிறப்பாக போய் கொண்டிருந்தது. இவர் குருப்பந்தரை என்ற இடத்தில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் கொச்சியை சேர்ந்த ஒரு மாணவி படித்து வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு கொச்சியைச் சேர்ந்த மாணவி, ஜோமோன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குருப்பந்தரை போலீசில் புகார் கொடுத்தார்.


ஆசிரியர் கைது

இதை சரியாக விசாரிக்காத போலீசார், மாணவி புகார் அளித்துவிட்டார் என்ற ஒற்றை காரணத்தையும், உறவினர்கள், நண்பர்கள் ஆவேசப்படுகிறார்கள் என்பதற்காகவும் ஜோமோனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் புகாரில் ஜோமோன் சிக்கியதால் அவரது நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் அவரது குடும்பம் ஒரே நாளில் ஏழ்மைக்கு போனது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர்.


ஜாமீனில் வந்தார்

அதன்பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஜோமோன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவரது குடும்பத்தினர் அவரை ஏற்க மறுத்து விட்டார்கள். இதனால் குடும்பத்தை பிரிந்த ஜோமோன், தனிமையில் வாடினார். இதைத்தொடர்ந்து அவர் மாற்று வேலை செய்து ஏழ்மை நிலையில் வாழ்க்கையை கழித்து வந்தார்.


திருமணம் நடந்தது

இதற்கிடையே புகார் கொடுத்த மாணவிக்கு திருமணமானது. அவர் தனது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பாலியல் புகாரால் ஆசிரியர் ஜோமோன் ஏழ்மையின் எல்லைக்கு சென்று விட்டது குறித்து மாணவிக்கு தெரியவந்தது. தன்னால் தான் இப்படி நடந்தது என்று மிகுந்த மனவேதனை அடைந்தார்.


மன்னிப்பு கேட்டார்

இதையடுத்து அந்த மாணவி நேற்று முன்தினம் ஜோமோனின் குடும்ப தேவாலயத்திற்கு கணவருடன் சென்று திருப்பலிக்கு இடையே ஆசிரியர் ஜோமோன் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது அந்த மாணவி, மற்றவர்களின் தூண்டுதலின்பேரில் பொய் புகார் கூறியதாகவும், ஆசிரியர் ஜோமோன் நிரபராதி என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.


நீதிபதியிடம் வாக்குமூலம்

அத்துடன் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி ஜோமோன் மீது சிலரின் தூண்டுதலால் பொய் புகார் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து மன்னிப்பு கேட்டார். அத்துடன் தனது புகாரையும் வாபஸ் பெற்றார். இதைதொடர்ந்து ஜோமோனை இந்த வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது. இதுகுறித்து ஆசிரியர் ஜோமோன் கூறுகையில், 'என் மீதான பாலியல் புகாரில் நான் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளேன். இதனை அறிந்ததும் என்னுடைய குடும்பத்தினரும் என்னை ஏற்றுக் கொண்டனர்' என்று கூறினார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.


பொய் புகார்கள்

ஒரு மாணவி புகார் அளித்துவிட்டாலே ஒரு ஆசிரியரை பாலியல் குற்றவாளி என்று அறிவிப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாத ஒன்றாக இருப்பதாக பல ஆசிரியர்கள் இந்த செய்தியைப் பகிர்ந்து நியாயம் கேட்டு வருகிறார்கள். ஏனெனில் சரியாகப் படிக்காத மாணவியை படிக்க சொல்லி கண்டிக்கும் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளிப்பது ஆங்காங்கே நடக்கிறது. கண்டித்த ஒரே காரணத்திற்காக ஆசிரியர்களின் நேர்மை, சமூகத்தில் அந்தஸ்து, நற்பெயர் என எல்லாமே போய்விடுகிறது.


போக்சோ வழக்கு

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாலியல் குற்றவாளிகளாகவே ஊடகங்களும் சித்தரிப்பதும் இதற்கு காரணம். போக்சோ வழக்கிலும் பொய்யான புகார் அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. காதல் கைகூடாத போது, பொய்யான புகார் அளிப்பதும் நடக்கிறது. யார் மீது வேண்டுமானாலும் போக்சோ வழக்கில் புகார் அளித்து உள்ளே தள்ள முடியும். சிறுமிகள் யார் மீது தவறான குற்றச்சாட்டை கூறி புகார் அளித்தாலும், அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியது வரும். ஏனெனில் சட்டம் அந்த அளவிற்கு பெண்களுக்கே சாதகமாக உள்ளது. போக்சோ வழக்கும், பாலியல் வழக்கும் அப்பாவிகளை பழிவாங்கும் கருவிகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டையும் அப்பாவிகள் பாதிக்காத அளவிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.



திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை எழுதத் தொடங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 


திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை எழுதத் தொடங்கினார் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்




ஏப்ரல் 24ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து எழுதத் தொடங்கினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்



NMMS தேர்வில் நல்ல தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கான கூட்டம் மகாபலிபுரம் கடற்கரை சுற்றுலா வளாகத்தில் நடைபெறுதல், கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம் - DSE செயல்முறைகள்

 

பள்ளிக்கல்வி - NMMS தேர்வில் நல்ல தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கான கூட்டம் மகாபலிபுரம் கடற்கரை சுற்றுலா வளாகத்தில் நடைபெறுதல், கலந்து கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர்கள் விவரம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Meeting for teachers who have performed well in NMMS examination to be held at Mahabalipuram Beach Resort Tourist Complex, details of HeadMasters to attend - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தங்க நகைகள் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விசயங்கள்



 தங்கம் வாங்கும் பொழுது இதையெல்லாம் சரிபார்த்து வாங்கினால் பின்னாளில் விற்கும் போதும், நகை அடமானம் வைக்கும் போதும் அது நமக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக இந்த பதிவு 


தங்க நகைகள் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயங்கள்


Important things to consider when buying gold jewelry


நீங்கள் வாங்கும் தங்க நகைகளில்


1. BIS (Bureau of Indian Standards) இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் முத்திரை உள்ளதா என பார்க்க வேண்டும்.



2. நகைகளில் ஆறு இலக்க HUID (Hallmark Unique Identification) Number உள்ளதா என பார்க்க வேண்டும்.. நகைகள் ஹால்மார்க் செய்யும் போது ஒவ்வொரு நகைகளுக்கும் 6 இலக்க HUID number குறிப்பிடப்படுகிறது



3. 22K அல்லது 24K நகைகளில் 916 ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்பதை கவனிக்கவும்..


இதையெல்லாம் சரிபார்த்து வாங்கினால் அதன் தரம், தூய்மை இவைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.


இதுநாள் வரை நகை வாங்கும்போது இதையெல்லாம் கவனிக்காமல் வாங்கி இருந்தால் பரவாயில்லை இனிமேல் வாங்க சென்றால் இதையெல்லாம் கவனித்து வாங்கவும்.


இந்த பதிவின் நோக்கம் உங்களைத் தங்க நகை வாங்க சொல்வதற்காக அல்ல.. ஒருவேளை நீங்கள் நகை வாங்க சென்றால் இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள் என்பதற்காக விழிப்புணர்வு கொடுப்பதற்காக  மட்டுமே.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Gpay, Phone Pay போன்ற UPI செயலிகளுக்கான புதிய விதிகள் இன்று முதல் அமல்

Gpay, Phone Pay போன்ற UPI செயலிகளுக்கான புதிய விதிகள் இன்று 17-06-2025 முதல் அமல் UPI Transactions Rules யுபிஐ பணப் பரிவர்த்தனைகளின் நேரம் க...