கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6.14 Lakh Teachers, Govt Servants' Trust-Destroyed Trio Committee Announcement - Is Trio Committee Another Name for 'Can't' - TESTF Condemns



✍️✍️✍️✍️✍️✍️✍️

*6.14 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த மூவர் குழு அறிவிப்பு*


*முடியாது என்பதன் வேறு பெயர் தான் மூவர் குழுவா!*


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்


6.14 Lakh Teachers, Govt Servants' Trust-Destroyed Trio Committee Announcement - Is Trio Committee Another Name for 'Can't' - Tamil Nadu Elementary School Teachers' Federation Condemns


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்வில் பேரிடியாக 2003 ஆம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்கள் நடத்தி வருகின்றன.


இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பணியில் சேர்ந்த சுமார் 38 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்று ஒரு ரூபாய் கூட ஓய்வூதியம் இன்றி வயதான காலத்தில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 


அதிலும் 7000 ஊழியர்கள் உயிரிழந்து அவர்களின் குடும்பங்கள் குழந்தைகள் எவ்வித வருமானமும் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தாமதம் செய்யும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.


இதற்கான தொடர் போராட்டங்களின் விளைவாக 2016 ஆம் ஆண்டு 110 விதியின் கீழ்  அப்போதைய முதல்வர் அவர்கள் ஓய்வூதிய பிரச்சனை பற்றி ஆராய திருமதி ஷீலா ராணி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் குழு அமைத்தார்கள். அவர் ராஜினாமா செய்த பிறகு அந்த குழு திரு ஸ்ரீதர் ஐஏஎஸ் தலைமையில் அந்தக் குழு இயங்கியது. ஓராண்டுக்கு பிறகு அந்த குழு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. 2019 ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற உயர் நீதிமன்ற வழக்கில் அந்த அறிக்கை மீண்டும் உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதைப் பற்றிய விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.


இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் பிரச்சனையை தீர்ப்பதற்காக அரசால் அமைக்கப்பட்ட குழு ஆண்டுகள் பலவாகியும் எவ்வித தீர்வையும் அளிக்கவில்லை


அரசு அமைக்கப்படும் குழுக்களின் அறிக்கைகளின் வரலாறு இப்படித்தான் இருக்கிறது. 


தற்போதைய ஆளும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண் 309 ஆக பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்திருந்தது.  நிதி நிலைமை மற்றும் சிபிஎஸ் திட்டத்தின் பாதகங்கள் பற்றி தெரிந்து அதனால் ஆசிரியர் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவதை பற்றி புரிந்து அரசால் அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி பெரும்பாலான ஆசிரியர்களை அரசு ஊழியர்கள் வாக்களித்திருந்தனர்.


ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெறும் வேளையிலும்  சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. இருப்பினும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அரசின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். 


ஆனால் தற்போது ஓய்வூதியம் பற்றி ஆராய்வதற்காக ஒன்பது மாத கால அவகாசம் வழங்கி குழு அமைத்து இருப்பது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற அரசுக்கு மனமில்லை என வெட்ட வெளிச்சமாகிறது.


மத்திய அரசு ஊழியர்களே ஏற்றுக் கொள்ளாத, பாதகங்கள் நிறைந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை காரணம் காட்டி குழு அமைத்திருப்பது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது. 


எனவே அரசு உடனடியாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும். 


ஆசிரியர்கள் மிகவும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்ட அமல்படுத்தும் அறிவிப்பை அரசு வெளியிடாமல் மேலும் தாமதப்படுத்தினால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்...

இவண்..

*சி அரசு*

 மாநிலத் தலைவர்

 *சு குணசேகரன்*

 பொதுச்செயலாளர்

 *சே நீலகண்டன்*

 மாநில பொருளாளர்

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி..





10-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:966.      

புகழ்இன்றால்; புத்தேள்நாட்டு உய்யாதால்; என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை?

பொருள்:
அவமதிப்பார் பின், மானம் விட்டு நிற்பதால் என்ன பயன்? புகழும் வாராது; மறுமையில் விண்ணுலகும் கிட்டாது.


பழமொழி :
The finest lawn soonest stains.

காய்ந்த  மரமே கல்லடி படும்


இரண்டொழுக்க பண்புகள் :  

* ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு  தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக எண்ணமாட்டேன். ‌

*தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக தேர்வுகளை எழுதுவேன்.


பொன்மொழி :

தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம் தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு கொண்டு வந்துவிடும்.

- பொருளாதார நிபுணர்


பொது அறிவு :

1. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 2024____________

விடை: திரு. டி. ஒய். சந்திரசூட்.  (தற்போது திரு. சஞ்சீவ் கண்ணா)

2. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் 2024____________

விடை:   திரு. சக்தி காந்ததாஸ் (தற்போது திரு. சஞ்சய் மல்கோதரா)


English words & meanings :


Riverbank.    -     ஆற்றங்கரை

Road.     -      சாலை



நீதிக்கதை

பேராசை மனநிம்மதியைக் கெடுக்கும்


ஓர் ஊரில் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். நாள்தோறும் அவன் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அவற்றை மக்களிடம் விற்று, அதனால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தான். இதில் அவனுக்குத் குறைந்த வருமானமே கிடைத்தது. என்றாலும், மனநிம்மதியோடு வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் அவன் வழக்கம் போல் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருக்கும்போது ஓர் அரசமரத்தின் பக்கமிருந்து, “உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா?” என்று குரல் கேட்டது.

விறகுவெட்டி அந்த மரத்தின் அருகில் சென்றான். “நான் இந்த மரத்தில் வசிக்கும் அரக்கன். இந்த அரசமரத்தின் கீழே ஏழு ஜாடி நிறைய தங்கம் இருக்கிறது. உனக்குத் தேவையானால் தோண்டி எடுத்துக்கொள்” என்றது அந்தக் குரல்.


விறகு வெட்டி, “ஏழு ஜாடி தங்கம்” என்றதும் மிகவும் மகிழ்ந்தான். அவசர அவசரமாக அந்த மரத்தின் கீழே பள்ளம் தோண்டினான். அரக்கன் சொன்னது போலவே, பூமிக்குள் ஏழு ஜாடிகள் இருந்தன. விறகு வெட்டி எல்லா ஜாடிகளையும் திறந்து பார்த்தான். அவற்றின் உள்ளே தங்கம் இருந்தது.

ஆனால், ஒரே ஒரு ஜாடியில் மட்டும் பாதியளவுதான் தங்கம் இருந்தது. “பாதிதானே குறைகிறது… இதை எப்படியும் நாம் நிரப்பி விடலாம்” என்று எண்ணி, ஏழு ஜாடிகளையும் தனது வீட்டுக்குக் கொண்டு வந்தான் விறகு வெட்டி. வீட்டுக்கு வந்ததும், ஏற்கெனவே தன்னிடமிருந்த தங்க நகைகளைப் பாதியளவு இருந்த ஜாடியில் போட்டான். பிறகு ஜாடி நிறையத் தங்கம் சேர்க்க வேண்டும் என்பதற்காக முன்பை விடக் கடினமாக உழைத்துப் பணம் சம்பாதித்தான். அதனைத் தங்கமாக்கி அந்தச் ஜாடிக்குள் போட்டான்.

அவன் எவ்வளவு தங்கத்தைச் ஜாடியில் போட்டாலும் ஜாடி நிரம்பவே இல்லை. விறகு வெட்டியும் விடவில்லை, எப்படியாவது அந்த ஜாடி நிரம்பத் தங்கத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று இரவு பகலாக உழைத்தான். இதனால் அவன் நிம்மதி போயிற்று, தூக்கம் போயிற்று. உணவு உண்ணவும் மறந்தான்.

இறுதியில் அவன் துரும்பாக இளைத்து விட்டான். இவ்வாறே தொடர்ந்து செய்து வந்தான். ஒருநாள் அவன் நண்பன் ஒருவனைப் பார்த்தான். அவன் விறகு வெட்டியின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டான். அவனுடைய நிலைமைக்குக் காரணம் என்னவென்று கேட்டான். விறகு வெட்டி நடந்த கதை அனைத்தையும் கூறினான்.

அதற்கு அவன், தங்கத்திற்கு ஆசைப்பட்டு உன் மனநிம்மதியைக் கெடுத்துக் கொண்டயே என்றான்.”  அப்படியானால் நான் இப்பொழுது என்ன செய்வது? என்று கேட்டான் விறகு வெட்டி. இந்த ஜாடிகளை எடுத்துச் சென்று முன்பிருந்த இடத்திலேயே புதைத்து விட்டு, “பேராசையைத் தூண்டி விட்டு மன நிம்மதியைக் கெடுக்கும் உன் ஏழு ஜாடி தங்கத்தை நீயே வைத்துக்கொள்” என்று அரக்கனிடம் கூறிவிட்டு வந்துவிடு என்றான், விறகு வெட்டியின் நண்பன்.

விறகு வெட்டியும் மறுநாள் தன் நண்பன் கூறியபடியே ஏழு ஜாடிகளையும் எடுத்துச் சென்று அரச மரத்தடியில் புதைத்து விட்டு நண்பன் தன்னிடம் கூறியபடியே அரக்கனிடம் கூறிவிட்டு தன் வீட்டிற்கு வந்தான். அதற்கு பிறகு விறகு வெட்டியின் பேராசை முழுவதும் தணிந்திருந்தது. அவன் மனநிம்மதியுடன் வாழ்ந்தான்.

நீதி: ஏதாவதொரு பொருளின் மீது நாம் பேராசை பட்டால் நமது மனநிம்மதிதான் கெடும். எனவே, ஆசையை அளவோடு வைத்துக்கொண்டு வாழப் பழக வேண்டும்.


இன்றைய செய்திகள்

10.02.2025

* மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டுகள் தொன்மையான, பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ககன்யான் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் சிஇ20 என்ற கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனையை மகேந்திரிகிரியில் உள்ள பரிசோதனை மையத்தில் இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னையின் எப்.சி அணி.

* தேசிய விளையாட்டுப் போட்டி:  போல்வால்ட் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை பவித்ரா.


Today's Headlines

* 800 years old,  inscriptions have been discovered at the hill station near Madurai from the period of Pandiyar.

* Transport officials have said that the bus pass will be taken to 35.12 lakh students in the coming academic year.

* ISRO successfully carried out the CE20 Cyogenic engine test used for the Gayanan project at the test center in Mahendirigiri.

* ISL Football: East Bengal beat the FC team in Chennai.

* National Games: Pavithra won gold in Bolwald.


Covai women ICT_போதிமரம்


If old pension scheme is not implemented, Teachers & Government Employees will take alternative decision in the upcoming assembly elections - CPM

 



💥 புதுக்கோட்டை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.


If the old pension scheme is not implemented, the teachers, government servants will take alternative decision in the upcoming assembly elections - CPM


💥 புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிதாவது: சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், திமுக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழிர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


💥 எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்.


💥 குறிப்பிட்ட பிரச்சினையில் எதிர்ப்பு தெரிவிப்பதாலேயே கூட்டணி முறிந்துவிடும் என்ற முடிவுக்கு வரத் தேவையில்லை. ஒவ்வொரு பிரச்சினையிலும் எங்களுக்கென தனி நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, எல்லா பிரச்சினையிலும் ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லை.


💥 வேங்கைவயல் விவகாரத்தில் விசிக மட்டுமின்றி, நாங்களும் அதிருப்தியில் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 


💥 வன விலங்குகளால் பயிர்கள் அழிக்கப்படும்போது, அதை இயற்கைப் பேரழிவாக கருதி, விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், சாகுபடிப் பகுதிக்குள் விலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


💥 திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொருத்தவரை, ஹெச்.ராஜா உள்ளிட்ட இந்து அமைப்பினர் பேசியவை கண்டனத்துக்குரியவை. 


மத நல்லிணக்கத்தை காப்பாற்றும் வகையில், அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் வழிபாட்டு உணர்வை அரசியல் லாபத்திற்காக பாஜக பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்



Transfer of 38 IAS Officers - G.O.No: 502, Dated : 09-02-2025

 

 பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உட்பட 38 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வாலாயம் எண்: 502, நாள் : 09-02-2025 வெளியீடு 


Transfer of 38 IAS Officers including Principal Secretary School Education - Government of Tamil Nadu Ordinance G.O.No: 502, Dated : 09-02-2025 Issued


38 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக திரு. பி. சந்திரமோகன் அவர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





 தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்


தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி, கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை, கூட்டுறவு, உணவு, நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலராக சத்யபிரத சாகு, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்க பதிவாளராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அதேபோல் தமிழ்நாடு மின்விசை உற்பத்தி மேலாண்மை இயக்குனராக ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனராக அன்சுல் மிஸ்ரா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


இதுதவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்ட ஆட்சியராக பவன் குமார், தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக மதுமதி, உயர்கல்வித்துறை செயலராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலராக மணிவாசன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலராக சந்திரமோகன், மனிதவள மேலாண்மைத்துறை செயலராக கோ.பிரகாஷ், பொதுப்பணித்துறை செயலராக ஜெயகாந்தன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்


What happened in Krishnagiri schoolgirl sexual harrasment case? How were the 3 teachers arrested?



 கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நடந்தது என்ன? 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி?


What happened in Krishnagiri schoolgirl sexual harrasment case? How were the 3 teachers arrested?


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக அவர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தலைமையாசிரியரால் வெளிச்சத்துக்கு வந்த குற்றம்

அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராத நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியின் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். பிறகு, பள்ளி ஆசிரியர்களுடன் மாணவியின் வீட்டுக்கு சென்று பெற்றோரையும் சந்தித்துள்ளார்.


அப்போது அந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்திருப்பதாகவும், அதில் ஈடுபட்டது அவரது பள்ளியின் ஆசிரியர்கள் என்றும் மாணவியின் தாய் தெரிவித்துள்ளார். பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் அவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மாணவியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.


இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்குமாறு மாணவியின் தாயாரை அறிவுறுத்தினார். அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்ததாக மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.


மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காகச் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகார் தெரிவித்தார். இது தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டன.


போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு


சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 3 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


"கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று இரவு, தகவல் கிடைத்தவுடன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து ஒரு மாதமாக மாணவி பள்ளிக்கு வராததால் பள்ளி சார்பில் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டதில் சிறுமி பாதிக்கப்பட்டது தெரிய வந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.


அதோடு, பள்ளி ஆசிரியர்களுடைய வழிகாட்டுதலில் சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், காவல் நிலையம் அளித்த வழிகாட்டுதல் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு அலகைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் தெர்வித்தார்.


அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மன நல ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.


தலைமை ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு

இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காரணத்தால் தலைமை ஆசிரியருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி அவரது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.


"சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது போக்சோ 5 (f), 6(1), BNS 329(3), உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் மற்றும் குற்றத்தை வெளிக் கொண்டு வரக் காரணமாக இருந்த தலைமை ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று மாவட்ட காவல் துறை எஸ்பி தங்கதுரை தெரிவித்தார்.


ஆசிரியர்கள் சஸ்பெண்ட்


மாணவி வன்கொடுமை வழக்கில் ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய மூவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


"குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட உள் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் மீது வேறு எந்த மாணவரோ அல்லது ஆசிரியரோ எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. ஆசிரியர்கள் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ஆயினும், மூன்று ஆசிரியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு திரு.முனிராஜ் கூறினார். குற்றப் பத்திரிக்கை பெறப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆசிரியர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்" என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் தெரிவித்தார்.


பொதுமக்கள் சாலை மறியல்

பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியின் முன்பு குவிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர்களை இங்கு அழைத்து வந்தால் மட்டுமே சாலை மறியலைக் கைவிடுவோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கூட்டு பாலியல் வன்கொடுமை 


போலீசார் விசாரணையில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் 3 பேர் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன் காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையில் பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி நீண்ட காலமாக பள்ளிக்கு வராமல் இருந்ததை விசாரிக்க ஆசிரியர்கள் திங்கள்கிழமை அவரது வீட்டிற்குச் சென்றபோதுதான் குற்றம் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் அனைத்து மகளிர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரை போக்சோ வழக்கில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மூவரையும் பள்ளிக் கல்வித் துறையினர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள நிலையில், கைதான ஆசிரியர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவி பயின்ற அரசுப் பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


ஒரு மாதமாக மாணவியின் பெற்றோர் புகார் அளிக்காததது ஏன்?


தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவியின் வீட்டுக்குச் சென்றபோது, மாணவியின் தாய், ஜனவரி முதல் வாரத்தில் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் மூன்று ஆசிரியர்களால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும்  கூறியதாக உள்ளூர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.


ஆனால் இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மறுத்துள்ளார்.


"சிறுமிக்கு கருக் கலைப்பு நடந்ததாக தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


இந்த விவகாரம் குறித்து, குழந்தைகள் நல அலுவலர் கூறுகையில், "குழந்தைக்கு கருக்கலைப்பு செய்யபட்டதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. ஆட்சியரும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் அச்சத்தால் புகார் அளிக்க முன்வரவில்லை," என்று தெரிவித்தார்.


அதோடு, தலைமை ஆசிரியரின் முன்னெடுப்புகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அளித்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெற்றோர் புகார் அளிக்க முன் வந்தததாகவும் அவர் கூறினார்.


மேலும், "பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 24 மணிநேரமும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் அடிப்படைத் தேவைகளுக்கான நிதி உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது" என்றார்.


இந்நிலையில் இந்தக் கொடூரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்றும், இது போன்ற பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.



Sexual Harassment of Govt School Girls - Teacher Arrested in POCSO Act

 

  அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு - ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது


Sexual Harassment of Govt School Girls - Teacher Arrested in POCSO Act


சேலத்தில் ஏற்காடு பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியின மாணவ மாணவிகள் பயிலும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் இளையகண்ணு என்பவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கருமந்துறை, ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதியிலிருந்து பல மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தற்காலிக ஆசிரியராக சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் நெய்ய மலை பகுதியை சேர்ந்த இளைய கண்ணு என்பவர் 2019 முதல் பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரான வெள்ளி மலையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அதில், தன்னிடமும் தனது தோழிகள் 4 பேரிடமும், ஆசிரியர் இளைய கண்ணு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.


அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இப்புகார் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அப்பள்ளியில் சென்று மாணவியரிடம் விசாரித்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போது மாணவியரிடம் பாலியல் சீண்டல் இருந்தால் தெரிவிக்கலாம். உங்களது பெயர் வெளியில் வராமல் நாங்கள் பாதுகாப்போம் என்று கூறியதை அடுத்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அறிவியல் ஆசிரியர் இளையகண்ணுவின் மீது பாலியல் சீண்டல் குறித்து புகார்கள் தெரிவித்தனர். 


இவர் பல ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை இவர் மீது பழங்குடியினர் நலத்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இவருக்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் செல்வாக்கு இருந்ததால் அதிகாரிகள் இவரை கண்டித்து மட்டும் அனுப்பி வைத்துள்ளனர்.


 ஏற்காடு காவல் நிலையத்தில் மாணவி ஒருவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையிலான போலீஸார் சென்று மாணவியரிடம் விசாரணை நடத்தினர். அதில், பாதிக்கப்பட்ட மாணவி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஆசிரியர் இளைய கண்ணு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் பெற்றோரை பிரிந்து விடுதியில் தங்கியிருந்து படித்து வருவதால் மாணவிகளை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து ஆசிரியர் இளைய கண்ணு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையறிந்த அவர் தலைமறைவானார். இந்நிலையில், சென்னையில் நேற்று, இளையகண்ணுவை கைது செய்த போலீசார் ஏற்காடு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


கடந்த ஒரு வாரத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் இரண்டு போக்சோ வழக்குகளில் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


07-02-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-02-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

பொருள்:
ஒரு குண்டுமணியளவு இழிவான செயலை செய்தாலும், மலை போன்ற பெருமையுடையவரும் தாழ்வர்.


பழமொழி :
தன் வினை தன்னைச் சுடும்.  

His own actions will burn him.


இரண்டொழுக்க பண்புகள் :  

* எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.


பொன்மொழி :

எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே, எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு..

----- விவேகானந்தர்


பொது அறிவு :

1.கப்பல்களில் சரியான நேரத்தை கணக்கிட பயன்படும் கருவி எது ?

குரோனோ மீட்டர்(Chronometer)

2. குறைந்த அளவு மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?

  கால்வனோ மீட்டர்(Galvanometer)


English words & meanings :

River.    -     ஆறு

Riverbank.   -   ஆற்றங்கரை


வேளாண்மையும் வாழ்வும் :

விவசாயத்தில், குறிப்பாக, நீர் மேலாண்மை மிகவும் நன்கு திட்டமிடப்பட வேண்டும், குறிப்பாக நீர்ப்பாசனத்தின் அடிப்படையில்.


பிப்ரவரி 07

தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாள்

தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.



நீதிக்கதை

மின்மினி பூச்சியும்,காகமும்

முன்பொரு காலத்தில் காட்டில் மின்மினி பூச்சி ஒன்று வாழ்ந்து வந்தது. அது அங்கும் இங்கும் சந்தோஷமாக ஆடி பாடிக்  சுற்றிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் காகம் ஒன்று அந்த மின்மினி பூச்சி வருவதை பார்த்துக் கொண்டு இருந்தது.  அந்த மின்மினிப்பூச்சி அருகில் வந்தவுடன் தன் வாயை திறந்து அதை சாப்பிட தினமும் முயற்சி செய்தது.

அந்தக் காகத்திடமிருந்து மின்மினி பூச்சி தப்பிக்க, அந்த காகத்திடம் சொன்னது, “நண்பா! நான் சொல்வதை ஒரு நிமிடம் கேள்” என்றது. அந்த

காகமும், “என்னசொல்லு” என்றது.

அதற்கு அந்த மின்மினி பூச்சி சொன்னது, “என்னை மட்டும் உண்பதால் உன்னுடைய பசி எவ்வாறு அடங்கும் என்னை போல் நிறைய பூச்சிகள் இருக்கும் இடத்தை உனக்கு காட்டுகிறேன் என்னுடன் வா” என்றது.

பேராசை பிடித்த காகம் மின்மினி பூச்சியிடம், “சரி நான் உன்னுடன் வருகிறேன் என்னை அழைத்துக் கொண்டு செல்” என்றது. அந்த மின்மினிப்பூச்சி காகத்தை ஒரு இடத்திற்கு கூட்டிக் கொண்டு சென்றது.

அங்கு எரிந்து கொண்டிருந்த தீயில் இருந்து சில நெருப்பு பொறிகள் வெளியே வந்து கொண்டு இருந்தது. அந்த நெருப்பு பொறிகளை மின்மினி பூச்சி, காகத்திடம் காட்டி சொன்னது, “இங்கு பார்த்தாயா என்னை போல் எவ்வளவு மின்மினிப்பூச்சிகள் பறந்து கொண்டு இருக்கின்றன”. பேராசை பிடித்த காகம் எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த நெருப்பு பொறிகளை போய் சாப்பிட ஆரம்பித்தது.

அந்த நெருப்புப் பொறிகளை சாப்பிட்ட காகத்தின் வாய் உடனே எரிய ஆரம்பித்து விட்டது. உடனே அந்த காகம் சொன்னது, “இது என்ன பூச்சி ? இதை சாப்பிட்டால் இப்படி வாய் எரிகிறதே, எனக்கு இந்த பூச்சி எதுவும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பறந்து சென்றது.

நீதி : உடல் பலத்தை விட மனப்பலமே பெரிது.


இன்றைய செய்திகள்

07.02.2025

* முழு கொள்ளளவை எட்டிய பார்சன்ஸ் வேலி அணை: கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.

* பருவகால நோய்கள் அனைத்து காலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க தமிழக பொது சுகாதாரத்துறை நடவடிக்கை.

* வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் 79% நிறைவு என மத்திய அமைச்சர் தகவல்.

* சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்.

* முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி.


Today's Headlines

* Parsons Valley Dam reaches full capacity: Ooty city will not face water shortage in summer.

* Tamil Nadu Public Health Department takes steps to keep necessary medicines in stock at primary health centres as seasonal diseases continue to affect the country at all times.

* Union Minister informs that the work of constructing a fence on the Bangladesh border is 79% completed

* Chennai Open Tennis: Indian pairs advanced to the quarterfinals.

* First ODI cricket match: India easily defeated England.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளில் AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்

   உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளில் AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்  Hi-tech Lab மற்றும் Smart Classகளில் AIக்கள் செய...