கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம் (Students appearing for 10th Standard Public Examination can download the Hall Ticket from today onwards)...
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம் (Students appearing for 10th Standard Public Examination can download the Hall Ticket from today onwards)...
10ஆம் வகுப்பு தேர்வு- இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்படுள்ளது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு - அரசாணை வெளியீடு (100 Day Work Scheme Wage Hike - Central Government Notification - G.O. Issued)...
100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு - அரசாணை வெளியீடு (100 Day Work Scheme Wage Hike - Central Government Notification - G.O. Issued)...
புதுடெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகையில் இருந்து கூடுதலாக ரூ.7 முதல் ரூ.26 வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதில், மாநிலங்களுக்கு மாநிலம் ஊதிய உயர்வு வேறுபடுகிறது. 2 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ஹரியாணா மாநிலத்தில் தினசரி ஊதியம் ரூ.331-ல் இருந்து ரூ.357 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ரூ.231-ல் இருந்து ரூ.255 ஆகவும், பிஹார், ஜார்க்கண்டில் ரூ.210-ல் இருந்து ரூ.228 ஆகவும், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ரூ.204-ல் இருந்து ரூ.221 ஆகவும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2022-23 நிதி ஆண்டுக்கு இந்ததிட்டத்தின்கீழ் தினசரி ஊதியம் ரூ.281 வழங்கப்படுகிறது. வரும் 2023-24 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.294 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இது 4.63 சதவீத உயர்வு ஆகும்.
ராஜஸ்தானுக்கு அதிக அளவாக 10.39% ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. கேரளா (2.2%),கர்நாடகா (2.27%), மணிப்பூர் (3.59%), அருணாச்சல பிரதேசம் (3.7%), நாகாலாந்து (3.7%), அசாம் (3.93%), தமிழ்நாடு (4.63%), புதுச்சேரி (4.63%)உள்ளிட்ட மாநிலங்களுக்கு 5 சதவீதத்துக்குகுறைவாகவே ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்' வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு : பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு (Allocation of Rs. 1 crore to provide 'snacks' to school students in the evening: announcement in the Greater Chennai Corporation Budget)...
பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்' வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு : பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு (Allocation of Rs. 1 crore to provide 'snacks' to school students in the evening: announcement in the Greater Chennai Corporation Budget)...
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 - 24ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார்.
சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.
முக்கியமாக பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறு தீனி எனப்படும் ‘ஸ்நாக்ஸ்’ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்பில் (Remedial Class) பங்கேற்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2023-2024-ஆம் கல்வியாண்டில் ஜனவரி மாதம் முதல் தேர்வு முடியும் ஏப்ரல் மாதம் வரை மாலையில் சிறுதீனி (அவித்த சுண்டல் அல்லது பயிறு வகைகள்) ரூ.100 இலட்சம் செலவில் வழங்கப்படும்.
3 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட 139 பள்ளிகளுக்கு 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ.15 கோடி செலவில் அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இப்பள்ளிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ள NULM திட்ட பணியாளர்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
சென்னையில் 10 மேல்நிலைப் பள்ளிகளில் ரூபாய் 10 கோடி மதிப்பில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் மாதிரி ஐ.நா.சபை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை 2023-24:
10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில்,கல்விச் சுற்றுலாவாக நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு (எ.கா: ஐஐடி-மெட்ராஸ்,ஐஐஎம்-பெங்களூர்,டெல்லி பல்கலைக்கழகம்) அழைத்துச் செல்லப்படுவர். இதற்காக ரூ.20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை கல்விச் சுற்றுலாவாக, தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
10, 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா ஊக்கத்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்வு.
சென்னையில் பள்ளிகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்....
மாநகராட்சி உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூபாய் 35 லட்சத்திலிருந்து ரூபாய் 40 லட்சமாக அதிகரிக்கப்படும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றப் பேரவையில் விளக்கம் (TNPSC Exam Controversy - Minister Palanivel Thiagarajan explains in Legislative Assembly)...
டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றப் பேரவையில் விளக்கம் (TNPSC Exam Controversy - Minister Palanivel Thiagarajan explains in Legislative Assembly)...
தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார்.
TNPSC தேர்வுகளில் குறிப்பிட்ட சென்டர்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் விளக்கம்.
திருச்சி ஆசிரியர் இல்லம் - தங்குவதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100/- மட்டும் - தொடர்பு எண்கள் & முகவரி (Trichy Teacher's Home - Rs.100/- per day only as accommodation rent - Contact Numbers & Address)...
தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியில் புதியதாக ஆசிரியர் இல்லம் கட்டப்பட்டுள்ளது.
🌟 ந.க.எண்.29500/ஐ/இ3/2012. நாள்-04.07.2017
🌟 மேற்காணும் செயல்முறைகளின் படி ஆசிரியர்கள்/ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் குறைந்த செலவில் தங்கி பயனடைய ஏதுவாக திருச்சி மாவட்டத்தில் கீழ்க்காணும் முகவரியில் ஆசிரியர் இல்லம் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
🌟 அறைகளில் தங்குவதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100/- மட்டும் வசூலிக்கப்படும் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.
🌟 முகவரி:
ஆசிரியர் இல்லம்,
பிளாக் எண்.36,
கஸ்தூரி மஹால் சாலை,
கோ.அபிஷேகபுரம்,
திருச்சிராப்பள்ளி,
(புதிய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்),
(கேம்பியன் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி எதிர் சாலையில்).
🌟 இல்லக் காப்பாளர் தொடர்பு எண் - 9487157922.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.03.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.03.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்,
அதிகாரம்: அழுக்காறாமை,
இயல் : இல்லறவியல்,
குறள் எண் : 163.
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
விளக்கம்:
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
பழமொழி :
Anybody can make history.
எந்த மனிதனும் வரலாறு படைக்கலாம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. என் வாழ்வில் எப்போதும் நேர்மையான முறையில் காரியங்கள் செய்ய முயல்வேன்.
2. என் நண்பர்கள் நேர்மையற்ற காரியங்கள் செய்ய அழைத்தால் நிச்சயம் துணை போக மாட்டேன்
பொன்மொழி :
பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.
பொது அறிவு :
1. தேனீக்களை மட்டும் தின்று உயிர் வாழும் பறவை எது?
ராக்கட் பறவை .
2.நுரையீரல் மூலம் சுவாசிக்கும் கடல் வாழ் உயிரினம் எது?
திமிங்கலம்.
English words & meanings :
kinswoman - female relative. noun. That lady doctor is my kinswoman. உறவுப் பெண்மணி. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தினை மென்மையாக வைத்துக் கொள்வதற்கும், நரம்புகளுக்கு வலுவூட்டவும் உதவுகிறது. மேலும் சளி ,இருமலை குறைக்கக் கூடிய மருந்தாக இந்த கத்தரிக்காய் உள்ளது. மேலும் உடலில் அதிகமாக சேரும் இரும்பு சக்தியினை சமப்படுத்தவும் இது உதவுகிறது. கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலன் காக்கப்படும். சுவாச கோளாறுகள், கல்லீரல் பிரச்சனைகள், மூலம், அனைத்தையும் சரி செய்ய உதவுகிறது.
கணினி யுகம்
Alt + A
Set focus to the first icon in the Suggested actions menu.
Alt + F8
Show your password on the sign-in screen.
மார்ச் 27
உலக நாடக அரங்க நாள்
உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.
யூரி அலெக்சியேவிச் ககாரின்
யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: Ю́рий Алексе́евич Гага́рин; 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.
நீதிக்கதை
கதை :
ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ, மயிலே இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும்.
ஆனால் அந்த குயிலை பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு என்றது.
இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள்.
நீதி :
தனக்கு தெரிந்ததை வைத்து மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது.
இன்றைய செய்திகள்
27.03. 2023
* தமிழ்நாட்டில் H3N2 என்கிற இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் முற்றிலும் இல்லாத நிலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
* வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுக்காக நிலத்தை அளவிடும் பணி தொடக்கம்.
* சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற ஜி-20 நிதி கட்டமைப்பு மாநாட்டில் பணவீக்கம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
* இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்துக்கு சொந்தமான 36 செயற்கைக் கோள்கள், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
* அமெரிக்க நாட்டின் மிசிசிப்பி மற்றும் அலபாமா மாகாணத்தில் அதிசக்திவாய்ந்த டொர்னாடோ சூறாவளி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 23 பேர் இதுவரை இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல்.
* உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் நிகாத் ஜரீன் தங்கம் வென்று சாதனை.
* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீரர்கள்.
* ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: எம்பாப்பே தலைமையில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி.
Today's Headlines
* Health and People's Welfare Minister M. Subramanian has said that the incidence of the H3N2 influenza virus in Tamil Nadu is on the verge of becoming completely non-existent.
* Commencement of land surveying for phase 2 excavation at Vembakkottai.
* Various issues including inflation, climate change, and energy were discussed in detail at the G-20 Financial Framework Conference held in Chennai for about two days.
* 36 satellites belonging to UK's OneWeb were successfully launched from Sriharikota by GSLV Mark-3 rocket.
* A powerful tornado caused severe damage in Mississippi and Alabama. It was reported that around 23 people died due to this natural disaster.
* World Women's Boxing: India's Nikath Zareen bags the gold
* Indian players who won the Swiss Open Badminton Men's Doubles.
* European football qualifier round: France won the first game under the head of Mbappe
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Primary and Middle Schools - Manarkeni App - Use of Textbook Videos on Smart Boards - Instructing - Regarding - DEE Proceedings
தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் - மணற்கேணி செயலி - பாடநூலில் இடம்பெற்று உள்ள பாடங்களின் ...