கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்



தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்


செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு, செந்தில்பாலாஜியின் துறைகளில் மின்சாரத் துறை கூடுதலாக ஒதுக்கீடு


வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு, செந்தில்பாலாஜி கவனித்து வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கீடு


பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்


அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு. பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு


இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.




2025-2026 பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்



2025-2026 பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் இன்று (25.04.2025) வெளியிடப்பட்ட பல்வேறு  அறிவிப்புகள்


Various announcements released today (25.04.2025) in the 2025-2026 School Education Department Grant Request



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 20 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.



>>> அறிவிப்புகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகள்:


அரசுப் பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்' ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.


பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும்.


கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ  மாணவியர்களுக்குக் ”கலைச்சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.


தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.


10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


புதிய தொடக்கப் பள்ளிகள் 13 தொடங்கப்படும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். 


மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.


 ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் வெளியிடப்படும்.


 ரூ.30 கோடி மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும்.


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும்.


இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் வகையில் 10,12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.


TNSED Attendance Appல் 25-04-2025 வெள்ளி முதல் தொடக்க & நடுநிலைப் பள்ளிகள் வருகைப் பதிவு செய்யும் வழிமுறை


TNSED Attendance  Appல் 25-04-2025 வெள்ளி முதல் தொடக்க & நடுநிலைப் பள்ளிகள் வருகைப் பதிவு செய்யும் வழிமுறை


🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

TNSED Attendance  Appல் இன்று 25.04.2025  வெள்ளி முதல்


💥 All Primary schools & All Middle Schools:


* Today Status - Fully not working


* Select - Reason Others


* Mark - Staff attendance Only


🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸


உங்கள் குழந்தை அரசு மருத்துவக் கல்லூரிகள், JIPMER, AIIMS, IIT & NIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டுமா?



 உங்கள் குழந்தை அரசு மருத்துவக் கல்லூரிகள், JIPMER, AIIMS, IIT & NIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டுமா?


உங்கள் குழந்தை அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை படைக்க வேண்டுமா ?


IIT & NIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உங்கள் குழந்தை படித்து வாழ்வில் உயர வேண்டுமா ?


அப்படியானால் உடனே உங்கள் குழந்தைகளை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்து விடுங்கள்.👍👍👍


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு


தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் 👇👇👇


1 முதல் 12 வகுப்பு வரை அனைத்து குழந்தைகளுக்குமான திட்டங்கள்👇👇👇


1. பாடப் புத்தகங்கள்

2. புத்தகப் பைகள்

3. பேருந்து பயண அட்டை

4. வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.75000 வைப்புத் தொகை (TN Power Finance Corpn. Ltd.FD)

5. விபத்து நிவாரணத் திட்டம்.


1 முதல் 10 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கான திட்டங்கள்👇👇👇


6. நோட்டு புத்தகங்கள்

7. காலணிகள் Shoes and Socks,

8.  சத்துணவுத் திட்டம்.


11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டும்👇👇👇


9. மிதிவண்டிகள்


10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டும்👇👇👇


10. Special Cash Incentive Scheme


6 முதல் 10 வகுப்புகள் வரை 👇👇👇


11. தேச வரைபட புத்தகம். (Atlas)


6 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு மட்டும் 👇👇👇


12. Geometry Boxes. (Also for New Students in Class 7 and 8)


1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் 👇👇👇


13. சீருடை 4 Sets.

14. woollen Sweaters (only for Hilly Regions)

15. Rain Coats Boots Socks (only for Hilly Regions)


1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு மட்டும்


16. CM Breakfast Scheme.

17. Crayon Class 1 & 2 & Colour Pencils class 3-5


👉👉1 முதல் 12 வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றால் தமிழ்நாடு அரசுப்பணியில் 20% PSTM - Persons Studied Under Tamil Medium முன்னுரிமை.


👉👉6 - 12 வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு


BE MBBS BDS BVSc BFSC BSC Agri BALLB போன்ற தொழில் படிப்புகளில் 7.5 % இட ஒதுக்கீடு.


எந்த கல்லூரியில் சேர்ந்து படித்தாலும் மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் & தமிழ்ப்புதல்வன் திட்டம்.


👉👉👉 எட்டாம் வகுப்பில் NMMS தேர்வு எழுதும் வாய்ப்பு. தேர்ச்சி பெற்றாம் மாதம் ரூ.1000 உதவித் தொகை 4 ஆண்டுகளுக்கு.


👉👉9 ஆம் வகுப்பில் TRUST தேர்வு. வருடம் ரூ.1000 ஊக்கத் தொகை.


👉👉 10 ஆம் வகுப்பில் முதலமைச்சர் திறனறித் தேர்வு. தேர்ச்சி பெறும் 1000 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை.


👉👉11 ஆம் வகுப்பில் தமிழ்த் திறனறித் தேர்வு. தேர்ச்சி பெறும் 1500 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத் தொகை.


👉👉 12 ஆம் வகுப்பில் "நான் முதல்வன் திட்டம் " மூலம்

CLAT UCEED NID NIFT JEE CUET NCET CEE NEET FDDI IMU -CET NFSU-NFAT IISER - IAT NISER-NEST NATA ISI CMI IPMAT JIPMAT NCHM - JEE AIIMS JIPMER NIMHANS ICI IITTM APU BITSAT AIISH NIEPMD MSE MSSW போன்ற போட்டித் தேர்வுகள் மூலம் குழந்தைகளை நாட்டின் தலை சிறந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பது.👍👍👍 

மேலும் தகவல்களுக்கு 14417


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-04-2025

  


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-04-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம் :உழவு

குறள் எண்:1036

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

பொருள்:
உழவர் தம் தொழில் செய்யாது கை மடக்கியிருப்பாராயின் அனைவரும் விரும்பும் உணவும் இல்லை; துறவிகளுக்கு துறவுமில்லை.



பழமொழி :

இதயத்தின் மகிழ்ச்சி முகத்தை மகிழ்விக்கும்-

The joy of the heart makes the face merry


இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :

நல்லவர், கெட்டவர் என யாரையும் தீர்மானித்து விடாதீர்கள், சூழ்நிலை என்பது  எவரையும் தலைகீழாய்  புரட்டி  போடும்  வல்லமை  கொண்டது.


பொது அறிவு :

1. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

விடை :விக்ரம் சாராபாய்.       

2. விக்ரம் சாராபாய் முயற்சியால் தொடங்கப்பட்ட நிறுவனம் எது?

விடை : இஸ்ரோ (ISRO)


English words & meanings :

Reception.     -    வரவேற்பு

Relatives.      -     உறவினர்


வேளாண்மையும் வாழ்வும் :

வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கு நீர் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.


ஏப்ரல் 24

ஜி. யு. போப் அவர்களின் பிறந்தநாள்

ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்



சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் அவர்களின் பிறந்தநாள்

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar), பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாகக் கருதப்படுகிறார்.[5].[6] இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989 இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே. மேலும் பன்னாட்டுச் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார்.



நீதிக்கதை

மெக்ஸிகோ தேசத்து மீனவன்...

மெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன் கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும், பாட்டுப் பாடிக்கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த துடிப்பானஇளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான்.

கடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் மீனவனைஅதே நிலையில் பார்த்தான். இளைஞனுக்குப் பொறுக்கவில்லை.

மீனவனிடம் சென்று "ஐயா! இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே!" என்றான்.

அதற்கு மீனவன் "காசு கிடைச்சா...?" என்று கேட்டான்.

இளைஞன் "காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும்பணம் அதிகமாகசம்பாதிக்கலாம் என்று சொன்னான்.

மீனவன் "அதிகம் சம்பாதிச்சா....?" என்று கேட்டான்.

இளைஞன் பொறுமையாக "ஐயா, நீஙகள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்" என்று சொன்னான்.

மீனவன் "ஏற்றுமதி செஞ்சா...?" என்று திருப்பிக் கேட்டான்.

இளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக் கொண்டு "ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம். " என்றான்.

மீனவன் மறுபடியும் "இதெல்லாம் கிடைச்சா..." என்றான்.

இளைஞன் "உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின் அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்" என்றான்.

"நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்" என்றான் மீனவன்.

நீதி: மகிழ்ச்சி என்பது அவரவர் மனதை பொறுத்தது. நம்மை சுற்றி உள்ள பொருட்களில் இல்லை.



இன்றைய செய்திகள்

24.04.2025

* தமிழகத்தில் சூரியசக்தி மின்னுற்பத்தி 10 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பு.

* ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த (பிடிஏ) பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்கக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

* போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப்.26-ல் நடக்கும்: வாடிகன் அறிவிப்பு.

* பிரெஞ்சு ஓபனுக்கு முன்னோட்டமாக களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்பெயினில் நேற்று தொடங்கி மே 4-ந்தேதி வரை நடக்க உள்ளது.

* உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை சிம்ரன்பிரீத் கவுர்.


Today's Headlines

* Tamil Nadu's solar power generation increased to 10,000 megawatts.


50 candidates who received training under the Tamil Nadu government's 'Naan Mudhalvan' scheme have passed the Civil Services Examination, including IAS.

* Prime Minister Modi and US Vice President Harris have welcomed the significant progress in the bilateral trade agreement (BTA) negotiations between India and the United States.

* Pope Francis's funeral will be held on April 26th: Vatican announcement.

* The Madrid Open tennis tournament, a clay-court event serving as a prelude to the French Open, began yesterday in Spain and will continue until May 4th.

* Indian shooter Simranpreet Kaur won a silver medal at the World Cup shooting competition.


Covai women 

ICT_போதிமரம்


Summer vacation - DSE Proceedings, Dated: 23-04-2025


 பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அறிவித்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 23-04-2025


Summer vacation declared after completion of school final exams - Proceedings of the Director of School Education, Date: 23-04-2025


கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு


DSE - School Summer Leave from 25.04.2025 to 01.06.2025


Schools Reopen on 02-06-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்


பள்ளிக் கல்வி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பள்ளி இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவித்தல் தொடர்பாக



அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைய உள்ளது. 25,04.2025 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30-04.2025 எனத் தெரிவிக்கப்படுகிறது.


2025-2026 ஆம் கல்வியாண்டில், 02.06.2025 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே. 02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பள்ளிக் கல்வித் துறை


Kalanjiyam Mobile App New Version Update - Version 1.22.1 - Updated on 20-04-2025

 

 

 KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.22.1


IFHRMS Kalanjiyam Mobile App New App New Update 


Version 1.22.1


Updated on 20-04-2025


*Whats New?


• Current Financial Year 2025-2026


• Update Minor Bug Fixes


🧶Update Link👇👇👇


👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾


https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam



  




About this App

Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls


Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 Teachers' Transfer Counselling - DSE Proceedings

    2025-26ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜூன் 2025 மாதத்தில் நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் ...