கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Federation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Federation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Teachers' Federation Condemns Union Education Minister's Dictatorship Speech

 

43 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்துகின்ற ஒன்றிய கல்வி அமைச்சரின் சர்வாதிகாரப் பேச்சுக்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம்


Teachers' Federation Condemns Union Education Minister's Dictatorship Speech For Harming Education Welfare Of 43 Lakh Tamil Nadu Students


43 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்துகின்ற ஒன்றிய கல்வி அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான்  அவர்களின் சர்வாதிகாரப் பேச்சுக்கு ஐபெட்டோ அகில இந்திய அமைப்பு (AIFETO... ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS' ORGANIZATIONS ) கடும் கண்டனம்... வெளியிட்ட கருத்தினை திரும்ப பெற வலியுறுத்துகிறோம்


*AIFETO... 19.02.2025..*


 *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*



*ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான் அவர்கள் கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பு எல்லையையும் தாண்டி எல்லா அதிகாரமும் பெற்ற ஒரு சர்வாதிகாரி போல் ஒரு பொதுக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.*


 *தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையினையும் மும்மொழி திட்டத்தினையும் ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு 1252 கோடியினையும் நாங்கள் விடுவிப்போம்!.. மும்மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொள்வதில் ஏன் பிடிவாதமாக இருக்கிறீர்கள்!.. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில் ஏன் இவ்வளவு எதிர்ப்புணர்வை காட்டுகிறீர்கள்!.. என்று கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.*


 *தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள் என்ற ஒப்பீடு இல்லாமல் அனைவரும் ஒரே நோக்கத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்!.. மும்மொழி கல்வி திட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம்!.. என்று கண்டனக் கூட்டத்தினை கோரிக்கை முழக்கத்தினை எழுப்பி களத்தில் போராடும் நிலையினை உருவாக்கி இருக்கிறார்.*



 *அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் சார்பில் டெல்லியில் உள்ள அமைச்சர் அலுவலகம் முன்பு கண்டனப் போராட்டத்தினை நடத்தி உள்ளார்கள்.*



 *சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு எத்தனையோ ஒன்றிய கல்வி அமைச்சர்கள் காங்கிரஸ், ஜனதா கட்சி,  பாரதிய ஜனதா, ஆகிய கட்சிகளில் இருந்தவர்கள் பொறுப்பு வகித்து செயல்பட்டு வந்துள்ளார்கள்.. ஆனால் கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல்  அரசியல் சட்ட அமைப்புகளுக்கு எதிராக மாநில மக்களின் மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய கல்வி அமைச்சர் ஒருவர் இருப்பாரேயானால் அவர் தர்மேந்திர பிரதானாகத்தான் இருப்பார்.*



 *ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோதே நாங்கள் இரு மொழி கொள்கையினை ஏற்றுக் கொண்டவர்கள்.  பேரறிஞர் அண்ணா அவர்கள்  கொண்டு வந்த இரு மொழிக் கொள்கை... தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரால் ஆதரிக்கப்பட்ட இரு மொழிக் கொள்கை... பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு முதலமைச்சர்களாக  இருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டில் உள்ளது.*


 *தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உருது ஆகிய  மொழிகளை பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். அவர் அவருடைய தாய் மொழியை அவர் அவர்கள் பேசுகிறார்கள். படிக்கிறார்கள். இன்னொரு மொழியினை தேர்வு செய்து  பொது மொழியாக தேசிய அளவில் உலக அளவில் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதால் ஆங்கில மொழியை படிக்கிறார்கள்.*


 *உலகின் பல நாடுகளில் ஆராய்ச்சி படிப்பு வரையில் தாய் மொழி வழிக் கல்வி போதிக்கப்படுகிறது. தாய்மொழி வழிக் கல்வியில் படித்தவர்கள் உலக அளவில் பல்வேறு பொறுப்புகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரோ அமைப்பின் தலைவர்கள் அதில் பணியாற்றும் விஞ்ஞானிகள் பலர் தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள் தான். தமிழ்நாட்டு அரசு பள்ளியில் படித்தவர்கள் தான்.*


 *நாடாளுமன்றத்தில் நாவன்மையுடன் விவாதங்களில் கலந்து கொண்டவர்கள் பலர் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தான். 140 கோடி மக்களினுடைய பிரதிநிதியாக மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம்  அவருக்கு வரவேற்பினையும் பொது மரியாதையையும் அளித்து வருகிறார்கள். ஆனால் அவர் அங்கு  இந்தி மொழியில் தான் பேசுகிறார். பெருமைக்குரிய மேனாள் பாரதப் பிரதமர்   வாஜ்பாய் அவர்கள் பல்வேறு விவாதங்களில் இந்தியில் தான் பேசி இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பேசி வருகிறார்கள்... இப்போது வளர்ந்துள்ள தொழில்நுட்ப உதவியால் தாய் மொழியான தமிழில் பேசி வருகிறார்கள்.*



 *எந்த மொழியை படிக்க வேண்டும் என்று முதலில் மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டும். இது கொள்கை வழி சார்ந்த முடிவாகும்.  தன் குழந்தைகளை எந்த மொழியில் படிக்க வைக்க வேண்டும் என்ற உரிமை பெற்றோர்களுக்கு தான் இருக்கிறது.*


 *அதை விடுத்து  அவர்கள் பிள்ளைகள்  அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்... ஹிந்தி படிக்கிறார்கள்... சமஸ்கிருதம் படிக்கிறார்கள்  என்பதெல்லாம் அரசியல் ஆகும்.*


 *தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள். 52 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.  56 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். தனியார் பள்ளிகளில் படிக்கும் 30 லட்சம் மாணவர்கள் மும்மொழி கொள்கையை படிக்கிறார்கள்.. ஆனால் அரசு பள்ளியில்  படிக்கும் பிள்ளைகள் மட்டும்  மும்மொழிக் கொள்கை படிக்க எது தடையாக உள்ளது?.. என்று கேள்வி கேட்டுள்ளார்கள்.*



 *தமிழ்நாட்டில் உள்ள மொத்த 56 ஆயிரம் பள்ளிகளில் சுயநிதி தனியார் பள்ளிகள் 16490 தான் இதில் 1235 சிபிஎஸ்சி சுயநிதி தனியார் பள்ளிகளில் மட்டும்தான் இந்தி பாடம் கற்பிக்கப்படுகிறது. வெறும் 3.16% சதவீதம்  படிக்கிறார்கள்.. தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் மாணவர்கள்தான் இந்தி படிக்கிறார்கள்..  தமிழ்நாடு சமச்சீர் கல்விமுறையினை நடைமுறைப்படுத்தி வருகிறது. அறிக்கைகள் வேறு!.. எதார்த்தம் என்பது வேறு!...*



*தமிழ்நாட்டில்  படிக்கும் மாணவர்கள் ஏன் இந்தி படிக்கிறார்கள்? என்று யாரும் கேட்கவில்லை. சமஸ்கிருதம் ஏன் படிக்கிறார்கள் என்று யாரும் கேட்கவில்லை.*



 *ஆனால் மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியை திணிக்க முற்படுவதைதான் தமிழ்நாடு  மொழிப்போர் தியாகிகளின் அடிச்சுவட்டில்   நின்று கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.*



 *தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள 66 பக்கத்திலும் நவீன குலக்கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் புகுத்துவது தான்... விஸ்வகர்மா திட்டம் மாணவர்களை குலத் தொழிலுக்கு  அழைத்து செல்வதுதான் எதார்த்தமான உண்மையாகும்.*



 *தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தலில் நிற்கிறார்கள். 43 லட்சம் மாணவர்களின் கல்வி நிதியினை தேசிய கல்விக் கொள்கை, மும்மொழித்திட்டம் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தினை ஏற்றுக் கொண்டால்தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சர்வாதிகார பேச்சுக்கு...*


 *தமிழன் என்றோர் இனமுண்டு!.. தனியே அவருக்கோர் குணம் உண்டு..*



*செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்ததொரு லாபமுண்டோ?...*


 *என்ற மொழிப்போர் விடுதலை குரல் வழியே தமிழ்நாட்டில் பதிலடி கொடுப்போம்!.*



 *தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி நலனுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுப்பீர்களேயானால் கண்டன குரல்களை விட... வாக்குச்சாவடியில் உங்களுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களின் மனக் குமுறல்கள்  தேர்தலில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும்... என்பதை  ஆசிரியர் இயக்கங்களின் மூத்த  தலைவர் என்ற முறையிலும்  22 மாநிலங்களின் பிரதிநிதிகள் இருக்கக்கூடிய அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு  (AIFETO)  ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS' ORGANIZATIONS  தேசிய செயலாளர் என்ற  முறையில் அனைத்து மாநிலங்களில் நேரடி தொடர்புள்ளவன் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.*


 *மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர்  தர்மேந்திரா பிரதான் அவர்கள் சுயபரிசோதனை செய்து கொண்டு வெளியிட்ட கருத்தினை திரும்பப் பெறுங்கள்...*



 *ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனை காப்பாற்றுவதற்காக... இரு மொழி கொள்கையினை காப்பாற்றுவதற்காக தேசிய கல்விக் கொள்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!.. என்பதில் உறுதி எடுத்துக்கொண்டு களத்தில் நின்று போர்க் குரலை  எழுப்பிக் கொண்டே இருப்போம்!...*



 *விரைவில் டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சர் அலுவலகத்திற்கு முன்பு  மிகப்பெரிய போராட்டத்தினை நடத்துவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*


 *மொழிப்போர் தியாகிகள் ஒரு சங்கரலிங்கனார் ஒரு பொன்னம்பலனார், ஒரு உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் உணர்வுகள் தமிழ்நாட்டில் இன்னமும் பீறிட்டு எழுந்து கொண்டுதான் இருக்கிறது..*


*புகழ்பெற்ற கோத்தாரி கல்வி குழு ஒட்டுமொத்த  GDP இல் 6% நிதியினை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள். ஆனால் ஒன்றிய அரசு 4% சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே நிதியினை ஒதுக்கி வருகிறார்கள்.. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியினை 6% சதவீதமாக உயர்த்த வேண்டுகிறோம்.*


*நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ₹ 2152 கோடி நிதியினை உடன் மத்திய அரசு விடுவித்திட வேண்டுமென்று ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பில்  கேட்டுக்கொள்கிறோம்.*



 *அடுத்த பதிவில் பீகார் மத்திய பிரதேசம் உத்தரப்பிரதேசம் குஜராத் ஆகிய மாநிலங்களின் மொழி உணர்வினையும் கல்வித் தரத்தினையும் விரிவான பதிவாக வெளியிட உள்ளோம் என்பதை தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.*



*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*


6.14 Lakh Teachers, Govt Servants' Trust-Destroyed Trio Committee Announcement - Is Trio Committee Another Name for 'Can't' - TESTF Condemns



✍️✍️✍️✍️✍️✍️✍️

*6.14 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த மூவர் குழு அறிவிப்பு*


*முடியாது என்பதன் வேறு பெயர் தான் மூவர் குழுவா!*


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்


6.14 Lakh Teachers, Govt Servants' Trust-Destroyed Trio Committee Announcement - Is Trio Committee Another Name for 'Can't' - Tamil Nadu Elementary School Teachers' Federation Condemns


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்வில் பேரிடியாக 2003 ஆம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்கள் நடத்தி வருகின்றன.


இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பணியில் சேர்ந்த சுமார் 38 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்று ஒரு ரூபாய் கூட ஓய்வூதியம் இன்றி வயதான காலத்தில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 


அதிலும் 7000 ஊழியர்கள் உயிரிழந்து அவர்களின் குடும்பங்கள் குழந்தைகள் எவ்வித வருமானமும் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தாமதம் செய்யும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.


இதற்கான தொடர் போராட்டங்களின் விளைவாக 2016 ஆம் ஆண்டு 110 விதியின் கீழ்  அப்போதைய முதல்வர் அவர்கள் ஓய்வூதிய பிரச்சனை பற்றி ஆராய திருமதி ஷீலா ராணி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் குழு அமைத்தார்கள். அவர் ராஜினாமா செய்த பிறகு அந்த குழு திரு ஸ்ரீதர் ஐஏஎஸ் தலைமையில் அந்தக் குழு இயங்கியது. ஓராண்டுக்கு பிறகு அந்த குழு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. 2019 ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற உயர் நீதிமன்ற வழக்கில் அந்த அறிக்கை மீண்டும் உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதைப் பற்றிய விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.


இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் பிரச்சனையை தீர்ப்பதற்காக அரசால் அமைக்கப்பட்ட குழு ஆண்டுகள் பலவாகியும் எவ்வித தீர்வையும் அளிக்கவில்லை


அரசு அமைக்கப்படும் குழுக்களின் அறிக்கைகளின் வரலாறு இப்படித்தான் இருக்கிறது. 


தற்போதைய ஆளும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண் 309 ஆக பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்திருந்தது.  நிதி நிலைமை மற்றும் சிபிஎஸ் திட்டத்தின் பாதகங்கள் பற்றி தெரிந்து அதனால் ஆசிரியர் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவதை பற்றி புரிந்து அரசால் அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி பெரும்பாலான ஆசிரியர்களை அரசு ஊழியர்கள் வாக்களித்திருந்தனர்.


ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெறும் வேளையிலும்  சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. இருப்பினும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அரசின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். 


ஆனால் தற்போது ஓய்வூதியம் பற்றி ஆராய்வதற்காக ஒன்பது மாத கால அவகாசம் வழங்கி குழு அமைத்து இருப்பது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற அரசுக்கு மனமில்லை என வெட்ட வெளிச்சமாகிறது.


மத்திய அரசு ஊழியர்களே ஏற்றுக் கொள்ளாத, பாதகங்கள் நிறைந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை காரணம் காட்டி குழு அமைத்திருப்பது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது. 


எனவே அரசு உடனடியாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும். 


ஆசிரியர்கள் மிகவும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்ட அமல்படுத்தும் அறிவிப்பை அரசு வெளியிடாமல் மேலும் தாமதப்படுத்தினால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்...

இவண்..

*சி அரசு*

 மாநிலத் தலைவர்

 *சு குணசேகரன்*

 பொதுச்செயலாளர்

 *சே நீலகண்டன்*

 மாநில பொருளாளர்

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி..





Hon'ble Finance Minister's announcement regarding implementation of Unified Pension Scheme which has created disappointment and dissatisfaction among Teachers and Government Employees - Hon'ble Chief Minister should issue notification for immediate implementation of old pension scheme - TNTF insists



 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளத்தில் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பான மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களது அறிவிப்பு - பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


Hon'ble Finance Minister's announcement regarding implementation of Unified Pension Scheme which has created disappointment and dissatisfaction among Teachers and Government Employees - Hon'ble Chief Minister should issue notification for immediate implementation of old pension scheme - Tamil Nadu Teachers Federation insists



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M.K.Stalin should implement the old pension scheme as per his election campaign promise - Tamil Nadu Elementary School Teachers Mandram insists



 புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்த நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்னும் மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு, ஆசிரியர் அரசு ஊழியர்களிடையே பெரும் பதட்டத்தினை ஏற்படுத்தி கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமது தேர்தல் காலப் பரப்புரை  வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திடல் வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல் 


The announcement by the Hon'ble Tamil Nadu Finance Minister that steps will be taken to implement the new Unified Pension Scheme (UPS) has created a tense atmosphere among the among the Teachers & Government Employees - Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M.K.Stalin should implement the old pension scheme as per his election campaign promise - Tamil Nadu Elementary School Teachers Mandram insists


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் 

(மாநில அமைப்பு) 

பதிவெண்:17/74

அரசு அங்கீகாரம் எண்:991/89

--------------------------------------------


தமிழ்நாட்டின் ஆசிரியர் -அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின்‌ படி பழைய ஓய்வூதியத்திட்டம்‌ 01.04.2003 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்திடல் வேண்டும்!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது!

----------------------------------------------


தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு   

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) தமிழ்நாட்டுக்கு உகந்தவாறு விரைந்து தொடங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு  அவர்கள்  மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற  உறுப்பினர்களின் சட்டமன்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து சட்டமன்றத்தில் 11.01.2025 அன்று தெரிவித்து உள்ளார்கள்.

 

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (ups) மத்திய அரசு நடப்பு 2025ஆம் ஆண்டில் அமல்படுத்துவதற்கு  அறிவிப்பு செய்து உள்ளது என்றும்மத்திய அரசின் இத்தகு ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் மத்திய அரசின் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை  உறுதி செய்யும் வகையில் உள்ளது என்றும்

 இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள், மற்றும் விதிமுறைகள்  வெளியானதும் தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என்றும் மேலும்,

தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தமிழ்நாட்டுக்கு உகந்தவாறு தமிழ்நாடு அரசு செயல்படுத்த நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்றும்  இத்திட்டம் சார்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இசைவுக்கு முன்வைக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்களின் மேற்கண்டவாறான அறிவிப்புகள் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி தந்து உள்ளது. ஆசிரியர்-அரசு ஊழியர்களிடையே பெரும் பதட்டத்தினை - பெருங்கவலையை ஏற்படுத்தி கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.


ஒன்றிய அரசு அறிவித்து உள்ள புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்திற்கு (UPS)   இந்திய நாடு முழுதும் கடுமையான எதிர்ப்புகள் -ஆட்சேபனைகள்  பெருமளவில் எழுந்துள்ளது.

இத்திட்டம் தேவையற்றது;

பயனற்றது  என்றும் வரையறுக்கப்பட்ட பயன்தரும் பழைய ஓய்வூதியத்திட்டத்தினைத் (OPS) தான் நாடு முழுதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளும்-

போராட்டங்களும் வலுத்து வரும்  நிலையில் l, இந்தியாக் கூட்டணியில் இணைந்துள்ள பல்வேறுக்கட்சிகள்  ஒன்றிய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை எதிர்த்து எதிர்வினைகள்  ஆற்றிவரும்  நிலையில் 

மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்களின் 

அறிவிப்புகள் பெருத்த விவாதத்தையும் - விமர்சனத்தையும் ஆசிரியர் -அரசு ஊழியர்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் மீது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கொண்டு இருக்கும் அசைக்க முடியாத பெருத்த நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்தும் உள்ளது.

ஆசிரியர்-அரசு ஊழியர்களை தன்னெழுச்சியாக போராடும் சூழ்நிலைக்கும் தள்ளி விட்டும் உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு,  கடந்த சட்டமன்றத் தேர்தல் காலப் பரப்புரை  வாக்குறுதியின் படி மற்றும் தேர்தல் அறிக்கையின் உறுதிமொழியின் படி தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 01.04.2003 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை  தொடர்ந்து அமல்படுத்திடல் வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் ஆசிரியர் -அரசு ஊழியர்களின் பாதுகாவலர் தலைவர் கலைஞர் அவர்களின்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிடமாடல் அரசு  என்பதை மெய்ப்பித்திடல் வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிடல் வேண்டும் என்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.



இவண்...


பெ.இரா.இரவி

மாநிலத்தலைவர்


முனைவர்-மன்றம்

நா.சண்முகநாதன்

பொதுச்செயலாளர்


முருகசெல்வராசன்

மாநிலப்பொருளாளர்


புதுக்கோட்டை

12.01.2025


Tamilnadu government's announcement regarding pension scheme is a scam - TNPTF General Body Condemns



 ஓய்வூதியத் திட்டம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்பு ஏமாற்று வித்தை - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கண்டனம்


Tamilnadu government's announcement regarding pension scheme is a scam - Tamil Nadu Primary School Teachers' Federation General Body Condemns


தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தி.மு.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் அறிவுத்திருப்பது ஒரு ஏமாற்று வித்தை என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று (12.01.2025) சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடைபெற்றது. 


கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூத்திட்டத்தைச் செயல்படுத்திட ஏதுவாக ஓய்வூதியம் தொடர்பாக ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டவுடன் புதிதாகக் குழு அமைக்கப்படும் என்றும், அந்தக்குழுவின் அறிக்கையைப் பெற்று ஓய்வூதியத்திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் என்றும் அறிவித்திருப்பது மிகப்பெரிய ஏமாற்று வித்தையாகும். தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிவிட்டு தற்போது "ஒன்றிய அரசின் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தைப் பின்பற்றி அது தொடர்பாக குழு அமைத்து அதன் அறிக்கையைப் பெற்று தக்கதொரு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம்" என்று கூறுவது ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் ஏமாற்றும் செயலாகும். 


எனவே, இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற்று தேர்தல் வாக்குறுதியில் எழுத்து மூலமாகத் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக்குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், குறிப்பாக பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பறிக்கும் வகையிலும், ஊட்டுப் பதிவிகளில் மாற்றம் செய்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை மீண்டும் வழங்கிட வேண்டும். ஆசிரியர் தகுதிதேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து தொடக்கக் கல்வித்துறையில் பதவி உயர்வுகள் அமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் நலன் கருதி மாநிலம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் காலமுறை ஊதியத்தில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைக் தடைகளை உடனடியாக நீக்கி ஆணைகள் வெளியிடப்பட வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதலின் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் நடைபெற்றுவரும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தி அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22.02.2025 அன்று STFI சார்பில் சென்னையில் நடைபெறும் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்திலும், 07.03.2025ல் டிட்டோஜாக் சார்பில் சென்னையில் நடைபெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்திலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்வதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


Old Pension Scheme is better - Election period promises should be fulfilled - Tamilaga Aasiriyar Koottani insists

 


பழைய ஓய்வூதிய  திட்டமே (OPS) சிறந்தது - தேர்தல் கால வாக்குறுதியினை சொன்னபடி நிறைவேற்ற வேண்டும் - தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் 


Old Pension Scheme (OPS) is better - Election period promises should be fulfilled - Tamilaga Aasiriyar Koottani insists


*AIFETO... 12.01.2025..*


 *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்- 36/2001.*


🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹


*தமிழ்நாடு நிதியமைச்சர் அவர்கள் மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை (UPS) தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்..*


 *மத்திய அரசு அறிவித்த போதே இரண்டு பக்க அறிக்கையினை முழு விளக்கத்துடன் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பிலும் எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருந்தோம்.*


 *இந்த செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.*


 *நமது கொள்கையே!..*


*CPS ம் வேண்டாம்!...*


*UPS ம் வேண்டாம்!..*


 *தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி..*


*OPS தான் வேண்டும்!.*


 *என்பதை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் AIFETO அகில இந்திய அமைப்பின் சார்பிலும் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.*


 *நிதி அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது போல ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை பற்றி மத்திய அரசே  தெளிவான விளக்கம் இன்னமும் தரவில்லை.*


*25 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவருக்கு  50% பென்ஷன் தருவார்கள். மத்திய அரசு 18% சதவீதம் பங்களிப்பு தருகிறது. ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்து போய்விட்டால் அந்த  குடும்பத்திற்கு அந்த தொகை கிடைக்குமா?. என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.*


 *அதனால் ஒரு ரூபாய் கூட பங்களிப்பு செலுத்தாமல் நடைமுறையில் இருந்து வரும் பழைய ஓய்வூதியத் திட்டமே சிறந்ததாகும்.*


 *தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.*


 *இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் 6 1/4 லட்சம் பேர் சிபிஎஸ் திட்டத்தில் சேர்ந்துள்ளார்கள். அவர்களுக்கு இந்த UPS திட்டம் சிறப்பான திட்டம் போல சிலருக்கு தெரியலாம்.*


 *பழைய பென்ஷன் திட்டத்தில் இருப்பவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பெற்று வருகிறார்கள். அப்படி இருக்கும்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று கூட எண்ணலாம்.*


 *ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS) விட பழைய ஓய்வூதிய  திட்டமே (OPS) சிறந்ததாகும்* 


 *தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக  அழைத்துப் பேசியபோது... சிரித்துக் கொண்டே... எனது பெயருக்கு முன்பு உள்ள "கருணை " என்னிடம் நிறைய இருக்கிறது. பின்பு உள்ள "நிதி" தான் என்னிடம் இல்லை, என்று கூறினார். அப்படி கூறினாலும் அவருடைய ஆட்சி காலத்தில் தான்... மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கியதுடன்.. நான்கு ஊதிய குழுக்களையும் அமைத்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை அமல்படுத்தினார்.. என்பதை நெஞ்சிருக்கும் வரை மறக்கத்தான் முடியுமா?..*


*தேசியக் கல்விக் கொள்கையினை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்!... அதேபோல் மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தையும் (UPS) எதிர்க்கிறோம்!..*


 *தேர்தல் கால வாக்குறுதியினை சொன்னபடி நிறைவேற்ற வேண்டும்!.. நிறைவேற்ற வேண்டும்!.. என்று தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com*


 *அ. எழிலரசன்* 

 *மாநிலத் தலைவர்** 


 *அ.வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்* 


*ஆ.இராஜசேகர் மாநிலப் பொருளாளர்.*


*கு.ரமாராணி, மாநில மகளிர் அணி செயலாளர்.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com*


Tamil Nadu Chief Minister must fulfill his election promise - Teachers Federation insists


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


Tamil Nadu Chief Minister must fulfill his election promise - Tamil Nadu Elementary School Teachers Federation insists


✍️✍️✍️✍️✍️✍️✍️


*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்*

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் *வாக்குறுதி எண் 309* இல்  பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது.


 மத்திய அரசின் ஒப்புதல் வழிகாட்டுதல் நிதி சார்ந்த எந்த நிபந்தனையும் இந்த வாக்குறுதியில் இல்லை.


*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே!* ஒப்புக்கொண்டது போல் இந்த வாக்குறுதியை நம்பி பல லட்சம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் திமுகவுக்கு வாக்களித்திருந்தனர்.


தமிழ்நாடு அரசு அளித்த *வாக்குறுதியை 99% நிறைவேற்றி* விட்டதாக முதலமைச்சர் அவர்கள் செல்லும் இடமெல்லாம் உரையாற்றி வருகிறார். 


வாக்குறுதி *எண் 309ஐ நிறைவேற்றாத போதிலும்* தமிழ்நாடு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் முதல்வர் கொண்டு வந்து விடுவார் என பெருத்த நம்பிக்கையுடன் இருந்தனர். 


ஆனால் நேற்று சட்டசபையில் *நிதியமைச்சர் அவர்களின்* உரையைக் கேட்ட பிறகு *மிகப்பெரிய அதிர்ச்சிக்கு* உள்ளாகியுள்ளனர். 


ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமோ பங்களிப்பு ஓய்வூதிய திட்டமோ ஆசிரியர்களின் அரசு ஊழியர்களின் கோரிக்கை கிடையாது. *இரண்டுமே ஏமாற்றுத் திட்டங்கள்* என்பது தெளிவாக பல அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே சரியான தீர்வாக அமையும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டியது குறித்து முடிவெடுக்க வேண்டியது மாநில அரசு மட்டுமே.


மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதாக கூறுவது காலம் கடத்துவதற்கும், தட்டிக் கழிப்பதற்குமான உத்திகள் என்பதை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அனைவரும் உணர்வார்கள். முடியாது என்பதை நேரடியாக கூறாமல் வேறு வார்த்தைகளில் *மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள்* கூறியிருக்கிறார்கள். ‌


10 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் வாக்குகளை பெற்று அமைந்த அரசு என்று முதல்வர் அவர்களே கூறியிருக்கிறார்கள். எனவே வள்ளுவர் வாக்கின்படி செயல்படுவதாக கூறும் அரசு ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை ஏமாற்ற நினைக்காமல் துரோகம் செய்யாமல் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்று இந்த அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது

இவண்.

*சு.குணசேகரன்*

 *பொதுச் செயலாளர்* 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


Is Tamilnadu government a government in favour of teachers - government employees - pensioners - workers? Or negative government? - Teacher's Federation Questioned


தமிழ்நாடு அரசு, ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் - ஓய்வூதியர்கள் -  தொழிலாளர்களின் சாதக அரசா? அல்லது பாதக அரசா? - ஆசிரியர் கூட்டணி கேள்வி


 *மத்திய அரசு ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள்- ஓய்வூதியர்கள்-  தொழிலாளர்களின் விரோத அரசு என்றால்.....*


*AIFETO...19.11.2024*


*தமிழக ஆசிரியர் கூட்டணி*

*அரசு அறிந்தேற்பு எண் :36/2001*


 *தமிழ்நாடு அரசு சாதக அரசா? அல்லது பாதக அரசா? மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால் திராவிட மாடல் அரசு சொன்னதையும் செய்யவில்லை!சொல்லாததையும் செய்யவில்லை! இதை அறியாதவர் எவரும் இல்லை!*


 *தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுமா?ஆளுங்கட்சி- எதிர்க்கட்சிகளின் அறிக்கைப் போரில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் மனம் மகிழும் வண்ணம் அறிவிப்புகளை முதலமைச்சர் அவர்கள் வெளியிட உள்ளார் என திமுக அரசு தரப்பில் செய்திகள் வெளிவந்தது? தெரியுமா?*


 *அரசை நடத்துவது முதலமைச்சர் தலைமையில் உள்ள அமைச்சரவையா?தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள நிதித்துறை முதன்மைச் செயலாளரா?*


 *ஓய்வூதியர்களின் குறைகளை கேட்பதற்காக பிரிக்கப்பட்ட துறை மீண்டும் இணைக்கப்பட்டது. பணி ஓய்வு பெறும் பென்ஷன்தாரர்கள் மற்றும் குடும்ப பென்ஷன்தாரர்கள் குறைகளை அளிக்கவும் அவர்களின் நலன்களை பாதுகாக்கவும் 1994 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் நிதித்துறையில் இருந்து தனியாகப் பிரித்து ஓய்வூதியர் இயக்குனரகத்தை உருவாக்கினார்கள்....*

 *இந்த இயக்ககத்தின் இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர், கணக்கு அலுவலர், உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 88 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு முறைப்படி இயங்கி வந்தது. மறு சீரமைப்பு என்ற முன்மொழிவை ஏற்று பென்ஷன் இயக்குனரகம் அரசு தகவல் தொகுப்புமையம், சிறுசேமிப்புத் துறை மூடப்பட்டது என்பதற்கு பதிலாக கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கப்பட்டது என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுசேமிப்புத் துறையினை மாவட்ட ஆட்சியாளர்களாலும் சென்னையில் மாநகராட்சி ஆணையராலும் நிர்வகிக்கப்படும். வெளிவந்துள்ள  அரசாணையின்எண் : G. O (ms)No.343 நாள்: 12. 11. 2024 Finance  (Treasuries and Accounts-III Department ).*

 

 *புதிய ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் 2003 ஏப்ரல் மாதம் முதல் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டு இன்றுவரையில் 6.14 லட்சம் பேர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காலத்தில் விடியல் அரசில் விடிவு வராதா என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள்...*


 *ஓய்வூதியர் இயக்குனரகமே கலைக்கப்பட்டதற்கு அடையாளம் - வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை நிதித்துறை முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தெரியுமா?முதலமைச்சர் நினைப்பதையெல்லாம் செய்து முடிக்கிற மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கு தெரியாமலா இந்த அரசாணை வெளிவந்துள்ளது இவர்களின் முழு நம்பிக்கைகுரியவர் அரசின் சாதனைகளின் அடையாள முகவரி நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தான் என்பது நாட்டுக்கும் தெரியும்... மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் நமது வேதனை உணர்வில் பங்கேற்பவராக இருப்பார் என்பதுடன் பிரச்சனைக்கு தீர்வு காண்பவராகவும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உணர்வில் பயணத்தினை தொடர்வோம்.*


 *இனி பழைய ஓய்வூதியத்திட்டம் தமிழ்நாட்டில்* *அமல்படுத்துவதற்கு வாய்ப்பிருக்குமா என்ற ஐயம் எண்ண அலைகளாக பீறிட்டு* *வெளிவருவதைக் காண முடிகிறது* .


 *முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர்  அவர்கள் காலத்தில் சம்பாதித்து வைத்திருந்த வாக்கு வங்கியின் கருவூலத்திலும் சேதாரம் ஏற்படுவதற்கு அனுமதிக்கலாமா?*

 *முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் பெற்றெடுத்த தவப்புதல்வன் மாண்புமிகு மு. க. ஸ்டாலின்* *அவர்களின் அரசு பாதுகாக்க வேண்டாமா?* 

 *50 தொகுதிகளை நிர்ணயிக்கின்ற* *வாக்கு வங்கியினை  பாதுகாத்திட* *வேண்டுகிறோம்* !

 *பாதுகாத்திட* *வேண்டுகிறோம்* !!


 *மத்திய அரசு கொண்டுவந்த CPS திட்டத்தில் அரசின் பங்குத் தொகை 14%, நியமனதாரரின் பங்களிப்பு 10% இரண்டையும் சேர்த்து ஓய்வு பெற்றால் ஒரு* *தொகையினை ஓய்வூதியமாக வழங்கி வருகிறார்கள். பணிக்காலத்தில் இறந்து போனால் ஒரு தொகையினை பணிக்கொடையாக வழங்கி வருகிறார்கள்..*



     *ஆனால் தமிழ்நாட்டில் அரசின் பங்குத்தொகை 10% ஊழியர்களின் பங்குத்தொகை 10% என பணிக்காலத்தில் சேர்த்து வைத்த தொகையினை பணிநிறைவு பெறும்போது சிரமப்பட்டு பெறவேண்டியதாக உள்ளது* .


 *மத்திய அரசு கொண்டுவந்துள்ள UPS திட்டம் அரசின் பங்குத் தொகை 18%  25* *ஆண்டுகளுக்குப் பிறகு  50% ஓய்வூதியம் தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.* *நம்மைப் பொறுத்தவரை* 

 *CPS- ம் வேண்டாம்.....* 

 *UPS- ம் வேண்டாம்....* 

 *OPS மட்டுமே* *அமல்படுத்தப்பட வேண்டும்* . *நம்பிக்கை* *வளரட்டும்!* 

*தேர்தல் நெருங்கி வரும் நாளில் வாக்குவங்கியின் பலத்தினை அரசிற்கு உணர வைப்போம்!*

*வென்று காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன்....*


 *அரசின் மீது அக்கறை* *கொண்டுள்ள இயக்கத்தின் மூத்த தலைவர்*

*வா. அண்ணாமலை*

 *அகில இந்தியச் செயலாளர்* *(ஐபெட்டோ* )*

( *ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)* 

 *அலைபேசி :-9444212060* 

 *மின்னஞ்சல் :annamalaiaifeto@gmail.com*

 *தமிழக ஆசிரியர் கூட்டணி* 

 *ஆர்வலர் மாளிகை* 

 *52, நல்லதம்பி தெரு* 

 *திருவல்லிக்கேணி* 

 *சென்னை -600005*


Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned


முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம் 


Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned


 முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் உதகை பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது. கண்டனத்துக்குரியது.

@@@@@@@@@@@@@@@@

*AIFETO   15.11.2024.*

*தமிழக ஆசிரியர் கூட்டணி

 அரசு அறிந்தேற்பு எண்:-

  36/2001.*

@@@@@@@@@@@@@@@@


முறைசாரா கல்வி இணை இயக்குனர் திரு.பொன். குமார் அவர்கள் உதகையில் 14.11.2024 மாலையில் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டு சுமார் இரண்டு மணி நேரம் கட்டுப்பாடு இல்லாமல் மனம் போன போக்கில் வாய்க்கு வந்தபடி ஆசிரியர்களை ஒருமையில்  பேசியுள்ளார். 


அவர் படித்தது, இளமைப் பருவம் , அவருடைய குடும்ப வரலாற்றினை தன்னையும் அறியாமல் தற்புகழ்ச்சியாக நீண்ட நேரம் பேசி இருக்கிறார். ஆசிரியர்களிடம் பொது அறிவு வினாடி வினா கேட்பது போல சம்பந்தமில்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு சங்கடபடுத்தி இருக்கிறார். நாட்டுப்புற கதைகள் சிலவற்றை சம்பந்தமில்லாமல் கூறியிருக்கிறார். சில BEO க்களை  கூப்பிட்டு உங்களுக்கு பிடிக்காத ஆசிரியர்கள் எவரேனும் இங்கு இருந்தால் அவர்களிடம்  நான்கு கேள்விகளை கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். 


ஒர் ஆசிரியை அழைத்து நீங்கள் சில கேள்விகளை இங்கு உள்ள ஆசிரியர்களிடம் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். குழந்தைகள் தின விழாவில் ஆசிரியர்களை பெருமைப்படுத்த வேண்டியவர் ஆசிரியர்களை வசைபாடி இருக்கிறார். ஒருமையில் பேசுவது ஒருவருக்கு மட்டும் சொந்தமல்ல. அதே ஒருமையில் ஆசிரியர்கள் இணை இயக்குநரிடம் பேசி இருக்க வேண்டும். ஆசிரியர்களுடைய தலைமைப் பண்பு அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளது. 


இனிவரும் கூட்டங்களில் அவர் தரைக்குறைவாக பேசினால் அதே பாணியில் வேகமாக பதில்கள்  போய் சேரும். தமிழ்நாடு அரசு  அதிகாரப் பதவிகள் எதுவும் இவருக்கு ஒதுக்காமல் உள்ளது இதுதான் காரணம் என்று தெரிகிறது. அதேபோல மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களுக்கு இவரை அனுப்பாமல் தவிர்த்து வருகின்ற உண்மையும் நமக்கு தெளிவாக தெரிகின்றது. 


ஒருங்கிணைந்த கல்வித் திட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய மாவட்டங்களில் பல பள்ளிக் கட்டிடங்கள் கட்டி அவற்றிற்கு டைல்ஸும் பதித்து  கொடுத்திருக்கிறார். இரண்டு மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட மாவட்ட அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டி கொடுத்திருக்கிறார். அதை எல்லாம் ஆசிரியர்கள் பாராட்டத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த மாவட்டத்திற்கு இவர் சென்றாலும் பிரச்சனைகள் இல்லாமல் வந்ததில்லை. 


இனி இவர் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல்  தவிர்த்து அவர் மரியாதையை அவரே காப்பாற்றிக் கொள்ள 'நா' காக்க வேண்டும். 


ஒரு மூத்த இயக்க தலைவர்.


வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com


It is not appropriate for the DMK government to issue a statement only repeating the promises it made during the election - A policy decision on it, a clear stand should be taken immediately - Tamil Nadu Secretariat Staff Association report



தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு அறிக்கை மட்டும் வெளியிடுவது ஏற்புடையதல்ல. அது குறித்த கொள்கை முடிவினை, தெளிவான நிலைப்பாட்டை உடனடியாக எடுக்க வேண்டும் - தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் அறிக்கை


It is not appropriate for the DMK government to issue a statement only repeating the promises it made during the election. A policy decision on it, a clear stand should be taken immediately - Tamil Nadu Chief Secretariat Staff Association report



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Immediate implementation of Old Pension Scheme - TNPGTA


---------------------------------------

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - TNPGTA மாநிலக் கழகத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கண்டன அறிக்கை மற்றும் பத்திரிக்கை செய்தி -10.11.24

--------------------------------------


*பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் சார்ந்து ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசு ஆனது நிதிசாராத கோரிக்கைகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும்  என்ற அடிப்படையில் வெளிவந்திருக்கும் செய்தி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதார சமூக பாதுகாப்பான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு எதிரான முடிவாக இருப்பதால் ஆட்சி பொறுப்பிற்கு வந்து மூன்றரை  ஆண்டு காலத்திற்கு மேலாக  தருவோம் தருவோம் என்று நம்பிக்கை அளித்து ஒட்டுமொத்த அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் ஏமாற்றிய அரசாக இருப்பதை தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ஏற்க இயலாது. தமிழக அரசுக்கு TNPGTA பேரியக்கத்தின் சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.*


எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தற்போதைய முதல்வர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக தேர்தல் அறிக்கை 309 ல் வெளியிட்டு விட்டு, தற்போது அதற்கு மாறான நிதிசாராத கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறுவது என்பது நம்பிக்கை மோசடியாக பார்க்கிறோம்.


*அறிஞர் அண்ணா காலத்திலிருந்து வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதியத்தை ஆட்சிக்கு வந்தவுடன் வழங்குவதாக அறிவித்துவிட்டு, மேலும் டாக்டர் கலைஞர் அவர்கள் வழங்கிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகையை ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக கொடுக்கிறோம் என்று அறிவித்துவிட்டு தற்போது அரசின் சக்கரங்களாக விளங்கும் அடி நாதமாக விளங்கும் ஆசிரியர் அரசு ஊழியர்களை ஏமாற்றும் விதமாக, தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக -"நாங்கள் செய்யாமல் யார் செய்வார்கள்"* என்று சொல்லிக்கொண்டே தள்ளி தள்ளி போட்டுக்கொண்டு அடுத்த கட்ட தேர்தல் வேலைக்கு தயாராகி விட்டது தமிழகஅரசு.

அடுத்த கட்ட அரசு அமைப்பதற்கு தேர்தல் அறிக்கைக்கு தேர்தல் பணிக்கு குழு அமைத்திட  தொடங்கிவிட்டது.  


*20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தின் மீது எந்தவிதமான உறுதியான முடிவினை அறிவிக்காமல், இழுத்தடிப்பு செய்து ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோபங்களை தணிக்கும் செயலாக மாற்றி போராட்டவேகத்தை குறைப்பது என்பது தொடர்கதையாக இருக்கிறது.*


 அதிமுக அரசு அதன் தொடர்ச்சியாக திமுக அரசு என  மாறி மாறி  நம்மை ஆட்சி புரிந்தாலும் ஆட்சியாளர்களின் செயல்களை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்ல.. தொடர்ந்து வாய்ஜாலமாக பேசி ஏமாற்ற நினைத்தால் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்..


*கடந்த அதிமுக அரசானது ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு எதிராக பேசியதும், தற்போதைய அரசு நம்பிக்கை அளித்து இழுத்தடிப்பு செய்யும் துரோகத்தையும் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..*


 *பென்ஷன் என்ற வார்த்தையை உச்சரிக்காத ஒன்றிய அரசு கூட பழைய ஓய்வூதிய திட்டம் என்ற முறையான திட்டத்தை அறிவிக்காவிட்டாலும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்ற ஏற்கனவே இருந்த நிலைக்கு ஒரு நிலை முன்னோட்டமாக அறிவிப்பு எடுத்திருக்கும் நிலையில், தமிழக அரசானது எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் தமிழக ஆசிரியர் அரசு ஊழியரிடம் இருந்து ஓய்வூதிய திட்டத்திற்காக பிடிக்கப்பட்ட பணத்தையும் PFRDA லும் சேர்த்திடாமலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிப்பதற்கு எந்த தடையும் இல்லாத நிலையிலும், பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக போராடாத பல மாநிலங்களில் கூட பழைய ஓய்வூதிய திட்டம்  அமல்படுத்தியிருக்கப்பட்டிருக்கும் வேளையில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக, இருபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்த நிலையில் அதையெல்லாம் நாங்கள் புரிந்துள்ளோம் நடைமுறைப்படுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு தற்போது ஏமாற்றும் துரோக வேலையை மறைமுகமாக இழுத்தடிப்பு மூலம் தமிழக அரசு ஆனது தமிழக மண்ணில் அரங்கேற்றி வருவதை ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்  ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.*


கார்ப்பரேட் நலன்களுக்காகவும் பெரும் முதலாளி நலன்களுக்காகவும் செயல்படும் அரசாக அமைந்து தொழிலாளர்களின் நலன்களை காவு கொடுக்கும் அரசாக இருக்கும் என்றால் தொழிலாளர்களுக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை..


*தமிழக மண்ணில் தீவிரமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டம் நடைபெறும்.. அப்படிப்பட்ட தீவிரமான போராட்டம் நடைபெறுவதற்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முழு முயற்சியும் முன்னெடுப்பும் எடுக்கும்..*


*அரசுக்கு ஆதரவாக ஜால்ரா அடிக்கும், நன்றிகளை மட்டும் தெரிவித்துக் கொண்டிருக்கும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை  அம்பல படுத்துவோம்..*

*உண்மையான போராட்ட குணம் கொண்ட ஜாக்டோ ஜியோவாக புனரமைக்கப்பட்டு வீரஞ்செறிந்த போராட்டங்களை அறிவிப்பு செய்து போராட்டத்தின் மூலம் கோரிக்கைகளை வெல்வதற்கு திட்டமிடல் செய்வோம்.*


அதேபோன்று *இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் ஜாக்டோ ஜியோவிற்கு  கண்டனங்களும், அதே வேளையில் கோரிக்கை அறிவிப்பு மாநாடாக டிசம்பர் 15ஆம் தேதி தமிழக அரசு ஆனது சிபிஎஸ்  ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளுக்காக மாநாடு நடத்தி போராட்ட அறிவிப்பு செய்வது என்று முடிவாக்கப்பட்டுள்ளது.*

*தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக போராட்ட குணம் உள்ள ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்புகளை வலுப்படுத்தி தீவிரமான போராட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.. திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டம் ஊதிய முரண்பாடு உயர்கல்விக்கான ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை அறிவிக்காமல் வருகின்ற தேர்தலில் வெல்ல முடியாது என்கின்ற நிலைக்கு தமிழக மண்ணில் போராட்டம் கட்டி எழுப்பப்படும் என்ற செய்தியை TNPGTA பேரியக்கத்தின் மூலம் தமிழக அரசுக்கு தெரியப்படுத்திக்கொள்கின்றோம்..*


*ஒன்றுபடுவோம்..* *போராடுவோம்..*

 *வெற்றி பெறுவோம்..*

*இறுதி வெற்றி நமதே.!*

நன்றி 


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


மாநில கழகத்தின் சார்பாக...

*பொ. அன்பழகன்* 

மாநில பொதுச் செயலாளர்

*TNPGTA*


The news that the Financial demands including the old pension scheme are unlikely to be met - Teachers' Anxiety - Teachers' Fedaration Reaction


பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று வெளியான செய்தி - ஆசிரியர்களின் ஆதங்கம் - ஆசிரியர் கூட்டணியின் பதிவு


The news that the Financial demands including the old pension scheme are unlikely to be met - Teachers' Anxiety - Teachers' Fedaration Reaction 


 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான ஆய்வினை மேற்கொண்டாரா? இல்லையா?*


*AIFETO.*

*நாள்: 08.11.2024.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண் : 36/2001.*


*08.11.2024 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்வித் துறையினை ஆய்வு செய்து  சில கோரிக்கைகளை அறிவிக்க இருக்கிறார்கள் என்று ஒரு செய்தி வலுவாகவே பரப்பப்பட்டு வந்தது நடைபெற்றது என்ன..?*


*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநிலம் முழுவதும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இன்று காணொளி மூலமாக திறந்து வைத்தார்கள். மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை செயலாளர், இயக்குனர்களும் கலந்து கொண்டு இருப்பார்கள். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களை செய்தியாளர்கள் சந்தித்தபோது முதலமைச்சர் அவர்கள் சில கோரிக்கைகளை அறிவித்தார்களா என்று கேட்டபோது நிதி சார்ந்த கோரிக்கைகளை தற்போது அறிவிப்பதில் சிரமம் இருப்பதாக தனியாக கேட்ட செய்தியாளரிடம் அறிவித்ததாக நமக்கு தகவல் வந்தது. சில ஊடகங்கள் அந்த தகவலையும் வெளியிட்டார்கள்.*


*உடன் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றவில்லை. அன்றாடம் சித்தரவதை எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சீற்றம் கொண்டு அனல் தெறிக்க பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.*


*உடனே ஒரு சிலர் அப்படி முதலமைச்சர் எதுவும் சொல்லவும் இல்லை; ஊடகங்களில் வந்து செய்தியையும் திரும்ப பெற்றுக் கொண்டு விட்டார்கள். நாம் நினைப்பதை கேட்பதை நமது ஆட்சி உறுதியாக செய்து முடிப்பார்கள் என்று குரல் கொடுக்கிறார்கள். அரசுக்கு ஆதரவான சங்கங்கள் அந்தக் காலத்திலிருந்தே இருந்து வருகின்றன .ஆனால் நம்மை நம்பி இருக்கின்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் முகங்களை பார்க்காமல் ஆள்பவர்களின் முகங்களை மட்டுமே பார்த்து அரசு வழக்கறிஞர்கள் போல பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த குறையும் அரசின் மீது சொல்லக்கூடாது என்று வாதாடுகிறவர்கள் இருக்கும் வரையில் எந்த கோரிக்கையும் நிறைவேறப் போவதில்லை.*


*நிதி சார்ந்த கோரிக்கைகள் மட்டுமல்ல நிதி சாராத கோரிக்கைகளும் நிறைவேற்றப் போவதில்லை.*


*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் பொறுத்தவரையில் தன்னை சந்திப்பவர்களுடைய தலைமையில் தான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் 21 லட்சம் வாக்குகளும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 1.75 லட்சம் வாக்குகளும் அணிவகுத்து நிற்கிறார்கள் என்ற நம்பிக்கையிலும் உறுதியாக நிற்கிறார்கள்.* 


*90 விழுக்காடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அவருடைய குடும்பத்தார் என அனைவரும் எதையும் செய்யாத அரசு அன்றாடம் தொடர்ந்து புதிய புதிய அறிவிப்புகள் மூலம் மன அழுத்தத்தினை ஏற்படுத்தி வரும் செயல்களை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாடலை அன்றாடம் பாடி வருகிறார்கள்.*


*2026 பொதுத் தேர்தல் வரை எதுவும் செய்யவில்லை என்றாலும் அடுத்த முறை ஆட்சி அமைப்பது நமது அரசு தான். வெளிநாட்டு தொழில் முதலீடுகள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்ததற்கு பிறகு சொன்னதையும் செய்வார்கள் சொல்லாததையும் செய்வார்கள் என்று நம்மிடம் உறுதியளித்து பேசும் சங்கத் தலைவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.* 


*போராட்டங்களால் வெற்றி பெற்றது தான் சங்கத்தின் வரலாறு. போராடாமல் பார்த்துக் கொள்வதற்காக சங்கத் தலைவர்கள் இருப்பதை தமிழ்நாட்டின் வரலாற்றில் எங்களால் காண முடிகிறது.* 


*எங்களைப் போன்றவர்கள் திராவிட முன்னேற்றக் கழக கட்சி உணர்வில் ரத்த ஓட்டத்தில் இரண்டறக் கலந்து பயணம் செய்து வருபவர்கள். ஆனால் கட்சியா? சங்கமா? என்றால் நூறு விழுக்காடு சங்கத்தின் பக்கம் நின்று தான் எங்கள் பொது வாழ்வை நடத்தி வந்துள்ளோம்.* 


*நீண்ட கால எங்களுடைய பொது வாழ்வில் அரசியல் கூட்டணி கட்சிகள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இதுவரை கைவிட்டதில்லை. எந்த சூழ்நிலையிலும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்கு வங்கியினை இழக்கக்கூடாது என உறுதியாக இருந்தார்கள். பாதிக்கப் பட்டவர்கள் நாம் கரம் கோர்த்து நிற்போம். ஆட்சியின் தலைமை சுய பரிசோதனை செய்வதற்கு நம்முடைய உறுதிமிக்க உணர்வுகள் சான்றாக அமையட்டும்..! அமையட்டும்..!*



*வரவேற்க வேண்டியதை வரவேற்று என்றும் நன்றி பாராட்டுவார்கள் நாங்கள். சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் பதிவு செய்து வருபவர்களும் நாங்கள் தான்..! என்றும் உள்ளதை உண்மையை உரக்கச் சொல்வோம்..!*


*ஆசிரியர் இயக்கங்களில் மூத்த தலைவர் இதயப் பற்றாளர்,*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*


பயிற்சி அளிக்க ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதிமொழி என்ன ஆயிற்று? - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


 எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சியை கைவிடுக - பயிற்சிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதிமொழி என்ன ஆயிற்று? - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*


நாமக்கல்

24-10-2024



தொடக்கக்கல்வித்துறையில் நடைபெறும் நிகழ்வுகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் முதலமைச்சர் அவர்களும் உடனடி கவனம் செலுத்தி ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் மட்டும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*



எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சியை கைவிடுக !



பயிற்சிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதி மொழி என்ன ஆயிற்று ?



ஒரே நேரத்தில் ஆசிரியர்களுக்கு 


கலைத் திருவிழா 

எண்ணும் எழுத்தும்

இணையதளப் பயிற்சி

எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சி

வாசிப்பு இயக்கம் 

இணையதள பயிற்சி

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில், மன அழுத்தத்தில் பணியாற்ற வைப்பது ஏன்?


அதிகாரிகள் சிந்திப்பார்களா? 


அமைச்சர் தன் கவனத்தில் கொண்டு குறைகளை நீக்குவது எப்போது?


கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை எண்ணும் எழுத்தும் எனும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது


இத்திட்டத்திற்கு ஒவ்வொரு பருவத்திற்கும், பருவம் ஆரம்பிப்பதற்கு முன்பாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டு வந்தன.


இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற டிட்டோஜாக் பேச்சுவார்த்தையின் போது டிடோஜாக் அமைப்பின் கோரிக்கையின் ஒன்றான பயிற்சிக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.


இனிவரும் காலங்களில் பயிற்சிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்த மாட்டோம் என்றும் விருப்பமுள்ள ஒரு சில ஆசிரியர்களை மட்டும் பயன்படுத்துவோம் என்றும் உறுதியளித்தார்.


மேலும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களும், ஆசிரியர்கள் இனி பயிற்சிக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் போதுமான அளவுக்கு இருக்கிறார்கள். அவர்கள் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படுவார்கள்.


போதுமான பயிற்சியாளர்கள் இல்லாதநிலை ஏற்படும் போது மட்டும் விருப்பமுள்ள ஆசிரியர்களை பயன்படுத்துவோம் என்று உறுதியளித்தனர்.


அதற்கு முற்றும் மாறாகவும் இனி இணைய வழியில் மட்டுமே பயிற்சிகள் என்ற மாண்புமிகு அமைச்சர் அவர்களின் உறுதிமொழிக்கு மாறாகவும் தற்பொழுது கல்வித்துறை அதிகாரிகள் நேரடி பயிற்சி அளிப்பது மட்டுமல்லாது இணையதள பயிற்சியும் இணைந்து அளிக்கிறார்கள். 


நேரடி பயிற்சிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என கொடுக்கப்பட்ட உறுதிமொழிக்கு மாறாக முற்றிலும் மாநில, மாவட்ட, வட்டார அளவிலான பயிற்சி கருத்தாளர்களாக ஆசிரியர்களே நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


அமைச்சர் மற்றும் கல்வித்துறை செயலாளர் அவர்கள் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக இணையதள பயிற்சி கொடுத்த பின்பு நேரடி பயிற்சியை ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது.


பருவ விடுமுறைக்குப்பின் இரண்டாம் பருவம் இம் ( அக்டோபர்) மாதம் ஏழாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. 


இன்றோடு (24-10-24) ஏறக்குறைய 12 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக நடைபெற்றுள்ள நிலையில் இந்த 12 நாட்களுக்குள் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கல்விப் பணி அல்லாத பணியை செய்யக்கூடிய சூழ்நிலையை கல்வித்துறை உருவாக்கி உள்ளது.


இலவச பாடபுத்தகங்கள். இலவச நோட்டுகள், விலையில்லா புத்தகப் பைகள், எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் இவற்றையெல்லாம் தினந்தோறும் பெற்று வந்து ஆசிரியர் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வழங்கி வந்தனர்.


அது மட்டுமல்ல 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கடந்த பருவத்தில் நடைபெற்ற பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளின் தொடர்ச்சியாக இந்த வாரம் குறுவளமைய அளவிலும் வட்டார அளவிலும் பின்பு மாவட்ட அளவிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இந்த 13 நாட்களில் பல நாட்களை கலைத்திருவிழாக்கள் கலந்துகொள்வதிலும், அதற்கான “பயிற்சியிலும் கற்றல் கற்பித்தல் நாட்கள் காவு கொண்டு விட்டன என்பதே நிதர்சனமான உண்மை.


“இதே நாட்களில் தான் எண்ணும் எழுத்தும் இணையதள பயிற்சி 3 நாட்கள், வாசிப்பு இயக்க இணையதள பயிற்சி 2 நாட்கள் என குறிப்பிட்ட கால அளவுக்குள் பயிற்சிகள் முடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு ஆசிரியர்கள் எந்நேரமும் அவர்களின் செல்போன் மூலம் இணையதளத்தில் இருக்கக்கூடிய நிலைமையை உருவாக்கியுள்ளார்கள்.


தற்பொழுது இந்த வாரத்திலேயே எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சி மட்டுமல்லாமல்...


25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும்...


அதற்கான ஆயத்த பணிகளை, தொடர்ந்து இரண்டு நாட்களாக செய்ய வேண்டும் என்றும் தொடர் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.


இதனால் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கடும் மன உளைச்சலிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.


பற்றாக்குறைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 25ஆம் தேதி சாரணர் இயக்க பயிற்சியும் அதுமட்டுமல்லாது வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மட்டும் "தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம்" பாடல் பாடும் போட்டி 1 முதல் 12 ஆம் வகுப்புக்குவரை எந்த வித பிரிவு நிலையும் அல்லாது, 


பள்ளி அளவில் 

குறுவளமைய அளவில், 

வட்டார அளவில் 

மாவட்ட அளவில் 


என இம்மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என அழுத்தம் தரப்பட்டு அனைத்து ஆசிரியர்களும் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் என்பது உண்மையே.


தொடர்ந்து கற்றல் கற்பித்தல் பணியை மட்டும் செய்ய வேண்டிய ஆசிரியர்கள் இது போன்ற பிற பணிகள் மற்றும் பயிற்சிகளாலும் கற்றல் கற்பித்தல் பணியை செய்ய முடியாமல், அரசுப் பள்ளியை நம்பி வந்த ஏழை எளிய மாணவர்களுக்கும் போதிய கற்றல் கற்பித்தல் பணியில் ஈடுபட இயலாத நிலையினால், பெற்றோர்களிடமும் சமுதாயத்திலும் அரசு ஆசிரியர்கள் பெரும் அவப்பெயரை பெறும்வகையில் அதிகாரிகள் நடந்துகொள்வது வேதனையாகவும் கண்டிக்கத் தக்கதாகவும் அமைந்துள்ளது.


அதுமட்டுமல்லாமல் இது அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதுடன், அரசுப்பள்ளிகளின் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் மத்தியில் தகர்ப்பதாகவும் உள்ளது.


எனவே உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் பள்ளிக் கல்வித்துறையின் மீது உடனடியாக கவனம் செலுத்தி ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணிகள் மட்டும் வழங்கிடவும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சியை ரத்துசெய்து, டிட்டோஜாக் பேச்சுவார்த்தையின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி பயிற்சிகளுக்கு இனிவரும் காலங்களில் ஆசிரியர்களை பயன்படுத்தாத நிலையினை உறுதிசெய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறோம். 


ஆசிரியர் சங்க மூத்த பொதுச்செயலாளர்,

செ.முத்துசாமி Ex MLC

பொதுசெயலாளர்.





கற்பனையில் மிதக்கும் தொடக்கக்கல்வித்துறை...

 கற்பனையில் மிதக்கும் தொடக்கக்கல்வித்துறை...


*AIFETO.*

*நாள்: 05.10.2024.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண் : 36/2001.*


*தேசிய கல்விக் கொள்கையினை எதிர்ப்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் தொடக்கக் கல்வித் துறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடத்திய முதல் பருவ தேர்வு முறையும் மதிப்பெண்களை பதிவு செய்யும் நடைமுறையும் ஏற்றுக்ஸகொள்ளவே முடியாத செயல்பாடாக உள்ளது.*


*தொடக்கக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறிவு மதிப்பெண்கள் TNSED SCHOOLS செயலியில் உள்ளீடு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்  செயல்முறை கடிதம் ந.க.எண் 018919/ஜெ2/2024 நாள் 03.10.2024 அன்று வெளியிட்டுள்ளார்கள்.*


*தொகுத்தறி மதிப்பெண்கள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை 10 கேள்விகளுக்கும் ஒரு கேள்விக்கு 6 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொரு கேள்விக்கும்  தனித்தனியாக மதிப்பெண்கள் உள்ளீடு செய்யுமாறும், 4 ,5 வகுப்புகளுக்கு 12 கேள்விகளுக்கும் ஒரு கேள்விக்கு 5 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் உள்ளீடு செய்யுமாறும் அதுவும் 09.10.2024 ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளே 07.10.2024 ஆகும்.*


*எழுத்துக்கும் செயலுக்கும் இடைவெளி இருத்தல் கூடாது. தொடக்கக்கல்வித்துறையில் ஒன்றியம் வாரியாக உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எத்தனை? எத்தனை?. ஓராசிரியர் பள்ளிகள் எத்தனை? மூன்று ஆசிரியர் பள்ளிகள் எத்தனை? ஐந்து ஆசிரியர் பள்ளிகள் எத்தனை? வகுப்பிற்கு 30 மாணவர்கள் 40 மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் எத்தனை? இதெல்லாம் புள்ளி விவரத்தினை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.*


*தொடக்கக் கல்வித் துறையில் பத்தாம் வகுப்பு ,12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்  திருத்தும் முறையினை ஏதும் அறியாத தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு  நடைமுறைப் படுத்த வேண்டுமா?  அப்படி  நடைமுறைப் படுத்துவது ஏற்புடையதாக ஒரு போதும் அமையாது.*


*எமிஸ் பணிகளை மேற்கொள்வதற்கு பணியாளரை நியமனம் செய்தும் ஆசிரியர்களை இப்பணியினை மேற்கொள்ள சொல்வது ஏற்புடையதாகுமா..?*


*மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றி இருப்பீர்கள் என்று நம்புகிறோம். மாவட்ட ஆட்சியாளர்கள் பள்ளிகளில் பார்வையிட்டு வெளியிட்டு வருகிற கருத்தொற்றுமை நமக்கு ஒருபோதும் அமைய வேண்டாம்.*


*தொடக்க கல்வி இயக்குனர் அவர்களும், இணை இயக்குனர் அவர்களும் ஒரு கடிதத்தினை அனுப்புவதற்கு முன்னர் நாம் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றுகிறோம் என்பதனை நினைவில் கொண்டு செயல்படுத்த பெரிதும் கேட்டுக் கொள்கிறோம்.*


*பள்ளி தொடங்கி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இம்மாணவர்களுக்கு இவ்வளவு பெரிய சோதனையா..?*


*மறு பரிசீலனை செய்ய வேண்டுகிறோம். வாய்ப்பு இல்லை எனில் எக்ஸ் தளத்திலும், மீடியாக்கள் மத்தியிலும், பொது வெளியிலும் இந்த நிலைமையினை வெளியிடுவதை தவிர வேறு வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. யதார்த்த நடைமுறையினை பகிர்ந்து கொள்கிறோம்.*


*வரவேற்க வேண்டியதை வரவேற்று சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் பார்வைக்கு கொண்டு வருகின்ற நிலைப்பாட்டை உடைய இயக்கத்தின் மூத்த தலைவர்,*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*


TETOJAC talks in the morning - One day salary deduction announcement in the evening video meeting - Can the primary education sector turn into a riot sector? - What is the Honorable Minister of Education going to do? - Teacher's Federation Report...


காலையில் டிட்டோஜாக் பேச்சுவார்த்தை - மாலையில் காணொளி கூட்டத்தில் ஒருநாள் சம்பளப்பிடித்தம் அறிவிப்பு - தொடக்கக் கல்வித்துறை கலவரத்துறையாக மாறலாமா? - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன செய்யப் போகிறார்? - ஆசிரியர் கூட்டணி அறிக்கை...


 *மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன செய்யப் போகிறார்?..*


*காலையில் டிட்டோஜாக் பேச்சுவார்த்தை!.. மாலையில் காணொளி கூட்டத்தில் வேலைநிறுத்தம்.. ஒருநாள் சம்பளப்பிடித்தம் அறிவிப்பு!.. தொடக்கக் கல்வித்துறை கலவரத்துறையாக மாறலாமா?..*


*AIFETO...23.09.2024.*


 *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண் 36/2001.*


 *மாண்புமிகு பள்ளிகளுக்குறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 23.9.2024 இன்று நடந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று டிட்டோஜாக் உயர்மட்டக் குழு தலைவர்கள் கருத்தொருமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.*



 *இன்று காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்துப் பதிவினை நாளை மாலை விரிவாக  வெளியிட இருக்கிறோம்!..*



 *இன்று மாலையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற காணொளி கூட்டத்தில் பத்தாம் தேதி டிட்டோஜாக் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான ஊதியப் பிடித்தத்தை இந்த மாதமே பிடித்தம் செய்து அறிக்கை அளித்திட வேண்டும் என்று அழுத்தமான குரலில் தெரிவித்துள்ளார்.*



 *பேச்சுவார்த்தையில் விவாதம் செய்தவாறே தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் காணொளிக் கூட்டத்திலும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ₹5400/- தர ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடை இருந்தாலும் இல்லாவிட்டாலும் யாரெல்லாம் ₹5400/-  தர ஊதியம் பெற்றிருக்கிறார்களோ அவர்களுடைய பணிப்பதிவேட்டை எடுத்துக்கொண்டு நாங்கள் வரச் சொல்கின்ற நாளில் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.*



 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழுத்தத்தின் பெயரில்தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பதை நாம் அறிகிறோம்!..  சென்ற வாரம் வரை அரசாணை 243 இல் திருத்தம் செய்ய முடியாது என்று கூறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தேவையான திருத்தத்தை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் வெளியிட  உள்ளதாக தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களும் 100% அதில் உறுதியாக உள்ளார் என்பதை அறிகிறோம்.*


 *இன்றைய பேச்சுவார்த்தையில் நடைபெற்ற எல்லாவற்றையும் தனிப்பதிவாக இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு வெளியிட உள்ளோம்.  போராட்டத்தினை ஒத்தி வைத்தது தவறு என தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் நினைக்கிறாரா? இல்லை அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்று நினைக்கிறாரா?..*


 *பரிந்துரை செய்ய வேண்டிய தொடக்கக் கல்வி இயக்ககம்  எதிர்க்கட்சி வழக்கறிஞர்களைப் போல் செயல்படுவது முறையுமல்ல; மாண்புமல்ல; என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.*



 *அவரவர்களுக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை எல்லாம் மனம் போன போக்கில் பதிவு செய்திட வேண்டாம்!.. 100% உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்பதை உங்கள் மீது கொண்டுள்ள உரிமை உறவுடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.*



 *சில நேரங்களில் கூட்டமைப்புகள் எடுக்கிற முடிவுகள் பாதுகாப்பான முடிவாகத்தான் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். வெளிப்படையாக எல்லாவற்றையும் பதிவு செய்ய இயலாது!.*


 *தனிப்பதிவில் நடந்தவற்றை தொகுத்து வெளியிட உள்ளோம். அதுவரை பொறுத்திருப்போம்!..*



*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடன் தனிக்கவனம் மேற்கொண்டு தொடக்கக்கல்வி இயக்ககத்தின் முடிவுக்கு தீர்வு காண வேண்டுகிறோம்!..*



*இயக்கத்தின் மூத்தத் தலைவர்...*


*அண்ணன் வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com. தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5.*


தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் குறைந்தபட்சம் தலைமைப் பண்பு கூட அறியாதவரா ? ஆசிரியர் கூட்டணி நிர்வாகி வேதனை...

 



தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் குறைந்தபட்சம் தலைமைப் பண்பு கூட அறியாதவரா ?  வேதனையுறுகிறோம்...


*AIFETO*


*நாள்: 07.09.2024.*


*செப்டம்பர் 5 முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள். நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.* 


*மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பு செய்து ஆசிரியர் பணியினை மாணவர்களை உருவாக்குகிற புனிதமான பணி என்றும் புகழாரம் சூட்டி பாராட்டி வருகிறார்.*


*பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு விருதுகள் வழங்கி ஆசிரியர்களை, ஆசிரியர் பணியினை பாராட்டி மகிழ்ந்து கொண்டாடி வருகிறார்கள்.*


*பாரதப் பிரதமர் அவர்கள் டெல்லியில் இருந்த போதெல்லாம் அவரது இல்லத்திற்கு தேசிய விருது பெற்ற ஆசிரியர்களை அழைத்துப் பாராட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டு பெருமைப் படுத்தி வருகிறார்.*


*தமிழ்நாடு ஆளுநர் மேதகு ஆர்.என்.இரவி அவர்கள் கிண்டி ஆளுநர் மாளிகையில் 05.09.2024 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசிய வரிகளை அவரே சுய பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.*  


*தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மோசம், கற்பித்தல் திறன் மோசம், தேசிய சராசரியினை விட கீழே போய்விட்டது. தமிழக பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து விட்டது வேதனையுறுகிறேன் - ஆளுநர்.*


*ஆளுநர் செல்லுகின்ற இடமெல்லாம் வெறுப்புணர்வினை திட்டமிட்டு வெளியிட்டு வருவது கேட்பதற்கு இது ஒன்றும் புதியதல்ல..!*


*ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் இப்படி எங்கள் தாய்த் தமிழ்நாட்டினை பற்றி, கல்வித்தரத்தை பற்றி மிக மோசமாக பேசியபோது கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியர்கள், கல்வியாளர்களில் ஒருவருக்கு கூட தமிழ் இன உணர்வு இல்லாமல் இருந்திருப்பார்களா..?*


*மேதகு ஆளுநர் அவர்களே..! பாஜக ஆளும் மாநில அரசுகளான குஜராத், உத்தரப்பிரதேசம் உட்பட கல்வியின் தரம், மாணவர்களின் கற்றல் திறன் பற்றி பட்டியல் போட்டு விவாதிக்கலாமா.? 18 ஆண்டு காலமாக தேசியச் செயலாளராக (National Secretary, All India Federation of Elementary Teachers' Organisations' ) இருந்து வருகிறேன். வெளிப்படைத் தன்மையுடன் வெளிக்கொணர தயாராக உள்ளோம்.*


*ஆசிரியர் தினத்தன்று இப்படி பேசலாமா..? என்ற இடம் பொருள் ஏவல் கூட தெரியாத மாநிலத்தில் பயின்று வந்தார்களா..? ஆளுநர் என்று நினைக்கத் தோன்றுகிறது.*


*ஆசிரியர் =ஆசு-குற்றம்; இரியர் - நீக்குபவர், குற்றத்தை நீக்குபவர் அறிவொளி தருபவர்.*


*ஆளுநர் ஏற்கனவே வகித்த பதவி காவல் கண்காணிப்பாளர் பதவி என்று எண்ணுகிறோம்.*


*பார்ப்பவர்களை எல்லாம் குற்றவாளிகளை தேடும் கண் கொண்டு பார்ப்பவர்கள், அவருக்கு பிடித்த பாரதத்தினை நினைவுக்கு கொண்டு வந்தால் துரியோதனன் வர்க்கத்தினருக்கு நல்லவர்கள் கண்ணுக்கு தெரிய மாட்டார்கள். நல்லதும் கண்ணுக்கும் படாது*


*தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தை பற்றி குறை சொல்லும் ஆளுநர் அவர்களே..! தமிழ்நாட்டின் சார்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும், உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் பாடத்திட்டம் பற்றி விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்கள். நாங்களும் விவாதிக்க தயாராக உள்ளோம். வாய்ப்பினை தாருங்கள். தமிழ் மண்ணில் முளைத்த புல் பூண்டுகள் கூட உங்களை ஏற்றுக் கொள்ளாது. எதிர்ப்புணர்வு புயல் வீச வாய்ப்பளிக்காதீர்கள்.*


*ஆசிரியர் தினத்தன்று தமிழ்நாட்டு ஆசிரியர்களை, ஆசிரியர் பணியினை, அறப்பணியினை தரம் தாழ்த்தி பேசியதை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.* 


*சத்திரபதி சிவாஜி சிலை நொறுங்கி கீழே விழுந்து விட்டது. 100 முறை பாரதப் பிரதமர் அவர்கள் மன்னிப்பு கேட்கிறார். அறம் நின்றுதான் அதன் கடமையைச் செய்யும்.*


*ஆசிரியர் தினத்தன்று ஆசிரிய சமுதாயத்தை சேதாரப்படுத்தியது புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயக் குரலும் உங்களுக்கு எதிராக ஒலிக்கட்டும்...!ஒலிக்கட்டும்...!*


*தொடர்ந்தால் தொடர்வோம்.*


*ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர்,*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher

ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teach...