Classes 4 & 5 - 100 days challenge Assessment - மாவட்டக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு
தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய திறன்களில் தயார் நிலையில் உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்ட 4,552 பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மதிப்பிடும் பணிகள் 4.4.2025 நிறைவடைந்தது.
4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான மதிப்பீட்டு பணி நாளை 16.04.2025 அன்று நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இம்மதிப்பீட்டு பணிக்கான Assessment Tool அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் (தொடக்கக் கல்வி) மின்னஞ்சல் முகவரிக்கு 16.04.2025 அன்று காலை 8.45 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.
Assessment Tool 17.04.2025 வரை Liveலேயே இருக்கும். எனவே, மதிப்பீட்டு பணிகளை 16.04.2025 மற்றும் 17.04.2025 ஆகிய இரு தினங்களிலும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தொடக்கக் கல்வி இயக்குநருக்காக
பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - கற்றல் திறன் சோதனை நடைபெறும் 4552 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் - மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...