கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து - P.V.Sindhu wins bronze medal in women's badminton at Tokyo Olympics...

 டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து...


டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2 ஆக உயர்வு. 


சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவை வீழ்த்தினார் சிந்து...


ஒலிம்பிக்கில் இரண்டு தனி நபர் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி பி.வி.சிந்து ஆவார்...







மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்களின் அறிவுறுத்தல் - செய்தி வெளியீடு எண்‌: 542, நாள்‌: 01.08.2021...

 செய்தி வெளியீடு எண்‌: 542, நாள்‌: 01.08.2021


செய்தி வெளியீடு


விவசாயிகள்‌ மற்றும்‌ துறை வல்லுநர்கள்‌, பல்வேறு சங்கப்‌ பிரநிதிகளைக்‌  கலந்தாலோசித்து மக்களுக்கும்‌ பொருளாதாரத்துக்கும்‌  பயன்தரத்‌ தக்க வகையில்‌ இவ்வாண்டு நிதிநிலை  அறிக்கையும்‌ விவசாயத்‌ துறைக்கான முதல்‌ தனி நிதிநிலை அறிக்கையும்‌  அமைய வேண்டும்‌ - மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌  மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவுறுத்தல்...


திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ அளித்த தேர்தல்‌ வாக்குறுதியை நிறைவேற்றும்‌  பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளைச்‌  சட்டமன்றப்‌ பேரவையில்‌ தாக்கல்‌ செய்ய உள்ளது. தமிழ்நாடு  அரசு வரலாற்றில்‌ முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு  வேளாண்மை மற்றும்‌ விவசாயிகள்‌ நலத்துறை சார்பாகத்‌ தனியே  ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல்‌ செய்யப்படவுள்ளது.


வேளாண்மை  மற்றும்‌ விவசாயிகள்‌ நலத்துறை நிதிநிலை அறிக்கையினை  விவசாயிகள்‌, விவசாய நிபுணர்கள்‌ மற்றும்‌ விவசாய சங்கங்கள்‌  ஆகியோரைக்‌ கலந்தாலோசித்து விவசாயம்‌ செழிக்கவும்‌ விவசாயிகள்‌  அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப்‌ பெறும்‌ வகையில்‌  சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டுமென்று மாண்புமிகு  முதலமைச்சர்‌ அவர்கள்‌ மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்களையும்‌ அரசு  உயர்‌ அலுவலர்களையும்‌ அறிவுறுத்தினார்‌.


மேலும்‌,  பொது நிதிநிலை அறிக்கையினைப்‌ பொருளாதார மற்றும்‌ நிதிநிலை  வல்லுநர்கள்‌, பெருந்தொழில்‌ நிறுவனங்களின்‌ கூட்டமைப்பு பிரதிநிதிகள்‌,  தொழிலதிபர்கள்‌, சிறு, குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களின்‌  கூட்டமைப்புப்‌ பிரதிநிதிகள்‌, வர்த்தக சங்கப்‌ பிரதிநிதிகள்‌, மீனவர்‌  சங்கப்‌ பிரதிநிதிகள்‌ ஆகியோரைக்‌ கலந்தாலோசித்து அவர்களிடமிருந்து  பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக்‌ கொண்டு தமிழ்நாட்டு  மக்களின்‌ வாழ்வில்‌ புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்‌ வகையிலும்‌  அனைத்து தரப்பினரும்‌ பயன்பெறும்‌ வகையிலும்‌ சிறந்த நிதிநிலை  அறிக்கையினைத்‌ தயாரிக்க மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்களையும்‌  அரசு உயர்‌ அலுவலர்களையும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌  அறிவுறுத்தினார்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மற்றும்‌ மக்கள்‌ தொடர்புத்‌ துறை, சென்னை- 9





"அரசு அலுவலர்களின் பணித்திறன் உயர்த்தும் வகையில் பயிற்சிகள்; மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும்” - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தல் - செய்தி வெளியீடு எண்‌:540, நாள்‌:31.07.2021 ...

 செய்தி வெளியீடு எண்‌:540, நாள்‌:31.07.2021


செய்தி வெளியீடு


“அரசு அலுவலர்களின்‌ பணித்திறன்‌ உயர்த்தும்‌ வகையில்‌ பயிற்சிகள்‌; மக்கள்‌ பயன்பெறும்‌ வண்ணம்‌ அரசு சேவைகள்‌ அமைய வேண்டும்‌” - மனிதவள மேலாண்மைத்‌ துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவுறுத்தல்‌.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (31.07.2021 தலைமைச்‌ செயலகத்தில்‌, மனிதவள மேலாண்மைத்துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.


இக்கூட்டத்தில்‌,  அரசு அலுவலர்களுக்குச்‌ சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன்‌ மூலம்‌, அவர்களது பணித்திறனை மேம்படுத்தி, அதன்மூலம்‌ மக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சேவைகளின்‌ தரத்தை உயர்த்த வேண்டும்‌ என்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌. மேலும்‌, போட்டித்‌ தேர்வுகளில்‌ நமது மாநில மாணவர்கள்‌ அதிக அளவில்‌ தேர்ச்சி பெறும்‌ வண்ணம்‌ பல்வேறு வகைப்பட்ட சிறப்புப்‌ பயிற்சிகளை வடிவமைத்து, அரசு பயிற்சி நிலையங்கள்‌ மூலம்‌ வழங்க வேண்டும்‌ எனவும்‌ வலியுறுத்தினார்‌. தமிழ்நாட்டு, மாணவர்களிடையே   மாநில மற்றும்‌ ஒன்றிய அரசுப்பணிகள்‌ தொடர்பான போட்டித்‌ தேர்வுகள்‌ / தகுதிகள்‌ / தேவையான பயிற்சிகள்‌ குறித்த விழிப்புணர்வை முதலில்‌ ஏற்படுத்தவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.


மேலும்‌, குடும்பத்தில்‌ முதல்‌ தலைமுறைப்‌ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள்‌ மூலம்‌ அரசுப்‌ பணியிடங்களில்‌ முன்னுரிமை வழங்கவும்‌, தகவல்‌ பெறும்‌ உரிமைச்‌ சட்டத்தின்கீழ்‌ அனைத்துத்‌ துறைகளிடமும்‌ இணையதளம்‌ மூலம்‌ தகவல்‌ பெறும்‌ வசதிகளை மேம்படுத்தவும்‌ அறிவுறுத்தினார்‌.


அரசு  அலுவலர்களின்‌ மனிதவள ஆற்றலினை மேம்படுத்தவும்‌, தமிழக இளைஞர்களின்‌ அரசு வேலைவாய்ப்பினைப்‌ பெருக்குவதற்கும்‌, அண்ணா மேலாண்மைப்‌ பயிற்சி மையம்‌ மற்றும்‌ போட்டித்‌ தேர்வுப்‌ பயிற்சி மையங்களின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ கட்டமைப்புகளை உயர்த்திடவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.


பவானிசாகரில்‌  உள்ள அடிப்படைப்‌ பயிற்சி மையத்தால்‌ அரசுப்‌ பணியாளர்களுக்கான பயிற்சியினைக்‌ காணொலிக்‌ காட்சி வாயிலாக இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்தலாம்‌ என்றும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.


இந்த  ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, மாண்புமிகு நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.பழனிவேல்‌ தியாகராஜன்‌, தலைமைச் ‌செயலாளர்‌ முனைவர்‌ வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறைக்‌ கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ திரு.ச.கிருஷ்ணன்‌, இ,ஆ.ப., மனிதவள மேலாண்மைத்‌ துறைச்‌ செயலாளர்‌ திருமதி.மைதிலி கே.ராஜேந்திரன்‌, இ,ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9





2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்கப்படும் என்று அரசாணை (2டி) எண்: 15, நாள்: 26-07-2021 வெளியீடு...



 2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்கப்படும் என்று அரசாணை (2டி) எண்: 15, நாள்: 26-07-2021 வெளியீடு...


>>> அரசாணை (2டி) எண்: 15, நாள்: 26-07-2021...


மின்வாரியம் தொடர்பான கருத்துக்கள் & புகார்களை 94987-94987 எண் மூலம்‌ மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு தெரிவிக்கலாம் - அமைச்சர் செந்தில்பாலாஜி...

 


மின் கட்டணம் தொடர்பாக ஜூனியர் விகடன் இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. கட்டணம் செலுத்துவதில் மூன்று வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு மின்வாரியம் வழங்கியிருக்கிறது. 


1) 2019ம் ஆண்டு மே மாதக் கட்டணம் (அல்லது) 

2) முந்தைய மாதக் கட்டணம் (அல்லது)

3) மின் அளவீட்டை அலைபேசியில் படம் எடுத்து அனுப்பி - அதற்குரிய கட்டணம். 


இதனடிப்படையில் இதுவரையில் 14 லட்சத்து 62 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் விமர்சனங்களை அல்லது குறைகளை முன்வைக்கும் போது மின் இணைப்பு எண்ணுடன் குறிப்பிட்டால் மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். சமூக ஊடகங்களில் சொல்லப்படும் இத்தகைய ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகளைத் தேடி அதிகாரிகள் செல்லும்போது எந்தக் குறையும் அங்கு இருப்பதில்லை. மக்களுக்காக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களும் பிறகு எதுவும் எழுப்புவதில்லை. அமைதியாகி விடுகிறார்கள். அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நபர்களின் விவரங்களையும் சேகரித்து, குறைகள் மீது மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும் அல்லது விளக்கம் கொடுக்கும். மின்வாரியம் எடுக்கும் நடவடிக்கைகளையும், தரும் விளக்கங்களையும், ஜூனியர் விகடன், Follow-up கட்டுரையாக வெளியிடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் உங்கள் கருத்துக்கள் & புகார்களை 94987-94987 எண் மூலம்‌ #மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. 

இவ்வாறு அமைச்சர் அவரது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை (Monthly Electricity Bill Calculation Method) வாக்குறுதி - முதல்வர் விரைவில் நிறைவேற்றுவார் - அமைச்சர் தகவல்...

 மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை வாக்குறுதி - முதல்வர் விரைவில் நிறைவேற்றுவார் - அமைச்சர் தகவல்...


மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தேர்தலுக்கு முன் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறையையும் நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.








மீண்டும் உயரும் தொற்று – சென்னையில் 9 இடங்களில் மக்கள் செல்ல தடை...

 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட  அனுமதி இல்லை. 


கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 09.08.2021 வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார் . தற்பொழுது அண்டை மாநிலங்களிலும் , மாநிலத்தின் சில பகுதிகளிலும் , நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.


 அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி , இஆப , அவர்கள் பெருநகர சென்னை காவல் துறை ஆணையாளர் திரு சங்கர் ஜிவால் இகாப , ஆகியோர் தலைமையில் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் இன்று ( 30.07-2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை , புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை , ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை , ஃபக்கி சாஹிப் தெரு , அபிபுல்லா தெரு . புலிபோன் பஜார் , என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை , இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை , வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை , அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க. நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள்  31.07.2021 ( சனிக் கிழமை ) முதல் 09.08.2021 ( திங்கட்கிழமை ) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை , மேலும் , கொத்தவால் சாவடி மார்கெட் 01.08.2021 ( ஞாயிற்று கிழமை ) முதல் 09.08.2021 ( திங்கட்கிழமை ) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Type 2 diabetes நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

 டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள் ஆம், சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க ஒர...